Super vithya ma...மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மகள், தோள்பையை வீசி எறிந்த விதத்திலேயே, போன காரியம் கைகூடவில்லை என்று புரிந்தது சாரதாவிற்கு.
“நம்ம வேணும்னா, ரிஷிகிட்ட எடுத்து சொல்லலாமே டி!” மென்று விழுங்கினாள் சாரதா.
“என்னன்னு எடுத்து சொல்லணும்?” கறாராக கேள்வியைத் திருப்பியவள்,
“தம்பி! தம்பி! அக்காவுக்கு முப்பத்து மூணு வயசாகுதுடா! நீ அவர் தங்கையை கல்யாணம் செய்துகிட்டாதான், எங்க கல்யாணம் நடக்கும்னு விக்ரம் தீர்மானமா சொல்லிட்டாரு…எனக்காக உன் முடிவை மாத்திக்கோன்னு கெஞ்ச சொல்றீயா?” எகத்தாளமாக கேட்டு, தன் அறைக்குள் புகுந்தாள் காயத்ரி.
“அப்படி கேட்டாதான் என்ன தப்பு?” நச்சரித்தபடி, மகளை பின்தொடர்ந்த சாரதா, “எப்படியிருந்தாலும் அவனும் நாளைக்கு ஒரு பெண்னை கல்யாணம் செய்துக்கத்தானே போறான். அது ஏன், அவனை விரும்புறேன்னு வாய்விட்டு சொல்ற, மாப்பிள்ளையோட தங்கை கீர்த்தனாவா இருக்கக்கூடாது?” தர்க்கமும் செய்தாள்.
அம்மாவின் அர்த்தமில்லா பேச்சில், காயத்ரி இன்னும் அதிகமாக கடுப்பாக, அவள் முகம் பார்க்க திரும்பியவள்,
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ மா! திருமண பந்தத்தின் அடிப்படை தேவை நல்லதொரு புரிதல். கல்யாணமே வேண்டாம்னு சொல்ற உன் மகனை வற்புறுத்தி சம்மதிக்க வெக்குறதும் தப்பு; பெண் பார்க்க வந்தவர், முதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, பிறகு தங்கை விருப்பம் நிறைவேற்றினா தான் கல்யாணம் செய்துப்பேன்னு பின்வாங்குறதும் ரொம்ப தப்பு!
சுயநலம் படைத்த இவர்கள் கரிசனம் காட்டித்தான் எனக்கு கல்யாணம் ஆகணும்னும் இல்ல; கண்ணீர்விட்டு கெஞ்சும் ரகமும் நான் இல்ல!” தீர்மானமாக உரைத்தவள், தனித்து வாழ்வதே மேலென்று கூறி அறையின் கதவை படார் என சாற்றினாள். மனதை புண்படுத்தியவர்கள் மேல் வந்த கோபத்தை, அந்த அறைக்கதவு மீது மட்டும்தான் காட்டமுடிந்தது அவளால் அந்தச் சமயத்திற்கு.
ஏமாற்றங்களைத் தவிர வேறெதுவும் வாழ்க்கையில் பார்த்ததில்லை என மனம் நொந்து சோஃபாவில் அமர்ந்தவள், நிழற்படமாக மாறிய கணவரின் முகத்தை வெறித்துப் பார்த்தாள். இருபது ஆண்டுகளுக்கு முன் தன்னையும், தன் இரு பிள்ளைகளையும் நிர்கதியாக தவிக்கவிட்டு, உலக வாழ்க்கையை விட்டொழித்த அவர் தானே அவளுக்கு ஏமாற்றத்தின் வலியை முதல் முதலில் உணர்த்தியவர்.
சாலை விபத்தில் கணவர் இறந்ததும், குடும்ப சுமைகள் அத்தனையும் சாரதாவின் தோளில் விழுந்தது. துக்கம் விசாரிக்க வந்த உறவுகள் பக்கம் பக்கமாக அனுதாபங்கள் வாய்மொழிந்ததோடு சரி. ஆறுதல் பேச்சும், இலவச அறிவுரைகளும் மனதின் வலியை குறைக்குமே தவிர, வயிற்றின் பசியை போக்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்தாள் சாரதா.
கண்கசியக் கூட நேரமில்லாமல், அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். மூத்தவள் காயத்ரியும், இளையவன் ரிஷியும், அன்னையின் கஷ்டங்களை அறிந்து, தங்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தினர்.
இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த கையோடு, காயத்ரி ஒரு பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாள். ரிஷி, விமானியாகும் தன் லட்சியத்தில் வெற்றிபெற்று, சர்வதேச விமானங்களின் நிறுவனம் ஒன்றில் சேர்ந்தான்.
மாதத்தின் பாதி நாட்கள் ஆகாயத்திலும், மீதமுள்ள நாட்களில், பல நேரங்களில் பாஷை தெரியாத ஊரிலும், சில நேரம் மட்டுமே தாய்மண்ணில் கழித்தவன், திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
காலத்தின் போக்கில் மகனின் எண்ணங்கள் மாறுமென்று நம்பிய அன்னையின் கவலையெல்லாம் மகளின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே.
காயத்ரியின் இருபத்து ஐந்தாம் வயதில் தொடங்கியது அவள் சுயம்வரத்தின் முதல் அத்தியாயம். தகப்பன் இல்லாத பிள்ளைகள், தலைச்சன் பிள்ளை, அதிகமாக படித்து இருக்கிறாள், ஜாதகம் பொருந்தவில்லை என்று ஏதேதோ காரணங்களை அடுக்கி, பெண்பார்க்க வந்தவர்கள் கைவிரிக்க, ஆண்டுகள் அதன்போக்கில் உருண்டோடியது.
காயத்ரி வேலை செய்யும் கிளைக்கு பணிமாற்றத்தில் வந்த விக்ரம், அவளை திருமணம் செய்துகொள்ள எண்ணினான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, அவனும் அவன் தங்கை கீர்த்தனாவும் பெரியப்பாவின் வீட்டில் வளர்ந்ததால், காயத்ரியின் குடும்பநிலை, அவனுக்கு சொல்லித்தெரிய வேண்டியிருக்கவில்லை.
பெரியவர்கள் சம்மதத்துடன், திருமணமும் நல்லபடியாக நிச்சயமானது. மகளின் கல்யாணத்திற்கு முட்டுக்கட்டைப் போட்ட இடையூறுகளை தகர்த்துவிட்டதாக சாரதா பெருமூச்சுவிட, அச்சமயம் மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த விகரமின் தங்கை கீர்த்தனா, வருங்கால அண்ணியை பார்க்க வந்திருந்தாள்.
அவளை அன்பாக உபசரித்தவள், “போக்குவரத்து நெரிசல் அதிகமா இருக்காம் மா. அதனால உங்க அண்ணனே, காயத்ரியை அழைச்சிட்டு வந்துட்டு இருக்காரு மா. சீக்கிரமே வந்துடுவாங்க!” மகள் அலைபேசியில் அழைத்து தகவல் சொன்னதாக கீர்த்தனாவிடம் சொல்லி, அவளுக்கு பருக பழச்சாறு கொடுத்தாள் சாரதா.
அதை ருசித்துப் பருகியவளின் இதழ்கள் குறும்பாக வளைந்தன. “அண்ணன் ஏதோ விமானத்துல பறந்துவரா மாதிரி, விளக்கம் சொல்றாரு. அதையும் நீங்க நம்புறீங்க. போக்குவரத்து நெரிசலில் யார் ஓட்டினாலும் வேகமாக வரமுடியாது. அண்ணா, வருங்கால மனைவியோட நேரம் செலவழிக்க சாக்கு சொல்றாரு!” என கண்சிமிட்டவும், சாரதாவின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் விரிந்தன்.
அவர்கள் வரும்வரை, பிள்ளைகளின் புகைப்படங்களை காட்டுவதாகச் சொல்லி, இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்துவந்தாள். கீர்த்தனாவும் அவற்றைப் பார்க்க ஆர்வம் காட்டினாள்.
அண்ணனுக்கு ஏற்ற மனையாள் என்று நினைத்தபடி அவற்றை ரசித்துப்பார்த்தாள். புகைப்படம் காட்டிய அன்னை, தன்னிச்சியாக மகனின் அருமை பெருமைகளையும் பாடினாள்.
விமானியாக பணிபுரியும் நேரத்தில், விளையாட்டு மைதானத்தில், விவாத மேடையில், வெளியூறுகளில் என இடத்திற்கு ஏற்றார்போல உடை அணிந்தவனின், உடல்மொழி, தோற்றம், பாவனை அனைத்தும் அம்சமாகவே இருந்தன். அதில் ஒரு குழு புகைப்படத்தில் குறும்பு நகையுடன் கண்கள் சுருக்கி நிற்கும் மகனை சாரதா சுட்டிக்காட்ட, கீர்த்தனாவின் கண்கள் வியப்பில் அகல விரிந்தது.
“இவனா உங்க மகன்?” உறுதி செய்துகொண்டாள் பெண்.
“ஆமாம் மா! உனக்கு அவனைத் தெரியுமா?” வினவினாள் சாரதா.
அவனைக் கண்டுகொண்டவளின் மனம் கடந்தகாலத்தில் பயணிக்க, சாரதாவின் கேள்விக்கு மென்மையாக தலையசைத்தாள். அச்சமயத்தில், வாசற்கதவு அழைப்பு மணி ஒலிக்க, மகளும், மாப்பிள்ளையும் வந்திருப்பதை அறிந்தவள், அவர்களை வரவேற்க உற்சாகமாக நகர்ந்தாள். அந்தப் பரப்பரப்பில், கீர்த்தனாவின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை சாரதா.
கீர்த்தனாவை கண்டதும், விக்ரம், தன் வருங்கால மனைவியின் தோளினை வளைத்து அறிமுகம் செய்துவைக்க, காயத்ரியும், தன்னவனின் ஸ்பரிசத்தில், வெட்கமும், பூரிப்பும் கலந்தவளாக மென்மையாக சிரித்தாள்.
பெண்கள் இருவரும் சகஜமாக பேசிப்பழக, திருமணத்தைப் பற்றிய மற்ற திட்டங்களையும், முகூர்த்த நாள் குறிப்பதைப் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
“உனக்கு எப்போ தேர்வுகள் முடியும்னு சொல்லு கீர்த்தி! அந்தச் சமயத்துல திருமணத்திற்கு தேதி குறிக்கலாம்!” விக்ரம் யோசனை சொல்ல,
“அண்ணா! எனக்கும் ரிஷிக்கும் கூட அப்போவே கல்யாணம் செய்துவைங்க!” பட்டென்று உடைத்தாள்.
சம்பந்தமே இல்லாமல் பேசும் அவளை மூவரும் குழப்பமாக பார்த்தனர்.
“என்ன உளருற கீர்த்தி!” விக்ரம் அதிராத குரலில் அழுத்தமாக கேட்க,
அதில் சுயத்திற்கு வந்தவள், “அண்ணி! நான் அண்ணன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!” என்று புறப்பட எழுந்தாள்.
“எதுவாயிருந்தாலும் இங்கேயே சொல்லி கீர்த்தி!” விக்ரம் தடுக்க, அவளோ செவிசாய்க்கவில்லை.
காயத்ரி தன்னவனுக்கு புறப்படும்படி ஜாடைகாட்ட, விக்ரம் தங்கையை பின்தொடர்ந்தான்.
மகனின் அருமை பெருமைகளை சொல்லி, கீர்த்தனா மனதில் தேவையில்லாமல் ஆசை வளர்த்துவிட்டதாக பதறிய சாரதா,
“கீர்த்தனா! என்ன மா திடீர்னு?” வினவ,
“அது…அத்தை…விமானி கணவராக வந்தா, சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் பாருங்க!” கிண்டலாக பேசி கண்சிமிட்ட, சாரதா தன் யூகம் சரியென்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.
அண்ணனிடம் தனியாக பேச வேண்டுமென்று அழைத்துச் சென்றவள் பேசியதைப் பற்றி விக்ரம், காயத்ரியிடம் எதுவுமே சொல்லவில்லை.
“கீர்த்தி விருப்பம் சரிதான் காயத்ரி! நம்மள மாதிரியே, உன் தம்பியும், என் தங்கையும் கல்யாணம் செய்துகிட்டா, நாம எப்போவுமே ஒரே குடும்பமா இருக்கலாம்!” தங்கை காதலுக்கு பச்சைகொடி காட்டினான் விக்ரம்.
காயத்ரிக்கும் அதில் விருப்பம் தான். ஆனால், திருமணத்தில் நாட்டமே இல்லாத தம்பியிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் திண்டாடினாள். வீட்டின் பெண்கள் தொடர்ந்து வாதம் செய்தபோதும், ரிஷி மனதில் எந்தவித மாற்றமும் மலரவில்லை. கீர்த்தனாவுடன் தனக்கு எந்த பழக்கமும் இருந்ததுமில்லை என்றும் உறுதிசெய்தான்.
ரிஷியை தனக்கு முன்னமே தெரியும் என்று மட்டுமே அண்ணனிடம் பகிர்ந்துகொண்டவள், மேலும் விளக்கம் சொல்ல மறுத்துவிட்டாள். ரிஷியிடம் பேச வேண்டும் என்று அவள் சொல்ல, அவனோ, அவளின் பெயரைக் கூட கேட்க விரும்பாமல் இருந்தான்.
யார் பக்கம் உண்மை என்று புரியாமல் குழம்பினார்கள் காயத்ரியும், விக்ரமும். இளையவர்களின் பிடிவாதத்தால் அவர்களிடையே மனஸ்தாபங்கள் வளர்ந்தது.
“மன்னிச்சிடுங்க விக்ரம்! ரிஷி கல்யாணத்துல தனக்கு துளிக்கூட விருப்பமில்லைன்னு திட்டவட்டமா சொல்றான்.” காயத்ரி கூற,
“அப்போ! நம்ம கல்யாணத்தை பற்றியும் மறந்துடு காயத்ரி!” அவனும் தீர்கமாக சொல்லிவிட்டான்.
தன்னை மணந்துகொள்ள விரும்புவதாக தேனொழுக பேசியவன், தங்கை விருப்பம் தான் முக்கியம் என்று சொல்லி நிச்சயம் செய்த திருமணத்தை ரத்து செய்ய, காயத்ரியின் கோபம் தலைக்கேறியது.
மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்திய சாரதா, பிராயணம் முடிந்து இத்தாலியில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகனை அழைத்தாள். பேச்சு வார்த்தை வழக்கம்போல முடிவே இல்லாமல் நீடிக்க,
“இவ்வளவு சுயநலவாதியா உன்ன வளார்க்வா, நான் இத்தனை வருஷம் தனியா கஷ்டபட்டேன்! அப்படி என்னடா உனக்கு கல்யாணாத்து மேல அவ்வளவு வெறுப்பு?அக்கா வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு பாரு டா!” கொந்தளித்தாள்.
“நீ அனுபவிச்ச கஷ்டம், நான் ஒரு பொண்ணுக்கு கொடுத்திடக் கூடாதூன்னு தான் மா கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்!” என்றவன், தான் மேற்கொண்ட பணியில் உள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டினான். பிடித்த வேலையில் இருப்பதால், தனக்கு எந்தக்குறையும் இல்லை என்று திடமாகவும் கூறினான்.
தந்தையின் அகால மரணம் அவன் மனதில் ஆழ்ந்து பதிந்திருப்பதை புரிந்துகொண்டாள். கீர்த்தனாவின் உறுதியை நேரில் பார்த்தவளுக்கு, அவள் மட்டும்தான் ரிஷி மனதில் வாழ்க்கையைப் பற்றி தோன்றிய வீண் பயத்தை அகற்றமுடியும் என்றும் யூகித்தாள்.
“சரிடா! ரிஷி! இந்தக் காரணத்தை நீயே பக்குவமாக கீர்த்தனாகிட்ட சொல்லிடு; அந்தப் பொண்ணு மனசு மாறினா, உங்க அக்காவோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்!” தழைந்துப் போகும்படி கேட்டாள்.
ஊருக்கு திரும்பியதும், கீர்த்தனாவை நேரில் சந்தித்துப் பேசுவதாக அவனும் விட்டுக்கொடுத்தான்.
தொடர்ந்து வந்த நாட்களில், காயத்ரி தன் நிலையில் இருந்து மாறவில்லை. அலுவலகத்தில் விக்ரமிடம் பேசுவதை தவிர்த்தாள். கீர்த்தனாவிடம் அப்படியென்ன குறை கண்டுவிட்டார்கள் இவர்கள் என்று நினைத்தவனும் பதிலுக்கு வெறுப்பைக் காட்டினான்
அக்கா தம்பி இருவருக்கும் இடையே பனிபோர் நிலவியது. தெளிவான காரணங்கள் சொல்லாமல் திருமணத்தை தவிர்க்கும் அவன் போக்கு அவள் மனதை புண்படுத்தியது. குடும்பம் குழந்தை என வாழவிரும்பும் அக்காவிடம், வாழ்க்கையை பற்றிய தன் கண்ணோட்டத்தை கூறி குழப்பவேண்டாம் என்று நினைத்தவன், உண்மை காரணத்தை அவளிடம் சொல்லவில்லை.
இரண்டு நாட்களில் கீர்த்தனா லண்டன் கிளம்பிவிடுவாள் என்று சாரதா மகனுக்கு நினைவூட்டினாள்.
பேசவே மாட்டேன் என்று தர்க்கம் செய்தவனின் குரல் கேட்டதும், கீர்த்தனாவின் முகம் பிரகாசமாக பொலிந்தது. சந்தித்துப்பேச ஏதுவாக பூங்கா, கடற்கரை என்று அவள் அடுக்க, வீண் எதிர்பார்ப்புகள் கொடுக்க விரும்பாதவன்,
“அதெல்லாம் வேண்டாம்! உங்க வீட்டுல சந்திச்சு பேசலாமா! முடிந்தால் தனியாக!” பீடிகையுடன் கேட்டான்.
பெண்ணவளும் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.
மனதை கவர்ந்தவனை நேரில் காணப்போகும் மிதப்பில் கீர்த்தனாவின் முகம் மின்ன, திருமணத்திற்கு மறுப்பு சொல்லும் எண்ணத்துடன் வந்தவனோ அவள் முகத்தைக் கூட சரியாக பார்க்கவில்லை.
மிஸ்…மிஸ் அவள் பெயரையும் மறந்திருந்தான் அவன்!
“ரி…” தொடங்கியவள், மென்று விழுங்கி, “கீர்த்தனா!” என்றாள்.
“ஹான் கீர்த்தனா! உங்களை மட்டுமில்ல, எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க விருப்பமில்ல!” என்றதும்,
‘ஆண்மை கோளாறோ!’ மனதில் கிளம்பிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்டேவிட்டாள்.
‘இப்படியும் ஒரு பெண்ணா!’ யோசித்தவன் இளம்புன்னகையுடன்,மறுப்பாய் தலையசைத்தான். விமானியாக பணிபுரியும் தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து சராசரி மனிதர்களை காட்டிலும் அதிகம் என்பதால் திருமணம் பந்தத்தில் தனக்கு நாட்டமில்லை என்றான்.
“என்னம்மோ நாட்டுக்காக சேவை செய்யும் ராணுவ வீரன் மாதிரி பேசுறீங்க!” கிண்டலாக சிரித்தாள்.
அவள் எள்ளல் பேச்சில் கடுப்படைந்தவன், “சண்டைக்கு போனாலும் சுற்றுலாக்கு போனாலும் விமானம் ஆகாயத்துல தான் பறக்கும். அதை ஒட்டுறவங்க உயிருக்கும் ஆபத்து நிறையவே இருக்கும்!” நிதர்சனத்தை உரைத்தான்.
அதற்கும் சலிக்காத பெண்மனம், மேலும் தர்க்கம் செய்து அவனை சீண்டியது.
“அப்படின்னா ஆகாயத்தில் பறந்தாலும், சாலையில் உருண்டாலும் தண்ணியில் நீந்தினாலும் இறப்பதுதான் விதியென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது.” அவன் பயம் அர்த்தமற்றது என்றாள்.
“இறப்பது இயற்கையானதுதான்!.” தொடங்கியவன், நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்தப் பிறகு இறப்பதில் தவரில்லை என்றும், எதிர்பாராத நேரத்தில், நாம் நேசித்தவர்கள் நம்மைவிட்டு பிரிவது கொடுமை என்றும் வித்தியாசத்தை தெளிவுபடுத்தினான்.
இன்றைய பொழுதின் இனிமைகளை ரசிக்காமல், நாளைய சிந்தனையில் வீண் மனவுளைச்சல் கொள்ளும் இப்படியொரு ரிஷியை சந்திப்பாள் என்று எதிர்பார்க்காதவள்,
“மரணபயம்தான் உங்களுக்கு பிரச்சனைனா, நான் வேணும்னா, யமதர்மராஜா கிட்ட சொல்லி உங்களுக்கு சாகாவரம் வாங்கித்தரட்டுமா?” எகத்தாளமாக கேட்டு கண்சிமிட்டினாள்.
“உங்களுக்கு என்ன, என் மேல் கண்டதும் காதலா?” புருவங்கள் உயர்த்தி கேட்டான்.
“ஏன் இருக்கக் கூடாதா?” பதிலுக்கு ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டு அவனை வியப்பில் ஆழ்த்தினாள்.
“படித்தப் பெண்தானே நீங்க?” நக்கலாக கேட்டான்.
“அப்போ நிழற்படம் பார்த்து, பத்து நிமிஷம் பேசிப்பழகின உங்க அக்காவுக்கும், என் அண்ணாவுக்கும் காதல் வந்திருக்கே; அவங்க படிச்சவங்க இல்லையா?” ஏட்டிக்குப் போட்டி வாதாடினாள்.
தன் மனதில் உள்ள நெருடலை சொல்லாமல் இருக்கும்வரை இப்படித்தான் தர்க்கம் செய்வாள் என்று புரிந்துகொண்டான் ரிஷி.
கணவன் இழந்த பெண்ணாக, தன் தாய் சந்தித்த சவால்கள் இன்னும் கண்முன் பசுமரத்தாணியாக இருக்கிறது என்று தாழ்ந்த குரலில் விளக்கினான். இளம்வயதில் தந்தையை இழந்து தானும் தன் குடும்பத்தினரும் பட்ட சிரமங்களை பார்த்து எடுத்த முடிவு என்றவன்,
“ப்ளீஸ் கீர்த்தனா! என் மனநிலையை புரிஞ்சிக்கோங்க! உங்க அண்ணனுக்கும் புரியவெச்சு, என்னோட அக்காவை கல்யாணாம் செய்துக்க சொல்லுங்க!” கெஞ்சலாக கேட்டான்.
“உம்” மென்மையாக தலையசைத்தவள், இரண்டு நிமிடத்தில் வருவதாக சொல்லிவிட்டு மௌனமாக நகர்ந்தாள்.
“உங்க அப்பாவோட மரணம்தான் எனக்கும், உங்க மேல காதல் மலர காரணமா இருந்துது!” என்று கொண்டுவந்த நாட்குறிப்பு ஒன்றை அவனிடம் நீட்டினாள்.
காலத்தால் பழுப்பான அந்த நாட்குறிப்பின் முதல்பக்கம் திறந்ததுமே, அவனுக்கு அத்தனையும் விளங்கியது.
“அன்புள்ள ரித்தி,
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
இப்படிக்கு ரிஷி!”
நெளிவுசுளிவாக பதிந்திருந்த அவனின் கையெழுத்தை கண்டுகொண்டவன்,
“ரித்தி!” கேள்வியாக அவளை நோக்கினான்.
“ம்ம்!” மூடித்திறந்த இமைகளின் இடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஐந்தாம் வகுப்பில் எடுத்த புகைப்படம் பார்த்து அவளுக்கும், கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு பரிசளித்த நாட்குறிப்பு பார்த்து அவனுக்கும், பள்ளிப்பருவத்தின் பசுமையான நினைவுகள் பசுமரத்தாணியாக கண்முன் தோன்றியது.
அன்று…
“பாருங்க பா! ரித்திக்கு நான் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு பிடிக்கலையாம்.” வீட்டிற்கு அழைக்க வந்த அப்பாவிடம், கண்கசக்கி கொண்டு உடன் நடந்த தோழியை சுட்டிக்காட்டினான்.
“எனக்கு ஹீரோ பென் தானே வேணும்னு Santa கிட்ட கேட்டேன். நாட்குறிப்பு கேக்கலியே!” முணுமுணுத்தாள் கீர்த்தனா.
பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் கிறிஸ்துமஸ்தினம் அன்று பரிசுகள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக “கிறிஸ்மாம்” விளையாட ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். பிள்ளைகள் துருப்பு சீட்டில் தங்களுக்குப் பிடித்த பரிசுப் பொருள்களை எழுதினர். அவற்றை ஒரு ஜாடியில் போட்ட ஆசிரியர், பிள்ளைகளை அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
ரிஷியிடம், கீர்த்தனா எழுதிய சீட்டு வர, அதில் அவள் தனக்கு ஒரு ஹீரோபென் வேண்டுமென்று எழுதியிருந்தாள். ரிஷியும் அதை வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் நச்சரித்தான்.
அன்றாட தேவைகளுக்கே பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவருக்கு, பள்ளிகள் இதைப்போன்ற யுக்திகளில், பெற்றொருக்கு வீண் செலவுவைப்பதாக நினைத்தார். அவன் கேட்ட எழுதுகோலின் விலை அதிகம் என நினைத்தவர், அலுவலகத்தில் புத்தாண்டு பரிசாக கொடுதிருந்த நாட்குறிப்பை அவளுக்கு தரும்படி ரிஷியிடம் வலியுறுத்தினார்.
வேண்டாவெறுப்பாக அவன் அதைத்தர, கீர்த்தனாவும் அதில் அதிருப்தி கொண்டு அழுது ரகளை செய்தாள்.
விசும்பும் அவளை மைதானத்தின் புல்தரையில் அமர்த்தி அருகில் அமர்ந்தார். குழந்தையின் வாடிய முகத்தை கையில் ஏந்தியவர்,
“அங்கிள் பாரு கீர்த்தனா!” மென்மையாக அழைத்து,
“நமக்காக ஆசையா ஒருத்தர் தரும் எந்தப் பரிசுப்பொருளும் உயர்ந்தது. நீ கேட்ட ஹீரோபென் காட்டிலும், இந்த நாட்குறிப்பு இன்னும் சிறப்பானது. உன்னோட சின்ன சின்ன சந்தோஷங்களை இதை எழுதி வெச்சுக்க பழகு. நாளிடைவில் மறந்துப்போகும் நினைவுகள், இதில் நிரந்தரமா இருக்கும். அவ்வளவு ஏன்! நம்ம நேசிச்ச மனிதர்கள் கூட நம்மவிட்டு ரொம்ப தூரம் போயிடுவாங்க; ஆனா அவர்களின் நினைவுகளை சுமக்கும் இந்த நாட்குறிப்பு, அவங்க நம்ம பக்கத்துலே இருக்கும் உணர்வை தரும்” என்றவர்,
பிள்ளைகளுக்கு புரியும் விதத்தில், ஆன் பிராங்க் டைரி பற்றி விவரித்து அதி எப்படி சரித்திரத்தில் இடம்பெற்றது என்றும் எடுத்துரைத்தார்.
ஹீரோபென் மட்டுமே சிந்தனையில் நிறைந்திருக்க, ரிஷி தந்தையின் அறிவுரைகள் முழுமையாக உணராதவள் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டாள்.
ஆனால், விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்தவள், ஒரு வாரத்திற்கு மேலும் ரிஷி வராததை கவனித்தாள். அவன் தந்தை விபத்தில் இறந்ததால், அவர்கள் ஊரைவிட்டு சென்றதாக அறிந்தவளுக்கு, ஏனோ, ரிஷியின் தந்தை கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தது.
‘க’வில் தொடங்கும் சொற்கள் அனைத்தையும் , ‘த’ என்று உச்சரிக்கும் அவளைக் நண்பர்கள் கேலி செய்தபோது, ‘ரிஷிகுமார்’ என்ற தன் பெயரை ‘ரிஷி’ என சுருக்குவதுபோல, ‘கீர்த்தனா’ என்ற அவள் பெயரை ‘ரித்தி’ என சுருக்கலாம் என்றான். கேலி செய்பவர்களிடம் தனக்காக முதல்முதலில் பரிந்துப்பேசியவன் அவன்தானே.
நேசித்தவர்கள் வெகுதூரம் விட்டுச்சென்றாலும், நாட்குறிப்பின் நினைவுகள் அருகிலேயே இருக்கும் என்று அவன் தந்தை சொன்ன அறிவுறை நினைவுகூர்ந்தவள், ரிஷியுடன் கழித்த பசுமையான நினைவுகளால் அந்த நாட்குறிப்பை நிரப்ப்பினாள். அன்றிலிருந்து கற்பனையில் அவனுடன் கதைக்கப் பழகியவள், அந்த உரையாடல்களையும் எழுத, நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் அவளுக்கு வாடிக்கையாகவே ஆனது.
இன்று….
ரித்தி-ரிஷி என்று ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் இட்டிருப்பதை கண்டவன், கீர்த்தனாவை கேள்வியாக பார்க்க, சமீபத்தில் எழுதிய நாட்குறிப்பு ஒன்றை காட்டினாள்.
“இன்னுமா அப்படி எழுதற!” வியந்தான்.
“எப்போவுமே அப்படித்தான் எழுதுவேன் ரிஷி!” பதில் உரைத்தவள்,
“உன் அப்பாவோட மறைவு, நம்ம ரெண்டு பேரு மனசுலையும், பசுமரத்தாணியா பல மாற்றங்களை கொடுத்திருக்கு டா! உனக்கு எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடு, நிகழ்காலத்தை கடக்க; எனக்கு கடந்தகாலத்தின் பசுமையான நினைவுகளே போதுமமென்ற மனநிறைவோடு, நிகழ்காலத்தை கடக்க.”, பெருமூச்சுவிட்டவள், அவன் கைவிரல்களை கோர்த்து,
“நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோட நாம நிகழ்காலத்தை சேர்ந்து வாழலாம் ரிஷி!” மென்மையாக கெஞ்சினாள்.
தடுமாற்றத்தில் தத்தளித்தவன் மௌனம் காக்க, அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என நினைத்தவள்,
“சரி! உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு டா! அண்ணா-அண்ணி திருமணம் நல்லபடியா நடக்கும்; அதுக்கு நான் பொறுப்பு! காயத்ரி அண்ணிகிட்ட சொல்லிடு!” விட்டுக்கொடுத்தாள்.
ஊசாலடிய மனம், பெண் அவளின் அன்பின் பக்கம் சாய, “ஹீரோ பென் வாங்கித்தரட்டுமா?” பனித்த கண்களோடு அவளே கதி என்று சரணடைந்தான்.
“ஹீரோ தான் பெண்ணை தேடி வந்துட்டானே! வேணும்னா ரெனால்ட்ஸ்பென் வாங்கித்தா!” குளமான கண்களுடன் புன்னகைத்தவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
தங்கள் விருப்பத்தை வீட்டில் கூறி, அவர்களின் பள்ளிப்பருவம் நட்பை பற்றியும் விளக்கினார்கள். கணவரின் அறிவுரையை ஆழமாக உள்வாங்கிய கீர்த்தனா மேலிருந்த மதிப்பு பன்மடங்காக பெருகியது சாரதாவிற்கு.
விளையாட்டு பெண் என்று நினைத்த அண்ணனோ, தங்கையின் ஆத்மார்த்தமான காதல் கதையை கேட்டு பேச்சற்றுப் போனான்.
தம்பியின் மனதில் இத்தனை மனப்போராட்டங்களா என்று காயத்ரி உணர்ந்தபோதும், விகர்ம் மேலிருந்த கோபம் மட்டும் துளியும் குறையவில்லை.
“மன்னிச்சிரு அக்கா! என்னோட பிடிவாதத்துனால தானே உங்க ரெண்டுபேருக்கும் மனஸ்தாபம்!” ரிஷி பழியை சுமக்க,
“இல்ல அண்ணி! நான் உங்க எல்லார் கிட்டையும் வெளிப்படையா பேசியிருந்தா இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது. தப்பு என்னுடையது தான்!” தன் பங்குக்கு கீர்த்தனா வருந்தினாள்.
காயத்ரி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சிலையாக நிற்க,
“நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொன்னது தப்புதான் காயத்ரி! ஆனா, என் நிலைமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு!” என்றவன், தங்கை விரும்பும் வாழ்க்கையை அமைத்து தரவும் முடியாமல், ரிஷியுடன் மச்சான் என்று உண்மையாக உறவாடவும் முடியாமல் திண்டாடுவதற்கு, விலகிவிடுவதே அனைவருக்கும் நல்லது என்று யோசித்ததாக சொன்னான் விக்ரம்.
ஒருவர் பின் ஒருவராக கெஞ்ச, “ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது டி!” அசையாது நிற்கும் பெண்னை கண்டித்தாள் சாரதா.
எவருடைய பேச்சையும் காதில் வாங்கிக்கொள்ளாதவள், அலைபேசியில் எண்களை அழுத்த, நிசப்தமான அவ்விடத்தில் அலறியது,
“காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா!”
விகர்மின் அலைபேசி. திடீரென்று ஒலித்த அந்தப்பாடலின் ஒலியை குறைக்கமுடியாமல் விக்ரம் அசடுவழிய, தன் அலைபேசியை காதருகில் பிடித்துக்கொண்டவள்,
“விலகிப்போக நினைத்தவர், ஏன் இன்னும் அதே ரிங்க்டோன் வெச்சிருக்கீங்க?” இறுகிய முகத்துடன் அதிகாரமாய் கேட்டாள்.
“டேய் அண்ணா! இதுதான் உன்னோட தங்கைப் பாசமா?” கீர்த்தனா பொய்கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, காதல் மயக்கத்தில் தன்னவளை இமைக்காமல் பார்த்த வண்ணம் நின்றான்.
அவன் உதடுகள் உச்சரித்த சொற்கள் யாவும் மனதிலிருந்து உதிக்கவில்லை என்று உணர்ந்தவளும் மென்சிரிப்புடன் தன் காதலை விழிகளில் தூது அனுப்பினாள்.
பிள்ளைகள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததை எண்ணி நெகிழ்ந்த சாரதா, கணவரின் நிழற்படத்தை நோக்கி நன்றிகூற,
‘பேரப்பிள்ளையாக மறுஜென்மம் எடுத்து விரைவில் உன்னிடம் வருகிறேன்’ என்று சொல்வதுபோல பதிலுக்கு புன்னகைத்தார்.
நேசித்த உறவுகள் நெஞ்சத்தில் நிறைந்திருக்க,
நாட்குறிப்புகளில் நினைவலைகள் நிரந்தரமாக,
நிழலாக தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!
Nirmala vandhachuமாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மகள், தோள்பையை வீசி எறிந்த விதத்திலேயே, போன காரியம் கைகூடவில்லை என்று புரிந்தது சாரதாவிற்கு.
“நம்ம வேணும்னா, ரிஷிகிட்ட எடுத்து சொல்லலாமே டி!” மென்றுவிழுங்கினாள் சாரதா.
“என்னன்னு எடுத்து சொல்லணும்?” கறாராக கேள்வியைத் திருப்பியவள்,
“தம்பி! தம்பி! அக்காவுக்கு முப்பத்து மூணு வயசாகுதுடா! நீ அவர் தங்கையை கல்யாணம் செய்துகிட்டாதான், எங்க கல்யாணம் நடக்கும்னு விக்ரம் தீர்மானமா சொல்லிட்டாரு…எனக்காக உன் முடிவை மாத்திக்கோன்னு கெஞ்ச சொல்றீயா?” எகத்தாளமாக கேட்டு, தன் அறைக்குள் புகுந்தாள் காயத்ரி.
“அப்படி கேட்டாதான் என்ன தப்பு?” நச்சரித்தபடி, மகளை பின்தொடர்ந்த சாரதா, “எப்படியிருந்தாலும் அவனும் நாளைக்கு ஒரு பெண்னை கல்யாணம் செய்துக்கத்தானே போறான். அது ஏன், அவனை விரும்புறேன்னு வாய்விட்டு சொல்ற, மாப்பிள்ளையோட தங்கை கீர்த்தனாவா இருக்கக்கூடாது?” தர்க்கமும் செய்தாள்.
அம்மாவின் அர்த்தமில்லா பேச்சில், காயத்ரி இன்னும் அதிகமாக கடுப்பாக, அவள் முகம்பார்க்க திரும்பியவள்,
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ மா! திருமண பந்தத்தின் அடிப்படை தேவை நல்லதொரு புரிதல். கல்யாணமே வேண்டாம்னு சொல்ற உன் மகனை வற்புறுத்தி சம்மதிக்க வெக்குறதும் தப்பு; பெண் பார்க்க வந்தவர், முதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, பிறகு தங்கை விருப்பம் நிறைவேற்றினா தான் கல்யாணம் செய்துப்பேன்னு பின்வாங்குறதும் ரொம்ப தப்பு!
சுயநலம் படைத்த இவர்கள் கரிசனம் காட்டித்தான் எனக்கு கல்யாணம் ஆகணும்னும் இல்ல; கண்ணீர்விட்டு கெஞ்சும் ரகமும் நான் இல்ல!” தீர்மானமாக உரைத்தவள், தனித்து வாழ்வதே மேலென்று கூறி அறையின் கதவை படார் என சாற்றினாள். மனதை புண்படுத்தியவர்கள் மேலிருந்த கோபத்தை, அறைக்கதவு மீது மட்டும்தான் காட்டமுடிந்தது அவளால் அந்தச் சமயத்திற்கு.
ஏமாற்றங்களைத் தவிர வேறெதுவும் வாழ்க்கையில் பார்த்ததில்லை என மனம்நொந்து சோஃபாவில் அமர்ந்தவள், நிழற்படமாக மாறிய கணவரின் முகத்தை வெறித்துப் பார்த்தாள். இருபது ஆண்டுகளுக்கு முன் தன்னையும், தன் இரு பிள்ளைகளையும் நிர்கதியாக தவிக்கவிட்டு, உலக வாழ்க்கையை விட்டொழித்த அவர்தானே அவளுக்கு ஏமாற்றத்தின் வலியை முதல் முதலில் உணர்த்தியவர்.
சாலை விபத்தில் கணவர் இறந்ததும், குடும்ப சுமைகள் அத்தனையும் சாரதாவின் தோளில் விழுந்தது. துக்கம் விசாரிக்க வந்த உறவுகள் பக்கம் பக்கமாக அனுதாபங்கள் வாய்மொழிந்ததோடு சரி. ஆறுதல் பேச்சும், இலவச அறிவுரைகளும் மனதின் வலியை குறைக்குமே தவிர, வயிற்றின் பசியை போக்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்தாள் சாரதா.
கண்கசியக் கூட நேரமில்லாமல், அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். மூத்தவள் காயத்ரியும், இளையவன் ரிஷிகுமாரும், அன்னையின் கஷ்டங்களை அறிந்து, தங்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தினர்.
இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த கையோடு, காயத்ரி ஒரு பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாள். ரிஷி, விமானியாகும் தன் லட்சியத்தில் வெற்றிபெற்று, சர்வதேச விமானங்களின் நிறுவனம் ஒன்றில் சேர்ந்தான்.
மாதத்தின் பாதி நாட்கள் ஆகாயத்திலும், மீதமுள்ள நாட்களில், பல நேரங்களில் பாஷை தெரியாத ஊரிலும், சில நேரம் மட்டுமே தாய்மண்ணில் கழித்தவன், திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
காலத்தின் போக்கில் மகனின் எண்ணங்கள் மாறுமென்று நம்பிய அன்னையின் கவலையெல்லாம் மகளின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே.
காயத்ரியின் இருபத்து ஐந்தாம் வயதில் தொடங்கியது அவள் சுயம்வரத்தின் முதல் அத்தியாயம். தகப்பன் இல்லாத பிள்ளைகள், தலைச்சன் பிள்ளை, அதிகமாக படித்து இருக்கிறாள், ஜாதகம் பொருந்தவில்லை என்று ஏதேதோ காரணங்களை அடுக்கி, பெண்பார்க்க வந்தவர்கள் கைவிரிக்க, ஆண்டுகள் அதன்போக்கில் உருண்டோடியது.
காயத்ரி வேலை செய்யும் கிளைக்கு பணிமாற்றத்தில் வந்த விக்ரம், அவளை திருமணம் செய்துகொள்ள எண்ணினான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, அவனும் அவன் தங்கை கீர்த்தனாவும் பெரியப்பாவின் வீட்டில் வளர்ந்ததால், காயத்ரியின் குடும்பநிலை, அவனுக்கு சொல்லித்தெரிய வேண்டியிருக்கவில்லை.
பெரியவர்கள் சம்மதத்துடன், திருமணமும் நல்லபடியாக நிச்சயமானது. மகளின் கல்யாணத்திற்கு முட்டுக்கட்டைப் போட்ட இடையூறுகளை தகர்த்துவிட்டதாக சாரதா பெருமூச்சுவிட, அச்சமயம் மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த விக்ரமின் தங்கை கீர்த்தனா, வருங்கால அண்ணியை பார்க்க வந்திருந்தாள்.
அவளை அன்பாக உபசரித்தவள், “போக்குவரத்து நெரிசல் அதிகமா இருக்குதாம். அதனால உங்க அண்ணனே, காயத்ரியை அழைச்சிட்டு வந்துட்டு இருக்காரு மா. சீக்கிரமே வந்துடுவாங்க!” மகள் அலைபேசியில் அழைத்து தகவல் சொன்னதாக கீர்த்தனாவிடம் சொல்லி, அவளுக்கு பருக பழச்சாறு கொடுத்தாள் சாரதா.
அதை ருசித்துப் பருகியவளின் இதழ்கள் குறும்பாக வளைந்தன. “அண்ணன் ஏதோ விமானத்துல பறந்துவரா மாதிரி, விளக்கம் சொல்றாரு. அதையும் நீங்க நம்புறீங்க. போக்குவரத்து நெரிசலில் யார் ஓட்டினாலும் வேகமாக வரமுடியாது. அண்ணா, வருங்கால மனைவியோட நேரம் செலவழிக்க சாக்கு சொல்றாரு!” என கண்சிமிட்டவும், சாரதாவின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் விரிந்தன்.
அவர்கள் வரும்வரை, பிள்ளைகளின் புகைப்படங்களை காட்டுவதாகச் சொல்லி, இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்துவந்தாள். கீர்த்தனாவும் அவற்றைப் பார்க்க ஆர்வம் காட்டினாள்.
அண்ணனுக்கு ஏற்ற மனையாள் என்று நினைத்தபடி அவற்றை ரசித்துப்பார்த்தாள். புகைப்படம் காட்டிய அன்னை, தன்னிச்சியாக மகனின் அருமை பெருமைகளையும் பாடினாள்.
விமானியாக பணிபுரியும் நேரத்தில், விளையாட்டு மைதானத்தில், விவாத மேடையில், வெளியூறுகளில் என இடத்திற்கு ஏற்றார்போல உடை அணிந்தவனின், உடல்மொழி, தோற்றம், பாவனை அனைத்தும் அம்சமாகவே இருந்தன். அதில் ஒரு குழுபுகைப்படத்தில் குறும்பு நகையுடன் கண்கள் சுருக்கி நிற்கும் மகனை சாரதா சுட்டிக்காட்ட, கீர்த்தனாவின் கண்கள் வியப்பில் அகல விரிந்தது.
“இவனா உங்க மகன்?” உறுதி செய்துகொண்டாள் பெண்.
“ஆமாம் மா! உனக்கு அவனைத் தெரியுமா?” வினவினாள் சாரதா.
