?லயா?பவன் ?
மன்னிக்கணும்? நட்புக்களே நிறையவே லேட் பண்ணிட்டேன், நமக்கு வந்த பிரச்சனைங்க அப்பிடி.
அட்லாஸ்ட் எப்பிடியோ முட்டி மோதி எழுதி முடிச்சே ஆகணும் அண்ட் , என் இளம் தோழியின் ஒருவரின் அன்பு ஆர்டர். முடிச்சுட்டேன் ...
கொஞ்சம் ud லென்த்தீயா வரும் டார்லிங்ஸ் சீக்கிரம் முடிக்கும் ஐடியாவே ?
அடுத்து அடுத்து ஹனிமூன் ரொமான்ஸ் வருவதால், ரொமான்டிக் காட்சிகள் முட்டிகோ கட்டிக்கோ இப்பிடி லவ்லி சீன்ஸ் add ஆகி வருவதால் final அண்ட் prefinal இன்னும் ரெண்டு மூணு யூடிக்கு பிறகு வரும்... பொறுத்துக்கோங்க ?
அண்ட் கொஞ்சம் கொஞ்சமா ப்ரூப் ரீடிங் பண்ணி ஒவ்வொன்னா போடணும் , போடுவேன் ?
அண்ட் finally ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ப்ளீஸ் kindly ப்பியர் வித் மீ தங் யூ...
ம்...?? முதலில்
மணமேடைக்கு போகும் முன், இன்னும் இழுபறியாக இருக்கும் பவன் லயாவின் புரிதல் ஒரு முடிவுக்கு வரணும் இல்லையா அதற்காக சில ஆட்டம் பின் மணமேடைக்கு ஓட்டம்.
********
பவன் லயா.?லவ் சின்ன முன்னோட்டம் ஒரு புரிதலுக்காக,
small recap...
**************
நாயகன் அண்ட் நாயகி திருமணபந்தத்தில் ரெண்டு பேரும் அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில், இன்னும்
என் நாயகி லயா தன் இயல்பில் இருந்து முழுமையாக மாறி வரவில்லை,நத்தை போல தன்னை சுருக்கி கொண்டு இருக்கிறாள்.அந்த மனஉளைச்சலில் இருந்து வெளியே வர சற்று தாமதம் ஆனதே தவிர, மென்மையானவள் அதிகமான அன்பு இரக்ககுணம்
அவளோட பிளஸ் அண்ட் மைனஸ் ,
சற்று வீம்பு... தான் விரும்பும், நேசித்த ஆணிடம் மட்டுமே வரும் பொஷிசிவ் மைண்ட்டின் தாக்கமே இந்த லயா , அதனால் சண்டையும் போட்டால் விவாதமும் செய்தால். தானாய் மாறி வருவாள்.
இல்லை...? வர வைப்பான் அவள் அவன்.
குறும்பின் மொத்த உருவமாக இருந்து பவனை ஒரு நேரம் ஆட்டி படைத்தவள் இதே லயா தானே,
அனைத்துக்கும் சூத்திரதாரியும் அவனே . அவளின் அனைத்து சேஷ்ட்டையும், பாவங்களையும் ரசிக்கும் கள்வனும் அவனே,
கொஞ்சம் நஞ்சமா ஆட்டமா காட்டினாரு இந்த மன்னவரு ...பண்ணிய குசும்பும் அப்பிடி தானே . இன்றைய காலகட்டத்தில் சந்தேகம் படுவது ஒன்றும் கொலை குத்தம் கிடையாது தான்.
நம்ப லயாம்மா பழமையும் புதுமையும் கலந்த ஒரு பக்கா இண்டியன் மேட், தன்மான சிங்கப்பெண் ஆச்சே ?
அதனால விழுந்த விரிசல் கொஞ்சம் ஆழம் அதிகம்.Wat to do ?...?
பாபி ஸ்வரா தெளிவா தெளிஞ்ச நீரோடை போல இருக்காங்கயா, இப்போ லயா அம்மினிக்கு கூட கொஞ்சம் அவங்களை பார்த்து ஹார்மோன்ஸ் எல்லாம் ஆர்மினியம் வாசிக்க ஆரம்பிச்சு...
பவன் அய்யாவை பார்த்து பழைய அருந்த வாலுத்தனம் எல்லாம் வெளியே எட்டி பாக்க ஆரம்பிச்சிருக்கு.
மனசு வேற மறுபடியும் என்ன என்னவோ நினைக்குது, பண்ணுது ?ம்...? .
இப்பொழுது மூன்று முடிச்சு போட போகும் மகிமையால் இருவருக்கும்
மவுன மொழியில் இருந்து , கிரேட் ஏறி காதல் பேசும் மொழி அரும்பி ஆரம்பம்...
