Crazee queen
மண்டலாதிபதி
இரவு நெடு நேரம் தூங்காமல் விழித்திருந்து மிருதுளா. அவள் உள்ளம் கொதித்தது. இதயா மீது அதீத கோபம் எழுந்தது. ஏழை என்றால் இந்தப் பணக்காரர்களுக்கு இளப்பமா? இவர்கள் வசதிக்கு எல்லாம் - எதையும் - வாங்கி விடலாம் என்ற அலட்சியம். ஒரு பெண்ணின் வாழ்க்கை, எதிர்காலம், மனம் இப்படி எல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சற்றும் யோசிக்காமல் எப்படி சுலபமாய் ' திருமணம் ஒப்பந்தம் ' பற்றி பேசிவிட்டார்!
ஏதோ அவசரக்காரன், ஆத்திக்காரன் என்று தான் அவனைப் பற்றி நினைத்திருந்தாள். இப்படி பேசுபவனை எதில் சேர்ப்பது ?
என்ன முயன்றும் மனம் அடங்க மறுத்தது. இருட்டை வெறித்துப் பார்த்துக் படி எத்தனை மணி நேரம் ஜன்னல் வழியாக நிலாவை ரசித்தபடி நிற்பது. . . . மெல்ல வந்து படுக்கையில் அமர்ந்தாள். மெல்லிய இரவு விளக்கின் நீல ஒளியில் குழந்தை தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.
மாலையில் ' மம்மி ' அம்மா ' என்று தன் காலை அவள் கட்டிக் கொண்டதும் தன் உடல் முழுவதும் ஒரு நொடி நடுங்கியதும். ' இப்போ அம்மா கிட்ட என்ன சொல்றது ' என்று இதயா கேட்டதும் மனதில் ஓடியது.
ஒரு வேளை இதயா குழந்தையிடம் இப்படி அழைக்க சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருப்பானோ என்று தோன்ற அவனை முறைத்தாள். அவன் அப்பாவியாய் திரு திரு என்று விழித்தான்.
இதற்குள் அங்கு சரித்தபடி வந்த பாகீரதியம்மாள், " அச்சச்சோ. . . . இது உன் மிருதும்மா டா " என்று குழந்தையிடம் சொன்னர் மேலே எதுவும் குழந்தையிடம் சொல்லாமல், முறைப்பும் விறைப்புமாய் நிற்கும் மிருதுளாவிடம் திரும்பி, " நீ எதுவும் தப்பா நினைக்காதேம்மா. இங்கே நம்ம தொழில்களர்கள் குழந்தைகளுக்காக ஒரு ஸ்கூல் கட்டியிருக்கோம். நான் இங்கே வந்தா அந்த ஆசிரியர் எல்லாரும் என்னைப் பார்க்க வருவாங்க - ஒரு மரியாதை நிமித்தம் தான். இன்னைக்கு விடுமுறைங்கறதால, சில ஆசிரியை தங்கள் குழந்தையோட வந்திருந்தாங்க. அந்த குழந்தைங்க கிட்டத்தட்ட நம்ம ரக்ஷூ வயசு தான். எல்லாம் 'மம்மி', 'அம்மான்னு ' அவங்கவங்க அம்மாவை கூப்பிட்டு, ஒட்டிக்கிட்டாங்க . அதைப் பார்த்து ரக்ஷு நீ தான் அம்மான்னு . . . "புரிந்து கொள் என்பது போல அவள் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
நான் நிரபராதிப்பா என்பது போல் இதயா தோள் குலுக்கி உள்ளே போனான். இறுக்கம் தளர்த்தி, புன்சிரிப்பை முகத்தில் மிளிர விட்டாள். தன் கால் கட்டி முகம் நோக்கி நின்ற குழந்தையை வழக்கம் போல் வாரி அணைத்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் முகத்தில் முத்தத்தை பதித்தது.
" கடவுளே, முருகா! உன்கிட்ட கிடைக்கும் இத்தனை அன்பும் இரவல் அன்பு, தற்காலிகமானதுனு தெரியாம குழந்தை ஏமாறப் போறா". . . . பாகீரதியம்மாவால்சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மிருதுளாவின் முகம் சிறுத்துப் போனது.
எஸ்டேட்டில் இருந்து மறுநாள் காலை எல்லாரும் விடு திரும்பினார்கள். மிருதுளா தான் இருப்பே கொள்ளாமல் தவித்தாள். குழந்தையோ அவளே கதியென்று இருந்திருந்தால் அவளின் மென்மையான மனம் எந்த விதத்திலும் குழந்தையை விலக்கி வைத்து விலகி நிற்க முடியாமல் தடுமாறியது. இந்தக் குழந்தையை விட்டு எப்படித்தான் மாமாவோடு கிளம்பப் போகிறோம் என்று மிரட்சியாய் இருந்தது. முதலில் எப்படி பாகீரதியம்மாளிடம் இதுபற்றி எல்லாம் சொல்லப் போகிறாள்? ஆனால், சொல்லாமல் முடியுமா? இதயா பேசிய விதம் சரியா? இதயா மேல் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
' குழந்தைக்கு விவரம் தெரிந்தபின் பிரிந்து போய் விடலாம் - உண்மைய சொல்லிவிட்டு! என்ன சுலபமாய் சொல்லி விட்டான். ஐந்து பத்து வருடங்கள் ஒருவன் வீட்டில் வாழ்ந்த பின், பிரிந்து போனால், தன்னைப் போன்ற ஒரு நடுத்தர வயது வவர்க்கப் பொண்ணுக்கு அத்தனை எளிதாய் வாழ்க்கை அமைந்து விடுமா? இவர்கள் தங்கள் பணம் பபயன்படுத்தி ஒரு மாப்பிள்ளையை விலைக்கு வாங்கி, கொடுக்க முடியும். ஆனால், அப்படி அமையும் வாழ்வு தனக்கு நிலைக்குமா? சீதையையே தீ குளிக்கச் சொன்ன ஆண்வர்க்கம்!
குழந்தையை மட்டும் எப்படியாவது சமாதானப்படுத்த முடிந்தால் சரி. போதும்! கிளம்பி விடலாம் . அது தான் எப்படி சாத்தியமாகப் போகிறது என்று கவலைப்படாள். முதல் முறை தான் விட்டுப் போனதற்கே குழந்தை காய்ச்சல் வந்து கவனிப்பாரற்று கிடந்தாள் என்று மனம் பதைத்து.
அந்த பயம் வந்தவுடன் இருதயாவிடமே ஓடினாள். "
இன்னும் ரெண்டு மூணு நாள்ல மாமா வந்துடுவார். ஆளுக்கு ஏற்படு செஞ்சுட்டீங்களா? குழந்தையை அம்போனு நான் விட்டுப் போக என் மனசாட்சி ஒப்புக்காது. அதே மாதிரி அம்மா கிட்ட நீங்களே விஷயத்தை சொல்லிடுங்க " எனறாள் கறாராக.
அவளின் மன ஒட்டம் அவனுக்கு புரியவே இல்லை. "
அத்தனை அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா? வேறு ஆள் கிடைச்சா நான் ஏன் உங்ககிட்ட கல்யாணம் வரை கீழே இறங்கி வரேன்? என்றான் பட்டென்று.
அவள் அடிபட்டுப் போனாள். என்னோடு கல்யாணம் என்பது உன் தரம் இறங்கி வரும் செயலா? என்று மனம் குமைந்தாள்.
" அந்த பிஞ்சுக்குழந்தை மனசுக்காக பார்க்கறேன். இல்லாட்டி, மனசாட்சி இல்லாத நபர் வாழும் வீட்டிலிருந்து இந்த நிமிடமே கிளம்பி இருப்பேன். உங்க கோரிக்கைய எங்க மாமாகிட்டயோ, உங்க அம்மாகிட்டயோ சொன்னா யாரும் என்னை இங்கே இருக்கச் சொல்லி வற்புறுத்தப் மாட்டங்க. புரிஞ்சுதா? " என்று சீறினாள்.
" அப்படி என்ன மனசாட்சி இல்லாத நபரா நான் நடந்துக்கிட்டேன்? சரி இஷ்டம் இல்லைன்னா கிளம்புங்க. நான் அம்மா கிட்ட சொல்லிக்கறேன். எந்த வேலைக்கு போனாலும் குறைந்தது ஒரு மாசம் நோட்டீஸ் தரனும் சோ. ஒரு மாதம் கழிச்சு வந்து உங்களை கூட்டிட்டுப் போக சொல்லுங்க. அதுக்குள்ள ஆள் பார்த்துடறேன் . . . என்ன இத்தனை கோடி மக்கள் தொகை ஜனநாயக நாநாட்டுல குழந்தையை தாய்மையோட பார்த்துக்க ஆளக்கா பஞ்சம்? " என்று தானும் பதிலுக்கு பொரிந்து விட்டு எழுந்து சென்றவன் நேராக யாழ் விடம் தான் சென்று போய் நின்றான்,.
