?மணப்பெண்கள் நலுங்கு
3ம் நாள், மாலை 6:00 மணி ...
சிவாஜி ...
மாமனார் இன்று,
தாய்மாமனாக முன் நின்று எந்த
குறையும் தெரியாமல்,மிகவும் எளிமையாக ஆனால் நிறைவான
பங்ஷ்ன் ஏற்பாடு செய்து இருந்தார்.
அவருக்கு இது புதிது முதல் முறையாக தான் வீட்டில் நடக்கும் விழா. எதுவும் விளங்கவில்லை அவருக்கு, சகோதரி, மருமகள்கள் உதவியோடு,
இருவருக்கும் தனி தனியாக பட்டு ஆடைகள்,கழுத்துக்கு நவரத்தின
நகை ஆசிர்வதித்து
கொடுத்து, அணிந்து வந்ததும்,
ட்வின்சிஸ்டர்ஸ்
சிவாஜி அவரே முன் வந்து,இருவரையும் தன் தோள் வளைவில் அணைத்து அழைத்து வந்து சபை முன்னே அமர வைத்தவர் , நின்று ஆசையாக இரு மருமகளுக்கு அவரே முதலில் நலுங்கு இடுவதை பார்க்க பார்க்க, புனிதாவுக்கு எவ்வளவு கட்டு படுத்தியும் கண்ணீர் உருண்டு, திரண்டு விழுந்தது ,
அருகே சற்று தள்ளி கை காட்டி மனைவியையும், மகள்களையும் மாறி மாறி பார்த்தவாறு நின்று இருந்த பரணியின் கண்களும் சிவந்து போயி இருந்தது. பெற்ற மனம் தங்கள் மகளுக்கு நடக்கும் விழா ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும்.
இரு மகள்கள் அவரின் உலகம் ஆயிற்றே இனி ஒரு மகள் இந்த வீட்டின் உரிமையாக சொந்தம் ஆக போகிறது என்ற மனநிலையில் உதடு கடித்து தன் பாச உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தார் பரணி ..
இதை கவனித்த சிவாஜியின் இரண்டு சகோதரிகள் புனிதா அருகில்,
(தாய் வழி உறவுகள் அவர் அருகே இருந்தும்)
இருபக்கம் வந்து அணைத்து,
"புனி மா..."!,
"ஏன் மா..? சந்தோசமா ரசிக்கறது விட்டு இப்பிடி சின்ன புள்ள போல அழுதுட்டு,
பாரு புள்ள ரெண்டு பேரும் உன்னையே தான் பாத்துட்டு இருக்காங்க, அவங்க முகமும் வாடி போச்சு பாரு மா.
இரு அக்காவும் பரிவுடன் பேச..
புனிதா விசும்பிய படி ..
"இல்லிங்க அக்கா... இது சந்தோச அழுகை தான், எனக்கு இது வரைக்கும் கூட பிறந்த உறவுகள் இல்லன்னு எந்த ஏக்கம் தெரியாம அவரும் என் பொண்ணுங்களும் என்ன சுத்தி எப்பவும் கவசம் மாதிரி இருப்பாங்க..
இன்னைக்கு சிவா அண்ணா எனக்காக இதை எடுத்து நடத்தும் போது அந்த அன்பு என்னை கொஞ்சம் அசைச்சு பாக்குது, அது தான்..
எனக்கு ரொம்ப சந்தோசம் தான் கா, என் பொண்ணுங்க உண்மையாவே ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காங்க, இப்பிடி ஒரு அன்பான உறவுகள் யாருக்கு கிடைக்கும்.
அதுவும் சிவா அண்ணா போல பார்த்து பார்த்து செய்யும் ஒரு மாமனார் கிடைச்சது என் பொண்ணு அதிர்ஷ்டசாலி தான் என்றதும்.
சிரித்து கொண்டே அக்காமார் இருவரும் புனிதா தலையை கோதி தோளில் சாய்த்து அணைத்து தங்கள் அன்பையும் வெளி படுத்தினர்.
சிவாஜி பெரிய அக்கா...
உண்மை தான் புனி அவனை போல பாசம் காட்ட யாராலும் முடியாது , நாங்களும் கல்யாணம் பண்ணி நாடு விட்டு நாடு போயிட்டோம் அதுக்கு பிறகு சின்ன மனஸ்தாபம், எங்க தம்பி நாங்க சொன்ன பொண்ணு வேண்டான்னு, சொல்லாம கொள்ளாம காதல் திருமணம் பண்ணிட்ட அப்போ கொஞ்சம் விரிசல் ஆச்சு.. "!
உசிப்பி விட்டு எங்க வீட்டு பெருசுங்க பண்ண வேலை..
பேசாம இருந்தோம், இருந்தாலும் எங்க தம்பி மனைவி தாங்க கம்பி மா, அவ இருக்கும் வரை எங்களை அப்பிடி பகைச்சு இருக்க விடல அடிக்கடி போன் பண்ணி எங்க மனசை மாத்திட்டா மகராசி கடவுள் அவளுக்கு ஆயுசு தான் கொடுக்கல..
என் தம்பி, புள்ளைய வைச்சுகிட்டு ஆசை பட்ட மனைவியும் இல்லாம ரொம்ப கஷ்டபட்டுட்டன் மா, எவ்வளவோ சொன்னோம் மறு கல்யாணம் பண்ணிக்க சொல்லி.....
"முடியவே முடியாது என் மனைவி இடத்தை நான் யாருக்கு குடுக்க முடியாதுன்னு.." சொல்லிட்டன்..! , இதோ இப்போ வரைக்கும் அவன் புள்ளைக்காக வாழ்ந்துட்டு இருக்கான் என் தம்பி , மனம் கனத்து சொல்ல,
சின்ன அக்கா கண்ணை துடைத்து கொண்டே ..
ஆமா புனிமா, இப்போ தம்பி பிசினஸ்ன்னு ஹைட்ரபாத் வந்த பிறகு அடிக்கடி பார்க்க முடியுது, அது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு,
பெரிய அக்கா தான் பாவம். சிவாக்கு பெரிய அக்கான்னா ரொம்ப பிரியம் புனிதா அவங்க வளர்த்த தம்பி இல்லியா, அவனுக்கு ஆறுதலாய் இருக்க முடியலனு கவலை அதிகம் ,
அக்கா கணவர் ரொம்ப கோவக்காரர் .அவர் தங்கச்சிய சிவா கல்யாணம் பண்ண மறுத்த கோவம் தான். எப்பிடியோ இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு. அப்போ கூட அவரு வரல பாரு மா ,
இப்போ பாபி தான் அவன் உலகம், மருமகளையும் மகளை போல் தானே பாத்துக்குவா கண்ணை தொடைச்சிட்டு
நீ வா டா, பொண்ணுங்க கிட்ட போயி
நில்லுமா குழந்தைங்க முகம் வாடி
போச்சு. புனிதாவை இழுத்து கொண்டு
போனார்கள்.
நாங்களும் சளைத்தவர் இல்லை அன்பு கட்டுவதில் என்று சொல்லுவது போல் இருந்தது அவர்களில் நடவடிக்கை... புனிதா மிகவும் நெகிழ்ந்து போனார்.
அதற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக, வந்த பெண்கள் நலுங்கு வைத்து திருஷ்ட்டி களித்து நிறைவு செய்தனர்.
????????????
4 ம் நாள்....
பவனும் பாபியும் அன்று காலையே அவரவர் குடும்பங்களோடு தங்கள் திருமணம் நடக்க போகும் பூர்விக
ஊருக்கு கிளம்பி விட்டனர்.
இனி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத கட்டுபாடு . அன்று ஒரு நாளுக்கே தவித்து போயினர் வேறு வழி....
இன்னும் 24 மணி நேரம் காத்திருப்பு
வேறு இருக்கே ...
அது வரை காற்றோடும், கைபேசியில்
தான் உறவாட முடியும். பெரியவர்களிடம் இருந்து கண்டிப்பான தாடை விதிக்க பட்டுவிட்டது.
அன்று மாலை நிரஞ்சன் , ஷ்ரவன் குடும்பம் வருவதாக வாக்கு கொடுக்கவும், அவர்களுக்காக காத்து இருந்தனர் பவன், பாபி.
சிவாஜியும் அதிகம் பூந்தமல்லி வீடு வருவதில்லை என்றாலும் ஆட்கள் அமர்த்தி பாபி சுத்தமாவே வைத்து இருந்தான் வீட்டை.
பவன் வரும் போது எல்லாம் தான் வீட்டையும் ஒரு பார்வை பார்த்து செல்வான். முன்னேற்பாடாக தற்போதும் ஆட்கள் அமர்த்தி அவர்கள் வீடு வாழை மரம் மாவிலை தோரணங்களோடு பிரகாசமாக இருந்தது. இவர்கள் வருகையால் மேலும் வீடு நிறைத்து இருந்தது .
மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு பண்ணை வீட்டில் நடத்த இருப்பதால்,அதற்க்கு செல்ல வேண்டிய ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர்.
5 ம் நாள்...
( பண்ணை வீட்டில் மாலை மாப்பிள்ளை வரவேற்பு)
.
மணமகள் இல்லம் ...
விடியற்காலை முன் வாசலில் 5 பெண்கள் பந்தக்கால் வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு பூஜைகள் ஆனதும். அதே நேரம் மாப்பிளைகள் வீட்டிலும் இதே பூஜை நடத்தப்பட்டது.
அன்று மத்தியமே திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளோடு, பயணம் ஆனார்கள்..
மத்திய சாப்பாட்டுக்கு நேரத்திற்கு பரணி குடும்பம் பண்ணை வீட்டிற்கு போய் சேர்த்தனர்.
புவனா இல்லத்துக்கு லயா மருமகளாக திருமணம் முடித்த பின் தம்பதிகளாக முகூர்த்த தேங்காய் உடைக்க தான் நாளை மத்தியம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
அது வரை அவர்களும், சகல வசதிகளோடு, நான்கு குடும்பம் தங்கும் அளவுக்கு அறைகள் இருக்கும் பண்ணை வீட்டிலே தங்கும் அனைத்து ஏற்பாடு செய்து வைத்து விட்டார் புவனம்மா.
இவர்களும் மாலை மாப்பிள்ளை வரிசையோடு வரவேற்புக்கு வந்து,
மறுநாள் எண்ணெய், நலுங்கு சாங்கியம் எல்லாம் முடித்து குளித்து அலகாரம் செய்து கொண்டு மணமேடைக்கு செல்ல வேண்டும் ஜோடிகளாக )
மாலை...
பண்ணை வீடு, கோவில் முன்னே அமைத்த திருமணமேடை , பவன், பாபி ஈஸ்வர் மாளிகை வண்ண வண்ண விளக்கு, பூ அலங்காரம், வாழை, தென்னை குருத்து, மா, பலா .ஓலையில் வேலைப்பாடு செய்து இருபக்கமும் தொங்க விட்டு கலை கட்டியது.
குல கோவில், வண்ண வண்ண விளக்குகள் போட்டு வைர கற்கள் பாதித்தது போல் மின்னியது கோபுரம்.
அளவாக அழைத்த உறவினர், அவர்களுக்கு என தங்கிட, உணவு, கல்யாணத்துக்கு என வர போக வாகன வசதிகளும், புவனா அவர்கள் வீட்டின் அருகே இருக்கு ஹோட்டல் ரூம்ஸ் மொத்தம் புக் செய்து வைத்து இருந்தனர்.
அந்த ஊரில் இருக்கும் மொத்த குடும்பங்களுக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது .
??????????????
3ம் நாள், மாலை 6:00 மணி ...
சிவாஜி ...
மாமனார் இன்று,
தாய்மாமனாக முன் நின்று எந்த
குறையும் தெரியாமல்,மிகவும் எளிமையாக ஆனால் நிறைவான
பங்ஷ்ன் ஏற்பாடு செய்து இருந்தார்.
அவருக்கு இது புதிது முதல் முறையாக தான் வீட்டில் நடக்கும் விழா. எதுவும் விளங்கவில்லை அவருக்கு, சகோதரி, மருமகள்கள் உதவியோடு,
இருவருக்கும் தனி தனியாக பட்டு ஆடைகள்,கழுத்துக்கு நவரத்தின
நகை ஆசிர்வதித்து
கொடுத்து, அணிந்து வந்ததும்,
ட்வின்சிஸ்டர்ஸ்
சிவாஜி அவரே முன் வந்து,இருவரையும் தன் தோள் வளைவில் அணைத்து அழைத்து வந்து சபை முன்னே அமர வைத்தவர் , நின்று ஆசையாக இரு மருமகளுக்கு அவரே முதலில் நலுங்கு இடுவதை பார்க்க பார்க்க, புனிதாவுக்கு எவ்வளவு கட்டு படுத்தியும் கண்ணீர் உருண்டு, திரண்டு விழுந்தது ,
அருகே சற்று தள்ளி கை காட்டி மனைவியையும், மகள்களையும் மாறி மாறி பார்த்தவாறு நின்று இருந்த பரணியின் கண்களும் சிவந்து போயி இருந்தது. பெற்ற மனம் தங்கள் மகளுக்கு நடக்கும் விழா ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும்.
இரு மகள்கள் அவரின் உலகம் ஆயிற்றே இனி ஒரு மகள் இந்த வீட்டின் உரிமையாக சொந்தம் ஆக போகிறது என்ற மனநிலையில் உதடு கடித்து தன் பாச உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தார் பரணி ..
இதை கவனித்த சிவாஜியின் இரண்டு சகோதரிகள் புனிதா அருகில்,
(தாய் வழி உறவுகள் அவர் அருகே இருந்தும்)
இருபக்கம் வந்து அணைத்து,
"புனி மா..."!,
"ஏன் மா..? சந்தோசமா ரசிக்கறது விட்டு இப்பிடி சின்ன புள்ள போல அழுதுட்டு,
பாரு புள்ள ரெண்டு பேரும் உன்னையே தான் பாத்துட்டு இருக்காங்க, அவங்க முகமும் வாடி போச்சு பாரு மா.
இரு அக்காவும் பரிவுடன் பேச..
புனிதா விசும்பிய படி ..
"இல்லிங்க அக்கா... இது சந்தோச அழுகை தான், எனக்கு இது வரைக்கும் கூட பிறந்த உறவுகள் இல்லன்னு எந்த ஏக்கம் தெரியாம அவரும் என் பொண்ணுங்களும் என்ன சுத்தி எப்பவும் கவசம் மாதிரி இருப்பாங்க..
இன்னைக்கு சிவா அண்ணா எனக்காக இதை எடுத்து நடத்தும் போது அந்த அன்பு என்னை கொஞ்சம் அசைச்சு பாக்குது, அது தான்..
எனக்கு ரொம்ப சந்தோசம் தான் கா, என் பொண்ணுங்க உண்மையாவே ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காங்க, இப்பிடி ஒரு அன்பான உறவுகள் யாருக்கு கிடைக்கும்.
அதுவும் சிவா அண்ணா போல பார்த்து பார்த்து செய்யும் ஒரு மாமனார் கிடைச்சது என் பொண்ணு அதிர்ஷ்டசாலி தான் என்றதும்.
சிரித்து கொண்டே அக்காமார் இருவரும் புனிதா தலையை கோதி தோளில் சாய்த்து அணைத்து தங்கள் அன்பையும் வெளி படுத்தினர்.
