• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
'எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித பாடத்திற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரத்தை நாளிதழ் ஒன்றில் கண்ட துளசி, அக் கல்லூரியில் நேர் முகத் தேர்வை சந்தித்தாள். நேர்முகத் தேர்வில் துளசி அரசாங்கத்திடம் இருந்து பெற்ற 'சிறந்த ஆசிரியர்' பட்டம், மேலும் அவள் வகுப்பு எடுக்கும் அணுகுமுறை அக்கல்லூரி நிர்வாகத்திற்கு மிகவும் பிடித்துப் போக, மாதம் '15,000' சம்பளத்திற்கு துளசி தேர்வு செய்யப்பட்டாள். இறைவனுக்கு மனமார நன்றியை தெரிவித்துக் கொண்டாள். ஆசிரமத்தில் உள்ள வசுந்தரா அம்மையாரிடம் தனக்கு வேலை கிடைத்த தகவல் தெரிவித்ததும் , அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரமத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்து துளசி தன்னிடம் உள்ள பணத்தில் அட்வான்ஸ் தொகையை குடுத்து தன் குழந்தையுடன் குடிபுகுந்தாள்.

கல்லூரிக்கு புறப்படும் போது அஜய்யை ஆசிரமத்தில் விட்டு விடுவாள். மாலை 3 மணிக்கெல்லாம் கல்லூரி முடிந்ததும், அஜய்யை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவாள். விடுமுறை நேரங்களில் தன் முழு நேரத்தையும் அவனுடைனே செலவிடுவாள். அவனின் சேட்டைகளை கண்டு பூரித்துப் போனாள். ஆனால் இதைக் காண 'ராகவன் இல்லையே' என்று எண்ணும் போது அவள் அடைகின்ற துயரம் சொல்லி மாளாது. ராகவனை பற்றி நினைப்பு வரும் போதெல்லாம், தன்னையே சமாதானப்படுத்தி கொள்ளவாள்.

அஜய்க்கு வயது மூன்று ஆனதும் ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள். காலையில் தனக்கும் அஜய்க்கும் டிபனை சமைத்து, மதிய உணவை கட்டி கொடுத்து, அஜய்யை பள்ளிக்கு தயார் செய்வாள். மற்ற குழந்தைகளை போல், அஜ்ய பள்ளிக்கு செல்ல அடம்பிடிப்பதில்லை‌. மாறாக பள்ளிக்கு எப்போதும் உற்சாகமாக ஆசையுடன் புறப்பட்டு போவான். சில நேரங்களில், துளசி வேலையாக இருக்கும் போது அஜய்யை பள்ளி சீருடையில் தானே அணிந்து, காலணிகளை மாட்டிக் கொண்டு அழகாக தலையை சீவிக் கொண்டு"அம்மா.... நான் ரெடி.. நீ ரெடியா?" என்று கொண்டிருந்தான்‌

ஒவ்வொரு வகுப்பை தாண்டும் போது அஜ்ய்யிடம் ஒவ்வொரு திறமைகள் புதிதாக முளைவிட்டுக் கொண்டிருந்தது!

முதலில், ஒவியம், பிறகு விளையாட்டு 1330 குறள் பாகங்களையும், தலை கீழாக ஒப்புவித்தல் என பல்வேறு திறமைகளுடன், அனைவரும் பாராட்டும் விதமாக வளரத் தொடங்கினான்‌

அஜய்யின் செயல்கள் துளசியை மகிழ்ச்சிப்படுதாதினாலும், ராகவனின் நினைவலைகள் அவளை பெரிதும் கவலையடையச் செய்தது ‌

கோடை விடுமுறையில் துளசி அஜ்ய்யுடன் டெல்லியில் இருக்கும் அனுவின் விட்டிற்கு செல்லத் தயாரானாள் அங்கு சென்று பல நாட்கள்... அதிகாரிகளை சந்தித்து பேசியும் எவ்வித பயனும் இல்லாமல் போனது. தீவிரவாதிகள் டெல்லி காவல் நிலையத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் பெரும் சவாலாகவே அமைத்தனர். கடத்தப்பட்ட 10 நபர்களை பற்றி எவ்வித தகவலும் அற்ற இருந்து.

ராகவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? அப்
அப்படி உயிருடன் பிணை கைதியாக இருந்தால் துளசியிடம்
திரும்பி வருவனா? இக்கேள்விகள் தினமும் துளசியைவதம் செய்தது. கேள்விக்குறியாய் இருக்கும் துளசியின் வாழ்க்கை, ஆச்சரியக்குறியாய் இருக்கும் துளசியின் கையில் மட்டுமே உண்டு. காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!.

? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top