" அவ இதுக்கு ஒத்துக்க மாட்டேங்கறா " என்று விவரம் முழுவதும் சொன்னான். " ஒரு மாசம் டைம் கேட்டிருக்கீங்க இல்ல. சரி, அதுக்குள்ள நான் சரி பண்றேன் " என்றாள் விஷமப் சிரிப்பு.
"என்ன செய்யப் போறே?"
அதைப் பற்றி உங்களுக்கு என்ன? எவனோ வரதட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றதால தானே இங்கிருந்து ஓடறேங்கறா. அவன் மறுத்துட்டா? "
என்ன சொல்றே நீ? புரியலை.
"புரிய வேண்டாம். அவ மாமா அழைக்க வரும் போது, ஒரு மாசம் டைம் கேட்டிருக்கீங்க இல்ல. அப்பவே அவர்கிட்ட அந்த பையன்னைப் பத்தி விவரம் மட்டும் கேளுங்க, போதும். சரியா?"
எதற்கு என்பது புரியாவிட்டாலும், சரி என்று தலையாட்டினான்.
குரு வந்த போது, மாலை நேரமாகி விட்டது. இதயா வீட்டில் இருந்தான். பாகீரதியம்மாள், மிருதுளா எல்லாரும் குழுமியிருந்தனர்.
இதயா கை குலுக்கி, குரு அவனிடம் பேச்சை துவங்கினான் இதயா.
" உங்களையும் பார்த்து நல்லதாப் போச்சை அன்னைக்கு அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டுப் போனான் சொன்னாங்களா? "
ஓ! நல்ல விஷயம்! பையன் எங்க வேலையா இருக்காரு? "
குரு பையன் பற்றிய முழு விவரங்களையும் சொன்னா. அவன் வேலை செய்யும் அரசு துறை, பதவி என்று விளக்கமாகவ கேட்டுக் கொண்டான் இதயா.
பற்களை கடித்துக் கொண்டு அவனை முறைத்த படி நின்றால் மிருதுளா.
" ரொம்பத் தேவை இதெல்லாம் உனக்கு " என்று மனம் குமைந்தாள்.
" எல்லாம் சரி மிஸ்டர் குரு. நல்ல விஷயமா நீங்க சொல்லும் போது, நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். ஆனா, ஒரு சின்ன பிரச்சினை.
" இதல்லாம் . நீங்க இவ்வளவு கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. உங்க மிருதுளா. எங்க ரக்ஷுவை ரொம்ப நல்லா பார்த்துக்கறாங்க. அவங்க இடத்தில் இப்ப வேற ஒருத்தரை தேடறோம். கிடைக்கும் வரை... ஒரு, ஒரு மாசம் டைம் நோட்டீஸ் டைம்னு வேணும்னாலும் எடுத்துக்கோங்க. . . . இவங்க இருக்கட்டும். அதுக்குள்ள, நாளைக்கே ஆள் கிடைச்சாலும், உடனே அந்த இவங்களை தகுந்த பாதுகாப்போட அனுப்பி வைக்கறோம். நீங்க கூட இதுக்காக வர வேண்டாம். ஒரு மாதம் கழிச்சு முகூர்த்தம் வைக்கறதில் உங்களுக்கு ஓன்னும் கஷ்டமில்லையே. ?"
" சரி. . . " என்று இழுத்தவன். "இது மார்கழி மாமாசம், தைல முகூர்த்தம் பார்க்கச் சொல்லுவாங்க சம்சம்பந்தி வீட்ல. அதுக்கு சரி சொல்லிடலாமில்ல? "
"தாராளமா. .." என்று சரித்தவன், அப்படியே மிருதுளாவைப் பார்த்தான். அவள் பார்வை சூடாய் அவன் பார்வையை வெட்டியது.