ரம்...பம்...பம்...ஆரம்பம் !
ரம்...பம்...பம்...பேரின்பம் ! தான் ?
பட்... பட்...? ?
இந்த ஜோடி சற்று மாறுபட்ட ஜோடிங்க , தாமரை இலையில் ததும்பும் நீரை போல இவங்க ரெண்டு பேரும்.
வேதாளம் குணம் வந்தால் முருங்கை மரமும் ஏறும்...இல்ல அதே முருங்கை மரத்துக்காய்யை சாம்பாரில் போட்டும் சாப்புடும்...
எப்போ எப்பிடி குணம் மாறாட்டம் ஆகும்'ன்னு தெரியாது எதுவும் நடக்கலாம் காரணம் பவனுக்கு லயாவிடம் ஒரு டீல் உண்டு. அந்த டீல் நடைமுறைக்கு வரும் நேரம் நிறைவேறுமா, இல்லை ...??
லயாவிடமே அதன் முடிவு... பொருத்து, படித்து தெரிந்து கொள்ளுங்கள்?
எல்லாம் அவன் செயல்... ஈசா ?
நேற்று இரவு விழா தோரும், காலை நலுங்கின் போதும்,அவர்கள் மவுன காதல் உங்களுக்கும் புரிய...
திருமண ஜோடிகள் சேர்ந்து இருப்பது,
சுற்றி வருவது போல் தோன்றினாலும், இரு மாப்பிள்ளை சிங்கம் முகத்தில்
சிறு வாட்டம் , பின்னே இருக்காதா,உறவினர் வந்த வண்ணம் இருக்க , நண்பர்கள் வேறு நடுநிசி
ஆகியும் கூடவே இருந்தா...
வயிரு அடுப்பு நெருப்பாக மாறி கடுப்பு ஆகாத மை லாட். அது தான் முகம் கொத்து பரோட்டா மாதிரி இருக்கு ,
நம்ப ஹீரோஸ் மாடர்ன்ஸ் ஆனால் அது ஊரு ஆச்சே சோ அடங்கி வாசி... ? திருமணம் முடியும் வரை அவங்க கூடவே இருந்து வாட்ச் பண்ண சொல்லி பெருசுங்க ஆர்டர்.
பாபி...!?
கையும் , காலும், ஒரு நிலையில் இல்லை பரபரப்பாய் இருந்தான். நிமிடத்துக்கு
ஒரு அணைப்பு, பல வித முத்தங்கள் பரிமாறிக்கொண்டே இருப்பவனால்,
கண் எதிரே அவன் கன்னி இருந்தும் அனைத்துக்கும் தடா,
கர்ண கொடுமை யா,
பாவம் புள்ள,
ஸ்வரா?,
அவனை பற்றி தெரிந்தே வேண்டும்
மென்றே அவன் கைக்கு எட்டும்
தூரத்தில் இருந்தும் கண்டு கொள்ளாது ,
ஆட்டம் காட்டி கொண்டு இருந்தாள்.
தற்போது கல்யாண பெண்ணுக்கே
உரிய கலையோடு, மேலும் வசீகரம்
கூடி ,சும்மா கொழுகொழு, மொழுமொழு வென எடுப்பாய் நேர்த்தியாக எடுத்து
காட்டும் உடை வேறு.
அதுவும் இன்று நலுங்கில் அவனுக்கு மிகவும் பிடித்த தாவணி வேறு
உடுத்தி வரவே, பாபிக்கு சொல்லவும்
வேண்டாம் பித்தம் சற்று கூடி,அவள்
பின்னே பூனைக்குட்டி போல சுற்றி வந்தவன் கையில் அகப்படாமல், வெறுப்பேற்றி கொண்டு இருந்தாள்
ஸ்வரா.
பவன் ? நிலையோ வேறு...
சங்கீத் விழாவில் இருந்தே, லயாவிடம் நிறைய மாற்றம் கண்டான், அவள் முகத்தில் இப்போது நிலை கொண்டு உள்ள வெக்க சிரிப்பின் சாயல், அவள் அருகில் தான் இல்லாத நேரம், அவள் கண்கள் தன்னை நிமிடத்துக்கு ஒரு முறை தேடி அலைப்புறுவதை கண்டு கொண்டான்.
அதுவும் நேற்று இரவு மாப்பிள்ளை அழைப்பு ஊரோடு என்பதால் அழைத்த ஆட்கள் குறைவு. விழாவும் 11'க்கு எல்லாம் முடிந்ததும். மேலே டெர்ரஸ் கார்டனில் டெஸெர்ட் (dessert ) பார்ட்டி ஏற்பாடு ஆனது.
அனைவருடன் அவரவர் ஜோடியோடு சுற்றியும் அமர்ந்து, ஆண்கள் மட்டும் கார்ட்ஸ் ஆடியபடியே புட்டிங் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.பெண்கள் அவர்கள் ஆடுவதை நோட்டம் விட்டு கொண்டே நாளை செய்ய போகும் அலங்காரம் குறித்து பேசினர்,
அதே சமயம் கீழே இருந்து பவனை அவன் அன்னை அழைக்கவே, அருகே லயாவிடம் கண்களால் சொல்லி கொண்டு ஆடிய கார்ட்ஸ், சாப்பிட்ட புட்டிங் பாதியில் வைத்து சென்றவன். உடனே திரும்பியும் விட்டான் ஆனால் வந்ததும் அவன் கண்கள் நிலைகுத்தி நின்று விட்டது கண்ட காட்சி அப்பிடிங்கோ, பயங்கர ஷாக்...! புள்ளைக்கு ?
சற்று முன்னே புட்டிங் வேண்டாம் என்றவளை, விட்டு சாப்பிட மனம் இல்லாது, அத்தனை முறை பவன் கேட்டும் , பிடிவாதமாய் வேண்டாம் என்ற லயா ,
அவன் சென்ற அடுத்த நிமிடமே லயா சுற்றியும் பார்வையை ஓட்ட, எல்லோரும் சாப்பிட, கார்ட்ஸ் விளையாட என அதில் பிஸியாக இருக்கவே...
லயா திருட்டு பூனை ?பவன் வைத்து சென்ற புட்டிங் கப்பில் இருந்து ஒரு ஸ்பூன் நடுக்கும் கையோடு எடுத்து கண்ணை மூடி ருசித்தவள் , யாரும் கவனிக்கும் முன் அவசரமாய் கீழே வைத்ததை ,
உடனே திரும்பியவன் கண்ணை விட்டு தப்ப வில்லை அக்காட்சி. எப்பிடி இருக்கும் அவனுக்கு ? இன்ப அதிர்ச்சியாட...! சற்றும் எதிர் பாராத காட்சி இல்லையா அது அவனுக்கு.
சடன் பிரேக் போட்டு நின்றது அவன் கால்கள். திடீர் சந்தோஷ தாக்குதலில் சிரித்து பொங்கும் கண்களை ?உள்ளிழுத்து, தன்னை சரி செய்து கொண்டான்.
சட்டென பின்னே சென்று மறைந்து
இருந்து கவனித்தான்.
லயா,
அடுத்து சுற்றியும் கண்களால் வட்டம்
இட்ட அவள் விழி, அடுத்த நொடி
அவன் உதடு,கை துடைத்து வைத்து
சென்ற வெள்ளை கைக்குட்டையை , மெதுவாய் எடுத்து மடியில் மறைத்து வைத்தாள்,
சுற்றும் யாரும் கவனிக்காத நேரம். அவள் உதடு துடைப்பது போல மெல்ல முத்தமிட்டு , அவன் வாசம் அதில் நுகர்ந்து , தான் துப்பட்டாவில் மறைத்து கொண்டாள்.
பவனுக்கு வாய் கொள்ளா சிரிப்பு , குஷி ஆகி பாதம் பூமியில் உதைத்து, சிறு குழந்தை போல, "யெஸ் "என தன் இரு
கை அசைத்து வெளிப்படுத்தியவன்,
உடல் பூமியில் பதியாத உணர்வு ,
பறக்கும் நிலையில் இதயம் , அப்பொழுதே அவளை தூக்கி சுற்றி முத்தமிட தோன்றிய ஆசையை அடக்கியவன்.
"அடி கள்ளி தேன் (ஹனி ) இருடி உன்னை...",
தலை கோதி முகம் எங்கும் நகைப்போடு அங்கே இசைக்கும் இசைக்கு ஏற்றார் போல உடலை அடி அசைத்தபடி எதுவும் தெரியாதது போல வந்த பவன், லாயவை நெருங்கி இடித்து அமர்ந்தும் இல்லாமல், பெருமூச்சு விட்டபடி, விழி எடுக்காத பார்வை, குறும்பு சிரிப்போடு , தன் சுண்டு விரலை மெல்ல அவள் உதட்டு அருகே எடுத்து செல்லவே ,
மிரட்சியானால் லயா, கண்ணில் அதிர்ச்சி !பின்னே...?திடிர்னு என்று வந்து, இடித்து அமர்ந்தது இல்லாமல், ஆளை மயக்கும் சிரிப்போடு அதிரடி தாக்குதல் தரவே புருவம் கண்ணும் சுருக்கி முகத்தருகே வரும் விரலையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள்.
அவன் விரலை கெட்டியாக பிடித்துக்கொண்டே சற்று பின் சாய
போன லயா, சாய பிடிமானம் இல்லாது தடுமாறி பின்னோடு ஆ ஆ... வென சத்தமிட்டு விழப்போக சட்டென இடையில் கைகொடுத்து தாங்கி கொண்டான்.
