• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
வாரம் ஒன்று உருண்டோடியது.

துளசி திருமணத்தையொட்டி பள்ளியில் எடுத்து 10 நாள் விடுப்பு முடிவடைந்ததால் பள்ளிக்கு செல்ல காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள். குளித்து முடித்து சமையலறைக்குள் பிரவேசித்தவள் தொட்டியில் கிடந்த சாமான்களை எல்லாம் கழுவி விட்டு, அடுக்களையை.சுத்தம் செய்யத் தொடங்கினாள்.அவள் கைபட்டதில் தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ்கள் மின்னின. பின் ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்து விட்டு மிஷினை ஆன் செய்து விட்டு வந்தாள். மீண்டும் அடுக்களைக்குள் பிரவேசிக்கும் போது மணி 'ஏழு' ஆனது. அப்போது தான் ஆண்டாள் எழுந்து அடுக்களைக்குள் வந்தாள்.

அழகாக இருந்த அடுக்களையை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு போனாள். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள வில்லை. ஆண்டாள் வந்ததை கண்டு துளசி அவளுக்கு ஒரு கோப்பையில் காபி கலந்து குடுக்க ஆண்டாள் காபியை குடிக்கத் தொடங்கினாள்.

ஒரு வாய் காபி தான் ஆண்டாளின் நாக்கு பதம் பார்த்திருக்கும், அதற்குள் "தூ.... தூ.‌...." என்று துப்பியவாறே, "சே..‌‌. காபியா இது. வீட்டுல சக்கரை நிறைய இருக்குங்கறதுக்காக அள்ளி கொட்டிடயா என்ன? எனக்கு சக்கரை வியாதி இருக்குன்னு உனக்கு தெரியாதாடி. என்னை சீக்கிரமே மேல அனுப்பிடலாம்ன்னு பார்க்கறியா ?" என்று ஆண்டாள் கூச்சலிட்டாள்.

"அச்சச்சோ.... மன்னிச்சிக்கோ அத்தை. உங்களுக்கு சுகர் இருக்கிறது சத்தியமா எனக்கு தெரியாது அத்தை. மன்னிச்சிடு சங்க அத்தை. குடுங்க நான் வேற காபியை கலந்து தந்தாள்.

பின் ராகவனுக்கு ஒரு கோப்பையில் காபி கலந்து கொடுத்து விட்டு வந்ததும், ஆண்டாள் இட்லி ஊற்றத் தொடங்கினாள்.

துளசிக்கு சமைக்கத் தெரியாது என்ற ஒரேயொரு குறையத் தவிர வேறு எந்த குறைகளும் அவளிடம் இல்லை. ஆனால் முழுமையாக ஏற்க ஆண்டாளின் மனது மறுத்தது

ராகவனுக்கு மதிய நேரத்திற்கு புளியோதரை கட்டி வைத்தாள் ஆண்டாள்.
துளசி பள்ளிக்கு செல்வதற்காக வேறு ஒரு புடவைய கட்டிக் கொண்டு தன் ஹாண்ட் பேக்கில் டிபன் பாக்ஸை வைக்க எண்ணிய வழுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
"எனக்கு சாப்பாடு கட்டலையா அத்தை....?"
"என்னடி. நான் என்ன உன் வீட்டு வேலைக்காரின்னு நினைச்சியா உனக்கு சாப்பாடு வேணும்னா நீ சமைச்சு கொண்டு போ.... பெத்த கடமைக்கு என் மகனுக்கு நான் சாப்பாடு சுட்டித்தர எனக்கு என்ன தலையெழுத்தா?" கத்தினாள் ஆண்டாள்.
சாரி அத்தை.... தெரியாம கேட்டுட்டேன்.... நான் ஸ்கூல் கேன்டீன்லயே சாப்பிட்டுக்கறேன்..."என்று கூறிவிட்டு அமைதியாக அவ்விடத்தை விட்ட நகர்ந்தாள்.

பின் சிறிது நேரத்தில் ராகவன் வர காலை சிற்றுண்டியை மட்டுமே முடித்து விட்டு பள்ளிக்கு அவனுடன் வண்டியில் புறப்பட்டாள்.

பள்ளிக்கு சென்ற துளசி தனக்கென வகுப்புகளில் சென்று பாடத்தை எடுக்கத் தொடங்கினாள். உணவு இடைவெளியின் போது தன் தோழியான அனுவுடன் அமர்ந்தாள். அணு மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு 'கணிப்பொறி' பாடத்தை எடுக்கும் ஆசிரியை. அனு தன் டிபன் பாக்ஸை எடுத்தும், துளசி அவளது டிபன் பாக்சை எடுக்காமல் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து குழம்பிப் போனாள்.

"என்னம்மா புதுப்பொண்ணு.... இன்னும் ட்ரீம்ஸ் தானா....?"
" சே... அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அனு... "
" அப்படியா.‌.. சரி, எங்க உன் டிபன் பாக்ஸ்? எனக்கு பசிக்குது, உன் மாமியார் வீட்டு சாப்பாடு எப்படி இருக்குதுன்னு பார்க்கணும். ம்... சீக்கிரம் எடு" துளசியை அவசரப்படுத்தினாள் அனு.

அதற்கு பதில் துளசியிடம் இருந்து ஒரு விரக்தியான சிரிப்பு!
இதைக் கண்ட அனு " ஏய் துளசி, என்ன ஆச்சு.. ஏன் டல்லா இருக்கு? என்னடா மாமியார் விட்டுத் ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டமாத்திரத்தில் துளசி அழத் தொடங்கினாள். திருமணமாகி ஒரு வாரத்தில் நடந்த சம்பவங்களை ஒப்புவித்தாள்.

