• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்

கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)



முகவுரை

அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகத் திருப்பங்களில், அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள் தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றனர். குறைபாடுகளைத் தீர்த்துவிட்டு அதிசய மான. வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண் முன்பே திருச்செயல்களை நிகழ்த்திய வர் காந்திமஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச் சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளத்தை உணர்ந்தவர்; கடல்போன் ற எதிர்ப்புக்களுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய் வதில் சற்றும் தளராதவர். உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர். முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந் தவர். 'நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற அப்பர து வாக்கை மெய்ப்பித்தவர்.

அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள் ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கியமென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை - 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என் றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்த திவ்ய சரிதை எ த் துணை அழகு வாய்ந்ததாய் இருக்கவேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல் வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந் தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின்மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பு பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.

பதிப்பாளர்.
---------
அமரர் கல்கி

எளிய குடும்பத்திலே பிறந்து சுயமுயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், "கல்கி"ஸ்ரீ. ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்களும் ஒருவர்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டுவிட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்தபிறகு, ""நவசக்தி"யில் திரு. வி. க., வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண் டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும் அபிமானத் துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று, கதர்ப்பணியிலும் மது விலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம், ஸ்ரீ. எஸ். எஸ், வாஸ்னுடைய அழைப்புக் கிணங்க, சென்னைக்குச் சென்று, "ஆனந்த விகடன் "ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிகையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோ ரையும் பிரமிக்க வைத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றிலே, "ஆனந்த விகடன் யுகம்" என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ் டித்தார். பின்பு "கல்கி"யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும், ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை 'விகடனுக்கு இணையாக ஆக்கினார், "விகடன் "மூலமும், "கல்கி"முலமும் தமிழ் நாட்டில் மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது.

இருபதாம் வயதில் பிடித்த பேனாவை, ஐம்பத்து மூன்றாம் வயது வரை-அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை.

"சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்பு கிறேன். வாழ்க்கையை ஒரு சிறு மெழுகுவர்த்தியாக நான் கருத வில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்குக் கொடுப்பதற்குமுன், எவ்வளவு பிரகாசமாக எரியவைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்" என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட் ஷா. அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் "கல்கி".

தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப் படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் "' கல்கி '.

தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், - அதையும் ரொம்ப ரொம்ப எளிய தமிழிலே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் "கல்கி". - அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமரிசனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை ; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை.

சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். "சிவகாமியின் சபதம் ", "பொன்னியின் செல்வன் ", "பார்த்திபன் கனவு "முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகுங்கூட தமிழ் மக்களுடைய இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே மக்களின் வாழ்க்கையி லும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத் தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையா கிய காந்தி மகாத்மாவுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடுபட்டார். தூத்துக் குடியில் வ. உ. சி., கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முதுபெரும் எழுத்தாளராகிய வ. ரா., வுக்கும் வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்ன தான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து. சிறந்த பணியாற்றியிருக்கிறார்.

சொல்லாலும் செயலாலும் எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ் நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர்.

ஸ்ரீ ரா. கிருஷ்ண மூர்த்தி மறைந்து விட்டபோதிலும், "கல்கி "தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமரதாரையாக விளங்குவார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. அன்னையும் பிதாவும்


தம்பி ! பள்ளிக்கூடத்தில் நீ சரித்திர பாடங்கள் படிக்கிறாயல்லவா? சரித்திர பாடங்களில், பல தேதிகளை நெட்டுருச் செய்யும்படி உபாத்தியாயர்கள் சொல்கிறார்கள். சரித்திர பாட புத்தகத்தின் கடைசியில் ஐந்து பக்கம் நிறையத் தேதி அநுபந்தம் சேர்த்திருக்கிறது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம் முதல் ஒவ்வொரு வைஸ்ராயும் இந்தியாவுக்கு வந்த தேதியும் போன தேதியும் இரண்டு பக்கங்கள் நிறைய இருக்கின்றன. அவ்வளவு தேதிகளையும் நீ ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிற தல்லவா?

உண்மையில், அந்தத் தேதிகளை யெல்லாம் நீ நெட்டுருச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. புத்தகத்திலே தான் அச்சுப் போட்டிருக்கிறார்களே! வேண்டும்போது எடுத்துப் பார்த்துக் கொள்ளலாமே?

இந்திய சரித்திர பாடத்தில் சுமார் பதினைந்து தேதிகள் உனக்கு ஞாபகம் இருந்தால் போதும். தேதி என்றால், மாதமும் தினமும் கூட அல்ல. சுமாராக வருஷம் தெரிந்திருந்தால் போதும். எந்த நூற்றாண்டு என்பது தெரிந்தாலும் போதும்.

மகான் புத்தர் எந்தக் காலத்தவர் என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அசோகர் காலமும் சந்திரகுப்த விக்ரமாதித்யர் காலமும் தெரிந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், மகேந்திர பல்லவர், ஹர்ஷவர்த்தனர், இராஜ ராஜ சோழர், சங்கரர், இராமானுஜர், அக்பர், சிவாஜி இவர்கள் வாழ்ந்த காலம் உனக்குத் தெரிய வேண்டும்.

மேற்கூறிய தேதிகளுக்குப் பிற் பாடு உனக்கு முக்கியமாகத் தெரிந் திருக்க வேண்டிய தேதி எது தெரியுமா? - சொல்லுகிறேன், கேள்! கேட்டு, மனத்தில் மறக்க முடியாதபடி பதித்து வைத்துக்கொள்!

1869 அக்டோபர் 25 உன் நினைவில் என்றென்றைக்கும் இருக்க வேண்டும்.
அந்தத் தேதியிலே தான் மாந்தருக்குள் தெய்வமான மகாத்மா காந்தி அவதரித்தார்.

தம்பி! நான் சொல்வதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே ! பிறக்கும்போதே காந்திஜி மகாத்மாவாகப் பிறந்து விடவில்லை. உன்னையும் என்னையும் நாட்டிலுள்ள எல்லாரையும் போல் அவரும் பிறந்தபோது சாதாரணக் குழந்தையாகத்தான் பிறந்தார் அப்படிப் பிறந்த குழந்தை மாநிலத்துக்கு ஒரு தலைவராகவும் மனித குலத்துக்கு ஒரு வழிகாட்டியாகவும் பிற் காலத்தில் ஆகப்போகிறது என்று அப்போது யாரும் எண்ண வில்லை; குழந்தையின் பெற்றோர்களும் அவ்விதம் நினைக்கவில்லை.

இந்தியா தேசத்தின் படத்தைப் பார்! குஜராத் எனப்படும் கூர்ஜரத்துக்கு மேலே கத்தியவார் என்று இருக்கிறதல்லவா? இந்தப் பிரதேசத்திலேதான் முன்னொரு சமயம் “ஸ்ரீ கிருஷ்ண பகவான்" வட மதுரை நகரை விட்டு வந்து துவாரகை என்னும் புதிய தலைநகரை அமைத்துக் கொண்டார். எதற்காகத் தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணன் மதுரையின் மன்னராயிருந்தபோது ஒயாமல் பொல்லாத பகைவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டி யிருந்தது. ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு யுத்தம் போதும் போதும் என்று ஆகிவிட்டது. "யுத்தமும் வேண்டாம் ; மதுரை ராஜ்யமும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள், பிரஜைகள், சேனாவீரர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு கத்தியவாருக்கு வந்து விட்டார்.

இப்படிச் செய்வதின் மூலமாகவாவது அந்தப் பகைவர்களின் மன த்திலுள்ள துவேஷம் போகாதா, பகைமை மறையாதா, அவர்கள் நல்லவர்களாகி விட மாட்டார்களா என்று நினைத்தே பகவான் அவ்விதம் செய்தார்.

