அவர்களின் பிளாட்டில் வந்து சற்று நேரம் இருந்துவிட்டு, இரவு உணவுக்குப்பின் ஊருக்கு கிளம்பிவிட்டார்.
அடுத்த நாள் காலையில் ஊருக்கு வந்தவர், பத்து மணி வாக்கில் சனவேலி எனும் ஊரில் உள்ள ஜோதிடரை காணச் சென்றார்.
மாலை வீடு திரும்பியவர், முதலில் தனது ப்ரியத்திற்குரிய பேரனான ரகுநந்தனை அவரின் அறைக்கு வருமாறு கூறினார்.
“அப்பத்தா.... என்ன கூப்டீங்களா?”
“ஆமாயா.......”
“என்ன விசயம் அப்பத்தா?”
“இப்போ கல்யாணம் வேணா...... இன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ சொன்னத இந்த கிழவி கேக்கல...... என்னோட வற்புறுத்தலால.... சரினு சொன்ன.... ஆனா இந்த ஆத்தா உனக்கு என்ன செஞ்சாலும்.... அது உன் நல்லதுக்கு தானு உனக்கு புரியுதுலயா”
“என்னப்பத்தா.... இன்னிக்கு ஏதேதோ பேசிட்டு...”
“கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாளு தான்யா இருக்கு”
“ஆமா அப்பத்தா..... அதுக்கென்ன?”
“பொண்ணு நாம முன்ன பார்த்தது இல்ல..... இனி தான் உனக்கு பாக்க போறேன்..... பாத்துட்டு சொல்றேன்..... ஆனா பொண்ணு மட்டும் மாறிருச்சுயா..... குறிச்ச தேதில... குறிச்ச நேரத்துல உன் கல்யாணம் நடக்கும்யா..... இந்த ஆத்தாவ மன்னிச்சிருயா.....”, என கண் கலங்கியபடி கையை எடுத்து பேரனை நோக்கி கும்பிட்டார்....
அவரின் செயலால் பதறியவன் ..... “எனக்கு நீங்க யாரப் பாத்திங்கனாலும் சரி அப்பத்தா...... ஆனா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்குதானு மட்டும் விசாரிச்சிருங்கப்பத்தா.....” என்றவன்
“மன்னிக்கற அளவுக்கு நீங்க எனக்கு கெடுதலா நினைப்பீங்க.... சின்ன வயசுல இருந்து எங்களுக்கு பாத்து... பாத்து செய்வீங்க..... அதுனால, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அப்பத்தா”, என்றவன் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.
பேரனின் நம்பிக்கையை காப்பாற்ற...... யோசித்தார். அதன் பிறகு அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை அவர்.
அடுத்த நாள் , தனது மகன், மருமகளை அழைத்துப் பேசினார்.
இரு மகள்களையும் அவரவர் கணவர்களுடன் தனித்தனியே அழைத்துப் பேசினார்.
அதோடு அவரின் அறைக்குள் சென்றவர், இரவில் மூத்த பேரனை அழைத்து
“விக்ரமா........நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டியும் திருச்சி போகணும்....”
“சரி அப்பத்தா”
“அங்க நம்ம சந்திராவ கூப்டுட்டு ..... உடனே கிளம்பி வரணும்..”
“வேற..... எதுவும் சொல்லணுமா அப்பத்தா?”
“இல்லயா.....”
“என்னப்பத்தா.... உடம்புக்கு முடியலயா?”
“நல்லா இருக்கேன்யா..... எனக்கென்ன?”
“பாத்தா உடம்பு முடியாத மாதிரி இருக்கீங்க”
“இல்ல..... ஒன்னுமில்ல..... நீ ஊர்வசிகிட்ட இப்பவே சொல்லிரு....மறந்துராத......”, என அவனை அனுப்பிவிட்டார்.
கீதாஞ்சலி காலையில் தனது மகளுக்கு கால் செய்து பேசினார்.
“என்னம்மா...... அண்ண மகன் கல்யாணத்துக்கு போன உனக்கு ஏன் ஞாபகமெல்லாம் இருக்கா ஆச்சரியமா இருக்கு”
“நாளைக்கு கிளம்பி இங்க வந்துரியா....”
“ஏன்..... ஏன்..... அதெல்லாம் முடியாது..... நாள மறுநாளே வந்துக்கறேன்”
“அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல..... அதான்.... நாளைக்கு கிளம்பற மாதிரி பாத்துக்கோ”
“ஏன்மா ....என்ன செய்யுது?”
“நீ நேரில வந்து பாத்துக்கோ”
அதற்கு மேல் பேசாமல், அவளிடம் மதியம் அவளை பிக் அப் பண்ண விக்ரமன் வருவதாக கூறி வைத்துவிட்டார்.
மறுநாள் திருச்சி சென்று அழைத்து வரும் போது, முதலில் ராஜத்தை பற்றி விசாரித்தாள். பயப்படும்படி எதுவும் இல்லையென விக்ரமன் கூறியபின், வழியெல்லாம் ஊர்வசியுடன் பேசி சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வதனி.
இரவு வீட்டிற்கு வந்தவளை, கீதா குளித்துவிட்டு வந்து உணவு உண்ணுமாறு கூறினார். வீட்டில் கல்யாண வேலைகள் ஒருபுறம் நடக்க, வீட்டின் முக்கிய தலைகள் யாரையும் ஏன் காணவில்லை என யோசித்தபடி.....
குளித்து, உண்டு முடித்தபின் “அம்மாச்சி உன்ன பாக்க கூப்பிடுறாங்க” என கீதா கூற.....
‘என்ன .... எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு...... விக்ரம் மச்சான், ஆதி மச்சான் கல்யாணத்துல இருந்த.... ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே....’ என யோசித்தபடி ராஜமனோகரியை சந்திக்கச் சென்றாள், வதனி.
“அம்மாச்சி......”
“உள்ள வா சந்திரா......”
உள்ளே யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.... என எண்ணியவாறு வந்தவளுக்கு, உள்ளே இருந்தவனை பார்த்ததும்...... ‘அட.... மாப்பிள்ள மன்னாரு நீரு இங்கதான் இருக்குறீரா!’ என நினைத்தபடி,
“அம்மாச்சி உங்களுக்கு முடியலனு அம்மா சொன்னாங்க..... என்ன செய்யுது” , எனக் கேட்டவாறு உள்ளே வந்தாள்.
“என்ன செய்யுது..... நல்லா தான் இருக்கேன்....”, அந்த குரலே சொன்னது நான் நன்றாக இல்லையென....
“ஹாஸ்பிடல் போனீங்களா?”
“போவோம்....... சரி அத விடு...... பயணமெல்லாம்.... நல்லா இருந்ததா?”
‘அட..... லேடி கிங்கு.... பேச்ச மாத்துது....!’
“அதுக்கென்ன.... நல்லா இருந்தது.....”
“படிப்பெல்லாம் எப்டி தாயி போகுது”
“அதுவா...... இப்போ ட்ரைனிங் பீரியட்.... அப்றம் ஃபைனல் எக்ஷாம்.... அப்டினு இன்னும் ரெண்டு, ரெண்டரை வருஷம் இருக்கு அம்மாச்சி”
அது வரை அமைதியாக இருவரின் சம்பாசனைகளை கேட்டுக்கொண்டிருந்தவன், எழுந்தான்.
“நான் கிளம்பவா .....”
“சரியா..... நீ கிளம்பு.... அப்றம் ஆத்தா கூப்டுறேன்”
அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், சந்திரவதனியிடம் திரும்பினார்.
“இந்த அம்மாச்சிக்கு ஒரு ஆச....... அத நான் உங்கிட்ட கேட்டா நிறைவேத்துவியா?”
“உங்களுக்கு இந்த வயசுல என்ன ஆச அம்மாச்சி....சொல்லுங்க..... முடிஞ்சா கண்டிப்பா நிறைவேத்துவேன்”
“நீ மனசு வச்சா நடக்கும்.... உன்னால மட்டும் தான் முடியும்”
“சரி, மனசு வைக்கிறேன்.... சொல்லுங்க”
“நிசமா....சொன்ன பின்ன முடியாதுனு சொல்லக்கூடாது?”
“நிஜமாத்தான்.... அம்மாச்சி....”
“கண்டிப்பா.....”
“கண்டிப்பா செய்யுறேன்”
“ஏன் பேரன்...... ரகுவ கல்யாணம் பண்ணிக்கிறியா?”
எதிர்பாரா இந்தக் கேள்வியால்........ அமர்ந்திருந்தவள்.... எழுந்து நின்றாள்.....
‘நம்ம காதுல.... எதோ.... ப்ராப்ளமா.... இல்ல அடச்சிருக்கோ..... இவ்வளவு நேரம் நல்லா தான் கேட்டுது.......’ என எண்ணியவாறு.....