"இரவு நேரத்தில் மலை இறங்க வேண்டாம். சாப்பிட்டு இங்கயே ஓய்வெடுங்க. காலை நேரத்தில் போய்க்கலாம்". என்றான் இதயா
இரவு அவன் படுக்க விருந்தினர் அறையை அவனுக்கு மிருதுளா தான் காட்டினால். குளிருக்கு இதமாய் ஹீட்டர், ஏசி இரண்டும் இருந்தன. உட்கார்ந்தால் அப்படியே உள் இழக்கும் மெத்தை. குளிர் தெரியாமல் கதகதப்பாய் அணைக்க கம்பிளிப் போர்வை. கால் வைக்கும் இடமெல்லாம் ' மெத் ' என்ற கார்பெட்.
சற்று முன் வயிறு முட்ட சுவையாய் சாப்பிட்டிருந்தவனுக்கு இந்த அறையைப் பார்த்தவுடன், மேலும் குஷியானான்.
நான் இப்படியெல்லாம் குளிர் பிரதேசத்துல வந்து சொகுசான அறையில எல்லாம் தங்கினதே இல்லை, மிருது! யப்பா! எவ்வளவு சொகுசா இருக்கு " என்று மிருதுளாவிடம் குதூகலித்தான்.
குழந்தை போல் அவன் சந்தோஷத்தை பார்த்த மிருதுளாவிற்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது..
இங்க வசதியா இருக்கே. உன்னை சந்தோஷமா வெச்சுக்கறாங்கனு தெரியுது " என்று முகம் மலர சொன்னவன் சட்டென்று முகம் வாட, இப்ப உனக்கு பார்த்திருக்கும் வரன் சுமாரான இடம் தான். மிருதும்மா. இத்தனை வசதியில்லாம் கிடையாதே" என்றும் அங்கலாய்த்தான்.
அவன் அருகே அமர்ந்தவள், " மாமா நான் வேலை செய்யற இடம் தான் வசதியானது. நான் எப்பவும் அதே ஒண்டு குடித்தன மிருதுளா தான் என்று மென்மையாய் சிரித்தாள்.
சின்ன வயசுலேயே உனக்கு விவேகம் ஜாஸ்திம்மா என்றான், குரு.
" தூங்குங்க. காலை சீக்கிரமே கிளம்பணும் நீங்க. என்று விளக்கணைத்து விட்டு வெளியே வந்தாள்.
Hi frnds!
Nega ellarum story read panni enjoy panndregala thereyala. Anku thereyium ellarum ithaya nd yali mela sema kovama irupega thereyium. Unga point of view living relationship pathi solluga.
Story la yathum thappuna solluga na change panna try panndran.
Innum 2 r 3 ud la flash back over agum so kova padama padiga.
ஏதோ அவசரக்காரன், ஆத்திக்காரன் என்று தான் அவனைப் பற்றி நினைத்திருந்தாள். இப்படி பேசுபவனை எதில் சேர்ப்பது ?
என்ன முயன்றும் மனம் அடங்க மறுத்தது. இருட்டை வெறித்துப் பார்த்துக் படி எத்தனை மணி நேரம் ஜன்னல் வழியாக நிலாவை ரசித்தபடி நிற்பது. . . . மெல்ல வந்து படுக்கையில் அமர்ந்தாள். மெல்லிய இரவு விளக்கின் நீல ஒளியில் குழந்தை தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.
மாலையில் ' மம்மி ' அம்மா ' என்று தன் காலை அவள் கட்டிக் கொண்டதும் தன் உடல் முழுவதும் ஒரு நொடி நடுங்கியதும். ' இப்போ அம்மா கிட்ட என்ன சொல்றது ' என்று இதயா கேட்டதும் மனதில் ஓடியது.
ஒரு வேளை இதயா குழந்தையிடம் இப்படி அழைக்க சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருப்பானோ என்று தோன்ற அவனை முறைத்தாள். அவன் அப்பாவியாய் திரு திரு என்று விழித்தான்.
இதற்குள் அங்கு சரித்தபடி வந்த பாகீரதியம்மாள், " அச்சச்சோ. . . . இது உன் மிருதும்மா டா " என்று குழந்தையிடம் சொன்னர் மேலே எதுவும் குழந்தையிடம் சொல்லாமல், முறைப்பும் விறைப்புமாய் நிற்கும் மிருதுளாவிடம் திரும்பி, " நீ எதுவும் தப்பா நினைக்காதேம்மா. இங்கே நம்ம தொழில்களர்கள் குழந்தைகளுக்காக ஒரு ஸ்கூல் கட்டியிருக்கோம். நான் இங்கே வந்தா அந்த ஆசிரியர் எல்லாரும் என்னைப் பார்க்க வருவாங்க - ஒரு மரியாதை நிமித்தம் தான். இன்னைக்கு விடுமுறைங்கறதால, சில ஆசிரியை தங்கள் குழந்தையோட வந்திருந்தாங்க. அந்த குழந்தைங்க கிட்டத்தட்ட நம்ம ரக்ஷூ வயசு தான். எல்லாம் 'மம்மி', 'அம்மான்னு ' அவங்கவங்க அம்மாவை கூப்பிட்டு, ஒட்டிக்கிட்டாங்க . அதைப் பார்த்து ரக்ஷு நீ தான் அம்மான்னு . . . "புரிந்து கொள் என்பது போல அவள் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
நான் நிரபராதிப்பா என்பது போல் இதயா தோள் குலுக்கி உள்ளே போனான். இறுக்கம் தளர்த்தி, புன்சிரிப்பை முகத்தில் மிளிர விட்டாள். தன் கால் கட்டி முகம் நோக்கி நின்ற குழந்தையை வழக்கம் போல் வாரி அணைத்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் முகத்தில் முத்தத்தை பதித்தது.
" கடவுளே, முருகா! உன்கிட்ட கிடைக்கும் இத்தனை அன்பும் இரவல் அன்பு, தற்காலிகமானதுனு தெரியாம குழந்தை ஏமாறப் போறா". . . . பாகீரதியம்மாவால்சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மிருதுளாவின் முகம் சிறுத்துப் போனது.
எஸ்டேட்டில் இருந்து மறுநாள் காலை எல்லாரும் விடு திரும்பினார்கள். மிருதுளா தான் இருப்பே கொள்ளாமல் தவித்தாள். குழந்தையோ அவளே கதியென்று இருந்திருந்தால் அவளின் மென்மையான மனம் எந்த விதத்திலும் குழந்தையை விலக்கி வைத்து விலகி நிற்க முடியாமல் தடுமாறியது. இந்தக் குழந்தையை விட்டு எப்படித்தான் மாமாவோடு கிளம்பப் போகிறோம் என்று மிரட்சியாய் இருந்தது. முதலில் எப்படி பாகீரதியம்மாளிடம் இதுபற்றி எல்லாம் சொல்லப் போகிறாள்? ஆனால், சொல்லாமல் முடியுமா? இதயா பேசிய விதம் சரியா? இதயா மேல் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
' குழந்தைக்கு விவரம் தெரிந்தபின் பிரிந்து போய் விடலாம் - உண்மைய சொல்லிவிட்டு! என்ன சுலபமாய் சொல்லி விட்டான். ஐந்து பத்து வருடங்கள் ஒருவன் வீட்டில் வாழ்ந்த பின், பிரிந்து போனால், தன்னைப் போன்ற ஒரு நடுத்தர வயது வவர்க்கப் பொண்ணுக்கு அத்தனை எளிதாய் வாழ்க்கை அமைந்து விடுமா? இவர்கள் தங்கள் பணம் பபயன்படுத்தி ஒரு மாப்பிள்ளையை விலைக்கு வாங்கி, கொடுக்க முடியும். ஆனால், அப்படி அமையும் வாழ்வு தனக்கு நிலைக்குமா? சீதையையே தீ குளிக்கச் சொன்ன ஆண்வர்க்கம்!
குழந்தையை மட்டும் எப்படியாவது சமாதானப்படுத்த முடிந்தால் சரி. போதும்! கிளம்பி விடலாம் . அது தான் எப்படி சாத்தியமாகப் போகிறது என்று கவலைப்படாள். முதல் முறை தான் விட்டுப் போனதற்கே குழந்தை காய்ச்சல் வந்து கவனிப்பாரற்று கிடந்தாள் என்று மனம் பதைத்து.
அந்த பயம் வந்தவுடன் இருதயாவிடமே ஓடினாள். "
இன்னும் ரெண்டு மூணு நாள்ல மாமா வந்துடுவார். ஆளுக்கு ஏற்படு செஞ்சுட்டீங்களா? குழந்தையை அம்போனு நான் விட்டுப் போக என் மனசாட்சி ஒப்புக்காது. அதே மாதிரி அம்மா கிட்ட நீங்களே விஷயத்தை சொல்லிடுங்க " எனறாள் கறாராக.
அவளின் மன ஒட்டம் அவனுக்கு புரியவே இல்லை. "
அத்தனை அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா? வேறு ஆள் கிடைச்சா நான் ஏன் உங்ககிட்ட கல்யாணம் வரை கீழே இறங்கி வரேன்? என்றான் பட்டென்று.
அவள் அடிபட்டுப் போனாள். என்னோடு கல்யாணம் என்பது உன் தரம் இறங்கி வரும் செயலா? என்று மனம் குமைந்தாள்.
" அந்த பிஞ்சுக்குழந்தை மனசுக்காக பார்க்கறேன். இல்லாட்டி, மனசாட்சி இல்லாத நபர் வாழும் வீட்டிலிருந்து இந்த நிமிடமே கிளம்பி இருப்பேன். உங்க கோரிக்கைய எங்க மாமாகிட்டயோ, உங்க அம்மாகிட்டயோ சொன்னா யாரும் என்னை இங்கே இருக்கச் சொல்லி வற்புறுத்தப் மாட்டங்க. புரிஞ்சுதா? " என்று சீறினாள்.
" அப்படி என்ன மனசாட்சி இல்லாத நபரா நான் நடந்துக்கிட்டேன்? சரி இஷ்டம் இல்லைன்னா கிளம்புங்க. நான் அம்மா கிட்ட சொல்லிக்கறேன். எந்த வேலைக்கு போனாலும் குறைந்தது ஒரு மாசம் நோட்டீஸ் தரனும் சோ. ஒரு மாதம் கழிச்சு வந்து உங்களை கூட்டிட்டுப் போக சொல்லுங்க. அதுக்குள்ள ஆள் பார்த்துடறேன் . . . என்ன இத்தனை கோடி மக்கள் தொகை ஜனநாயக நாநாட்டுல குழந்தையை தாய்மையோட பார்த்துக்க ஆளக்கா பஞ்சம்? " என்று தானும் பதிலுக்கு பொரிந்து விட்டு எழுந்து சென்றவன் நேராக யாழ் விடம் தான் சென்று போய் நின்றான்,.
" அவ இதுக்கு ஒத்துக்க மாட்டேங்கறா " என்று விவரம் முழுவதும் சொன்னான். " ஒரு மாசம் டைம் கேட்டிருக்கீங்க இல்ல. சரி, அதுக்குள்ள நான் சரி பண்றேன் " என்றாள் விஷமப் சிரிப்பு.
"என்ன செய்யப் போறே?"
அதைப் பற்றி உங்களுக்கு என்ன? எவனோ வரதட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றதால தானே இங்கிருந்து ஓடறேங்கறா. அவன் மறுத்துட்டா? "
என்ன சொல்றே நீ? புரியலை.
"புரிய வேண்டாம். அவ மாமா அழைக்க வரும் போது, ஒரு மாசம் டைம் கேட்டிருக்கீங்க இல்ல. அப்பவே அவர்கிட்ட அந்த பையன்னைப் பத்தி விவரம் மட்டும் கேளுங்க, போதும். சரியா?"
எதற்கு என்பது புரியாவிட்டாலும், சரி என்று தலையாட்டினான்.
குரு வந்த போது, மாலை நேரமாகி விட்டது. இதயா வீட்டில் இருந்தான். பாகீரதியம்மாள், மிருதுளா எல்லாரும் குழுமியிருந்தனர்.
இதயா கை குலுக்கி, குரு அவனிடம் பேச்சை துவங்கினான் இதயா.
" உங்களையும் பார்த்து நல்லதாப் போச்சை அன்னைக்கு அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டுப் போனான் சொன்னாங்களா? "
ஓ! நல்ல விஷயம்! பையன் எங்க வேலையா இருக்காரு? "
குரு பையன் பற்றிய முழு விவரங்களையும் சொன்னா. அவன் வேலை செய்யும் அரசு துறை, பதவி என்று விளக்கமாகவ கேட்டுக் கொண்டான் இதயா.
பற்களை கடித்துக் கொண்டு அவனை முறைத்த படி நின்றால் மிருதுளா.
" ரொம்பத் தேவை இதெல்லாம் உனக்கு " என்று மனம் குமைந்தாள்.
" எல்லாம் சரி மிஸ்டர் குரு. நல்ல விஷயமா நீங்க சொல்லும் போது, நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். ஆனா, ஒரு சின்ன பிரச்சினை.
" இதல்லாம் . நீங்க இவ்வளவு கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. உங்க மிருதுளா. எங்க ரக்ஷுவை ரொம்ப நல்லா பார்த்துக்கறாங்க. அவங்க இடத்தில் இப்ப வேற ஒருத்தரை தேடறோம். கிடைக்கும் வரை... ஒரு, ஒரு மாசம் டைம் நோட்டீஸ் டைம்னு வேணும்னாலும் எடுத்துக்கோங்க. . . . இவங்க இருக்கட்டும். அதுக்குள்ள, நாளைக்கே ஆள் கிடைச்சாலும், உடனே அந்த இவங்களை தகுந்த பாதுகாப்போட அனுப்பி வைக்கறோம். நீங்க கூட இதுக்காக வர வேண்டாம். ஒரு மாதம் கழிச்சு முகூர்த்தம் வைக்கறதில் உங்களுக்கு ஓன்னும் கஷ்டமில்லையே. ?"
" சரி. . . " என்று இழுத்தவன். "இது மார்கழி மாமாசம், தைல முகூர்த்தம் பார்க்கச் சொல்லுவாங்க சம்சம்பந்தி வீட்ல. அதுக்கு சரி சொல்லிடலாமில்ல? "
"தாராளமா. .." என்று சரித்தவன், அப்படியே மிருதுளாவைப் பார்த்தான். அவள் பார்வை சூடாய் அவன் பார்வையை வெட்டியது.
"இரவு நேரத்தில் மலை இறங்க வேண்டாம். சாப்பிட்டு இங்கயே ஓய்வெடுங்க. காலை நேரத்தில் போய்க்கலாம்". என்றான் இதயா
இரவு அவன் படுக்க விருந்தினர் அறையை அவனுக்கு மிருதுளா தான் காட்டினால். குளிருக்கு இதமாய் ஹீட்டர், ஏசி இரண்டும் இருந்தன. உட்கார்ந்தால் அப்படியே உள் இழக்கும் மெத்தை. குளிர் தெரியாமல் கதகதப்பாய் அணைக்க கம்பிளிப் போர்வை. கால் வைக்கும் இடமெல்லாம் ' மெத் ' என்ற கார்பெட்.
சற்று முன் வயிறு முட்ட சுவையாய் சாப்பிட்டிருந்தவனுக்கு இந்த அறையைப் பார்த்தவுடன், மேலும் குஷியானான்.
நான் இப்படியெல்லாம் குளிர் பிரதேசத்துல வந்து சொகுசான அறையில எல்லாம் தங்கினதே இல்லை, மிருது! யப்பா! எவ்வளவு சொகுசா இருக்கு " என்று மிருதுளாவிடம் குதூகலித்தான்.
குழந்தை போல் அவன் சந்தோஷத்தை பார்த்த மிருதுளாவிற்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது..
இங்க வசதியா இருக்கே. உன்னை சந்தோஷமா வெச்சுக்கறாங்கனு தெரியுது " என்று முகம் மலர சொன்னவன் சட்டென்று முகம் வாட, இப்ப உனக்கு பார்த்திருக்கும் வரன் சுமாரான இடம் தான். மிருதும்மா. இத்தனை வசதியில்லாம் கிடையாதே" என்றும் அங்கலாய்த்தான்.
அவன் அருகே அமர்ந்தவள், " மாமா நான் வேலை செய்யற இடம் தான் வசதியானது. நான் எப்பவும் அதே ஒண்டு குடித்தன மிருதுளா தான் என்று மென்மையாய் சிரித்தாள்.
சின்ன வயசுலேயே உனக்கு விவேகம் ஜாஸ்திம்மா என்றான், குரு.
" தூங்குங்க. காலை சீக்கிரமே கிளம்பணும் நீங்க. என்று விளக்கணைத்து விட்டு வெளியே வந்தாள்.
Hi frnds!
Nega ellarum story read panni enjoy panndregala thereyala. Anku thereyium ellarum ithaya nd yali mela sema kovama irupega thereyium. Unga point of view living relationship pathi solluga.
Story la yathum thappuna solluga na change panna try panndran.
Innum 2 r 3 ud la flash back over agum so kova padama padiga.