shiyamala sothybalan
இணை அமைச்சர்
- Joined
- Dec 12, 2019
- Messages
- 866
- Reaction score
- 2,640
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. ரொம்ப நகைச்சுவையாயும் இருந்தது உங்கள் எழுத்து. சாராதாம்மா அறிவழகனுக்குப் பிறந்த அறிவுக் கொழுந்து தான் தேவ்அநபாயன். ஆத்விகா தயாளமூர்த்திக்குப் பதில் ஆத்மிகா தயாளனக் கடத்தி இவர் பண்ற அட்டகாசம் இருக்கே சொல்லி மாளாது. தயாளனுக்கும் அகிலாவுக்கும் பிறந்தவள் தான் ஆத்மிகா. கொல்காத்தாவுக்கு மாற்றலாகி வந்த நான்காம் நாலே ஒருத்தன் வந்து பெண் பார்க்க வருவான் உலகத்தில எந்த ஒரு பெண்ணையும் இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்பார்த்திருக்க மாட்டார்கள். அது எப்படிப்பட்ட சூழ்நிலையென்றும் அது உண்மையிலும் பெண்பார்க்கும் படலமாவென்று கதையைப் படித்துப் பாருங்கள். ஆத்மியின் அக்கா அபர்ணாவின் குழந்தை தியாவைக் குழந்தையென்றும் பாராமல் கொடுமைப் படுத்துவான். அபர்ணாவும் சந்தோசும் இக்கட்டான சூழ்நிலையில் ஆத்மி தேவோட கல்யாணத்துக்கு சாட்சியாகிறார்கள். அது என்ன சூழ்நிலையென்பது கதையில் தெரியும். சாரதாம்மாக்கு அறிவழகனால் நடந்தேறும் அக்கிரமம் சொல்லி மாளாது. அதிலிருந்து மீண்டு சாரதாம்மா ஆசிரியராகிறார். அவ தன்னோட மகன் தேவை தகப்பன மாதிரியில்லாமல் அருமையாக வளர்க்க வேணும் என்டு நினைக்கிறார் ஆனால் அவரால் மகனைக் கவனம் எடுத்து வளர்க்க முடியாமல் போகிறது. ஊரான் பிள்ளைகளுக்கு அறிவூட்டுபவர் தன் குழந்தைக்கு அறிவூட்ட, பாசம் காட்ட தவறி விடுவார். இதனால் தான் ஆத்மி பல இன்னல்களை அநுபவிக்கிறாள். இதெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல ஆத்மி சாரதாம்மாவின் ஆதரவுடன் தேவுக்கு திருப்பிச் செய்கின்ற கொடுமைகள் இருக்கே நான் ரசிச்சு வாசிச்ச பகுதிகள். பூமராங் மாதிரி தேவ் ஆத்மிக்கு செய்ததுக்கு அவருக்கே திரும்ப கிடைச்சுட்டு. அருமையான கதை வாசிச்சுப் பாருங்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.