"திஸ் இஸ் டூமச் துளசி. என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க உன் மாமியாரும்; நாத்தனாரும்...? ஆமா இது உன் புருஷனுக்கு தெரியும்ல?"

"இல்ல அனு. அவருக்கு கடந்த எந்த விஷயமும் தெரியாது. நானும் அவருகிட்டா எதுவும் சொல்லமாட்டேன்".

"சுத்த வைத்தியம் மாதிரி நாடந்துக்கிறே, ராகவன் கிட்ட நடந்ததை சொல்ல வேண்டியது தானே..."
"இல்ல அனு நானா செல்லி அவருக்கு எந்த விஷயமும் தெரியக்கூடாது. இதை அவரா புரிஞ்சுக்கிட்டா தான் நல்லது. அதுமட்டும் இல்ல அனு, அனாதையா பிறந்து வளர்ந்து என்னை கை பிடிச்ச தெய்வம் அவரு. என் மேல் கொண்ட காதலால தன்னோடா காதலால் தன்னேடா அம்மா, அக்காவையே எதிர்த்து இந்த வாழ்க்கையை கொடுத்திருக்கார். அப்படி இருக்கும் போது நான் வீட்டுல எனக்கு நடக்கிற கஷ்டத்தை சொல்லி அவரையும் கஷ்டப்படுத்த விரும்பலை அனு. இப்பவும் சொல்றேன் நான் எப்பவும் அவருக்கு என்னால முடிஞ்ச சந்தோஷ்த்தை தான் கொடுப்பேன் தவிர கஷ்டத்தை குடுக்க மாட்டேன். இப்ப என்ன, எனக்கு சமைக்க தெரியாதுங்கற விஷயத்தை காட்டி என்னை என் மாமியார் மட்டம் தட்றாங்க. அவ்வளவு தானே."

"அப்ப துளசி நீ உன் மாமியார் கிட்டயே உனக்கு சமைக்க கத்துக்குடுங்கன்னு கேட்க வேண்டியது தானே?"

"அதை நான் கேட்காம இருப்பேனா அனு? நான் இதை கேட்டப்பா ' எனக்கு என்னடி வேற வேலை இல்லன்னு நினைச்சியா? உனக்கு சமைக்க சொல்லிதரதுக்கு வேற ஆளைப்பாரு ' அப்படின்னு மூஞ்சுல அடிச்ச மாதிரியே சொல்லிட்டாங்க அனு. அப்படியே அவங்க சமைக்கும் போது நானா ஏதாவது சந்தேகம் கேட்டா ஒரு வார்த்தை கூட அவங்க வாயிலிருந்து பதில் வராது,"

"ஏய் துளசி, எனக்கு ஒரு ஐடியா தோணுது. இப்பதான் சமைப்பது எப்படின்னு புத்தகம் வருதே அதை வாங்கிக்கோ, அதுல இருக்குற மாதிரி டிரை பண்ணி பாரு .

நானும் என் அம்மாகிட்டா கொஞ்ச ரெசிபி கேட்டு வைக்கிறேன். நீ அதையும் டிரை பண்ணு . என்னைப் பொறுத்த வரைக்கும் சமையல் ஒரு பெரிய விஷயமே இல்லை".

"சரி அனு நீ சொல்றது எனக்கு நல்ல யோசனையா படுது. இன்னிக்கே கடைக்கு போய் அந்த சமையல் புத்தகத்தை வாங்கிக்கிறேன். தேங்க்ஸ்பா‌."

"நன்றி சொல்றது இருக்கட்டும் எனக்கு பசி உயிரே போகுது, வா சாப்பிடலாம்" என்று கூறிய அனு தன் சாப்பாட்டை பாதி துளசிக்கு கொடுத்து விட்டு அவளும் சாப்பிடத் தொடங்கினாள்.

அனு கூறியவாறே துளசியும் சமையலில் கால் பதிக்கத் தொடங்கினாள். முதலில் சமைக்கும் போது சிறு சிறு தவறுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.

சாம்பாருக்கு துவரம் பருப்புக்கு பதிலாக கடலை பருப்பு, உப்பு கம்மியாக இருக்கும் தோசை, சட்சியில் தூக்கலான காரம் இவை ஆண்டாளுக்கும் சாந்திக்கும் வெறும் வாயில் அவல் போட வசதியாக இருந்தது. அவர்களுடைய கேலியான பேச்சும், கிண்டலான பார்வையும் துளசியை வருத்தம் கொள்ள செய்தது. அப்போதெல்லாம் துளசிக்கு முழு ஆதரவாய் நின்றது ராகவன் மட்டுமே!

அவளது நிறைகுறைகளை பக்குவமாக எடுத்துக்கூறினார். தவறுகளை மெல்ல மெல்ல திருத்திக்கொண்ட துளசி ஆறே மாதத்தில் சமையலில் அனைத்தும் அவளுக்கு அத்துப்படியாகிப்போனது.

இட்லிக்கான சட்னியில் இருந்து பரியாணி வரை பிரமாதமாக சமைக்கத் தொடங்கினாள் . ஆனால் ஆண்டாளோ ஏதாவது ஒரு குறை கூறிக்கொண்டே இருப்பாள்.

"இதுல என்ன உப்பு கம்மியா இருக்கு?"
"சே... சாம்பாரா இது? நாய் கூட வாயில வைக்காது?"
"விட்டுல மிளகாய் தூள் நிறைய இருந்தா அள்ளி கொட்டிடுவியா?
என்றெல்லாம் ஆண்டாள் வசைப்பாடும் போது துளசிக்கு அழுகையே வந்து விடும். ஆனால் ராகவன் அவளது சாப்பாட்டை புகழாரம் சூட்டும்போது மனதினுள் சந்தோஷம் முளைவிடும்



? துளசி ராகவன் வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
தஸீன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top