சிவாஜி பெரிய அக்கா...
உண்மை தான் புனி அவனை போல பாசம் காட்ட யாராலும் முடியாது , நாங்களும் கல்யாணம் பண்ணி நாடு விட்டு நாடு போயிட்டோம் அதுக்கு பிறகு சின்ன மனஸ்தாபம், எங்க தம்பி நாங்க சொன்ன பொண்ணு வேண்டான்னு, சொல்லாம கொள்ளாம காதல் திருமணம் பண்ணிட்ட அப்போ கொஞ்சம் விரிசல் ஆச்சு.. "!
உசிப்பி விட்டு எங்க வீட்டு பெருசுங்க பண்ண வேலை..
பேசாம இருந்தோம், இருந்தாலும் எங்க தம்பி மனைவி தாங்க கம்பி மா, அவ இருக்கும் வரை எங்களை அப்பிடி பகைச்சு இருக்க விடல அடிக்கடி போன் பண்ணி எங்க மனசை மாத்திட்டா மகராசி கடவுள் அவளுக்கு ஆயுசு தான் கொடுக்கல..
என் தம்பி, புள்ளைய வைச்சுகிட்டு ஆசை பட்ட மனைவியும் இல்லாம ரொம்ப கஷ்டபட்டுட்டன் மா, எவ்வளவோ சொன்னோம் மறு கல்யாணம் பண்ணிக்க சொல்லி.....
"முடியவே முடியாது என் மனைவி இடத்தை நான் யாருக்கு குடுக்க முடியாதுன்னு.." சொல்லிட்டன்..! , இதோ இப்போ வரைக்கும் அவன் புள்ளைக்காக வாழ்ந்துட்டு இருக்கான் என் தம்பி , மனம் கனத்து சொல்ல,
சின்ன அக்கா கண்ணை துடைத்து கொண்டே ..
ஆமா புனிமா, இப்போ தம்பி பிசினஸ்ன்னு ஹைட்ரபாத் வந்த பிறகு அடிக்கடி பார்க்க முடியுது, அது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு,
பெரிய அக்கா தான் பாவம். சிவாக்கு பெரிய அக்கான்னா ரொம்ப பிரியம் புனிதா அவங்க வளர்த்த தம்பி இல்லியா, அவனுக்கு ஆறுதலாய் இருக்க முடியலனு கவலை அதிகம் ,
அக்கா கணவர் ரொம்ப கோவக்காரர் .அவர் தங்கச்சிய சிவா கல்யாணம் பண்ண மறுத்த கோவம் தான். எப்பிடியோ இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு. அப்போ கூட அவரு வரல பாரு மா ,
இப்போ பாபி தான் அவன் உலகம், மருமகளையும் மகளை போல் தானே பாத்துக்குவா கண்ணை தொடைச்சிட்டு
நீ வா டா, பொண்ணுங்க கிட்ட போயி
நில்லுமா குழந்தைங்க முகம் வாடி
போச்சு. புனிதாவை இழுத்து கொண்டு
போனார்கள்.
நாங்களும் சளைத்தவர் இல்லை அன்பு கட்டுவதில் என்று சொல்லுவது போல் இருந்தது அவர்களில் நடவடிக்கை... புனிதா மிகவும் நெகிழ்ந்து போனார்.
அதற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக, வந்த பெண்கள் நலுங்கு வைத்து திருஷ்ட்டி களித்து நிறைவு செய்தனர்.
????????????
4 ம் நாள்....
பவனும் பாபியும் அன்று காலையே அவரவர் குடும்பங்களோடு தங்கள் திருமணம் நடக்க போகும் பூர்விக
ஊருக்கு கிளம்பி விட்டனர்.
இனி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத கட்டுபாடு . அன்று ஒரு நாளுக்கே தவித்து போயினர் வேறு வழி....
இன்னும் 24 மணி நேரம் காத்திருப்பு
வேறு இருக்கே ...
