மாலையில் இருவருக்கும் டீ போட கிச்சனுக்குள் சென்றவள், அன்றைய தினத்திற்கு தேவையான காய்கறி, உணவுப்பொருட்கள் தவிர அதிகமாக இருப்பதை செண்பகத்திடம் எடுத்துக் கொள்ளுமாறு கூற எண்ணியவளாய், செண்பகத்திற்கு கால் செய்தாள். ரிங்க் போனது....
அந்த நேரம் அங்கு வந்த ரகு,
“மை ஏஞ்சல்...... என்ன பண்ணுது.....”
“டீ போடுறேன்....” என ரகுவிடம் சொன்னவள், “ஹலோ செண்பா, வீட்டுக்கு வரியா கொஞ்சம்.....?”, என போனில் பேசியவாறு, அங்கிருந்த எக்சஸ் திங்க்ஸ்ஸை ஒரு பேக்கில் எடுத்து வைத்தாள்.
செண்பகம் வந்தவுடன் ஹாலுக்கு சென்ற ரகு, மனைவியை பார்த்தவாறு அவள் கொடுத்த டீயைக் குடித்துக் கொண்டிருந்தான்.
“நைட்டுக்கு மாவு இருக்காம்மா... எதுவும் செய்யனுமா?”
“ம்.... மாவு இருக்கு.... நான் சட்னி வச்சிக்குறேன்....”
“நாளைக்கு எத்ன மணிக்கு ஊருக்கு போறீங்க?”
“காலைல கிளம்பிருவோம் செண்பா.....”
“காலைல சாப்ட எதுவும் வந்து செஞ்சு தரவாம்மா....”
“இல்ல இயர்லியரா கிளம்பறதால போற வழில பாத்துக்குறோம்...”
“அப்ப நான் கிளம்பவாம்மா....?”
“சரி நீ கிளம்பு...., இந்த காயெல்லாம் எடுத்துட்டு போயிறு, இட்லி மாவு மிச்சமிருக்கு பாத்திரத்துல... அதயும் எடுத்துக்கோ”
வதனி கொடுத்ததை வாங்கிய செண்பகம் அவள் கொடுத்தை வாங்கியபடி அங்கிருந்து கிளம்பினாள்.
சிறுகனூர் வந்த மறுநாள் முதல், இருவருக்கும் தானே சமையல் செய்து கொள்வதாகக் கூறியதோடு, அவளே அதை இன்று வரை செய்தாள்.
மளிகை பொருட்கள் வாங்குவது, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பெருக்குவது போன்ற வேலைகளை மட்டும் செண்பகத்திடம் ஒப்படைத்து இருந்தாள்.
கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தவளின் அருகில் வந்தமர்ந்த ரகு,
“திங்க்ஸ் எல்லாம் வேணும்கிறத எடுத்து வச்சிரு....”
“எடுத்து வச்சுட்டேன்”
“காலைல இயர்லியரா கிளம்பினா பதினோரு மணிக்கெல்லாம் அங்க போயிரலாம்... சீக்கிரம் எழுந்திருவியா?”
“என் மாமியார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அவங்க தங்கம்.... ஆனா உங்க மாமியாரு வர்ஸ்ட்.... லேட்டானா.... முதல்ல என்கொயரி, அப்றமா..... பயங்கர அட்வைஸ் ...... அப்டினு நான் கஷ்டபடுறதுக்கு.... சீக்கிரமா கிளம்பி....... காருல தூங்கிட்டே வந்துக்குவேன்”, என்றாள் முகத்தை சோகமாக வைத்தபடி.
சிரித்தவன், “ஏன் சொல்ல மாட்ட.... அவ்ளோ தானா.... இல்ல.... இன்னும் எங்க மாமியார் பத்தி..... எதுவும் இருக்கா....?”
“அப்பப்போ கருத்து சொல்லுவோம், அத கருத்தா... நோட் பண்ணிக்கனும்.... அத விட்டுட்டு..... இப்டி மொத்தமா கேட்டா.... சொல்ல முடியாது....”, என சிரித்தபடி அவள் கூற....
அவனுக்கும் அவளின் பேச்சு சிரிப்பை உண்டு செய்ய, வாய் விட்டு சிரித்தான்.
“சரியான கேடி டி நீ....”
“அப்டினா....”
“ம்.... அப்டிதான் கண்டுபிடி.....”
“ஆராய்ச்சில்லாம் எனக்கு அலர்ஜினு தான், நான் ஆர்ட்ஸ் எடுத்து படிச்சேன்..... சமூகம் என்ன கண்டு புடிங்குது.... நான் என்ன செய்வேன்...?”
“இப்டி பேசுனா ..... உன்ன விட்ருவோம்னு நினச்சியா.... அதெல்லாம் விடமாட்டோம்.... கண்டு பிடிக்கிற......”
“கரண்டினா புடிப்பேன்..... இந்த கண்டு பிடிக்கறதெல்லாம் எனக்கு தெரியாது”
“உன்ன இப்போ விடணும்னா.... PM னா என்னனு சொல்லு.... விட்டுறேன்”
“புன்னகை மன்ன னத்தான்.....PM னு சொன்னேன்” , என்றாள் புன்னகைத்தபடி....
“நீ ஏன் நேம ஸ்டோர் பண்ண மாட்டிங்கற.....”
“நேம் ஸ்டோர் பண்ணுவேன்.....ஆனா ரொம்ப க்ளோசானவங்க, இரிட்டேட் பண்றவங்க, இவங்களுக்கு மட்டும் நிக் நேம் வச்சு அத ஸ்டோர் பண்ணி வச்சுக்குவேன்”
“அப்ப நான் இரிட்டேட் லிஸ்ட்ல தான இருந்திருப்பேன்”
“ம்...ம்... அது முன்னாடி”, என்றாள்
“ஏண்டி.... அப்டி என்ன பண்ணுனேன்... உன்ன?”
“சொன்னா நீங்க என்ன பத்தி என்ன நினப்பீங்க...?... அதனால விட்ருவோம்”
“சும்மா சொல்லு....”
“வால் தாண்டி குதிச்சத பாத்துட்டு..... என்ன ரொம்ப சத்தம் போட்டீங்க ஒருநாள், அப்றம் சின்ன பசங்களோட நான் விளையாடும் போது அவங்க முன்னாடியே.... அவங்க கூட விளையாடற வயசா உனக்குனு, சத்தம் போட்டீங்க... அப்ப முகத்த.... சிடுசிடுன்னு வச்சிட்டு பேசுனதால தான் உங்களுக்கு அப்டி நிக் நேம் வைக்க வேண்டியதா போச்சு....”, என்றாள் சீரியசாக....
“இப்ப தான் பொறுப்பாகிட்டியே!”
“உங்கள கல்யாணம் பண்ணதில்ல இருந்து, கீத் எனக்கு செம ட்ரைனிங் குடுத்துட்டே இருக்காங்கள்ள..... அதான்.... ரொம்ப மாறிட்டு வரேன்.....”, என்றாள்
“அங்க வீட்ல தன்யா இருக்கா.... தெரியுமா...?”
“ம்.... அம்மா அன்னிக்கு பேசும்போது சொன்னாங்க....”
“வேற என்ன சொன்னாங்க?”
“பொறுப்பா நடக்கணும், பெரியவங்கள அனுசரிச்சு போகனும்னு.... இப்டி இன்னும் நிறைய சொன்னாங்க......, எதுக்கு கேக்குறீங்க”
“இல்ல.... நான் ஒன்னு கேப்பேன்.... மறைக்காம.... உண்மைய சொல்லணும்.... சொல்லுவியா...?”
“எத பத்தி....?”
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அப்பத்தா உங்கிட்ட என்ன கேட்டாங்கனு சொல்லு?”
சற்று முகம் மாறியவள்,
“கண்டிப்பா சொல்லணுமா?”
“ஆமா”, என ரகு கூற, தயங்கியபடி சொல்ல ஆரம்பித்தாள் வதனி.
ராஜத்தின் கேள்வியால், எழுந்து நின்று யோசித்தவாறு .... நிதானித்தவள், எதிரில் அமர்ந்திருந்த ராஜத்தின் எதிர்பார்ப்பு மிகுந்த பார்வையைக் கண்டாள்,
“அம்மாச்சி ரெண்டு நாள்ல கல்யாணம்..... உடம்புக்கு ஏதும் உங்களுக்கு பிரச்சனையா?”, என்னன்னவோ பேசுறீங்க”, என அவரின் அருகில் சென்று தொட்டுப் பார்த்தாள்.
“நீ பேச்ச மாத்தாத....”
“நான் பேச்ச மாத்தல..... நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க முதல்ல... அப்புறம் நான் சொல்றேன்.... அந்த பொண்ணு என்னாச்சு......”
ராஜம், சென்னை சென்று காதம்பரியை மருத்துவமனையில் நேரில் கண்டது, மருத்துவர்களிடம் விசாரித்தது என எல்லாவற்றையும் கூறினார்.
“அப்பொ கல்யாணத்த நிறுத்த வேண்டியது தான...”, என்றவளின் வாயை அவசரமாக மூடிய ராஜம்....
“நிறுத்திரலாம்.... நீ மாட்டனு சொல்லிட்டா...”, என்றார்.