திங்கள் மறைந்து போக போக இரவும் மெல்ல மெல்ல மலர்ந்தது அதன் ஆதாரமாக அந்த நீல வானம் தன் மீது மையை பூசிக்கொள்ள , நிலவும் நட்ச்சத்திரங்களும் தோன்றி இரவை உருதிபடுத்தியது , அதை பார்ப்பதற்கு கருநிற பந்தல் மீது மல்லிகை பூ பூத்து குலுங்குவதை அந்த வெண்மதி காவல் காப்பது போல தோன்றியது .
இந்த அருமையான இரவுக்காட்சியை பால்கனியில் நின்று கொண்டு ரசித்தவாரே தன் நினைவுகளில் மூழ்கிருந்தான் ஆதவ் .
ஆதவ் தான் நம் கதையின் நாயகன் முழுபெயர் ஆதவன் என்பதை இந்த நவீன காலத்துக்கேற்ப தனக்கு பிடித்தது போல் ஆதவ் என்று சுருக்கிக்கொண்டான் , அவன் தனக்கு பிடிக்காதது எதையும் தனக்கு ஏத்தது போல் மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவன் , தனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான் , அதே நேரத்தில் தனக்கு ஒன்று பிடித்துவிட்டால் அதற்காக உயிரையும் கூட கொடுப்பான் .
எதையும் காலத்தின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்பது இவனது கொள்கை, எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான் , எப்பவாது கோபம் வரும் ஆனால் அது வந்த வேகத்தில் மறைந்துபோகும் .
இயற்கையாக வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவன் , மாநிறம் , நல்ல உயரம் திடமான உடற்கட்டு என்று பார்ப்பதற்கு சினிமா நடிகனை போல இருப்பான் இவனிடம் பல அஸ்திரங்கள் இருந்தாலும் வசீகர பார்வை , மாயக்கண்ணனின் புன்னகை என்ற இவ்விரெண்டும் இவனது முக்கியமான பிரம்மாஸ்திரம் , இதில் மாயங்காதோர் யாரும் இல்லை , அனைவரிடம்மும் சகஜமாக பழகும் குணம் கொண்டவன் ,
இவனை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் பட்டாளாம் இருக்கும் அதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருப்பர் . எல்லா பெண்களிடமும் ஒரு வரையறையோடு பழகுவதால் பெண்கள் மத்தியில் இவனுக்கு எப்பொழுதும் வரவேற்பு உண்டு .
ஆதவ்வின் கொள்கை என்றால் "களவும் கற்று மற " என்பதுதான் , அனைத்தையும் தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை , தவறில் இருந்துதான் சரியை ஆறியமுடியும் என்பதை உறுதியாய் நம்புபவன் , பேஷன் டிசைனில் bachelor டிகிரி முடித்துவிட்டு தன் தந்தையின் கம்பெனியான RK பேஷன் லிமிடெட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறான், சென்ற வருடத்திற்கான சிறந்த CEO என்கின்ற பட்டத்தை தன் தனித்திறமையால் வென்றிருக்கிறான் .
ஆதவ் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கிருக்க அவன் அருகில் வந்து ஒருவர் அவனின் தோளில் கை வைத்து ," என்ன பா ஆதவ் இன்னைக்கும் அவன் தன் வேலைய காட்டிட்டான " என்றார் ,
அதற்கு ஆதவ் சிரித்துக்கொண்டே ," ஆமா மா , நீங்க இன்னும் தூங்கல " என்றான்
அவர் பெயர் தேவி ஆதவ்வின் அம்மா , ராதாகிருஷ்ணனின் மனைவி , இல்லத்தரசி ஆதவ்வின் செல்ல தாய் .
தேவி ," தண்ணீ குடிக்கலாம்ன்னு கீழ வந்தேன் , சரி நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டிங்கலான்னு பாக்கலாம்ன்னு ரூம்க்கு வந்தா பெட்ல உன்ன காணோம் , அப்போ நிச்சயமா பால்கனில தான் இருப்பன்னு இங்க வந்தா நீயும் சொல்லி வச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்க அப்றோம் ஆதவா " என்று ஆரம்பித்தவரை தடுத்த ஆதவ்
ஆதவ் ," மா எத்தன தடவ சொல்றது ஆதவா இல்ல , ஆதவ்ன்னு கூப்டுங்க " என்றான்
தேவி ," சரி ஆதவ் , இப்போம் சரியா "
ஆதவ் ," ஹ்ம்ம் ஒகே சொல்லுங்க என்ன விஷயம் " என்றான்
தேவி ," நா சொன்ன விஷயத்த பத்தி என்ன யோசிச்சிருக்க " என்றாள்
ஆதவ் ," இல்ல மா அத பத்தி இன்னும் நா எதுவும் யோசிக்கல" என்றான்
தேவி ," சரி யோசிச்சிட்டு சொல்லு , அப்றோம் ஆதவ் நேரம் வேற ஆயிட்டே இருக்கு , நீ வேணும்னா கீர்த்தி ரூம்ல போய் தூங்கேன் , கீர்த்தி தான் வீட்ல இல்லையே " என்றாள் .
ஆதவ் ," ஆனா அம்மா " என்று அவன் தொடங்குவதற்குள்
ஆதவ் என்று கூபிட்டுக்கொண்டே ஒருவர் தன் கண்களை கசகிக்கொண்டு ஆதவ்வின் அருகில் வந்தார் , ஆதவ் தன் அம்மாவை பார்த்து கண்ணசைக்க அவர் சிரித்தார் ,
பின்பு ஆதவ் ," என்ன என் பிரின்ஸ்சோட தூக்கம் கலஞ்சிட்டா" என்று கூறிக்கொண்டே அவனை தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான் . அச்சிறுவன் ," ஆதவ் என்கூட தூங்காம இங்க என்ன பண்ற " என்றான்
ஆதவ் ," என்ன தூங்க விட்டாதனடா , உருண்டு உருண்டு என்ன கீழ தள்ளிட்ட, அப்டியே நீ உங்க அம்மா அம்மு மாதிரி டா " என்றான் .
தேவி ," துருவ் கண்ணா அப்பா இங்க தூங்கட்டும் , நீ வேணும்னா பாட்டிகிட்ட தூங்கறியா " என்றார்
துருவ் ," ப்ளீஸ் பாட்டி நா அப்பா கிட்ட தான் தூங்குவேன் " என்று அடம்பிடித்தான் , உடனே ஆதவ் ," மா நீங்க போங்க நா இவன பாத்துக்கறேன் , குட் நைட் மா கீழ பாத்து போங்க " என்றான்
தேவி ," சரி பா குட் நைட் " என்று கூறி துருவ்வின் தலையை கோதி விட்டு விட்டு தன் அறைக்குச்சென்றார் .
துருவ் ஆதவ்வின் செல்ல மகன்.
ஆதவ் தன் கழுற்றை இறுக்கி கெட்டி பிடித்திருந்த தன் மகனை மெல்லமாக தூக்கிக்கொண்டு வந்து மெத்தை மீது கடத்தி , அவனை தட்டிகொடுத்துக்கொண்டே தானும் உறங்கினான் .
இரவு முடிந்து பகலும் புலர்ந்தது , தலையணையும் பெட் ஷீட்டும் எங்கயோகிடக்க ஆதவ்வின் நெஞ்சின் மீது துருவ் நிம்மதியாக துயில் கொண்டிருக்க , ஆதவ் தன் மகனை இறுக்கி பிடித்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான் .
சூரியனின் கதிர்வீச்சு தாங்க இயலாமல் துருவ் தன் தூக்கத்தில் இருந்து விடு பெற்றான் , பின்பு மணி ஒன்பதை காட்ட , துருவ் ," அச்சச்சோ அப்பாவுக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகுதே " என்று கூறி ஆதவ் ஆதவ் என்று தன் தந்தையை எழுப்பினான் ,
ஆதவ் தன் தூக்கத்தில் இருந்து லேசாக முழித்து தன் மகனை தன் பக்கம் இழுத்து என்னடா என்று கூறி அவனது கன்னத்தை லேசாக கிள்ளினான் ,
துருவ் ," அப்பா பாஸ்ட் , சீக்கரம் எந்திரிங்க " என்றான் , ஆதவும் சரி டா என்று கூறி வேண்டா வெறுப்பாக எழும்பினான் ,
பின்பு ஆதவ் பெட் காபி கேட்க்க , துருவ் ,
" அப்பா ப்ரஷ் பண்ணாம காபி குடிக்க கூடாதுன்னு என் மிஸ் சொல்லிருக்காங்க , ஸோ சீக்கரம் வாங்க பா ரெண்டு பேரும் சேர்ந்து ப்ரஷ் பண்ணுவோம் " என்றான் . உடனே
ஆதவ்,” எல்லா விஷயத்துலயும் அப்டியே உங்க அம்மா மாதிரி என்று கூற பின்பு ஒருவழியாக துருவ் தன் தந்தையை பாத் ரூம்மிற்குள் அழைத்துச்சென்றான் , இருவரும் பல் துலக்கிவிட்டு வெளியே வந்தனர் .
துருவ் ஆதவ்விடம் சீக்கரம் குளிச்சிட்டு ரெடியாகுங்க நா உங்க டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கறேன் என்றான்
ஆதவ் ,"ஒகே டா என் செல்லம் " என்றான் .
ஆதவ் மியூசிக் பிளேயர்ரை ஆன் செய்து விட்டு குளிக்க சென்றான் , பாட்டு அதற்க்கேற்ப ஒலிக்க , ஆதவ்வும் ஆபீஸ் செல்வதற்க்காக தயாரகிக்கொண்டிருந்தான் , ஒரு பக்கம் ஆதவ் தன் கழுத்தில் டையை மாட்டிக்கொண்டிருக்க , துருவ் தன் தந்தையின் ஷூவிற்கு பாலிஷ் செய்துகொண்டிருந்தான் .
ஆதவ்விற்கு சரியாக டை கெட்ட வரவில்லை , அப்பொழுது துருவ் தன் தந்தையின் தோள் மீது கையை வைக்க , ஆதவ் என்னடா இது நம்ம பையன் திடிர்ன்னு நம்ம heightக்கு வளந்துட்டான் , என்று ஆச்சரியத்துடன் கீழே பார்க்க , துருவ் பெட் மீது ஏறி நின்று கொண்டிருந்தான் , அதை பார்த்து ஆதவ் சிரிக்க ,
துருவ் ," சிரிக்கறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல வாங்க பா வந்து உக்காருங்க " என்று தன் தந்தைக்கு டையை அட்ஜஸ்ட் செய்துக்கொண்டிருந்தான் , அதை பார்த்த அதவ்க்கு தன் மனைவியின் நியாபகம் வந்தது ,
துருவ்வின் பிறப்புக்கு முன்பு ஒருநாள் இப்படி தான் ஆதவ் ஆபீஸ் செல்வதற்க்காக கிளம்பிக்கொண்டிருந்தான் , அப்பொழுது அவன் மனைவி ," ஆதவா இவ்வளவு பெரிய ஆளா வளந்திருக்க இன்னும் உனக்கு ஒழுங்கா டை கெட்ட தெரியல " என்றாள்
ஆதவ் ," ஏய் அம்மு , ஆதவா இல்ல ஆதவ் " என்றான் ,
அம்மு ," சரி மூஞ்ச தூக்காத ஆதவ் போதுமா " என்றாள்
ஆதவ் ," டபுள் ஒகே டியர் "
பிறகு அம்மு ஒரு சின்ன ஸ்டூல் மீது ஏறி ஆதவ்க்கு டை கெட்டி விட்டுக்கொண்டிருந்தாள் அப்பொழுது
அம்மு ," எப்போம் தான் டை கெட்ட படிக்க போற "
ஆதவ் ," ஏன் படிக்கணும் அதான் நீ இருக்கியே என்னோட பம்கின் " என்று கண்களை சிமிட்டினான்
அம்மு ," பம்கின்னா எவ்வளவு பேரு தான் எனக்கு வைப்ப ம்ம்ம் " என்றாள்
ஆதவ் ," சரி அம்மு மட்டும் ஒகே " என்று சிரித்தான் , பின்பு ஆதவ் அம்முக்கு கிச்சலம் காட்ட அம்மு ஸ்டூல்லில் இருந்து கீழே விழப்போனாள் உடனே ஆதவ் சிரித்துக்கொண்டே தன் மனைவியை தாங்கி பிடித்தான் ,
அப்பொழுது அவள் ," romance போதும் சீக்கரம் கிளம்பி கீழ வா " என்று அவனது தலையை தட்டிவிட்டு கீழே சென்றாள் , இவ்வாறு ஆதவ் தன் கடந்த கால நிகழ்வில் திளைத்திருக்க , துருவ் அப்பா அப்பா என்று தட்டிக்கொண்டிருந்தான் , தன் மகனின் அழைப்பில் தன் நினைவுக்கு வந்த ஆதவ் தன் மகனை பார்த்து சிரித்தான் ,
அதற்கு துருவ் ," என்ன பா சிரிகீங்க " என்றான்
ஆதவ் " ஒன்னும் இல்லடா " என்று கூறி தன் மகனின் தலையை லேசாக தடவி விட்டு விட்டு கீழே செல்வதற்காக கிளம்பினான் , தன் ஷூவை மாட்டிக்கொண்டு அவன் எழும்பவும் துருவ் ஆதவ்வின் கையில் அவனது லேப்டாப் பக் , மொபைல் போன் என்று தன் தந்தைக்கு எந்த வேலையும் வைக்காமல் எடுத்துக்கொடுத்தான் ,
ஆதவ் தன் மகனை அள்ளியணைத்து அவனது நெற்றியில் முத்தம் இட்டு அவனை கையில் ஏந்திக்கொண்டு கீழே வந்துக்கொண்டிருந்தான் .
கீழே ராதாகிருஷ்ணன் @கிருஷ்ணன் ," தேவி இன்னும் உன் செல்ல பிள்ள கீழ வரலையா , டைம் இப்போம் என்ன ஆச்சு , கொஞ்சம் கூட பொறுப்பில்ல " என்று தன் மகனை வருத்தெடுத்துக்கொண்டிருந்தார் .
ராதாகிருஷ்ணனுக்கும் ஆதவ்க்கும் எப்பொழுதும் ஒத்துப்போகாது , ஆதவ்வின் பொறுப்பற்ற குணம் அவனது தந்தை கிருஷ்ணாவுக்கு பிடிக்காது .
தேவி ," ஏங்க அதோ ரெண்டு பேரும் வந்துட்டாங்க " என்று கூறினார்.
கிருஷ்ணா ," வர்ற டைமா இது " என்று மீண்டும் கரித்துக்கொட்டினார் .
ஆதவ் தன் அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே வந்து உட்கார்ந்தான், துருவ் ஓடி போய் தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டான் .
தன் தத்தா ஊட்டிவிட துருவ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் , பிறகு கிருஷ்ணன் தேவியிடம் ," சார் என்ன முடிவு பண்ணிருக்காராம்" என்றார் .
ஆதவ் , துருவ் கண்ணா போய் அப்பா ரூம்ல கப்போர்ட்ல ப்ளூ பைல் இருக்கும் அத கொஞ்சம் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைத்தான் . பிறகு தன் தந்தையிடம் ," யோசிக்கறதுக்கு ஒன்னும் இல்ல , என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது , அதுல எனக்கு விருப்பம்மும் இல்ல " என்றான்
கிருஷ்ணன் ," ஏண்டா " என்றார்
ஆதவ் ," ஏன்னா புடிக்கல " என்றான்
கிருஷ்ணான் ," கீர்த்திக்கு என்னடா குற , அவளுக்கும் உன்ன புடிச்சிருக்கு இதுக்கு மேல என்னடா வேணும் "
கீர்த்தி கிருஷ்ணாவின் தங்கையின் மகள் , ஆதவ்க்கு சொந்த அத்தை மகள் ,சிறு வயதில் இருந்தே ஆதவை உயிருக்கு உயிராக விரும்புபவள் .
ஆதவ் ," ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் , நா எப்டி ஒரு கல்யாணம் பண்ணிக்க முடியும் " என்றான்
கிருஷ்ணன் ," ஏன் இந்த உலகத்துல மனைவி இல்லாதவங்கலாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதே இல்லையா " என்றார்
ஆதவ் ," உலகத்துல இப்போம்லாம் என்னலாமோ நடக்குது அதுக்காக என்னால அப்டிலாம் பண்ணிக்க முடியாது " என்று அவன் கூறவும் துருவ் வரவும் சரியாக இருந்தது ,
துருவ் ," கப்போர்ட்ல பைல்லே இல்லபா , நா நல்லா தேடிபாத்துட்டேன் " என்றான்
ஆதவ் ," பரவில்ல பா , அப்பா ஆபீஸ் கிளம்புறேன் , அப்பா ஆபீஸ்ல இருந்து வர்றப்போம் உனக்கு என்ன வேணும் " என்றான்
துருவ் ," நீங்க சீக்கரம் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மூவி பாக்கலாம் " என்றான்
ஆதவ் ," ஒகே டா தங்கம் " என்று தன் மகனின் கன்னத்தில் தன் இதழ் பதிக்க , துருவும் தன் தந்தையின் கன்னத்தில் முத்தம் இட்டு வழியனுப்பி வைத்தான்
ஆதவ் ," தன் தாயிக்கு" போயிட்டு வரேன் என்பதை போல் கண்ணசைத்துவிட்டு தன் ஆபீஸ்க்கு சென்றான் .
காரில் ஆதவ் ," என் அப்பன் *** மசின் வழக்கம் போல இன்னைக்கும் என்ன சாப்டவிடாம பண்ணிட்டான் , " என்று தனக்குள் புலம்பிக்கொண்டே சென்றதில் தன் முன்னால் இருந்த வண்டியை கவனிக்காமல் இடித்துவிட்டான் ,
கீழே இறங்கி பார்த்த பொழுது வண்டியில் யாரும் இல்லாததால் , அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஆதவ் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் , இதை சற்று தொலைவில் இருந்து கவனித்த அந்த வண்டியின் owner தன் காரை எடுத்துக்கொண்டு ஆதவ்வை follow செய்து அவன் பின்னாலே சென்றார் .
பிறகு அந்த நபர் ஆதவின் காரை ஓவர் டேக் செய்து ஆதவின் காரின் முன்னால் ஒரு சுற்று சுற்றி தன் காரை நிப்பாட்டினார்.
ஆதவ் ," யாருடா இது கிருக்கேன் மாதிரி " என்று கூறி தன் காரை விட்டு இறங்கி திட்டுவதற்காக கீழே இறங்கவும் , அந்த காரில் இருந்து ஒரு பெண் இறங்கினார் , அவரை பார்த்தவுடன் , ஆதவின் கண்களில் இருந்த கோபம் தணிந்தது .
ஆனால் அந்த பெண்ணுக்கோ அவனை பார்த்தவுடன் கோபம் தலைக்கேற ," உன் பாட்டுக்கு என் கார இடிச்சிட்டு , ஒரு சாரி கூட கேக்காம ஹாயா வந்துட்ட " என்று போறிய துடங்கினாள் .
ஆதவ் , எவ்வளவோ அந்த பெண்ணிற்கு புரிய வைக்க முயற்சி செய்தான் , ஆனால் அவரோ கேட்பதற்கு தயாராவே இல்லை ,
பின்பு ஆதவ் ," கூல் டவ்ன் கூல் டவ்ன் சாரிங்க தெரியாமா பண்ணிட்டேன் , இது எல்லாத்தையும் சரி பண்ண எவ்வளவு பணம் தேவ படுமோ அத நானே குடுத்திரேன் " என்றான்.
அந்த பெண் ," நீ என்னடா எனக்கு பணம் குடுக்குறது இந்த ஆதிராவுக்கு யாரோட பணமும் தேவயில்ல , மறுபடியும் நீ என் மூஞ்சில என்னைக்கும் முழிக்காம இருந்தாலே போதும் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் .
ஆதவ் தனக்குள் ," அங்கரி bird " என்று கூறி சிரித்துவிட்டு அங்கிருந்து தன் ஆபீஸ்க்கு சென்றான் .
ஆதவ் ஆபீஸ்க்குள் நுழையவும் அனைத்து பெண்களும் கண்களும் ஷிம்லாவில் குளிரில் நடுங்குவது போல நடுங்கியது இல்லை துடித்தது , ஆதவ் அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு தன் அறைக்குச்சென்றான் .
பின்பு அவனது அறைக்கு வந்த ராஜ் அவனிடம் ," அப்டி என்னடா உன்கிட்ட இருக்கு , கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்னு தெரிஞ்சும் எல்லா பொண்ணுங்களும் உன்னையே பாக்காங்க " என்று தன் வேதனையை கூறினான் .
ராஜ் ஆதவ்வின் நெருங்கிய நண்பன் , கம்பனியில் ஆதவ் எப்படியோ அப்படியே தான் ராஜ் எந்த ஒரு முடிவையையும் இரண்டு பேரும் சேர்ந்து தான் எடுப்பர் .
ஆதவ் ," அதுக்கெல்லாம் ஒரு சார்ம் வேணும்டா " என்றான்
ராஜ் ," எனவோ போ " என்றான்
ஆதவ் ," இன்னைக்காவது அந்த ஆதிராகிட்ட திட்டு வாங்காம வரணும்ன்னு நினச்சேன் , மறுபடியும் திட்டு வாங்கிட்டேன் " என்று நடந்த அனைத்தையும் கூறினான் .
ஆதிரா ஆதவ்வின் buisness எதிரி , ஆதவ் அவ்வாறு நினைப்பதில்லை , ஆனால் ஆதிராவுக்கு ஆதவ் என்றால் புடிக்காது , அவனை தன் எதிரியாக தான் நினைப்பாள், எப்பொழுதும் அவனிடம் தன் கோபத்தை மட்டும் தான் காட்டுவாள் .
அவளது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான சம்பவங்களே ஆதிராவை இவ்வாறு மாற்றி விட்டது , அது என்ன என்பதை பின் வரும் பகுதியில் பார்க்கலாம்.
ராஜ் விழுந்து விழுந்து சிரிக்க துடங்கினான் பிறகு ," அட்லீஸ்ட் ஒரு பொண்ணுக்காவது உன்ன புடிக்கலையே அது போதும் டா என்று " கூறி மீண்டும் சிரிக்க துடங்கினான் .
ஆதவ் ," ஏண்டா "
ராஜ் ," எல்லாம் ஒரு பீலிங் தாண்டா மச்சி " அப்டி இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்க ராஜின் போன் ," மாமா நீங்க எங்க இருக்கீங்க " என்று ஒலித்தது ,
போன் செய்தது வேற யாரும் இல்ல ஆதவ்வின் தந்தைதான் , உடனே ராஜ் டேய் ," உங்க அப்பாடா" என்றான் .
ஆதவ் ," அட்டெண்ட் பண்ணு ஸ்பீக்கர்ல போடு நா எங்கன்னு கேட்டா மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிரு " என்றான்
ராஜ் போனை அட்டெண்ட் செய்தான் , அப்பொழுது ," அவர் என்னபா ராஜ் எப்டி இருக்க " என்று கிருஷ்ணா நலம் விசாரித்தார் .
ராஜ் ," நல்லா இருக்கேன் அங்கிள் " என்றான் .
கிருஷ்ணன் ," நா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் பா, ஆதவ் எங்க " என்றார்
ராஜ் ," அவன் மீட்டிங்ல இருக்கான் அங்கிள் , நீங்க சொல்லுங்க " என்றான்.
கிருஷ்ணன் , " அப்போம் நல்லதா போச்சு பா , இங்க பாருப்பா ராஜ் நீ தான் ஆதவ் கீர்த்திய கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கணும் நாங்க சொன்னா கேக்க மாட்டிக்கான், இத எனக்காக நீ பண்ணும் பா " என்றார்
ராஜ் ," சரி அங்கிள் ஆதவ் கிட்ட இத பத்தி நா பொறுமையா பேசுறேன் " என்றான்
கிருஷ்ணன் ," உன்ன நம்புறேன் ராஜ் " என்று கூறி போனை வைத்தார் .
ராஜ் ," டேய் ஆதவ் என்ன கொஞ்சம் கிள்ளிபாறேன்" என்றான்
ஆதவ் ," ஏன் "
ராஜ் ," லைப்லேயே பர்ஸ்ட் டைம் உங்க அப்பா என்கிட்ட இவ்வளவு அன்பாவும் ,மரியாதையாவும் பேசிருக்காருடா "
ஆதவ் ," நம்பர் ஓன் buisness மன் டா , யார் கிட்ட எப்டி பேசுனா தன் காரியம் நடக்கும்ன்னு நல்லா தெரிஞ்சவரு , ஆமா இவருக்கு வேற வேலையே இல்லையாட , ஏன்டா என் வாழ்க்கையிலே தேவையே இல்லாம மூக்க நுழைக்கிறாரு , எவ்வளவோ தடவ சொல்லிட்டேன் , புரிஞ்சிக்கவே மாட்டிக்காரு " என்றான்
ராஜ் ," அவரு அவர் கவலைய சொல்றாரு "
ஆதவ் ," உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லடா , நா என் மனைவி மேல உயிரே வச்சிருக்கேன் டா " என்னால , இன்னொரு பொண்ண என் வாழ்க்கையில நினச்சிக்கூட பாக்க முடியாது என்றான் .
ராஜ் ," ஆனா அண்ணி தான் உன்கூட இல்லையே "
ஆதவ் ," ஆமா இல்ல அதனால என்ன , அவளோட நியாபகம் என் கூடவே தான் இருக்கு , எங்களோட காதல் ஒன்னும் பொய் இல்ல , அது நூறு சதவீதம் உண்மையானது , ஏதோ கெட்ட நேரம் இப்டி ஆயிடுச்சு , என் லைப் டா நா பாத்துக்கறேன் , எனக்கு என் பையன் இருக்கான் , அவன் முகத்த பாத்தே நா வாழ்ந்துக்குவேன் " என்றான்
ராஜ் ," ஆமா உனக்கு ஒரு wife தேவபடாம இருக்கலாம் , ஆனா உன் பையன் , அவனக்கு ஒரு அம்மா தேவபட்டா"
ஆதவ் ," அவனுக்கு தேவபடாது , இதுவரைக்கும் தேவ படல இனிமையும் தேவ படாது " என்றான்
ராஜ் ," அது உனக்கு எப்டி தெரியும் "
ஆதவ் ," துருவ்வும் நானும் அப்பா புள்ளயா பழகல , ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் மாதிரி பழகுறோம் , தேவபட்டா என்கிட்ட கண்டிப்பா சொல்லிருப்பான் " என்றான்
ராஜ் ," அப்போம் சரி , இதுவரைக்கும் தேவ படல இனிமே தேவ பட்டா "
ஆதவ் ," என்னடா சொல்ற "
ராஜ் ," உண்மைய சொல்றேன் டா , இங்க பாரு ஆதவ் அவனக்கு அம்மா தேவ இல்லனா சந்தோசம் , தேவபட்டா அத சமாளிக்கவும் நமக்கு தெரிஞ்சிருக்கணும் " என்றான்
ஆதவ் ," சரி டா இத பத்தி நா துருவ் கிட்ட பேசுறேன் " என்றான்
ராஜ் ," எல்லாம் சரியாயிடும் நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் " என்றான்
ஆதவ் ," எனக்கு தெரியும் டா , அம்முக்கு அப்றோம் என் பிரச்சனையெல்லாம் நா ஷேர் பண்றேன்னா அது நீ தான் டா " என்று ஆதவ் கூற
ராஜ் ," நண்பேண்டா " என்று கூறி ஆதவ்வை கெட்டி அணைத்துக்கொண்டான் .
பிறகு ஆதவ் ," நா ஒன்னும் கேக்கணும் டா , நீ இன்னும் இந்த ரிங் டோன்ன மாத்தலையா "
ராஜ் ," எப்டி டா மாத்தமுடியும் இது நம்ம அப்பாகளுக்காகவே ஸ்பெஷல்லா செட் பண்ணினதாச்சே , முதல்ல வச்சதே நீ தான" என்றான்
ஆதவ் ," ஆமாட , இப்போலாம் அப்டி வைக்க முடியல , பையன் இருக்கான் , நாம என்ன பண்றமோ அதையே அவனும் பாலோ பண்றான் , ஆயிரம் கேள்வி கேக்குறான் , இன்னொரு டிகிரி கூட படிச்சரலாம் போல இருக்கு டா ஆனா அப்பாவா இருக்கறது தான் ரொம்ப கஷ்டம் " என்று புலம்பிக்கொள்ள ,
ராஜ் ஆதவ்வின் புலம்பலை கேட்டு சிரித்துவிட்டு ," ஏது நீ இன்னொரு டிகிரி பாஸ் பண்ணிருவ இத நாங்க நம்பனும் , யார்கிட்ட,"
ஆதவ் ," ஆமா இவரு லண்டன்ல MBA முடிச்சிருக்காரு , நீயும் என்கூட சேந்தவன் தான , நானாவது ஒழுங்கா பிட்டாவது அடிப்பேன் , சார்க்கு அதுவும் வராது " என்று கூற
ராஜ் ," விடு டா அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா " கூறி இருவரும் சிரித்தனர் .
அலைகள் போல உன் நினைவுகள் என்னை தீண்ட , முற்றிலுமாய் நான் நனைந்து போகிறேன் அன்பே , அலைகளின் ஒவ்வொரு துளியும் உன் நினைவுகளை எனக்கு நியாபக படுத்துகின்றது , அந்த ஸ்பரிசம் ஒன்றே போதும் நான் உயிர் வாழ ...