எதிர் பாரத போது இடையில் கை படவும் ஆயிரம் வர்ட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள் லயா, வலது கை தானாக அவன் நெஞ்சில் இடம் பெயரா...
பவன்...
அதே கட்டிபுடி நிலையில் அவள் உதட்டோரம் சிறிது கிரீம் ஒட்டி இருப்பதை சுண்டு விரலால் சுண்டி எடுத்து, தன் உதட்டில் வைத்து ருசித்து,
முசக்குட்டி ? உன் உதடு பட்டு இன்னும் ருசிக்குதேடி இந்த ஸ்வீட் என் ஸ்வீட்டு ?என்றதும் தான் லயாவுக்கு புரிந்தது, தான் வசமாய் மாட்டி கொண்டது.
வெளுவெளுத்து போயி தலை குனிய போனவள், மறைத்த வைத்த கையை வேண்டும் என்றே தான் மறுகையால் பவன் பிடித்து இழுக்கவும் தான். அதிர்ந்து போன லயா கையை வெடுக்கென துப்பட்டாக்குள் இழுத்து கொண்டே பவனை ஒரு படபடப்போடு நிமிர்ந்து பார்த்தது தான் தாமதம்,
இரண்டு புருவமும் மேலும் கீழுமாய் உயர்த்தி, பட்டென கண்சிமிட்டி ,
என்ன... என்ன பதட்டம் என கண் உருட்டி கேட்வனை
திரு திரு வென விழித்து பார்த்ததும் ,
"ஹாஹா"... வென வாய்விட்டு பவன் சிரித்தான் ,
அனைவரும் ஒரு சமயம் அவர்களை திரும்பி பார்க்கவும் , லயா ஒரு அதிர்வோடு அவனை நெட்டி தள்ளி நிறுத்தி, ஒரு சிணுக்களோடு முகம் சுருக்கி பார்த்துவிட்டு சட்டென எழுத்து தம் தம் என்று வேகமாக நடந்து அஷி, சைந்தவி இருக்கும் இடத்துக்கு தலை தெறிப்பது போல ஓடினாள்...
அதை பார்த்து இன்னும் சத்தமாக பவன் சிரிக்கவும்...
ஷ்ரவன் ! என்ன மாம்ஸ்...? முத்தி போச்சா,
பவன்.. "ச்சா நீ வேற பா, லயா நேத்து பாபி சொன்ன ஒரு கடி ஜோக் சொல்லவே சிரிச்சே மச்சான் ,"
ஷ்ரவன், "ம் ம்... நம்பிட்டோம் நம்பிட்டோம், அதுக்கு லயா எதுக்கு ஓடணும் மாமா...? ??நீங்க நடத்துங்க மாம்ஸ்? நக்கலாய்
காலாய்க்கவே,
பவன், "டேய்...? அப்பா, ராசா?
ஏன் டா?..?இப்பிடி ? என் கல்யாணம் முடியும் வரைக்கும் என்ன ஒட்டுறதை விட மாட்டேன்ன்னு நினைக்குறேன்,
யப்பா..." என்ன விட்டுரு டா சாமி உனக்கும் உன் திசைக்கு ஒரு கும்புடு டா..."?
?அவனுக்கே வெக்கம் வர புரூட் சாலட் எடுப்பது போல் அந்த இடத்தை விட்டு நழுவியவன், அதற்க்கு பிறகு லயா
போகும் பாதை யாவும் பார்வையால் விழுங்கி கொண்டே சுற்றி வந்தான் , அவனுக்கும் வேறு எதுவும் செய்ய இயலாத படி , அவனிடம் அகப்படாதவாறு ஒரு கண் அவன் புறம் சுழல விட்டு கொண்டே
ஸ்வரா, அஷி நடுவே கூடி இருந்தாள் லயா.
வெகு நேரம் கழித்து எல்லோரும் அடங்கி படுக்க சென்று விட, படுக்க சென்ற பவனுக்கு ஏனோ இருப்பு கொள்ளவில்லை,
அந்த அர்த்தம் ஜாமத்தில் லயாவிடம் போனிலாவது பேச நினைத்தவனுக்கு , அய்யோ ...ஹோ ? அவன் போன் கையில் இல்லையே ? தொடர் போன் கால்கள் வரவே நேற்று மாலையே புவனாவால் பிடுங்கப்பட்டு நிருவிடம் இருந்தது.
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமும் வரவில்லை, எங்கோ மெல்லிய இசை கேட்கவே ஏழுந்த பவன் திரும்பி பார்த்தால் அருகில் படுத்து இருந்த பாபியையும் காணவில்லை...
Last edited: