நினைவுகள் 5
“கண்கள் மூடினால் நீ வருகிறாய் சிரிக்கிறேன்
கண்கள் திறக்கிறேன் நீயும் மறைகிறாய் வெறுக்கிறேன்
இனி பகலே வேண்டாம் , இரவே போதும்
தூக்கம் மட்டும் வரும் வரம் வேண்டும்
கனவில் உன்னை பார்த்துக்கொண்டிருக்க “
மறுநாள் காலையில் வழக்கம் போல எழும்பி ஆதவ் தன் ஆபீஸ்க்கு கிளம்பினான் , போகும் வழியெல்லாம் ராஜின் தந்தை தன்னிடம் முந்தய நாள் இரவு பேசியதையே தன் மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டிருந்தான் . வெகு நேர யோசனைக்கு பிறகு ஆதவ் ராஜாராம் சொல்லுவதும் சரி தான் என்கிற முடிவில் தன் ஆபீஸ்குள் நுழைந்தான் .“கண்கள் மூடினால் நீ வருகிறாய் சிரிக்கிறேன்
கண்கள் திறக்கிறேன் நீயும் மறைகிறாய் வெறுக்கிறேன்
இனி பகலே வேண்டாம் , இரவே போதும்
தூக்கம் மட்டும் வரும் வரம் வேண்டும்
கனவில் உன்னை பார்த்துக்கொண்டிருக்க “
வந்தவன் நேராக தன் காபின்குள் நுழைந்து , தனது அசிஸ்டண்டை அழைத்தான் , அவளிடம்
" ராஜ் வந்துட்டார " என்று கேட்டான்
அவள் பதிலுக்கு ," இல்லை " என்று கூற
ஆதவ் ஒருவித யோசனையோடு , " ரிவீவ் மீட்டிங் எப்போம் " என்றான்
அசிஸ்டண்ட்," ராஜ் சார் வந்தவுடனே ஆரம்பிக்க வேண்டியதுதான் " என்றாள்
ஆதவ் ," என்ன ராஜ் சார் , மீட்டிங் கம்பனிக்காகவா , இல்ல ராஜ் சார்க்காகவா "
அசிஸ்டண்ட் ," சார் கம்பனிக்காக " என்று தயங்கிய குரலில் கூறினாள்
ஆதவ் ," மீட்டிங் எப்போம் "
அசிஸ்டண்ட் ," பத்து மணிக்கு சார் "
ஆதவ் ," அப்போம் சரி இன்னும் பைவ் மினிட்ஸ்ல எல்லாரையும் கான்பரன்ஸ் ரூம்ல அசம்பல் ஆக சொல்லு " என்றான்
அசிஸ்டண்ட் ," யஸ் சார் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
ராஜ் நேற்று அடித்த ட்ரிங்க்ஸால் வழக்கத்தை விட லேடாக எழும்பினான் , ஒரு வழியாக தயாராகி , ஆபீஸ் செல்வதற்காக கீழே வந்தான் .
அப்பொழுது அவன் அம்மா அவனிடம் ," எலும்பிட்டியா வா வந்து சாப்டு " என்றார்
ராஜ் ," நோ மா இன்னைக்கு ரிவீவ் மீட்டிங் இருக்கு , அல்ரெடி லேட் ஆயிடுச்சி , நா வராம ஆதவ்வும் மீட்டிங்க ஸ்டார்ட் பண்ண மாட்டான் , எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான் , நா ஆபீஸ்ல சாப்டுக்குரேன் மா " என்று கூறி கிளம்பினான் .
ஆதவ் கான்பரன்ஸ் ரூம்குள் வந்த பிறகு , தனது அசிஸ்டண்டை அழைத்து ," மீட்டிங் ஸ்டார்ட் ஆன பிறகு , யாரையும் உள்ள விடாத " என்று கூறி விட்டு மீட்டிங்கை துடங்கினான் .
ஆபீஸ்க்கு அறக்க பறக்க ஓடி வந்த ராஜ் , நேராக ஆதவ்வின் அறைக்கு விரைந்தான் , ஆதவ் அங்கே இல்லை என்றவுடன் ," ஒருவேள கான்பரன்ஸ் ரூம்ல அரேஞ்மென்ட்ஸ் பண்ணிட்டு இருப்பான் " என்று கூறிவிட்டு கான்பரன்ஸ் ரூம் பக்கம் வந்தான் , அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ,
ஏனென்றால் இதனால் வரை ஆபீஸில் மட்டும் இல்லை ஆதவ் தன் வாழ்கையில் ராஜ் இல்லாமல் எதுவும் செய்ததில்லை , கம்பெனியை ஆதவ் தன் கையில் எடுத்த நாளில் இருந்து இதனால் வரை ராஜ் இல்லாமல் எந்த மீட்டிங்கும் இங்கு நடந்ததில்லை , ராஜ் இல்லாமல் எந்த கான்ட்ராக்ட்டும் ஆதவ் சயின் பண்ணினதும் இல்லை ராஜ்க்காக எவ்வளவோ பெரிய கான்ட்ராக்டையும் கூட ஆதவ் மிஸ் பண்ணினதுண்டு , ஆனால் எதுக்காகவும் ராஜை ஆதவ் மிஸ் பண்ணினதில்லை , இந்த ஆபீஸ்ஸில் ராஜ் இல்லாமல் நடக்கும் முதல் மீட்டிங் இது தான் .
ராஜ் உட்பட அங்கே மீட்டிங்கில் இருந்த அனைவரூம் அதிர்ச்சியில் இருந்தனர் .
ராஜ் தனக்குள் ," என்னடா சோகமா இருக்க , மீட்டிங் எப்போம் நீ எப்போம் வந்திருக்க அவனும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணுவான் , அதான் ஸ்டார்ட் பண்ணிட்டான்" என்று தனக்கு தானே சமாதான் கூறிவிட்டு ரூமிற்குள் நுழைய பார்த்தான் .
அப்போது அங்கு வந்த ஆதவ்வின் அசிஸ்டண்ட் ," சார் உள்ள மீட்டிங் நடக்குது நீங்க போக முடியாது " என்றாள்
ராஜ் ," வாட் , நா உள்ள போக கூடாதா " என்றான்
அசிஸ்டண்ட்," ஆமா சார் , ஆதவ் சார் ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு " என்றாள்
ராஜ் ," என்ன நீ உள்ள விடலன்னு தெரிஞ்சா , ஆதவ் உன்ன என்ன பண்ணுவான்னு தெரியுமா " என்றான்
அசிஸ்டண்ட்," சார் ப்ளீஸ் , சார் யார் வந்தாலும் விட கூடாதுன்னு சொல்லிருக்காரு என்ன மன்னிச்சிருங்க" என்றாள்
அதை கேட்ட ராஜ் ஒரு வித தடுமாறும் குரலில் ," ஒகே " என்று கூறி விட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றான் .
ஆதவ்வின் இந்த மாற்றத்தில் ஒருவித சோகம் கலந்த கவலையோடு தன் காபினில் அமர்ந்து கொண்டு ," ஏன் ஆதவ் இப்டி இருக்கான் , என்ன ப்ராப்லம் அங்கிள் எதுவும் சொல்லிருப்பாங்களோ , என்ன பிரச்சனயா இருக்கும் " என்று தன் நண்பனை பற்றி கவலை பட்டுக்கொண்டிருந்தான் .
மீட்டிங் முடிந்த பிறகு ஆதவ் தனது எம்ப்ளாயிடம் ," KRR குருப்ஸ் பைல் வேணும் " என்றான்
அதற்கு அவன் ," சார் அத பத்தி எனக்கு தெரியாது , அது ராஜ் சார்க்கு தான் தெரியும் " என்றான்
ஆதவ் ," ராஜ் ராஜ் ராஜ்க்கு தான் எல்லாம் தெரியும்னா நீங்க இந்த ஆபீஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றான்
அப்போது அங்கே வந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜ் , " ஆதவ் ஏன் அவர் கிட்ட கோபப்படுற , பைல் என் ரூம்லே தான் இருக்கு , நா வேணும்னா இப்போவே எடுத்துட்டு வரேன் " என்றான்
ஆதவ் ," இல்ல இப்போம் வேண்டாம் நா சொல்லும் போது கொண்டு வந்தா போதும் "
என்று தரையை பார்த்து கூறி விட்டு , அவனிடம் பேச்சி கொடுக்காமல் வேகமாக நடந்தான் .
ஆதவ்வின் இச்செயலில் மனமுடைந்த ராஜ் , லேசாக கலங்கிய கண்களோடு தன் காபின் வந்து அமர்ந்து கொண்டான் .
அப்பொழுது ராஜின் காபின்குள் வந்த மனேஜர் அவனிடம் ," சார் இந்த பைல் SR குருப்ஸ்கானது , நீங்க சயின் பண்ணிடீங்கனா எல்லாம் ஒகே ஆயிடும் " என்றார்
ராஜ் பைலை வாசிக்கும் பொழுது மனேஜர் ," சார் நீங்க வாசிக்க தேவயில்ல , உங்க சயின் மட்டும் போதும் ஆதவ் சார் கோட் பண்ணிட்டாரு " என்றான்
ராஜ் ," என்ன ஆதவ் கோட் பண்ணிட்டான "
மனேஜர் ," ஆமா சார் "
இதை கேட்ட ராஜை அடுத்த அதிர்ச்சி வந்து தாக்கியது , காரணம் இது வரை ராஜ் இல்லாமல் ஆதவ் எந்த கொட்டேஷனும் கோட் பண்ணினது இல்ல , ஏன் பல கொட்டேஷன ராஜ் தான் கோட் பண்ணுவான் .
ராஜ் ஒரு வித தயக்கதோடு சயின் பண்ணி விட்டு மனேஜரிடம் ," நீங்க போங்க நா பாத்துக்குறேன் " என்று கூறினான் .
பின்பு ஒரு பெரு மூச்சி விட்டுவிட்டு ஆதவை பார்க்க அவனது காபின்க்கு வந்துகொண்டிருந்தான் , அங்கே ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லோரும் கூட்டமாக கூடி ," என்ன ஆச்சி ராஜ் சார்க்கும் , ஆதவ் சார்க்கும் எதோ பிரச்சன போல இருக்கு, " என்று அவர்கள்
இருவரை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர் .ராஜ் அவர்களை பார்த்து முறைக்க , அனைவரும் தங்கள் வேலையை பார்க்க துடங்கினார் , பிறகு ராஜ் வேகமாக ஆதவ்வின் அறை கதவை திறக்க போனான் .
பிறகு வாசலில் நின்று கொண்டு ," மே ஐ கம் இன் சார் " என்றான்
ஆதவ் ராஜின் செய்கையில் , அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்பதையும் உணர்ந்து ," யஸ் கம் இன் " என்றான்
பின் ராஜ்ஜிடம் ," என்ன டா இது புதுசா பெர்மிசன்லாம் கேட்டுட்டு " என்றான்
ராஜ் ," புதுசா நா நடந்துகறனா இல்ல நீ நடந்துகிறியா " என்றான்
ஆதவ் ," என்ன உளர்ற , நா என்ன டா புதுசா நடந்துக்கறேன் " என்றான்
ராஜ் ," அப்போம் இன்னைக்கு நீ பண்ணின எதுவும் புதுசு இல்ல அப்டிதான, அப்போம் சரி இதுக்கு என்ன டா அர்த்தம் " என்று கூறி தன் கையில் இருந்த பையிலை டேபிள் மீது வீசினான் .
பின்பு ராஜ் ," ஆபீஸ்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் எதோ சண்டன்னு நினைக்காங்க " என்றான் .
ஆதவ் ," அதுக்கு ஏன் கோப படுற , அந்த மாதிரிலாம் ஒன்னும் இல்லன்னு சொல்லவேண்டியது தானே " என்றான்
ராஜ் ," என்ன சொல்ல வேண்டியதுதான , ரொம்ப ஈஸியா சொல்லிட்ட ம்ம்ம் , அவங்க அப்டி சொல்றாங்கனா அதுக்கு காரணம் யாருடா , நீ இப்டி நடந்துக்கறனாலதான் டா
அவங்க அப்டி பேசுறாங்க " என்றான்
ஆதவ் ," நா என்ன அப்டி நடந்துகிட்டேன் " என்றான் .
ராஜ் ," ஒ அது சரி நீ என்ன பண்ணினன்னு கூட உனக்கு தெரியலல , சரி இந்த பைல் , நா இல்லாமயே நீ கோட் பண்ணிருக்க , ஒகே மீட்டிங், என்னைக்கு டா நா இல்லாம நீ மீட்டிங் அட்டெண்ட் பண்ணிருக்க , கஷ்டமா இருக்குடா , நா எதாவது தப்பு பண்ணிருந்தா சொல்லிரு திருத்திக்கிறேன் , இப்டிலாம் பண்ணாத டா எதோ நீ என்ன அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு " என்றான்
ஆதவ் ," இதுலாம் ஒரு மட்டரா இத நீ இவ்வளவு பெருசா ஆக்குவன்னு நா நினைக்கல" என்றான்
ராஜ் ," வாட் இதெல்லாம் உனக்கு சாதாரணமான விஷயமா தெரியுதா ஹ்ம்ம் நா பெருசு படுத்துரேன் " என்று கூறி அழுதுகொண்டே ,
" அது ஒன்னும் இல்ல எனக்கு ஒரு ப்ரண்ட் இருந்தான் அவனுக்கு நானா உயிரு , எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான் .
அவனுக்கு புட்பால்னா உயிரு , அப்போம் எங்களுக்கு ஒரு பதினேழு வயசு இருக்கு ஸ்டேட் லெவல் புட்பால் மேட்ச் வந்துச்சி , இன்னைக்கு கிளம்பனும்ன்னு வச்சுகோயேன் நாளைக்கு மேட்ச் , எனக்கு பீவர்ங்கற ஒரே காரணத்துக்காக அவன் வாழ்க்கைக்கு முக்கியமான மேட்ச்க்கு போகாம என்கூட ஹாஸ்பிடல்ல கடந்தான் , ஏண்டா போகலன்னு கேட்டதுக்கு நீ தாண்டா முக்கியம் மேட்ச் கடக்குதுடா , நீ உடம்பு சரியில்லாம இருக்க நா எப்டி டா போறதுன்னு சொன்னான் .
எங்களோடது 25 வர்ஷ ப்ரண்ட்ஷிப்பு , இதனால் வரைக்கும் அவன் என்கிட்ட கேக்காம எதுவும் பண்ணமாட்டான் , ஆபீஸ்ல ஒரு கான்ட்ராக்ட்ல சயின் பண்றதா இருக்கட்டும் இல்ல ஒரு ஷூ வாங்குறதா இருக்கட்டும் என்கிட்ட தான் கேப்பான் .
ஒருநாள் ஒரு முக்கியமான மீடிங்க நா வரலங்கற ஒரே காரணத்துக்காக கென்செல் பண்ணினான் , ஆனா இன்னைக்கு நா லேட்டா வந்தேன்னு சொல்லி மீட்டிங் அட்டெண்ட் பண்ண கூடாதுன்னு சொல்றான் , ஏன்னு தெரியல , கஷ்டமா இருக்கு " என்றான் .
ஆதவ் தேம்பி தேம்பி அழுதுகொண்டே ராஜ்ஜிடம்," சாரி டா , எனக்கு இத விட்டா வேற வழி தெரியல , என்ன மன்னிச்சிருடா , நீ எனக்காக எவ்வளவோ பண்ணிட்ட , நீ என்ன விட்டு போயிருடா அப்போம் தான் நீ நல்லா இருப்ப " என்றான்
ராஜ் ," ஏண்டா என்னாச்சி , எதுக்கு சாரி கேக்க , என்ன வழி தெரியல , எனக்கு ஒன்னும் புரியல டா , யாரவது எதாவது சொன்னாங்களா , அப்பா , அப்பா எதுவும் சொன்னாங்களா"
ஆதவ் ," அவர் ஒன்னும் பொய் சொல்லலேயே , உண்மையத்தானே சொன்னாரு "
ராஜ் ," அப்போம் அவரு சொல்லிருக்காரு , அவர " என்றவனை தடுத்த ஆதவ் ," அவர் மேல எந்த தப்பும் இல்லடா , என்னால தான நீ ஜெயிலுக்குலாம் போயிட்டு ச்ச அத நினைக்கவே கஷ்டமா இருக்கு "
ராஜ் ," ஏண்டா பழசலாம் இப்போம் பேசிக்கிட்டு "
ஆதவ் ," விஷயம் பழசு தான்டா ஆனா அத அப்டியே ஒதிக்கிற முடியாது டா "
ராஜ் ," இதெல்லாத்துக்கும் காரணம் என் அப்பா அவர "
ஆதவ் ," அவரு மேல எந்த தப்பும் இல்லடா "
ராஜ் ," நீ சும்மா இரு அவர் உன்ன என்னடா சொன்னாரு "
ஆதவ் ," அதெல்லாம் ஒன்னும் இல்ல டா "
ராஜ் ," இப்போம் சொல்ல போறியா இல்லையா "
ராஜ் கோபமாக கேக்க , ஆதவ் ,அனைத்தையும் கூறினான் , பிறகு ராஜ் ," அவர் ஏண்டா இப்டி பண்றாரு , உன்கிட்ட அப்டி பேச அவருக்கு யார் டா ரைட்ஸ் குடுத்தது , உனக்கும் எனக்கும் நடுவுல யார் வந்தாலும் அத என்னால ஏத்துக்க முடியாதுடா " என்றான்
ஆதவ் ," சந்தோஷமா இருக்குடா , ஆனா என்னாலா தானடா நீ ஜெயிலுக்கு போன நா கல்யாணம் பண்ணினதுக்கு நீ ஜெயிலுக்கு போக வேண்டியதாயிட்டே .
அதான் உன் அப்பா என் மேல கோவமா இருக்காங்க , என்ன காட்டிக்குடுக்க கூடாதுங்கறதுக்காக நீ ஜெயில்ல அடி வாங்க வேண்டியதாயிடுச்சே , நல்ல வேல என் அப்பா உன்ன வெளியில எடுத்தாரு இல்லனா அவ்வளவு தான், நினச்சி கூட பாக்க முடியல " என்றான்
ராஜ் ," போதும் டா போதும் பழச பேசாத , அது முடிஞ்சி போன விஷயம் " என்றான்
ஆதவ் ," சாரி உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் "
ராஜ் ," சாரிலாம் வேண்டாம் இனிமே , என்னைக்கும் யார் சொன்னாலும் நாம பிரியனும்ன்னு நீ சொல்ல கூடாது " என்றான்
ஆதவ் , " சரி டா இனிமே என்னைக்கும் நாம பிரியனும்ன்னு சொல்றதென்ன , நினைக்க கூட மாட்டேன் " என்றான்
ராஜ் ," நீ இன்னைக்கு பண்ணின காரியத்தால எதோ லவ்ர்ஸ் மாதிரி பேசிட்டு இருக்கோம் , பொண்ணுங்க மாதிரி அழ வேற வச்சிட்ட " என்றான்
ஆதவ் ," ஆமா டா , அப்றோம் ராஜ் உன் அப்பா கிட்ட இத பத்தி எதுவும் கேட்டுக்காத , இத அப்டியே ப்ரீயா விட்ரு " என்றான்
ராஜ் ," ஹ்ம்ம் சரி மச்சான் , அப்றோம் இன்னைக்கு நீ என்ன ரொம்ப பீல் பண்ண வச்சுட்டடா "
ஆதவ் ," ஆமா டா சரி ஒன்னு பண்ணலாம் , எங்கயாவது ஒரு லாங் டிரைவ் போலாம் என்ன சொல்ற ஹ்ம்ம் "
ராஜ் ," செம பிளான் வா டிரைவ் போய் ரொம்ப நாள் ஆச்சு " என்று கூறி இருவரும் ஒருவருக்கொருவர் கெட்டி அணைத்துக்கொண்டு
ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு ஆதவ்வின் காபினில் இருந்து வெளியே வந்தனர் .
அதை பார்த்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து முழிக்க , ஆதவ்வும் ராஜும் அவர்களை பார்த்து சிரித்துவிட்டு , காரில் சந்தோஷமாக பறந்தனர்.
கனவெல்லாம் நீயே தெரிய அன்பே இன்றில் இருந்து தூக்கத்தை கூட ரசிக்க துடங்கிவிட்டேன்.