அவனைக் கண்டுகொண்டவளின் மனம் கடந்தகாலத்தில் பயணிக்க, சாரதாவின் கேள்விக்கு மென்மையாக தலையசைத்தாள். அச்சமயத்தில், வாசற்கதவு அழைப்புமணி ஒலிக்க, மகளும், மாப்பிள்ளையும் வந்திருப்பதை அறிந்தவள், அவர்களை வரவேற்க உற்சாகமாக நகர்ந்தாள். அந்தப் பரப்பரப்பில், கீர்த்தனாவின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை சாரதா.
கீர்த்தனாவை கண்டதும், விக்ரம், தன் வருங்கால மனைவியின் தோளினை வளைத்து அறிமுகம் செய்தான். காயத்ரியும், தன்னவனின் ஸ்பரிசத்தில், வெட்கமும், பூரிப்பும் கலந்தவளாக மென்மையாக சிரித்தாள்.
பெண்கள் இருவரும் சகஜமாக பேசிப்பழக, திருமணத்தைப் பற்றிய மற்ற திட்டங்களையும், முகூர்த்தநாள் குறிப்பதைப் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
“உனக்கு எப்போ தேர்வுகள் முடியும்னு சொல்லு கீர்த்தி! அந்தச் சமயத்துல திருமணத்திற்கு தேதி குறிக்கலாம்!” விக்ரம் யோசனை சொல்ல,
“அண்ணா! எனக்கும் ரிஷிக்கும் கூட அப்போவே கல்யாணம் செய்துவைங்க!” பட்டென்று உடைத்தாள்.
சம்பந்தமே இல்லாமல் பேசும் அவளை மூவரும் குழப்பமாக பார்த்தனர்.
“என்ன உளருற கீர்த்தி!” விக்ரம் அதிராத குரலில் அழுத்தமாக கேட்க,
அதில் சுயத்திற்கு வந்தவள், “அண்ணி! நான் அண்ணன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!” என்று புறப்பட எழுந்தாள்.
“எதுவாயிருந்தாலும் இங்கேயே சொல்லு கீர்த்தி!” விக்ரம் தடுக்க, அவளோ பிடிவாதமாக இருந்தாள்.
காயத்ரி தன்னவனுக்கு புறப்படும்படி ஜாடைகாட்ட, விக்ரம் தங்கையை பின்தொடர்ந்தான்.
மகனின் அருமை பெருமைகளை சொல்லி, கீர்த்தனா மனதில் தேவையில்லாமல் ஆசை வளர்த்துவிட்டதாக பதறிய சாரதா,
“கீர்த்தனா! என்ன மா திடீர்னு?” வினவ,
“அது…அத்தை…விமானி கணவராக வந்தா, சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் பாருங்க!” கிண்டலாக பேசி கண்சிமிட்ட, சாரதா தன் யூகம் சரியென்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.
அண்ணனிடம் தனியாக பேச வேண்டுமென்று அழைத்துச் சென்றவள் பேசியதைப் பற்றி விக்ரம், காயத்ரியிடம் எதுவுமே சொல்லவில்லை.
“கீர்த்தி விருப்பம் சரிதான் காயத்ரி! நம்மள மாதிரியே, உன் தம்பியும், என் தங்கையும் கல்யாணம் செய்துகிட்டா, நாம எப்போவுமே ஒரே குடும்பமா இருக்கலாம்!” தங்கை காதலுக்கு பச்சைகொடி காட்டினான் விக்ரம்.
காயத்ரிக்கும் அதில் விருப்பம் தான். ஆனால், திருமணத்தில் நாட்டமே இல்லாத தம்பியிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் திண்டாடினாள். வீட்டின் பெண்கள் தொடர்ந்து வாதம் செய்தபோதும், ரிஷி மனதில் எந்தவித மாற்றமும் மலரவில்லை. கீர்த்தனாவுடன் தனக்கு எந்த பழக்கமும் இருந்ததுமில்லை என்றும் உறுதிசெய்தான்.
ரிஷியை தனக்கு முன்னமே தெரியும் என்று மட்டுமே அண்ணனிடம் பகிர்ந்துகொண்டவள், மேலும் விளக்கம் சொல்ல மறுத்துவிட்டாள். ரிஷியிடம் பேச வேண்டும் என்று அவள் சொல்ல, அவனோ, அவளின் பெயரைக் கூட கேட்க விரும்பாமல் இருந்தான்.
யார் பக்கம் உண்மை என்று புரியாமல் குழம்பினார்கள் காயத்ரியும், விக்ரமும். இளையவர்களின் பிடிவாதத்தால் அவர்களிடையே மனஸ்தாபங்கள் வளர்ந்தது.
“மன்னிச்சிடுங்க விக்ரம்! ரிஷி கல்யாணத்துல தனக்கு துளிக்கூட விருப்பமில்லைன்னு திட்டவட்டமா சொல்றான்.” காயத்ரி கூற,
“அப்போ! நம்ம கல்யாணத்தை பற்றியும் மறந்துடு காயத்ரி!” அவனும் தீர்கமாக சொல்லிவிட்டான்.
தன்னை மணந்துகொள்ள விரும்புவதாக தேனொழுக பேசியவன், தங்கை விருப்பம் தான் முக்கியம் என்று சொல்லி நிச்சயம் செய்த திருமணத்தை ரத்து செய்ய, காயத்ரியின் கோபம் தலைக்கேறியது.
மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்திய சாரதா, பிராயணம் முடிந்து இத்தாலியில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகனை அழைத்தாள். பேச்சு வார்த்தை வழக்கம்போல முடிவே இல்லாமல் நீடிக்க,
“இவ்வளவு சுயநலவாதியா உன்ன வளார்க்வா, நான் இத்தனை வருஷம் தனியா கஷ்டப்பட்டேன்! அப்படி என்னடா உனக்கு கல்யாணாத்து மேல அவ்வளவு வெறுப்பு?அக்கா வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு பாரு டா!” கொந்தளித்தாள்.
“நீ அனுபவிச்ச கஷ்டம், நான் ஒரு பொண்ணுக்கு கொடுத்திடக் கூடாதூன்னு தான் மா கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்!” என்றவன், தான் மேற்கொண்ட பணியில் உள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டினான். பிடித்த வேலையில் இருப்பதால், தனக்கு வாழ்க்கையில் எந்தக்குறையும் இல்லை என்றும் திடமாகவும் கூறினான்.
தந்தையின் அகால மரணம் அவன் மனதில் ஆழ்ந்து பதிந்திருப்பதை புரிந்துகொண்டாள். கீர்த்தனாவின் உறுதியை நேரில் பார்த்தவளுக்கு, அவள் மட்டும்தான் ரிஷி மனதில் வாழ்க்கையைப் பற்றி தோன்றிய வீண்பயத்தை அகற்றமுடியும் என்றும் யூகித்தாள்.
“சரிடா! ரிஷி! இந்தக் காரணத்தை நீயே பக்குவமாக கீர்த்தனாகிட்ட சொல்லிடு; அந்தப் பொண்ணு மனசு மாறினா, உங்க அக்காவோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்!” தழைந்துப் போகும்படி கேட்டாள்.
ஊருக்கு திரும்பியதும், கீர்த்தனாவை நேரில் சந்தித்துப் பேசுவதாக அவனும் விட்டுக்கொடுத்தான்.
தொடர்ந்து வந்த நாட்களில், காயத்ரி தன் நிலையில் இருந்து மாறவில்லை. அலுவலகத்தில் விக்ரமிடம் பேசுவதை தவிர்த்தாள். கீர்த்தனாவிடம் அப்படியென்ன குறை கண்டுவிட்டார்கள் இவர்கள் என்று நினைத்தவனும் பதிலுக்கு வெறுப்பைக் காட்டினான்
அக்கா தம்பி இருவருக்கும் இடையே பனிபோர் நிலவியது. தெளிவான காரணங்கள் சொல்லாமல் திருமணத்தை தவிர்க்கும் தம்பியின் போக்கு அவள் மனதை புண்படுத்தியது. குடும்பம் குழந்தை என வாழவிரும்பும் அக்காவிடம், வாழ்க்கையை பற்றிய தன் கண்ணோட்டத்தை கூறி குழப்பவேண்டாம் என்று நினைத்தவன், உண்மை காரணத்தை அவளிடம் சொல்லவில்லை.
இரண்டு நாட்களில் கீர்த்தனா லண்டன் கிளம்பிவிடுவாள் என்று சாரதா மகனுக்கு நினைவூட்டினாள்.
பேசவே மாட்டேன் என்று தர்க்கம் செய்தவனின் குரல் கேட்டதும், கீர்த்தனாவின் முகம் பிரகாசமாக பொலிந்தது. சந்தித்துப்பேச ஏதுவாக பூங்கா, கடற்கரை என்று அவள் அடுக்க, வீண் எதிர்பார்ப்புகள் கொடுக்க விரும்பாதவன்,
“அதெல்லாம் வேண்டாம்! உங்க வீட்டுல சந்திச்சு பேசலாமா! முடிந்தால் தனியாக!” பீடிகையுடன் கேட்டான்.
பெண்ணவளும் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.
மனதை கவர்ந்தவனை நேரில் காணப்போகும் மிதப்பில் கீர்த்தனாவின் முகம் மின்ன, திருமணத்திற்கு மறுப்பு சொல்லும் எண்ணத்துடன் வந்தவனோ அவள் முகத்தைக் கூட சரியாக பார்க்கவில்லை.
மிஸ்…மிஸ் அவள் பெயரையும் மறந்திருந்தான் அவன்!
“ரி…” தொடங்கியவள், மென்று விழுங்கி, “கீர்த்தனா!” என்றாள்.
“ஹான் கீர்த்தனா! உங்களை மட்டுமில்ல...எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க விருப்பமில்ல!” என்றதும்,
‘ஆண்மை கோளாறோ!’ மனதில் கிளம்பிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்டேவிட்டாள்.
‘இப்படியும் ஒரு பெண்ணா!’ யோசித்தவன் இளம்புன்னகையுடன்,மறுப்பாய் தலையசைத்தான். விமானியாக பணிபுரியும் தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து சராசரி மனிதர்களை காட்டிலும் அதிகம் என்பதால் திருமணம் பந்தத்தில் தனக்கு நாட்டமில்லை என்றான்.
“என்னம்மோ நாட்டுக்காக சேவை செய்யும் ராணுவ வீரன் மாதிரி பேசுறீங்க!” கிண்டலாக சிரித்தாள்.
அவள் எள்ளல் பேச்சில் கடுப்படைந்தவன், “சண்டைக்கு போனாலும் சுற்றுலாக்கு போனாலும் விமானம் ஆகாயத்துல தான் பறக்கும். அதை ஒட்டுறவங்க உயிருக்கும் ஆபத்து நிறையவே இருக்கும்!” நிதர்சனத்தை உரைத்தான்.
அதற்கும் சலிக்காத பெண்மனம், மேலும் தர்க்கம் செய்து அவனை சீண்டியது.
“அப்படின்னா ஆகாயத்தில் பறந்தாலும், சாலையில் உருண்டாலும் தண்ணியில் நீந்தினாலும் இறப்பதுதான் விதியென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது.” அவன் பயம் அர்த்தமற்றது என்றாள்.
“இறப்பது இயற்கையானதுதான்!.” தொடங்கியவன், நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்தப் பிறகு இறப்பதில் தவரில்லை என்றும், எதிர்பாராத நேரத்தில், நாம் நேசித்தவர்கள் நம்மைவிட்டு பிரிவது கொடுமை என்றும் வித்தியாசத்தை தெளிவுபடுத்தினான்.
இன்றைய பொழுதின் இனிமைகளை ரசிக்காமல், நாளைய சிந்தனையில் வீண் மனவுளைச்சல் கொள்ளும் இப்படியொரு ரிஷியை சந்திப்பாள் என்று எதிர்பார்க்காதவள்,
“மரணபயம்தான் உங்களுக்கு பிரச்சனைனா, நான் வேணும்னா, யமதர்மராஜா கிட்ட சொல்லி உங்களுக்கு சாகாவரம் வாங்கித்தரட்டுமா?” எகத்தாளமாக கேட்டு கண்சிமிட்டினாள்.
“என் மிஸ்.கீர்த்தனா! கண்டதும் காதலா?” புருவங்கள் உயர்த்தி கேட்டான்.
“ஏன் இருக்கக் கூடாதா?” பதிலுக்கு ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டு அவனை வியப்பில் ஆழ்த்தினாள்.
“படித்தப் பெண்தானே நீங்க?” நக்கலாக கேட்டான்.
“அப்போ நிழற்படம் பார்த்து, பத்து நிமிஷம் பேசிப்பழகின உங்க அக்காவுக்கும், என் அண்ணாவுக்கும் காதல் வந்திருக்கே; அவங்க படிச்சவங்க இல்லையா?” ஏட்டிக்குப் போட்டி வாதாடினாள்.
தன் மனதில் உள்ள நெருடலை சொல்லும்வரை இப்படித்தான் தர்க்கம் செய்வாள் என்று புரிந்துகொண்டான் ரிஷி.
கணவன் இழந்த பெண்ணாக, தன் தாய் சந்தித்த சவால்கள் இன்னும் கண்முன் பசுமரத்தாணியாக இருக்கிறது என்று தாழ்ந்த குரலில் விளக்கினான். இளம்வயதில் தந்தையை இழந்து தானும் தன் குடும்பத்தினரும் பட்ட சிரமங்களை பார்த்து எடுத்த முடிவு என்றவன்,
“ப்ளீஸ் கீர்த்தனா! என் மனநிலையை புரிஞ்சிக்கோங்க! உங்க அண்ணனுக்கும் புரியவெச்சு, என்னோட அக்காவை கல்யாணம் செய்துக்க சொல்லுங்க!” கெஞ்சலாக கேட்டான்.
“உம்” மென்மையாக தலையசைத்தவள், இரண்டு நிமிடத்தில் வருவதாக சொல்லிவிட்டு மௌனமாக நகர்ந்தாள்.
“உங்க அப்பாவோட மரணம்தான் எனக்கும், உங்க மேல காதல் மலர காரணமா இருந்துது!” என்று கொண்டுவந்த நாட்குறிப்பு ஒன்றை அவனிடம் நீட்டினாள்.
காலத்தால் பழுப்பான அந்த நாட்குறிப்பின் முதல்பக்கம் திறந்ததுமே, அவனுக்கு அத்தனையும் விளங்கியது.
“அன்புள்ள ரித்தி,
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
-இப்படிக்கு ரிஷி!”
நெளிவுசுளிவாக பதிந்திருந்த அவனின் கையெழுத்தை கண்டுகொண்டவன்,
“ரித்தி!” கேள்வியாக அவளை நோக்கினான்.
“ம்ம்!” மூடித்திறந்த இமைகளின் இடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஐந்தாம் வகுப்பில் எடுத்த புகைப்படம் பார்த்து அவளுக்கும், கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு பரிசளித்த நாட்குறிப்பு பார்த்து அவனுக்கும், பள்ளிப்பருவத்தின் பசுமையான நினைவுகள் பசுமரத்தாணியாக கண்முன் தோன்றியது.
அன்று…
“பாருங்க பா! ரித்திக்கு நான் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு பிடிக்கலையாம்.” வீட்டிற்கு அழைக்க வந்த அப்பாவிடம், கண்கசக்கி கொண்டு உடன் நடந்த தோழியை சுட்டிக்காட்டினான்.
“எனக்கு ஹீரோபென்(Hero Pen) தானே வேணும்னு Santa கிட்ட கேட்டேன். நாட்குறிப்பு கேக்கலியே!” முணுமுணுத்தாள் கீர்த்தனா.
பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் கிறிஸ்துமஸ்தினம் அன்று பரிசுகள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக “கிறிஸ்மாம்” விளையாட ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். பிள்ளைகள் துருப்பு சீட்டில் தங்களுக்குப் பிடித்த பரிசுப் பொருள்களை எழுதினர். அவற்றை ஒரு ஜாடியில் போட்ட ஆசிரியர், பிள்ளைகளை அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
ரிஷியிடம், கீர்த்தனா எழுதிய சீட்டு வர, அதில் அவள் தனக்கு ஒரு ஹீரோபென் வேண்டுமென்று எழுதியிருந்தாள். ரிஷியும் அதை வாங்கிக்கொடுக்கும்படி தந்தையிடம் நச்சரித்தான்.
அன்றாட தேவைகளுக்கே பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவருக்கு, பள்ளிகள் இதைப்போன்ற யுக்திகளில், பெற்றொருக்கு வீண் செலவுவைப்பதாக நினைத்தார். மகன் கேட்ட எழுதுகோலின் விலை அதிகம் என நினைத்தவர், அலுவலகத்தில் புத்தாண்டு பரிசாக கொடுதிருந்த நாட்குறிப்பை அவளுக்கு தரும்படி ரிஷியிடம் வலியுறுத்தினார்.
வேண்டாவெறுப்பாக அவன் அதைத்தர, கீர்த்தனாவும் அதில் அதிருப்தி கொண்டு அழுது ரகளை செய்தாள்.
விசும்பும் அவளை மைதானத்தின் புல்தரையில் அமர்த்தி அருகில் அமர்ந்தார். குழந்தையின் வாடிய முகத்தை கையில் ஏந்தியவர்,
“அங்கிள் பாரு கீர்த்தனா!” மென்மையாக அழைத்து,
“நமக்காக ஆசையா ஒருத்தர் தரும் எந்தப் பரிசுப்பொருளும் உயர்ந்தது. நீ கேட்ட ஹீரோபென் காட்டிலும், இந்த நாட்குறிப்பு இன்னும் சிறப்பானது. உன்னோட சின்ன சின்ன சந்தோஷங்களை இதில் எழுதி வெச்சுக்க பழகு. நாளிடைவில் மறந்துப்போகும் நினைவுகளும், இதில் நிரந்தரமா இருக்கும். அவ்வளவு ஏன்! நம்ம நேசிச்ச மனிதர்கள் கூட நம்மவிட்டு ரொம்ப தூரம் போயிடுவாங்க; ஆனா அவர்களின் நினைவுகளை சுமக்கும் இந்த நாட்குறிப்பு, அவங்க நம்ம பக்கத்துலே இருக்கும் உணர்வை தரும்” என்றவர்,
பிள்ளைகளுக்கு புரியும் விதத்தில், 'ஆன் பிராங்க் டைரி' பற்றி விவரித்து அது எப்படி சரித்திரத்தில் இடம்பெற்றது என்றும் எடுத்துரைத்தார்.
ஹீரோபென் மட்டுமே சிந்தனையில் நிறைந்திருக்க, ரிஷி தந்தையின் அறிவுரைகள் முழுமையாக உணராதவள் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டாள்.
ஆனால், விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்தவள், ஒரு வாரத்திற்கு மேலும் ரிஷி வராததை கவனித்தாள். அவனுடைய தந்தை விபத்தில் இறந்ததால், அவர்கள் ஊரைவிட்டு சென்றதாக அறிந்தவளுக்கு, ஏனோ, ரிஷியின் தந்தை கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தது. ரிஷியும் கண்முன் வந்தான்.
‘க’வில் தொடங்கும் சொற்கள் அனைத்தையும் , ‘த’ என்று உச்சரிக்கும் அவளைக் நண்பர்கள் கேலி செய்தபோது, ‘ரிஷிகுமார்’ என்ற தன் பெயரை ‘ரிஷி’ என சுருக்குவதுபோல, ‘கீர்த்தனா’ என்ற அவள் பெயரை ‘ரித்தி’ என சுருக்கலாம் என்றான். கேலி செய்பவர்களிடம் தனக்காக முதல்முதலில் பரிந்துப்பேசியவன் அவன்தானே.
நேசித்தவர்கள் வெகுதூரம் விட்டுச்சென்றாலும், நாட்குறிப்பின் நினைவுகள் அருகிலேயே இருக்கும் என்று அவன் தந்தை சொன்ன அறிவுறை நினைவுகூர்ந்தவள், ரிஷியுடன் கழித்த பசுமையான நினைவுகளால் அந்த நாட்குறிப்பை நிரப்பினாள். அன்றிலிருந்து கற்பனையில் அவனுடன் கதைக்கப் பழகியவள், அந்த உரையாடல்களையும் எழுத, நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் அவளுக்கு வாடிக்கையாகவே ஆனது.
இன்று….
ரித்தி-ரிஷி என்று ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் இட்டிருப்பதை கண்டவன், கீர்த்தனாவை கேள்வியாக பார்க்க, சமீபத்தில் எழுதிய நாட்குறிப்பு ஒன்றை காட்டினாள்.
“இன்னுமா அப்படி எழுதற!” வியந்தான்.
“எப்போவுமே அப்படித்தான் எழுதுவேன் ரிஷி!” பதில் உரைத்தவள்,
“உன் அப்பாவோட மறைவு, நம்ம ரெண்டு பேரு மனசுலையும், பசுமரத்தாணியா பல மாற்றங்களை கொடுத்திருக்கு டா! உனக்கு எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடு, நிகழ்காலத்தை கடக்க; எனக்கு கடந்தகாலத்தின் பசுமையான நினைவுகளே போதுமென்ற மனநிறைவோடு, நிகழ்காலத்தை கடக்க.”, பெருமூச்சுவிட்டவள், அவன் கைவிரல்களை கோர்த்து,
“நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோட நாம நிகழ்காலத்தை பற்றி மட்டும் யோசிச்சு, சேர்ந்து வாழலாம் ரிஷி!” மென்மையாக கெஞ்சினாள்.
தடுமாற்றத்தில் தத்தளித்தவன் மௌனம் காக்க, அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என நினைத்தவள்,
“சரி! உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு டா! அண்ணா-அண்ணி திருமணம் நல்லபடியா நடக்கும்; அதுக்கு நான் பொறுப்பு! காயத்ரி அண்ணிகிட்ட சொல்லிடு!” விட்டுக்கொடுத்தாள்.
ஊசாலடிய மனம், பெண் அவளின் அன்பின் பக்கம் சாய, “ஹீரோபென் வாங்கித்தரட்டுமா?” பனித்த கண்களோடு அவளே கதி என்று சரணடைந்தான்.
“ஹீரோ தான் பெண்ணை தேடி வந்துட்டானே! வேணும்னா ரெனால்ட்ஸ்பென் வாங்கித்தா!” குளமான கண்களுடன் புன்னகைத்தவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
தங்கள் விருப்பத்தை வீட்டில் கூறி, அவர்களின் பள்ளிப்பருவம் நட்பை பற்றியும் விளக்கினார்கள். கணவரின் அறிவுரையை ஆழமாக உள்வாங்கிய கீர்த்தனா மேலிருந்த மதிப்பு பன்மடங்காக பெருகியது சாரதாவிற்கு.
விளையாட்டு பெண் என்று நினைத்த அண்ணனோ, தங்கையின் ஆத்மார்த்தமான காதல் கதையை கேட்டு பேச்சற்றுப் போனான்.
தம்பியின் மனதில் இத்தனை மனப்போராட்டங்களா என்று காயத்ரி உணர்ந்தபோதும், விகர்ம் மேலிருந்த கோபம் மட்டும் துளியும் குறையவில்லை.
“மன்னிச்சிரு அக்கா! என்னோட பிடிவாதத்துனால தானே உங்க ரெண்டுபேருக்கும் மனஸ்தாபம்!” ரிஷி பழியை சுமக்க,
“இல்ல அண்ணி! நான் உங்க எல்லார் கிட்டையும் வெளிப்படையா பேசியிருந்தா இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது. தப்பு என்னுடையது தான்!” தன் பங்குக்கு கீர்த்தனா வருந்தினாள்.
காயத்ரி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சிலையாக நிற்க,
“நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொன்னது தப்புதான் காயத்ரி! ஆனா, என் நிலைமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு!” என்றவன், தங்கை விரும்பும் வாழ்க்கையை அமைத்து தரவும் முடியாமல், ரிஷியுடன் மச்சான் என்று உண்மையாக உறவாடவும் முடியாமல் திண்டாடுவதற்கு, விலகிவிடுவதே அனைவருக்கும் நல்லது என்று யோசித்ததாக சொன்னான் விக்ரம்.
ஒருவர் பின் ஒருவராக கெஞ்ச, “ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது டி!” அசையாது நிற்கும் பெண்னை கண்டித்தாள் சாரதா.
எவருடைய பேச்சையும் காதில் வாங்கிக்கொள்ளாதவள், அலைபேசியில் எண்களை அழுத்த, நிசப்தமான அவ்விடத்தில் அலறியது,
“காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா!”
விகர்மின் அலைபேசி. திடீரென்று ஒலித்த அந்தப்பாடலின் ஒலியை குறைக்கமுடியாமல் விக்ரம் அசடுவழிய, தன் அலைபேசியை காதருகில் பிடித்துக்கொண்டவள்,
“விலகிப்போக நினைத்தவர், ஏன் இன்னும் அதே ரிங்க்டோன் வெச்சிருக்கீங்க?” இறுகிய முகத்துடன் அதிகாரமாய் கேட்டாள்.
“டேய் அண்ணா! இதுதான் உன்னோட தங்கைப் பாசமா?” கீர்த்தனா பொய்கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, காதல் மயக்கத்தில் தன்னவளை இமைக்காமல் பார்த்த வண்ணம் நின்றான்.
அவன் உதடுகள் உச்சரித்த சொற்கள் யாவும் மனதிலிருந்து உதிக்கவில்லை என்று உணர்ந்தவளும் மென்சிரிப்புடன் தன் காதலை விழிகளில் தூது அனுப்பினாள்.
பிள்ளைகள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததை எண்ணி நெகிழ்ந்த சாரதா, கணவரின் நிழற்படத்தை நோக்கி நன்றிகூற,
‘பேரப்பிள்ளையாக மறுஜென்மம் எடுத்து விரைவில் உன்னிடம் வருகிறேன்’ என்று சொல்வதுபோல பதிலுக்கு புன்னகைத்தார்.
நேசித்த உறவுகள் நெஞ்சத்தில் நிறைந்திருக்க,
நாட்குறிப்புகளில் நினைவலைகள் நிரந்தரமாக,
நிழலாக தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!
நன்றிகள் பல தோழி!Super vithya ma...
இதை! இதை தான் எதிர்பார்த்தேன் ஜி!Nirmala vandhachu
Yaro enna thedunangha
நன்றிகள் பல தோழி!Lovely story sis