அது வரை காற்றோடும், கைபேசியில்
தான் உறவாட முடியும். பெரியவர்களிடம் இருந்து கண்டிப்பான தாடை விதிக்க பட்டுவிட்டது.
அன்று மாலை நிரஞ்சன் , ஷ்ரவன் குடும்பம் வருவதாக வாக்கு கொடுக்கவும், அவர்களுக்காக காத்து இருந்தனர் பவன், பாபி.
சிவாஜியும் அதிகம் பூந்தமல்லி வீடு வருவதில்லை என்றாலும் ஆட்கள் அமர்த்தி பாபி சுத்தமாவே வைத்து இருந்தான் வீட்டை.
பவன் வரும் போது எல்லாம் தான் வீட்டையும் ஒரு பார்வை பார்த்து செல்வான். முன்னேற்பாடாக தற்போதும் ஆட்கள் அமர்த்தி அவர்கள் வீடு வாழை மரம் மாவிலை தோரணங்களோடு பிரகாசமாக இருந்தது. இவர்கள் வருகையால் மேலும் வீடு நிறைத்து இருந்தது .
மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு பண்ணை வீட்டில் நடத்த இருப்பதால்,அதற்க்கு செல்ல வேண்டிய ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர்.
5 ம் நாள்...
( பண்ணை வீட்டில் மாலை மாப்பிள்ளை வரவேற்பு)
.
மணமகள் இல்லம் ...
விடியற்காலை முன் வாசலில் 5 பெண்கள் பந்தக்கால் வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு பூஜைகள் ஆனதும். அதே நேரம் மாப்பிளைகள் வீட்டிலும் இதே பூஜை நடத்தப்பட்டது.
அன்று மத்தியமே திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளோடு, பயணம் ஆனார்கள்..
மத்திய சாப்பாட்டுக்கு நேரத்திற்கு பரணி குடும்பம் பண்ணை வீட்டிற்கு போய் சேர்த்தனர்.
புவனா இல்லத்துக்கு லயா மருமகளாக திருமணம் முடித்த பின் தம்பதிகளாக முகூர்த்த தேங்காய் உடைக்க தான் நாளை மத்தியம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
அது வரை அவர்களும், சகல வசதிகளோடு, நான்கு குடும்பம் தங்கும் அளவுக்கு அறைகள் இருக்கும் பண்ணை வீட்டிலே தங்கும் அனைத்து ஏற்பாடு செய்து வைத்து விட்டார் புவனம்மா.
இவர்களும் மாலை மாப்பிள்ளை வரிசையோடு வரவேற்புக்கு வந்து,
மறுநாள் எண்ணெய், நலுங்கு சாங்கியம் எல்லாம் முடித்து குளித்து அலகாரம் செய்து கொண்டு மணமேடைக்கு செல்ல வேண்டும் ஜோடிகளாக )
மாலை...
பண்ணை வீடு, கோவில் முன்னே அமைத்த திருமணமேடை , பவன், பாபி ஈஸ்வர் மாளிகை வண்ண வண்ண விளக்கு, பூ அலங்காரம், வாழை, தென்னை குருத்து, மா, பலா .ஓலையில் வேலைப்பாடு செய்து இருபக்கமும் தொங்க விட்டு கலை கட்டியது.
குல கோவில், வண்ண வண்ண விளக்குகள் போட்டு வைர கற்கள் பாதித்தது போல் மின்னியது கோபுரம்.
அளவாக அழைத்த உறவினர், அவர்களுக்கு என தங்கிட, உணவு, கல்யாணத்துக்கு என வர போக வாகன வசதிகளும், புவனா அவர்கள் வீட்டின் அருகே இருக்கு ஹோட்டல் ரூம்ஸ் மொத்தம் புக் செய்து வைத்து இருந்தனர்.
அந்த ஊரில் இருக்கும் மொத்த குடும்பங்களுக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது .
??????????????
Last edited: