வரனுக்கு தட்சனை கொடுக்க வழியில்லாமல்,
திருமணச் சந்தையில் விலை கொடுக்க முடியாமல்,
மூன்று முடிச்சின் தூரம் ,
தள்ளிக் கொண்டே போனால் முதிர்கன்னி என்றொரு பட்டம்!!!
கவலைப்பட்டு ,கஷ்டப்பட்டு கடன்பட்டு
கல்யாணம் ,
முடித்த பின், மடிமீது தவள மழலை ஒன்று வாராமல் ,
காலம் தாழ்ந்து சென்றால், குறை யாரிடம் என்று கேட்காமலே,
கொடுப்பார்களே,
மலடி என்றொரு பட்டம்!!!
கண் அவனாக இருக்க வேண்டிய _கணவன்,
கண்ணீரின் காரணமாய் பொய்மையின் பூரணமாய் உருமாறி போனால்...
கொடுமைகளை தாங்கித் தாங்கி
மனதால் அடிபட்டு,
உணர்வால் அறுபட்டு ,
வேரறுந்த மரமாக விழும் முன் ,வீறுகொண்டு,
ஆறுதல் தேடி,
தாய்மடி நாடி
பிறந்த வீடு சென்றாள் ,
வீடு சேரும் முன்,
வாசலில் வீசி இருப்பார்கள் ,
வாழாவெட்டி என்றொரு பட்டம்!!!
பிறந்தவை எல்லாம் இறந்தவைஆவது ,
காலத்தின் இயல்புதானே?
கொண்டவன் கொடுங்கோலனாக இருந்தாலும்
அவன் இறந்தவன்
ஆகிப் போனால்,
இவள் பிறந்ததிலிருந்து ,
வைத்து வந்த பூவும் ,பொட்டும் கூட அவளுக்கு சொந்தம் இல்லையாம்,
அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள,
தந்து செல்வார்கள்
விதவை என்றொரு பட்டம்!!??
மேற்கண்ட எந்த ஒரு ,பட்டத்திற்கும்
ஆண்பாலே
கிடையாது!!!
பெண்ணாகப் பிறந்த
ஒரே ஒரு பாவத்திற்காக
இந்த சமுதாயம்தான்
எத்தனை பட்டங்களை இலவசமாய் தருகின்றது!!!
திருமணச் சந்தையில் விலை கொடுக்க முடியாமல்,
மூன்று முடிச்சின் தூரம் ,
தள்ளிக் கொண்டே போனால் முதிர்கன்னி என்றொரு பட்டம்!!!
கவலைப்பட்டு ,கஷ்டப்பட்டு கடன்பட்டு
கல்யாணம் ,
முடித்த பின், மடிமீது தவள மழலை ஒன்று வாராமல் ,
காலம் தாழ்ந்து சென்றால், குறை யாரிடம் என்று கேட்காமலே,
கொடுப்பார்களே,
மலடி என்றொரு பட்டம்!!!
கண் அவனாக இருக்க வேண்டிய _கணவன்,
கண்ணீரின் காரணமாய் பொய்மையின் பூரணமாய் உருமாறி போனால்...
கொடுமைகளை தாங்கித் தாங்கி
மனதால் அடிபட்டு,
உணர்வால் அறுபட்டு ,
வேரறுந்த மரமாக விழும் முன் ,வீறுகொண்டு,
ஆறுதல் தேடி,
தாய்மடி நாடி
பிறந்த வீடு சென்றாள் ,
வீடு சேரும் முன்,
வாசலில் வீசி இருப்பார்கள் ,
வாழாவெட்டி என்றொரு பட்டம்!!!
பிறந்தவை எல்லாம் இறந்தவைஆவது ,
காலத்தின் இயல்புதானே?
கொண்டவன் கொடுங்கோலனாக இருந்தாலும்
அவன் இறந்தவன்
ஆகிப் போனால்,
இவள் பிறந்ததிலிருந்து ,
வைத்து வந்த பூவும் ,பொட்டும் கூட அவளுக்கு சொந்தம் இல்லையாம்,
அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள,
தந்து செல்வார்கள்
விதவை என்றொரு பட்டம்!!??
மேற்கண்ட எந்த ஒரு ,பட்டத்திற்கும்
ஆண்பாலே
கிடையாது!!!
பெண்ணாகப் பிறந்த
ஒரே ஒரு பாவத்திற்காக
இந்த சமுதாயம்தான்
எத்தனை பட்டங்களை இலவசமாய் தருகின்றது!!!