• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பட்டங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வரனுக்கு தட்சனை கொடுக்க வழியில்லாமல்,
திருமணச் சந்தையில் விலை கொடுக்க முடியாமல்,
மூன்று முடிச்சின் தூரம் ,
தள்ளிக் கொண்டே போனால் முதிர்கன்னி என்றொரு பட்டம்!!!


கவலைப்பட்டு ,கஷ்டப்பட்டு கடன்பட்டு
கல்யாணம் ,
முடித்த பின், மடிமீது தவள மழலை ஒன்று வாராமல் ,
காலம் தாழ்ந்து சென்றால், குறை யாரிடம் என்று கேட்காமலே,
கொடுப்பார்களே,
மலடி என்றொரு பட்டம்!!!

கண் அவனாக இருக்க வேண்டிய _கணவன்,
கண்ணீரின் காரணமாய் பொய்மையின் பூரணமாய் உருமாறி போனால்...
கொடுமைகளை தாங்கித் தாங்கி
மனதால் அடிபட்டு,
உணர்வால் அறுபட்டு ,
வேரறுந்த மரமாக விழும் முன் ,வீறுகொண்டு,
ஆறுதல் தேடி,
தாய்மடி நாடி
பிறந்த வீடு சென்றாள் ,
வீடு சேரும் முன்,
வாசலில் வீசி இருப்பார்கள் ,
வாழாவெட்டி என்றொரு பட்டம்!!!

பிறந்தவை எல்லாம் இறந்தவைஆவது ,
காலத்தின் இயல்புதானே?
கொண்டவன் கொடுங்கோலனாக இருந்தாலும்
அவன் இறந்தவன்
ஆகிப் போனால்,
இவள் பிறந்ததிலிருந்து ,
வைத்து வந்த பூவும் ,பொட்டும் கூட அவளுக்கு சொந்தம் இல்லையாம்,
அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள,
தந்து செல்வார்கள்
விதவை என்றொரு பட்டம்!!??


மேற்கண்ட எந்த ஒரு ,பட்டத்திற்கும்
ஆண்பாலே
கிடையாது!!!

பெண்ணாகப் பிறந்த
ஒரே ஒரு பாவத்திற்காக
இந்த சமுதாயம்தான்
எத்தனை பட்டங்களை இலவசமாய் தருகின்றது!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top