• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி-22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
ஒரு வார காலமாக நிம்மதியற்ற நிலையில் நிலையில் தூக்கத்தை தொலைத்து விட்ட துளசியின் கண்கள் கருப்பு வளையம் சூழ்ந்திருந்தது நடைப்பிணமாய் அங்கும் இங்கும் தெரிந்தால் குழந்தைக்கு பால் புகட்ட வேண்டுமென்று கட்டாயத்தால் மட்டுமே என் வயிற்றுக்குள் சாப்பாடு இதை நான் தவறாமல் செய்திகளை ஏக்கத்தோடு காண்பாள்.

ஒருநாள், துளசியை அதிர்ச்சிடையச் செய்யக் கூடிய செய்தி ஒன்று வெளியானது. அரசாங்கத்தின் தாமதமான போக்கால் பணம் கைதிகளில் 10 பேர் தலை துண்டித்து கொன்று விட்டனர் என்ற செய்தி ஒளிபரப்பானது. அவர்கள் கொன்றதற்கான அடையாளங்கள் ஒரே இடத்தில் வைத்து எடுத்த புகைப்படத்தில் யார் இன்னார் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த தீவிரவாதிகள் அறிவித்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பத்து நபர்களின் சடலங்கள் அடங்கிய புகைப்படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினர்.

துளசிக்கு மூச்சே நின்று விட்டதை போல் ஒர் உணர்வு. சுவாசிக்க மறந்ததைப்போல் ஓர் பிரம்மை! மறுபக்கம் ஆண்டாள், சாந்தியிடம் ஒப்பாரி வைத்து அழ, வீடே மயான பூமியாய் காட்சி அளித்தது.

தலையில் கைவைத்து படி, குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, அழுத துளசிக்கு சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதாவது, கடத்தப்பட்டது மொத்தம் 20 பேர். அதில் 10 பேர் தான் தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, ராகவன் கொலை செய்யப்படாமல் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதே! துளசியின் மனதை இக் கேள்வியை கேட்க, மனதினுள் சற்று பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு. ஆனால் ஒருவேளை கொல்லப்பட்ட 10 நபர்களில் ராகவன் இருந்தால்...? மறுபடியும் அவள் மனது குழப்பத்தை சொரிய, ராகவனின் நிலையை நினைத்து அழுது கொண்டுருந்தாள்.

துளசி அழுவதை பார்க்க, பார்காக ஆண்டாளிற்கு கோபம் கோபமாய் வந்தது.

"ஏன்டி, என் பிள்ளைக்கு இப்படி ஆனதுக்கு காரணமே நீ தான்டி... நீ ஏன்டி அழற?"

"நல்லா புருஷனை முந்தானையில முடிச்சு வச்சுக்கிட்டு, அழகா பிரசவம் முடிஞ்ச உடனே தனியா கூட்டிட்டு போயிடலாம்னு திட்டம் போட்ட, இப்ப மொத்தமா என் மகன் போயிட்டான் பார்த்தியா? என்னைக்கு நீ காலடி எடுத்து வைச்சியோ அன்னிக்கே இந்த குடும்பத்தோட நிம்மதி போச்சு... இப்ப புதுசா ஒரு சனியனை கொண்டு வந்து நேரம், எல்லாமே போச்சு.... பிறந்தப்பவே , அப்பனை முழுங்கிட்டு வந்திருக்க பாரு.... "குழந்தையை பார்த்து ஆண்டாள் திட்ட துளிசிக்கு கோபம் கோபமாய் வந்தது.

"அத்தை, என்னை பத்தி என்ன வேணும்னாலும் சொல்லுங்க... என் குழந்தை பத்தி ஒண்ணும் சொல்லாதீங்க.... இந்த பிஞ்சு குழந்தையை பார்த்து எப்படி அத்தை உங்களுக்கு திட்டத்தோணுது அவன் உங்களுக்கு தானே பேரன்.‌‌...?"

"பேரனா ....உம்... நான் ஒண்ணும் அவனுக்கு பாட்டி இல்லை.... அவனும் எனக்கு பேரனும் இல்லை... அதுவே நீ யாருக்கு முந்தானை விரிச்சு பிறந்துச்சோ...." ஆண்டாளின் நிர்வாண வார்த்தைகள் துளசியை கொன்றன.

"அத்தை... இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்லே... சே.. நீங்களும் ஒரு பொம்யளையா....?

"என்னடி நாக்கு நீளுது... முதல்ல இந்த விட்டை விட்டு வெளியே போடி... அநாதை நாயே.."

துளசியை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய் விரட்டினாள்.

"போறேன் அத்தை... போறேன்... போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசைப்பட்டேன்.... இனிமே நான் ஒண்ணும் அநாதை இல்லை. எனக்கு என் மகன் இருக்கான்... அவனை பெரிய ஆளா உங்க முன்னாடி நான் வளர்த்து காட்டறேன். என் புருஷன் சாகலை .... அவரு ... வருவாரு .... அப்ப இருக்கு உங்க எல்லோருக்கும்.... "கோபமாக கத்திய துளசி தன் இரண்டு சூட்கேஸ்களில் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.



? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் சொன்ன மாதிரியே துளசியை வீட்டை விட்டு துரத்திட்டீங்களே
ரொம்ப சந்தோஷம்ப்பா
அடுத்து ராகவன் வந்து கேட்கும் பொழுது துளசியை இழிவாக சொல்லி அவனுக்கு சரண்யாவைக் கல்யாணம் செஞ்சு வைங்க, தஸீன் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top