• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
இத்தனை காலமாய் துளசிக்கு சமைக்கத் தெரியாது என்ற காரணத்தை கொண்டு அவளை நன்றாக மட்டம் தட்டிக் கொண்டிருந்த ஆண்டாளின் வாய் சமீப காலமாய் அடங்கிப்போபிருத்தது. ஒரு நாள் மாலை வேளையில் சாந்தியின் வீட்டிற்கு சென்ற ஆண்டாள் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கத் தொடங்கினாள். சாந்தியின் சிரிப்பு ஆண்டாளிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

"அடியேய்.. நான் இங்க பைத்தியக்காரி மாதிரி புலம்பிட்டு இருக்கேன் நீ என்னடான்னா சிரிச்சுக்கிட்டே இருக்கறே, எதுக்கு சிரிக்கிறன்னு சொல்லிட்டு சிரி." கோபமாக கத்தினாள் ஆண்டாள்.

" அம்மா துளசி சமையல் கத்துக்கிட்டது கூட நல்லதா போச்"

" என்னடி இப்படி சொல்லறே?"
"ஆமாம் அம்மா! இவ்வளவு நாள் வரைக்கும் சமையலைத் தவிர எல்லா வேலைகளையும் அவளையே செய்ய விடு. நீ எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடு. அதே சமயம் அவளுக்கு நல்ல டார்ச்சர் கொடு, வீட்டு வேலை பளுவும் , உன் டார்ச்சரும் அவளை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பியும் புரிஞ்சுதா? " புருவத்தை ஏற்றியவாறே ஆண்டாளைப் பார்த்துக் கேட்டாள்.
நல்லா புரிஞ்சுதடி, இனிமே அந்த துளசி குடுமி என் கையிலே..." என்று பெருமையாக பேசிய ஆண்டாளுக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது.

"ஏய் சாந்தி நீ சொல்ற மாதிரி எல்லா வேலைகளையும் அவளையே செய்ய விட்டேன்னா ராகவன் என்னைப் பத்தி என்னடி நினைப்பான்?"

"அதுக்கு என் கிட்ட ஐடியா இருக்கும்மா". என்று கூறியவள் தன் திட்டத்தை கூற ஆண்டாளும் அதை ஏற்றுக் கொண்டாள். ராகவன் வீட்டுக்கு வந்ததும், தன் திட்டத்தை அரங்கேற்றத் திட்டமிட்டாள். அதற்கு துணையாக சாந்தியையும் அழைத்து வந்தாள்.

இரவு ராகவனுடன் சாந்தி, ஆண்டாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . ஆண்டாள் சாப்பிட்டு முடித்தும் கை கழுவ செல்ல திடீரென்று மயங்கி விழுந்தாள். பதறிப் போன ராகவன் அவளை கட்டிலில் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தான் துளசியும் பதற்றத்துடன் நிற்க சாந்தியோ அமைதியாக நின்று கொண்டிருந்தாள். மெல்ல கண்களை திறந்து பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

"ஒண்ணும் இல்லைடா ராகவா, நேத்து காலையில இருந்தே தலை சுத்தம் இருந்துச்சு, இன்னைக்கு காலையில நம்ம பேமிலி டாக்டர் சுதர்சனத்துக்கிட்டா போனப்ப அவர் டெஸ்ட் பண்ணினாருடா, எனக்கு பிரஷரும் ,சுகரும் அதிகமாயிற்று சர்ச்சுக்கு சொல்லிட்டாரு. அதனால் எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாருப்பா!"

வருத்தம் தோய்ந்த குரலில் ஆண்டாள் கூற சாந்தியும் கூட இணைத்தாள்.

"ஆமா டா ராகவா, நம்ம அம்மாவோட உடம்பு ரொம்ப பலவீனமா இருக்காம்டா, அதனால டாக்டர் அவங்களை எந்த விட்டு வேலையும் செய்யக்கூடாதுன்னு ரொம்ப கண்ஷனா சொல்லிட்டாங்கடா" சந்தி தன் முகத்தை அப்பாவியாய் வைத்துபடி கூறிவிட்டு ராகவனும், துளசியும் இயற்கை அல்ல வெளியே செல்ல சாந்தியும் ஆண்டாளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"சாந்தி எப்படி என் நடிப்பு?"
"பிரமாதம்மா. அதுவும் ராகவன் உன் முகத்துல தண்ணீர் தெளிக்கும் போது நீ செஞ்ச முக பாவனை இருக்கே, அந்த காலத்து சாவித்திரி ல இருந்து இருந்து இந்த காலத்து ரொமா கீர்த்தி சுரேஷ் வரைக்கும் உன் நடிப்புல தோத்து போயிடுவாங்க. அத்திட்டம்மா."

ஆண்டாளின் தோள்களை தட்டியவாறே சாந்தி கூற ஆண்டாளுக்கு மிகவும் பொருத்தமயாக இருந்தது.

"சரிம்மா நான் கிளம்பறேன். வீட்ல சாரண்யா மட்டும் தனியா இருப்பா.அதுவும் இல்லாம அவரு இப்ப வர்ற நேரம். நான் இல்லேன்னா காத்துவாரு. நான் வரேன்மா" என்று கூறிவிட்டு விடைபெற்றாள்.



?துளசி ராகவன் வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?



❣️ ரொம்ப சின்ன யூடி தான் கொஞ்சம் adjust பண்ணணிக்்கோங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
தஸீன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top