எப்படி எனத் தெரியாமலே
நம் உள்ளங்கள்
ஒன்றிணைந்த
பாவத்தால்
உரிமையுடன்
ஒத்து வாழ
நமக்கு உயிர் கொடுத்த
உறவுகளிடம்
உள்ளதை - நம்
உள்ளத்தைச்
சொன்னோம்
கண்விழியே!
சொல்லாமலே
இருந்திருந்தால்
நம் சந்திப்பாவது
நிகழ்ந்திருக்க
வாய்ப்பிருந்திருக்கலாமோ
என் நெஞ்சே?
இரவும் பகலும்
இருளும் ஒளியும்
போவதும் வருவதும்
அறியாமல் புரியாமல்
இருக்கின்றோம்
என்னுயிரே!
நான் இங்கு
காற்றைக்
குடித்து விட்டேன்
நீ அங்கு
அதையாவது
செய்தாயா
ஆருயிரே?
******
என்னயிது?
எப்போது
என் பெற்றோரின்
கோபமும் குத்தலுமான பார்வை
கவலையும் கரிசனமுமான பார்வையாக
மாறியது?
சாதிச் சண்டையில்
சர்வ நிச்சய பங்குதாரர்கள்
சாதிப் பூச்சரத்துடன்
நம் மணம் பேச
சம்மதித்து விட்டார்களாமே?!
நீ இல்லை எனில்
நான் இல்லவே இல்லை
என்பது எப்படிப் புரிந்தது?
சாதி சனத்தை ,
சம்பிரதாயங்களை,
தான் பெற்ற பிள்ளைக்காய்
மாற்றி அமைத்த விந்தை என்ன?
கூட இருப்பவர்கள் கூட
கூட இருக்க முடியாது என்று
கொரோனா காட்டிய
கொடும் பாடத்தாலா?
ஆகட்டும் ஆகட்டும்
அப்படியாவது
மனித மனங்கள்
திருந்தி வாழட்டும்
நம் உள்ளங்கள்
ஒன்றிணைந்த
பாவத்தால்
உரிமையுடன்
ஒத்து வாழ
நமக்கு உயிர் கொடுத்த
உறவுகளிடம்
உள்ளதை - நம்
உள்ளத்தைச்
சொன்னோம்
கண்விழியே!
சொல்லாமலே
இருந்திருந்தால்
நம் சந்திப்பாவது
நிகழ்ந்திருக்க
வாய்ப்பிருந்திருக்கலாமோ
என் நெஞ்சே?
இரவும் பகலும்
இருளும் ஒளியும்
போவதும் வருவதும்
அறியாமல் புரியாமல்
இருக்கின்றோம்
என்னுயிரே!
நான் இங்கு
காற்றைக்
குடித்து விட்டேன்
நீ அங்கு
அதையாவது
செய்தாயா
ஆருயிரே?
******
என்னயிது?
எப்போது
என் பெற்றோரின்
கோபமும் குத்தலுமான பார்வை
கவலையும் கரிசனமுமான பார்வையாக
மாறியது?
சாதிச் சண்டையில்
சர்வ நிச்சய பங்குதாரர்கள்
சாதிப் பூச்சரத்துடன்
நம் மணம் பேச
சம்மதித்து விட்டார்களாமே?!
நீ இல்லை எனில்
நான் இல்லவே இல்லை
என்பது எப்படிப் புரிந்தது?
சாதி சனத்தை ,
சம்பிரதாயங்களை,
தான் பெற்ற பிள்ளைக்காய்
மாற்றி அமைத்த விந்தை என்ன?
கூட இருப்பவர்கள் கூட
கூட இருக்க முடியாது என்று
கொரோனா காட்டிய
கொடும் பாடத்தாலா?
ஆகட்டும் ஆகட்டும்
அப்படியாவது
மனித மனங்கள்
திருந்தி வாழட்டும்
Last edited: