அருமையான பதிவு ஜைனப்???.பாய் வீட்டு பிரியாணி தான் பிரமாதமா இருக்கும்னு நெனச்சா, ஆதி வீட்டு பிரியாணியும் அமர்க்களமா இருக்கு?????.ஆதி வீட்டு விருந்தில் இம்ரான்,பாட்டியின் அலப்பறையில் வீடே கலகலக்குது????.
விவசாயத்தை பற்றி பேசறீங்க,சமையல்ல கலக்குறீங்க கையில ஏகப்பட்ட வித்தை வச்சுருக்கீங்கன்னு துளசிட்ட பாராட்டை வாங்கிட்டான் ஆதி???.அவளே இப்பதான் கூட்டுல இருந்து வெளியே வந்து பேசுனா???.அதுக்குள்ள அவசரப்பட்டு வாய விடறானே???.
துளசி முகத்தில் தெரியும் வெட்கச்சவப்பும்,அவளின் தடுமாற்றமும் நம்பிக்கு அவள் நிலையை உணர்த்த,
நெருப்புன்னு நினைக்காமல்,இளைப்பாரும் நிழலாக ஆதியை நினைக்க சொன்னவன், எது செய்தாலும் துளசியோட நன்மைக்குன்னு நினைத்தால் அவனோடு ஊருக்கு போக சொல்லிட்டான்
.
ஒரு பொண்ணுக்காக ஆதி இங்கேயே தங்கிடறதா சொல்றதை அவன் வீட்டில் ஏத்துக்குவாங்களான்னு நம்பி கவலைபடறது சரிதான்.ஆதி,துளசியை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பான்னு தோனலை???.
இவன் ஊர்னு நெனச்சானா தனியா போனா யாரும் எதுவும் சொல்லாம இருக்கறதுக்கு,நம்பி,பாட்டியோட போகலாம்னு சொன்னது சரிதான்.ரெண்டு நாள் துளசியோட தங்கப்போற சந்தோஷத்துல ஆதி????
இன்னொரு ஆளை வேலைக்கு போட்டு அவருக்கு கொடுக்குற பணத்தில் பசங்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கி தரலாம்னும்,வாழ்க்கையை பற்றி பசங்க தெரிஞ்சுக்கனும் என யாழினி நினைப்பது சரிதான்....
அருணால்,துளசிக்கு பிரச்சனை வரும்னு நெனச்சு தனியா போக வேணாம்னு சொல்றானா ஆதி???.
வாழ்நாள் வரைக்கும் அவளுக்கு காவலா வர்றதா தன் மனதை சொல்லாமல் சொல்லிட்டான்????.
நிச்சயதார்த்தம் நடக்ககூடாது என ஆண்டவன் எழுதுனதா,ஆத்ரேயன் எழுதுனதா????.