கத்தியவார் கடற்கரையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகை நகரைக் கட்டிக் கொண்டார். இதனாலே தான் துவாரகாபுரி ஆலயத்திலுள்ள கண்ண பெருமானுக்கு 'ரண சோட் நாதர்' என்ற திருநாமம் வழங்கி வருகிறது. (ரணம் : யுத்தம் ; சோட்: விட்ட ; நாதர் : பெருமான்)

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதே கத்தியவார் பிரதேசத்திலே தான், "யுத்தம் வேண்டாம் ! பகைமை வேண் டாம்!" என்று உபதேசித்த காந்தி மகானும் பிறந்தார். அவர் பிறந்த ஊருக்குப் போர்பந்தர் என்று பெயர். "சுதாமாபுரி" என்ற பழைய பெயரும் அந்தப் பட்டணத்துக்கு உண்டு. "சுதாமா' என்பது குசேலருக்கு இன்னொரு பெயர் என்பது உனக்கு நினைவிருக்கிற தல்லவா?

மகாத்மாவின் பெற்றோர்கள் 'பனியா ” என்று சொல்லப் படும் வைசிய சாதியார். (காந்திஜி தான் சாதி குலப் பிறப் பென்னும் மாயைகளை யெல்லாம் கடந்த மகாத்மா ஆயிற்றே ! ஆகையினால் தான், காந்திஜியின் பெற்றோர் "வைசிய சாதி ' என்று சொன்னேன்.) வைசிய சாதி என்றாலும் காந்திஜியின் முன்னோர்கள் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அல்ல. கத்தியவாரில் அனேக சுதேச சமஸ்தானங்கள் உண்டு. காந்திஜியின் பாட்டனாரும் அவருக்கு முன்னால் மூன்று தலைமுறை யினரும் கத்தியவாரில் உள்ள சமஸ்தான மன்னர்களுக்கு முதன் மந்திரிகளாயிருந்து வந்தார்கள்.

காந்திஜியின் பாட்டனாரான ஸ்ரீ உத்தம் சந்திர காந்தி என்பவர் ஒரு தீர புருஷர். போர்பந்தர் சமஸ்தானத்தில் அவர் திவான் வேலை பார்த்து வந்தபோது அவரைக் கவிழ்த்துவிடச் சிலர் சதி செய்தார்கள். இதை அறிந்த ஸ்ரீ உத்தம சந்திரர் பக்கத்திலுள்ள ஜுனாகாத் சமஸ்தானத்தில் அடைக்கலம் புகுந்தார். ஜூனாகாத்தின் அதிபதியான முஸ்லிம் நவாப்பின் தர்பாரை ஸ்ரீ உத்தம் சந்திரர் அடைந்ததும், நவாப்புக்கு இடது கையினால் சலாம் செய்தாராம். இந்த மரியாதைக் குறைவான செயலுக்குக் காரணம் கேட்டபோது, "என்னுடைய வலது கை ஏற்கெனவே போர்பந்தரின் ஊழியத்துக்கு அர்ப்பணமாகி யிருக்கிறதே!" என்று பதில் சொன்னாராம். இந்தப் பதிலைக் கேட்ட ஜூனாகாத் நவாப், "இவர் எவ்வளவு உத்தமமான மனிதர் ! எப்பேர்ப்பட்ட சத்திய சந்தர்!" என்று எண்ணி மகிழ்ந்தாராம்.

உத்தம சந்திரருக்கு ஆறு புதல்வர்கள், இவர்களில் ஐந்தாவது புதல்வர் கரம் சந்திர காந்தி. பெயரைச் சுருக்கிக் [காபா காந்தி' என்றும் அழைப்பதுண்டு. போர் பந்தர், வங்க நேர், இராஜகோட்டை ஆகிய சமஸ்தானங்களில் ஸ்ரீ காபா காந்தி திவான் வேலை பார்த்தார். கத்தியவாரில் சமஸ்தானங்கள் நூற்றுக் கணக்கில் உண்டு. அவற்றை ஆண்ட மன்னர்களுக்குள்ளேயும், மன்னவர்களின் உறவினர் - இனத்தாருக்கு உள்ளேயும் அடிக்கடி தகராறுகள் ஏற்படும். இந்தத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்காக ”இராஜஸ்தான் கோர்ட் " என்று ஒரு நீதி மன்றம் அந்தக் காலத்தில் இருந்தது. அந்த நீதி மன்றத்தில் ஸ்ரீ காபா காந்தி ஒரு நீதிபதியாகப் பதவி வகித்தார்.

ஸ்ரீ காபா காந்தி உண்மையாளர் ; தைரியமும் தயாளமும் உடையவர் ; பணத்தைப் பெரிதாகக் கருதாதவர். நடுநிலைமை பிறழாத நியாயவான் என்ற புகழ் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் பள்ளிக்கூடத்தில் படித்தது ஐந்தாவது வகுப்பு வரையில் தான். ஆனால் இயற்கை அறிவினாலும் உலக அநுபவத்தினாலும் மிகச் சிக்கலான பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றிருந்தார். நூற்றுக்கணக்கான மனிதர்களை வைத்து நடத்தும் நிர்வாகத் திறமையும் அவருக்கு இருந்தது.

இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தானங்களை மேற்பார்வை செய்யப் பிரிட்டிஷ் சர்க்கார் சென்ற வருஷம் வரையில் ' பொலிடிகல் ஏஜெண்டு' என்னும் உத்தியோகஸ்தர்களை அமர்த்திக் கொண்டு வந்தார்கள். ஒரு சமயம் ஒரு ’பொலிடிகல் ஏஜெண்டு' இராஜ கோட்டை மன்னரைப்பற்றிச் சிறிது அவமரியாதையாகப் பேசினாராம். உடனே ஸ்ரீ காபா காந்தி குறுக்கிட்டு ஆட்சேபித்தாராம். பொலிடிகல் ஏஜெண்ட் துரை அப்பொழுதெல்லாம் சர்வ வல்லமை படைத்திருந்த பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதி யல்லவா? துரைக்குக் கோபம் வந்து விட்டதாம். ஸ்ரீ காபா காந்தி தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னாராம். ஸ்ரீ காபா காந்தி, “முடியாது" என்றாராம். அவரைத் துரை காவலில் வைத்தாராம். அப்படியும் ஸ்ரீ காபா காந்தி மன்னிப்புக் கேட்க இணங்கவில்லையாம். சில மணி நேரத்துக்குப் பிறகு பொலிடிகல் ஏஜெண்ட் அவரை விடுதலை செய்து விட்டாராம்.

தந்தையிடம் இருந்த மேற் கூறிய உத்தம குணங்கள் எல்லாம் புதல்வரிடம் ஒன்றுக்கு ஆயிரம் மடங்காகப் பெருகிப் பிரகாசித்ததை நாம் அறிந்திருக்கிறோம்.

ஸ்ரீ காபா காந்தி மூன்று தடவை கலியாணம் செய்து கொண்டு மூன்று மனைவிகளும் காலமாகி விட்டார்கள். எனவே, நாலாவது முறையாக ஸ்ரீமதி புத்லி பாய் என்னும் கன்னிகையை அவர் மணந்து கொண்டார். இவ்விதம் நாற்பது வயதுக்கு மேல் தம் தந்தை நாலாவது முறை கலியாணம் செய்து கொண்டது மகாத்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை என்பதை அவர் எழுதிய சுய சரிதையிலிருந்து அறிகிறோம்.

ஆனாலும் ஸ்ரீ காபா காந்தி நாலாவது தடவையும் கலியாணம் செய்து கொண்டது பற்றி நீயும் நானும் மகிழ்ச்சி யடைய வேண்டும். இந்தியா தேசமும் இந்த உலகம் முழுவதுமே அதைக் குறித்துச் சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில், ஸ்ரீ காபா காந்தியின் நாலாவது கலியாணத்தின் பயனாகவே மகாத்மா காந்தி இந்த உலகில் அவதரித்தார். ஸ்ரீமதி புத்லி பாயின் நாலாவது கடைக்குட்டிக் குழந்தை ஸ்ரீ மோகன் தாஸ் கரம் சந்த்ர காந்தி.

தமது அன்னையின் சிறந்த குணங்களைப்பற்றி மகாத்மாவே தம்முடைய சுய சரிதத்தில் சொல்லி யிருக்கிறார்.

ஆமாம், தம்பி! மகாத்மா காந்தி தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதியிருக்கிறார். ஆனால் அதற்குச் சுய சரிதம் என்று பெயர் கொடுக்காமல் 'சத்திய சோதனை' என்று பெயர் கொடுத்திருக்கிறார். இந்த அரிய புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியாவிலுள்ள முக்கியமான பாஷைகள் எல்லாவற்றிலும் வெளியாகி யிருக்கிறது. தமிழிலும் வந்திருக்கிறது. நீ சற்றுப் பெரியவன் ஆனதும் அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

பெரிய மகான்களுடைய வாழ்க்கையைப்பற்றி நாளடைவில் கற்பனைக் கதைகள் பல உண்டாகிச் சேர்ந்து விடுவ து வழக்கம். மகாத்மா தம்முடைய சரிதையைத் தாமே எழுதி யிருக்கிறபடியால் அவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் ஏற்பட இடமில்லாமற் போய்விட்டது. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! 1920-ம் வருஷத்தோடு மகாத்மா தமது சுய சரிதத்தை நிறுத்தி விட்டிருக்கிறார். அதற்குப் பிறகு எத்தனை எத்தனை அற்புதச்
அன்னையும் பிதாவும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன ! இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்டு 15௳ வரையில் தமது சரிதத்தை எழுதிப் பூர்த்தி செய்திருக்கக் கூடாதா? அது முடியாதபடி ஒரு கொடும் பாதகன் அவரைக் கொலை செய்து விட்டானே?

கதையை விட்ட இடத்துக்கு மறுபடியும் போகலாம். காந்தி மகான் தமது தாயாரைப் பற்றிச் சொல்லி யிருப்பதை அப்படியே பெயர்த்து எழுதுகிறேன் :-

"அவர் பெரிதும் சமயப்பற்றுக் கொண்டவர். தினசரி தெய்வப் பிரார்த்தனை செய்யாமல் அவர் உணவு கொள்ள மாட் டார். தினந்தோறும் விஷ்ணு கோயிலுக்குச் சென்று வருவார். எனக்கு நினைவு தெரிந்த பின்னர் அவர் ஒரு வருஷமாவது சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கத் தவறியதில்லை. மிகக் கடுமையான நோன்புகளை அவர் மேற்கொண்டு நிறைவேற்றி வந்தார். உடல் நோய் காரணமாகவும் அவர் விரதத்தைக் கைவிடுவதில்லை. ஒரு முறை சாந்திராயண விரதத்தின் போது கடுமையான நோய் வந்தும், அவர் விரதத்தை விடாமல் நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு மூன்று வேளை சேர்ந்தாற்போல் உபவாச மிருத்தல் அவருக்குச் சர்வ சாதாரணம். சாதுர்மாஸ்யத்தில் அவர் தினம் ஒரு முறை தான் உணவு கொள்வார். இது போதாதென்று ஒரு சாதுர்மாஸ்யத்தில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூரண உபவாச மிருந்து வந்தார். மற்றொரு சாதுர் மாஸ்யத்தின் போது தினம் சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை யென்று அவர் விரதம் எடுத்துக்கொண்டார். நானும் மற்றக் குழந்தைகளும் தெருவில் நின்று கொண்டு சூரியன் எப்போது மேகக் கூட்டங்களினின்றும் வெளி வரப் போகிறதென் று காத்துக் கொண்டிருப்போம். மழை காலத்தில் சில தினங்களில் கதிரவன் தரிசனம் அளிக்கக் கருணை செய்வதில்லை யென்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய நாட்களில் சூரியன் அருமையாக வெளிவரும்போது ஓட்டமாக உள்ளே ஓடி அன்னையிடம் தெரிவிப்போம். ஆனால் அவர் ஓடி வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்து விடுவான். ’அதனா லென்ன மோசம்? இன்று நான் சாப்பிடுவ து பகவானுக்கு விருப்பமில்லை !' என்று கூறிக்கொண்டு மலர்ந்த முகத்துடன் மீண்டும் வீட்டு வேலையைக் கவனிக்கத் தொடங்குவார்."
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2. கல்வியும் கல்யாணமும்



தம்பி ! பள்ளிக்கூடத்துப் பரீட்சைகளில் சில சமயம் அதிக 'மார்க்' வாங்கவில்லையே என்று நீ வருத்தப்படுகிறாயல்லவா? ஆனால், அப்படி வருத்தப்படுவது அவசியமில்லை. பள்ளிக்கூடங்களில் எப்போதும் அதிக மார்க் வாங்கிப் பரீட்சையில் தேறுகிறவர்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதிப் பது கிடையாது. மார்க் வாங்காதவர்களும், 'மந்தம்' என்று பெயர் வாங்கியவர்களும் பிற்காலத்தில் அரும் பெரும் காரியங் களைச் சாதித்திருக்கிறார்கள். இதற்கு உதாரண புருஷராக மகாத்மாவே விளங்குகிறார்.

போர்பந்தரில் காந்திஜி ஏழு பிராயம் வரையில் இருந்தார். அந்த ஊரிலிருந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போனார், ஆனால் அதிகமாக ஒன்றும் படித்து விடவில்லை. "அந்தக் காலத் தில் என் அறிவு மிக்க மந்தமாயிருந்தது" என்று காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார்.

காந்திஜிக்கு ஏழு பிராயம் ஆனபோது, அவருடைய தந்தை ஸ்ரீ காபா காந்தி 'இராஜஸ்தான் கோர்ட்'டின் நீதிபதியாகி இராஜகோட்டைக்குக் குடிப் போனார். இராஜகோட்டையிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்திலும் மோகன்தாஸ் காந்தி - கெட்டிக்காரர் ' என்று பெயர் வாங்க வில்லை. படிப்பில் அவருக்கு ருசியே ஏற்பட-வில்லை. பாட புத்தகங்களை வேண்டா வெறுப்பாகப் படித்துத் தொலைப்பார் ; வேறு எந்தப் புத்தகமும் விரும்பிப் படிக்க மாட்டார்.

இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டதைக் காட்டிலும் நாடகம் பார்த்ததின் மூலம் அதிகம் கற்றுக்கொண்டார். மோகன் தாஸ் குழந்தையாயிருந்தபோது பார்த்த நாடகங் களில் "சிரவண பித்ரு பக்தி நாடகம் " என்பது ஒன்று. கண் இழந்த முதியோர்களான தன் பெற்றோர்களைச் சிரவணன் என்பவன் காவடியில் வைத்துத் தூக்கிக்கொண்டு சென்ற காட்சி கரம் சந்திர மோகன்தாஸின் இளம் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விட்டது. "பெற்ற தாய்க்கும் தகப்பனாருக்கும் இப்படி யல்லவா சேவை செய்ய வேண்டும்? ” என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.

அவர் பார்த்த இன்னொரு நாடகம் அரிச்சந்திர நாடகம். அதை எத்தனை தடவை பார்த்தாலும் மோகன் தாஸுக்குச் சலிப்புத் தட்டுவதே இல்லையாம். "அரிச்சந்திரனைப்-போல் ஏன் எல்லோரும் சத்திய சந்தர்களா யிருக்கக் கூடாது? " என்று அடிக்கடி எண்ணமிடுவாராம். அரிச்சந்திரனுடைய கதையை நினைத்து நினைத்து மனமுருகி அழுவாராம். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்களை யெல்லாம் தாமும் அநுபவிக்கவேண்டும் என்ற இலட்சியம் குழந்தை காந்தியின் மனத்தில் குடி கொண்டதாம்.

ஆகா! அந்த இலட்சியம் காந்திஜியின் வாழ்க்கையில் எவ்வளவு நன்றாக நிறைவேறிப் பூர்த்தியடைந்து விட்டது ! அரிச்சந்திரன் சத்தியத்துக்காகச் செய்த தியாகங்களையும் அநுபவித்த கஷ்டங்களையும் விட மகாத்மா செய்த தியாகங்களும் அநுபவித்த கஷ்டங்களும் அதிகமேயல்லவா? கடைசியில் சத்தியத் துக்காக மகாத்மா உயிரையே தியாகம் செய்தும் விட்டாரே !

இவ்விதம் இளம் பிராயத்திலேயே சத்தியத்தில் அழியாத நம்பிக்கை கொண்ட மகாத்மா காந்தி தம் சுயசரிதத்தை எழுதுவதில் சத்தியத்தைப் பூரணமாகக் கடைப் பிடித்திருக்கிறார், பதின்மூன்று வயதில் தமக்குக் கலியாணம் நடந்ததுபற்றி மிக்க
வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.

ஆம், தம்பி ! காந்தி மகானுக்குக் கலியாணம் நடந்தபோது அவருக்கு வயது பதின்மூன்று; அன்னை கஸ்தூரி பாய்க்கும் அப்போது வயது பதின்மூன்றுதான்.

அந்தக் காலத்தில் கலியாணம் நடத்துவதென்றால் மிகவும் சிரமமான காரியமாம். ஆகையால் மோகன் தாஸ்க்கும் அவருடைய தமையனாருக்கும் இன்னொரு சித்தப்பாவின் புதல்வருக்கும் சேர்த்து ஒரே முகூர்த்தத்தில் கலியாணம் நடத்திவிடத் தீர்மானித்தார்களாம். எப்படியிருக்கிறது கதை ! அந்தக் காலத்தில் அந்த நாட்டுச் சம்பிரதாயம் அவ்வாறிருந்தது.

ஆனால் இது விஷயத்தில் காந்தி மகானுடைய கருத்து என்ன வென்பதை நீ நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். தம்பி! ஆண்களுக்கு ஆகட்டும், பெண்களுக்கு ஆகட்டும், இளம் வயதில் கலியாணம் செய்வித்தல் கூடவே கூடாது என்பது மகாத்மாவின் உறுதியான கொள்கை.

இளம் வயதில் தமக்கு மணம் செய்விக்கப்பட்டது பற்றி மகாத்மா பிற்காலத்தில் பச்சாத்தாபப்பட்டார் ; நினைத்து நினைத்து வருந்தினார் ; கலியாணம் செய்து வைத்த தம் தந்தையையும் நொந்து கொண்டார். ஆனால், கலியாணம் நடந்த சமயத்தில் அது பிசகு என்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. கஸ்தூரிபாயிடம் மிக்க அன்பாக இருந்தார். கஸ்தூரிபாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. எழுதவும் படிக்கவும் தமது அருமை மனைவிக்குக் கற்பிக்க விரும்பினார். ஆனால் மனைவியிடம் தாம் கொண்டிருந்த அன்பே படிப்புச் சொல்லிக் கொடுக்கத் தடையாயிருந்தது என்று காந்திஜி எழுதியிருக்கிறார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3. சத்தியம் காத்தது



காந்தி மகாத்மாவுக்குச் சிறு பிராயத்திலேயே சத்தியத்தில் பற்று உண்டாயிற்று என்று சொன்னேனல்லவா? அந்தச் சத்தியப்பற்று அவரைப் பல தீமைகளிலிருந்து காத்தது.

இளம் பிராயத்தில் மோகன் தாஸ் காந்திக்குச் சிநேகிதர்கள் அதிகம் பேர் இல்லை. ஒரே ஒரு சிநேகிதன் கிடைத்தான். ஆனால் அவனுடைய சிநேகம் துஷ்ட சகவாசமாக முடிந்தது.

குஜராத் - கத்தியவார் பிரதேசங்களில் ஜைனர்கள் அதிகம் பேர் உண்டு. ஜைன மதம் ஜீவகாருண்யத்தை வற்புறுத்தும் மதம் அல்லவா? ஆகையால் ஜைனர்கள் புலால் உண்ண மாட் டார்கள். அதைப்போலவே அந்தப் பிரதேசத்து வைஷ்ணவர்களும் புலால் உணவை வெறுத்தார்கள். நமது தமிழ்நாட்டில், புலால் இல்லாமல் தானியம் - கறிகாய் மட்டும் உண்பதைச் 'சைவம்' என்று சொல்கிறோம். குஜராத்திலோ வைஷ்ணவர் கள் தான் 'சைவ' உண வில் வைராக்கியம் உள்ளவர்கள் !

காந்திஜியின் வம்சத்தார் வைராக்கிய சீலமுள்ள வைஷ்ணவர்கள். ஆகையினால் அவர்களுடைய வீட்டில் மாமிச உணவு கிடையாது. அந்தக் காலத்தில் 'புலால் உணவு சாப்பிட்டால் தான் தேகபலம் விருத்தியாகும்' என்று ஒரு தவறான பிரசாரம் குஜராத்தில் பரவி வந்தது. காந்தி மகானுடைய இளம் பிராய நண்பன் அந்தப் பிரசாரத்துக்குப் பலியானவன், காந்திஜிக்கும் அதைப் போதனை செய்தான். ”இங்கிலீஷ்காரனைப் பார் ! அவன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான் ! இதற்குக் காரணம் அவன் மாமிசம் சாப்பிடுவதுதான் ! அதனாலேயே அவன் இந்தியா தேசத்தை அடிமைப்படுத்தி ஆள்கிறான் !" என்று அந்த சிநேகிதன் காந்திஜியிடம் அடிக்கடி சொன்னான். அது உண்மையாயிருக்கலாம் என்று காந்திஜியும் நம்பத் தொடங்கினார். இந்தியர்கள் எல்லாரும் புலால் உண்ணத் தொடங்கிவிட்டால் ஆங்கிலேயரை இந்தியா தேசத்திலிருந்து துரத்தி விடலா மென்று எண்ணினார்.

கடைசியாக ஒருநாள், அந்தச் சிநேகிதன் புலால் உண வுக்கு ஏற்பாடு செய்தான். அவன் கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையில் தனிமையான ஓர் இடத்தில் உட்கார்ந்து இரு வரும் சாப்பிடத் தொடங்கினார்கள். மோகன் தாஸ்க்கு அது பிடிக்கவேயில்லை. புலால் உண வும் அவருக்குப் பிடிக்கவில்லை; பெற்றோர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக அந்தக் காரியம் செய்வதும் பிடிக்கவில்லை.

அன்று இரவெல்லாம் மோகன் தாஸ் நன்றாகத் தூங்கவில்லை. கொஞ்சம் கண்ணயர்ந்தால் அவருடைய வயிற்றுக்கு உள்ளே உயிருள்ள ஆடு ஒன்று இருந்து பரிதாபமாகக் கத்துவதுபோலத் தோன்றுமாம் ! உடனே தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்காருவாராம்! அன்று மாலையில் தாம் செய்த காரியத்தை நினைத்து வருந்துவாராம். பிறகு இந்தியா தேசத்தின் விடுதலைக்காக மாமிசம் சாப்பிடுவது தமது கடமை என்று எண்ணிச் சிறிது தைரியப்படுத்திக் கொள்வாராம்.

இன்னும் இரண்டு மூன்று தடவை இம்மாதிரி முயற்சி நடந்த பிறகு, முடிவாக இந்தக் காரியம் வேண்டாம் என்று மோகன் தாஸ் நிறுத்தி விட்டார். இதற்கு முக்கிய காரணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் இந்தக் காரியம் செய்யவேண்டி யிருக்கிறதே என்ற எண்ணந்தான். மோகன் தாஸ் பொய் சொல்லுவதை வெறுத்தார் ; அதைக் காட்டிலும் பெற்றோர்களிடம் பொய் சொல்லுவதைப் பதின்மடங்கு அதிகமாக வெறுத்தார். இவ்விதம் சத்தியத்தில் அவருடைய பற்றுக் காரணமாக இரகசியமாகப் புலால் உண்ணும் காரியம் நின்றது. தமக்கு வயது வந்து சுதந்திர வாழ்க்கை நடத்தும்போது புலால் உணவைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அச்சமயம் காந்திஜி எண்ணினார். ஆனால் அந்தக் கொள்கையே தவறானது என்று வயது வந்ததும் அறிந்தார். தேக பலத்துக்கோ ஆரோக் யத்துக்கோ மாமிசபோஜனம் அவசியமில்லையென்பது பிற்காலத்தில் மகாத்மாவின் உறுதியான கொள்கை. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்தபோதும் தென்னாப்பிரிக்காவில் பல வருஷம் வாழ்ந்தபோதுங்கூட மகாத்மா 'சாகபட்சணி 'யாகவே இருந்தார். அவ்விதம் சைவ உணவு அருந்தியே மகாத்மா 79 வயது வரையில் திடகாத்திரமாக இருந்தார் அன்றோ?

இன்னொரு விஷயத்தையும் உனக்கு இப்போதே சொல்லி விடுகிறேன், தம்பி ! மகாத்மா காந்தி புலால் உணவை வெறுப்பவர்; அதனால் புலால் உண்பவர்களை யெல்லாம் அவர் வெறுப்பதில்லை. சைவ உணவுதான் நல்ல உணவு -சாத்வீக உணவு ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு என்பது அவருடைய உறுதியான கொள்கை. இது காரணமாக, சைவ உணவு அருந்தாமல் வேறு உணவு அருந்துவோரைக் கீழானவர்கள் என் று மகாத்மா நினைப்பதில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4. அஹிம்சை உதயம்



துஷ்ட சகவாசத்தின் காரணமாக காந்திஜிக்கு இளம் பிராயத்தில் இன்னொரு விபத்து நேர்ந்தது. மற்றொரு நண்பனோடு சேர்ந்து இரகசியமாகச் சுருட்டுக் குடிக்க ஆரம்பித்தார், அதில் சுகம் ஒன்றும் அவர் காணவில்லை. சுருட்டுக் குடிப்பது ஒரு நாகரிகம் என்னும் எண்ணத்தினால் அந்தப் பழக்கம் ஆரம்பமாகிச் சிலகாலம் நடந்தது. சுருட்டு வாங்குவதற்குப் பணம் வேண்டியிருந்தது; கடனும் ஏற்பட்டது. கடைசியாக அவருடைய மூத்த சகோதரர் கையில் அணிந்திருந்த தங்கக் காப்பிலிருந்து ஒரு துண்டு வெட்டி எடுக்கவும் நேர்ந்தது. ஆனால் இப்படிச் செய்த குற்றம் காந்திஜியின் உள்ளத்தை மிகவும் உறுத்திற்று. மன வேதனையைத் தாங்கமுடியவில்லை. கடைசியாக செய்த குற்றம் எல்லாவற்றையும் தகப்பனாரிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது என்று தீர்மானித்தார். நேரில் சொல்லுவதற்குத் துணிச்சல் வரவில்லை. ஆகையால் ஒரு கடிதத்தில் தாம் செய்த குற்றத்தை விவரமாக எழுதி அதற்குத் தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்த தகப்பனாரிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் படுத்திருந்த பலகைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டார். தம்பி ! பிறகு என்ன நடந்தது என்பதை மகாத்மாவே சொல்கிறார். கேள் :-

"அவர் கடிதத்தை முற்றும் படித்தார். படிக்குங் காலையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வழிந்தது. கடிதமும் நனைந்து போயிற்று. ஒருகண நேரம் அவர் கண்ணை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் ; பின்னர் கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். நானும் அழத் தொடங்கினேன். அவரது அளவில்லாத மனவேதனையை உணர்ந்தேன். நான் சித்திரக் கலைஞனாயிருந்தால் அந்தக் காட்சியை இன்று படமாக எழுதிவிடுவேன். இன்னும் என் மனக் கண்ணில் அக் காட்சி அவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறது”.

"அந்த அன்புக் கண்ணீர்த் துளிகளினால் என் இருதயம் சுத்தமாயிற்று ; பாவம் நீங்கிற்று. அத்தகைய அன்பை அனுபவித்தோர் மட்டுமே அதன் இயல்பை உணர்தல் கூடும்”.

"இது எனக்கு அஹிம்சா தர்மத்தில் ஓர் உதாரண பாடமாக இருந்தது. அந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சியில் என் தந்தையாரின் அன்பை மட்டுமே கண்டேன். இன்றைய தினமோ அது சுத்த அஹிம்ஸையே அன்றி வேறில்லை என்பதை அறிந் துள்ளேன். அத்தகைய அஹிம்சா தர்மம் உலகம் அனைத்தையும் தழுவி நிற்பது. தான் தொட்டதை யெல்லாம் பொன்னாக்கி விடும் இயல்பு கொண்டது. அதன் ஆற்றலுக்கு அளவு ஏது?"

"இத்தகைய உன்னதமான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பாக ஏற்பட்டதன்று. அவர் கோபங்கொண்டு கடுஞ்சொல் மொழிவாரென்றும், நெற்றியில் புடைத்துக் கொள்வார் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அவருடைய சாந்தம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. நான் ஒளியாது என் குற்றத்தை ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பதற்கு உரிய பெரியோரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொள்வதும், இனிமேல் குற்றம் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதுமே குற்றத்தைப் போக்கிக்கொள்வதற்குச் சிறந்த பிராயச்சித்தமாகும். நான் எனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பயனாக என்னைப்பற்றி என் தந்தைக்குக் கவலையே இல்லாமல் போயிற்று என்னிடம் அவர் கொண்டிருந்த அன்பும் அளவு கடந்து பெருகிற்று."

இவ்விதம் மகாத்மா இளம் பிராயத்தில் சத்தியத்தில் கொண்ட பற்று பல தீமைகள் அவருக்கு ஏற்படாமல் பாதுகாத்தது மட்டுமல்ல; அந்த சத்தியப் பற்றிலிருந்தே அஹிம்சையின் பெருமையும் அவருக்கு விளங்கலாயிற்று. நாளடைவில் சத்தியமும் அஹிம்சையும் அவருடைய வாழ்க்கையாகிய வண்டிக்கு இரண்டு சக்கரச் சுவடுகளாக அமைந்தன. பிற்காலத்தில் மகாத்மா செய்து முடித்த அரும் பெரும் காரியங்களுக்-கெல்லாம் சத்தியமும் அஹிம்சையுமே அடிப்படையாயிருந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5. பயத்துக்கு மருந்து



மோகன்தாஸ் காந்தி இளம் பிள்ளையா யிருந்தபோது கோவிலுக்குப் போவதுண்டு. ஆனால் கோவிலில் குடிகொண்டிருந்த ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. உண்மையான தெய்வ பக்தியோ சமயப் பற்றே ஆலயங்களில் அவருக்கு ஏற்படவில்லை.

வீட்டு வேலை செய்த ஒரு பெண்மணியிடம் தெய்வம், சமயம் - இவைகளைப் பற்றிய உண்மைகளை மோகன் தாஸ் அறிந்தார். அந்த வேலைக்காரியின் பெயர் அரம்பை. காந்திஜி குழந்தையாயிருந்தபோது அவரை எடுத்து வளர்த்த செவிலித் தாயும் இந்த அரம்பை என்னும் பெண் தெய்வந்தான்.

காந்திஜி குழந்தையா யிருந்த காலத்தில் அவருக்குப் பேய், பிசாசுகளிடம் பயம் அதிகமாம். இதோடு பாம்பு பயமும் திருடர் பயமும் சேர்ந்து கொள்ளுமாம். இருட்டைக் கண்டே பயப்படுவாராம். இருட்டில் அவரால் தூங்க முடியாதாம். கண்ணை மூடினால் ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும் இன்னொரு திசையிலிருந்து பாம்புகளும் மற்றொரு திக்கிலிருந்து திருடர்களும் வருவதாகத் தோன்றுமாம்!

இப்படிப்பட்ட பயத்தைப் போக்குவதற்கு மருந்தாக வேலைக்காரி அரம்பை ஸ்ரீராம நாமத்தின் மகிமையைக் குழந்தை மோகன தாஸ்க்குக் கூறினாள். அதன்படி ஸ்ரீ ராமஜபம் செய்து காந்திஜி பேய் பிசாசு பயத்தை ஒரு மாதிரி போக்கிக் கொண்டார். ஆனால் அத்துடன் ராமநாமத்தின் மகிமை தீர்ந்து போய் விடவில்லை.

"இளம் பிராயத்தில் அந்த உத்தமி அரம்பை விதைத்த விதை வீண் போகவில்லை. இன்றைக்கும் ஸ்ரீ ராமநாமம் எனது அருமருந்தாக இருந்து வருகிறது !" இவ்விதம் மகாத்மா காந்தி 1928-ம் ஆண்டில் எழுதினார். நாளது 1948- ஆண்டில் காந்தி மகானுடைய அந்திம யாத்திரை தொடங்கிய ஜனவரி 30-யன்றும் ஸ்ரீ ராமநாமம் அவருக்கு அருமருந்தாக உதவியது.

பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அந்தப் பாதகன் துப்பாக்கியால் சுட்ட உடனே ’ராம் ராம்’ என்று சொல்லிக் கொண்டு மகாத்மா காந்தி தரையில் சாய்ந்தார். அடுத்த கணமே அந்த மகா பக்தருடைய உயிர் ஸ்ரீராமனுடைய பாதார விந்தங்களை அடைந்தது.

கோடி கோடி ஜனங்கள் ஜனவரி 30- மாலையிலிருந்து பிப்ரவரி 25 வரையில் மகாத்மா காந்தியினிடத்தில் தாங்கள் கொண்ட பக்தியின் காரணத்தினால் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்று ஸ்ரீ ராம நாம பஜனை செய்தார்கள்.

அடாடா ! எங்கிருந்து எங்கே எங்கே வந்து விட்டேன்? தம்பி ! காந்தி மகான் பிறந்த ஊருக்கு மறுபடியும் போகலாம், வா ! மகாத்மாவின் தகப்பனார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாய்க் கிடந்தார் என்று சொன்னேனல்லவா? அப்போது லகா மகராஜ் என்னும் இராமபக்தர் அவர் வீட்டுக்கு வந்து துளசிதாஸ் ஹிந்தி பாஷையில் இயற்றியிருக்கும் இராமாயண கீதங்களைப் பாடினார். பாடிய பிறகு பாட்டுக்குப் பொருளும் கூறினார். அப்போது அவரும் மெய்மறந்தார் ; கேட்டுக் கொண் டிருந்தவர்களும் மெய்மறந்தார்கள். மெய்மறந்து பரவச மானவர்களில் இளம் பிராயத்துக் காந்திஜியும் ஒருவர். இராமாயணத்திலும் இராமரிடத்திலும் மகாத்மா காந்தி கொண்ட அளவிலாத பக்திக்கு அப்போதே விதை போட்டாயிற்று.

ஆனால் மகாத்மாவின் இராம பக்தியானது அவரை மற்ற தெய்வங்களையோ மதங்களையோ வெறுக்கும்படியாகச் செய்ய வில்லை. எல்லா மதங்களும் கடவுளை அடையும் மார்க்கங்கள்தான் என்னும் சமரசக் கொள்கையில் மகாத்மா உறுதி கொண்டவர். இந்தக் கொள்கையின் வித்தும் மகாத்மாவின் இளம் பிராயத்திலேயே அவருடைய மனத்தில் விதைக்கப் பட்டது.

காந்திஜியின் பெற்றோர்கள் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகள் சம்பந்தமாக வேற்றுமை பாராட்டுவதில்லை. சைவ - வைஷ்ணவச் சண்டைகள், தென்கலை - வடகலைச் சண்டைகள் முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். விஷ்ணு கோயிலுக்குப் போவது போலவே சிவன் கோவிலுக்கும் போவார்கள். அவர்கள் வீட்டுக்கு ஜைன சமயப் பெரியோர்கள் அடிக்கடி வருவார்கள்; அவர்களுடன் அமர்ந்து போஜனமும் செய்வார்கள்.

இன்னும், காந்திஜியின் தந்தைக்கு முஸ்லிம் நண்பர்களும் பார்ஸி நண்பர்களும் பலர் உண்டு. அவர்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். மதங்களைப் பற்றிய சம்பாஷணைகள் நடைபெறும். நோய்ப் பட்டிருந்த தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டே மோகன் தாஸ் காந்தி மேற்படி சம்பாஷணைகளைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பார். இதன் பயனாக "எல்லா மதங்களும் கடவுளுக்கு உகந்த மதங்களே!" என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று.

ஆனால் கிறிஸ்துவ மதத்தின் மேல் மட்டும் காந்திஜிக்கு அந்த நாளில் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பள்ளிக்கூடத்துக்கு அருகில் தெரு மூலைகளில் நின்று கொண்டு கிறிஸ்துவப் பாதிரிமார்கள் செய்த பிரசங்கங்கள் தான். ஹிந்து மதத்தையும் ஹிந்து மதத்துத் தெய்வங்களையும் மேற்படி பாதிரிமார்கள் தூஷணை செய்ததைக் காந்திஜியினால் கேட்க முடிய வில்லை இதே காலத்தில் ஒரு ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய துபற்றிக் காந்திஜி கேள்விப்பட்டார். அந்த ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவரானவுடனே மாட்டிறைச்சி தின்னவும் சாராயம் குடிக்கவும் ஐரோப்பியரைப் போல் உடைதரிக்கவும் ஆரம்பித்து விட்டாராம்! அதோடு அந்தப் பிரமுகர் ஹிந்து மதத்தையும் இந்தியா தேசத்தையுமே தூஷிக்கவும் தலைப்பட்டாராம். இதை யெல்லாம் அறிந்ததும், "கிறிஸ்துவ மதமும் ஒரு மதமா? இதற்கு மதம் என்ற பெயரே தகாது !" என்று காந்தி மகாத்மா நினைத்தாராம்.

ஆனால் பிற்காலத்தில் மேற்படி காரியங்களுக் கெல்லாம் கிறிஸ்துவ மதம் பொறுப்பில்லை யென்றும், கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களே காரணம் என்றும் காந்தி மகான் அறிந்து கொண்டார். உண்மையான கிறிஸ்துவ மதம் காந்திஜிக்கு உகந்த மதமாயிற்று. தம்பி! மகாத்மா காந்தியின் மிகச் சிறந்த சிநேகிதர்களில் சிலர் கிறிஸ்துவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்குமே? அமெரிக்கப் பாதிரியாரான ரெவரண்டு ஹோம்ஸ், தீனபந்து ஆண்ட்ரூஸ், பிரஞ்சு தேசத்துப் பெரும் புலவர் ரோமன் ரோலந்து இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவர்கள் தான். ஆனால் இவர்கள் காந்திஜிக்கு எவ்வளவு ஆப்த நண்பர்கள் !

வெவ்வேறு மதங்களைப் பற்றிக் காந்திஜியின் உள்ளம் சிந்தித் துக் கொண்டிருந்த காலத்தில், அற்புதமான தத்துவங்கள் அடங்கிய குஜராத்தி பாஷைப் பாடல் ஒன்று அவருடைய இதயத்தில் குடி கொண்டது. அந்தப் பாட்டின் பொருள் பின் வருமாறு:

“ஒரு குவளை தண்ணீர் கொடுத்தவனுக்கு ஒரு வேளை விருந்து அளிக்க வேண்டும்.
அன்புடன் உன்னை வரவேற்கும் மனிதனை ஆர்வத்தோடு வணங்க வேண்டும்.
ஒரு காசு உனக்குக் கொடுத்தவனுக்கு ஒரு பொன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
உன் உயிரைக் காத்து உதவிய தீரனுக்குத் திரும்ப உன் உயிரை அளிக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும்.

இப்படி யெல்லாம் நல்லோர் உபதேசங்களை மதித்து நடப்பவன் ஒன்றுக்குப் பத்து மடங்கு நன்மை அடைவான்.

ஆனால் உண்மையில் 'சான்றோர்' எனப்படுவோரின் இலட்சணம் மேலே சொல்லப்பட்டவை மட்டும் அல்ல.

அவர்கள் மனித குலம் எல்லாம் ஒன்றென உணர்ந்தவர்கள் ; ஆதலின், அவர்களுக்கு ஒருவன் தீங்கு செய்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நன்மை செய்வார்கள்.
தீமைக்குப் பதில் தீமையை மறந்து நன்மை செய்வதிலே அவர்கள் ஆனந்தம் அடைவார்கள்."

தம்பி! மேலேயுள்ள குஜராத்தி கீதத்தில் கடைசி இரண்டு வரிகள் இளம் பிராயத்துக் காந்திஜியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. அந்த வரிகளில் அடங்கி யிருக்கும் தத்துவமே அவருடைய வாழ்க்கைத் தத்துவமாயிற்று. அதுவே அவரை உலகம் போற்றி வணங்கும் மகாத்மா காந்தி ஆக்கிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6. கடல் பிரயாணம்



மோகன் தாஸின் பதினாறாவது பிராயத்தில் அவருடைய அருமைத் தந்தையார் காலமானார். காலமாவதற்கு முன்பு நீண்ட காலம் அவர் படுத்த படுக்கையாகவே இருக்கும்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் மோகன்தாஸ் பள்ளிக்கூடம் போன நேரம் போக மிச்ச நேரமெல்லாம் தந்தைக்குப் பணி விடை செய்வதிலேயே கழித்தார். தினமும் இரவில் தந்தைக்குக் கால்பிடித்து விடுவார். தந்தை தூங்கியபிறகோ அல்லது அவர் போகச் சொன்ன பிற்பாடோதான் தூங்கச் செல்வார்.

தந்தை இறந்த அன்று இரவு பதினோரு மணி வரையில் மோகன் தாஸ் அவருக்குக் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய சிறிய தகப்பனார் தாம் தந்தைக்குப் பணிவிடை செய்வதாகச் சொல்லி மோகன் தாஸைப் படுக்கப் போகும்படி சொன்னார். அவ்விதமே மோகன் தாஸ் சென்றார். ஆனால் படுத்த சில நிமிஷத்துக்கெல்லாம் வேலைக்காரன் ஓடி வந்து கதவைத் தட்டி, "அப்பாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது ; சீக்கிரம் வாருங்கள்!" என்றான். மோகன்தாஸ் தந்தையிடம் போவதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது. மரணத் தறுவாயில் தந்தையின் பக்கத்தில் தாம் இருக்க வில்லையே என்று காந்திஜியின் மனத்தில் குடி கொண்ட வருத்தம் என்றைக்கும் நீங்கவில்லை.

தந்தை இறந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் மோகன் தாஸ் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார். பிறகு கலாசாலையில் சேர்ந்து படிக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் விரும்பினார்கள். பவநகரில் இருந்த ஸமால்தாஸ் கலாசாலைக்குச் சென்று அதில் சேர்ந்தார். ஆனால் அங்கே அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. ஆசிரியர்களின் உபந்நியாசங்கள் அர்த்தமாகவேயில்லை. முதல் ஆறு மாதம் எப்படியோ கழித்து விட்டு விடுமுறைக்கு வீடு வந்து சேர்ந்தார்.

காந்தி குடும்பத்தாரின் பழைய நண்பர் மாவ்ஜி தவே என்னும் பிராமணர். அவர் சிறந்த அறிவாளி. மோகன் தாஸ் விடுமுறைக்கு வந்திருந்தபோது மாவ்ஜி தவே ஒரு சமயம் அவருடைய வீட்டுக்கு வந்தார். குடும்ப யோக க்ஷேமங்களை விசாரிக்கையில், மோகன் தாஸ் ஸமால் தாஸ் கலாசாலையில் சேர்ந்து படிப்பதைப் பற்றி அறிந்தார். பிறகு அவர் குடும்பத்தின் நன்மையை முன்னிட்டுப் பின்வருமாறு கூறினார்:- "காலம் இப்போது மாறிவிட்டது. தக்க படிப்பும் பட்டமும் இல்லாமல் உங்கள் தந்தையைப்போல் பெரிய உத்தியோகத்துக்கு நீங்கள் ஒருவரும் வரமுடியாது. குடும்பத்தில் இந்தப் பிள்ளை ஒருவன் தான் படிக்கிறான். ஆனால் இவன் கலாசாலையில் படித்து பி. ஏ. பரீட்சை தேறுவதென்றால் அதற்கு நாலு வருஷம் ஆகும். அப்போதும் மாதம் ஐம்பது அறுபது ரூபாய் சம்பளத்துக்குத்தான் தகுதியாவான். பிறகு சட்டம் படிப்பதென்றால் இன்னும் இரண்டு வருஷம் ஆகும். இப்போதே இவனை இங்கிலாந்துக்கு அனுப்பினால் மூன்றே வருஷத்தில் பாரிஸ்டர் பட்டத்துடன் திரும்பி வரலாம். பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று கேள்வி. பாரிஸ்டர் ஆகிவிட்டால், வக்கீல் தொழில் நடத்தினாலும் நடத்தலாம். திவான் முதலிய பெரிய உத்தியோகத்துக்கும் வரலாம். கால தாமதம் செய்ய வேண்டாம். இந்த வருஷமே இவனை இங்கிலாந்துக்கு அனுப்புங்கள்."

மாவ்ஜி தவேயைக் காந்தி குடும்பத்தார் "ஜோஷிஜி ' என்று அழைப்பது வழக்கம். ஜோஷிஜி சொன்ன காரியம் மோகன் தாஸுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. எப்படியாவது கலாசாலையை விட்டால் போதுமென்று அவருக்கு இருந்தது.

ஆனால் மோகன் தாஸின் சகோதரரும் தாயாரும் பெரிதும் கலக்கத்துக்கு உள்ளானார்கள். சகோதரருக்குப் பணத்தைப் பற்றிக் கவலை. அதோடு இவ்வளவு இளம் வயதுச் சிறுவனைத் தனியாக வெளிநாட்டுக்கு அனுப்பலாமா என்று கவலை!
தாயாருக்கோ தன்னுடைய கடைக்குட்டிப் புதல்வனைப் பிரியவே மனம் இல்லை. "நம்முடைய குடும்பத்தில் இப்போது பெரியவர் உன்னுடைய சித்தப்பாதான். அவரைப் பார்த்து யோசனை கேள்!" என் று தாயார் கூறினார்.

மோகன் தாஸின் குடும்பம் அப்போது இராஜகோட்டை யில் இருந்தது. சிறிய தந்தையோ போர்பந்தர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்தார்.

“சித்தப்பாவைப் பார்த்துப் பேசிவிட்டு அப்படியே போர் பந்தர் நிர்வாக அதிகாரியான மிஸ்டர் லெலியையும் பார். சமஸ்தான த்திலிருந்து உன்னுடைய படிப்புக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம் !" என்று சகோதரர் சொன்னார்.

இங்கிலாந்துக்குப் போக வேண்டும் என்று மோகன் தாஸக்கு ஒரே ஆத்திரமா யிருந்தது. ஆகவே, மூன்று நாள் கட்டை வண்டியிலும் ஒரு நாள் ஒட்டகத்தின் மேலும் பிரயாணம் செய்து போர்பந்தரை அடைந்தார்.

ஆனால் போன காரியம் கைகூடவில்லை. "உனக்கு அநுமதி நான் தர முடியாது; உன் னுடைய தாயார் சம்மதித்தால் சுக மாகப் போய் வா ! என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு!" என் று சித்தப்பா கூறினார்.

மிஸ்டர் லெலிக்கு அவர் சிபார்சுக் கடிதம் கொடுக்கவும் மறுத்து விட்டார். "நீயாகவே போய்ப் பார். உன்னுடைய உறவு முறையைச் சொல்லிக்கொள் !" என்றார்.

அவ்விதமே மோகன் தாஸ் துரையைப் பார்க்கச் சென்றார். "முதலில் - பி. ஏ. பரீட்சையில் தேறிவிட்டு அப்புறம் என்னை வந்து பார் !" என்று ஒரே வாக்கியத்தில் சொல்லி அனுப்பி விட்டார் லெலி துரை.

வெறுங்கையுடன் மோகன் தாஸ் இராஜகோட்டைக்குத் திரும்பினார். ஜோஷிஜி மறுபடியும் வந்தார். "பாரிஸ்டர் படிப்புக்காகக் கடன் பட்டாலும் பாதகமில்லை !" என்று வற்புறுத்தினார். மோகன் தாஸ் தமது மனைவியின் நகைகளை விற்றுவிட லாம் என்றார். சகோதரர், "அது கூடாது. நான் எப்படியாவது பணம் தேடிக்கொடுக்கிறேன் !" என்று சொன்னார்.

ஆனால் தாயார் மட்டும் மனம் இளகி அநுமதி கொடுக்கும் வழியாக இல்லை. இங்கிலாந்துக்குப் போகும் இளைஞர்கள் பல வழிகளிலும் கெட்டுப் போகிறார்கள் என்று அவர் கேள்விப் பட்டிருந்தார். இதைப்பற்றி மோகன்தாஸிடம் சொன்ன போது, அவர், "அம்மா! என்னை நம்பமாட்டீர்களா? நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்லும் காரியங்களை நான் எந்த நாளும் செய்ய மாட்டேன் !" என்றார்.

பேசார்ஜி ஸ்வாமி என்னும் ஜைன பிக்ஷ - ஜோஷிஜியைப் போலவே காந்தி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவ ரிடம் சென்று மோகன் தாஸின் அன்னை யோசனை கேட்டார்.

பேசார்ஜி ஸ்வாமியார் மோகன் தாஸை வரவழைத்தார். அன்னையையும், கூடவைத்துக்கொண்டு அவரிடம் மூன்று பிரதிக்ஞைகள் வாங்கிக் கொண்டார். "மதுபானம் செய்வதில்லை ; மாமிச உணவு சாப்பிடுவதில்லை; சிற்றின்பத்தில் ஈடுபடுவதில்லை" என்பவைதான் அந்த மூன்று பிரதிக்ஞைகள். இவ்விதம் புதல்வர் பிரதிக்ஞை செய்து கொடுத்த பிறகு அன்னையின் உள்ளம் தைரியம் அடைந்தது. மோகன் தாஸ் இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைத்தது.

மோகன் தாஸ் தம் இளம் மனைவியையும் சின்னஞ்சிறு குழந்தையையும் பிரிந்து பம்பாய்க்குப் பிரயாணமானார். சகோதரரும் அவரைக் கப்பலில் ஏற்றுவதற்காகக் கூடச் சென்றார். அவர்கள் பம்பாய் சேர்ந்த சமயம் ஜூன் மாதம். ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கொந்தளிப்பு அதிகமிருக்கு மென்றும், சமீபத்திலேதான் ஒரு கப்பல் மூழ்கிவிட்ட தென்றும் சில நண்பர்கள் தெரிவித்தார்கள். மோகன் தாஸின் சகோதரருக்கு மிக்க கவலை ஏற்பட்டது. எனவே, ஒரு நண்பரின் வீட்டில் மோகன் தாஸ் சில மாதம் இருந்துவிட்டு அப்புறம் பிரயாணப் படலாமென்று தீர்மான மாயிற்று. பிரயாணச் செலவுக்கான பணத்தை இன்னொரு உறவினரிடம் கொடுத்துவிட்டு மோகன் தாஸின் தமையனார் இராஜகோட்டைக்குத் திரும்பினார்.

இதற்குள்ளே பம்பாயிலுள்ள பனியா சாதியாரிடையே இந்தச் செய்தி பரவியது. பனியா வகுப்பில் அது வரையில் யாரும் கப்பல் ஏறியதில்லை. எனவே, சாதிக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. மோகன் தாஸை இந்தக் கூட்டத்துக்கு அழைத்து விசாரணை செய்தார்கள். மோகன் தாஸ் சிறிதேனும் அஞ்சாமலும் தயங்காமலும் தாம் இங்கிலாந்து போகப்போவது பற்றிச் சொன்னார். சாதித் தலைவர், “கடற் பிரயாணம் செய்வது நம் மதத்துக்கு விரோதம் அங்கே மது மாமிசம் சாப்பிட நேரிடும். போகக் கூடாது !" என்றார்.

" என் தாயாரிடம் நான் பிரதிக்ஞை செய்து கொடுத்திருக்கிறேன். மத விரோதம் செய்யாமல் என்னால் இங்கிலாந்தில் இருக்க முடியும்!" என்றார் மோகன் தாஸ்.

சாதித் தலைவரும் சாதிக் கூட்டமும் மோகன் தாஸ் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.

"இந்த வாலிபன் பிடிவாதக்காரன். இவனைச் சாதிப்பிரஷ் டேம் செய்திருக்கிறோம். மதவிரோதமாகப் பிரயாணம் செய்யும் இவனுக்கு உதவி செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று சாதிக் கூட்டத்தின் கட்டளை பிறந்தது.

இதனால் மோகன் தாஸ் மனங் கலங்கி விடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்குப் புறப்படுவதில் அவருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. இதைத் தம் சகோதரர் கேள்விப் பட்டால் என்ன செய்வாரோ, என்னமோ? ஆகையால் உடனே புறப்பட்டுவிட விரும்பினார். தமையனார் யாரிடம் பிரயாணச் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுச் சென்றாரோ அவரிடம் போய்க் கேட்டார். அந்த உறவினர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். கொடுத்தால் தாம் சாதிப் பிரஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும். அதற்குத் தாம் தயாராயில்லை யென்று சொல்லிவிட்டார்.

பிறகு மோகன் தாஸ் பம்பாயி லிருந்த இன்னொரு குடும்ப நண்பரைத் தேடிப் பிடித்து விஷயத்தைச் சொன்னார். கப்பல் செலவுக்குப் பணம் கடனாகக் கொடுக்கும்படியும் தமையனாரி டம் அதை வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். அவர் அதற்கு இணங்கிப் பணம் கொடுத்ததுடன் மோகன் தாஸை உற்சாகப்படுத்தினார். அவர் செய்த இந்தக் காரியம் இந்தியாவும் உலகமும் செய்த புண்ணியத்தினால் தான் என்று சொல்ல வேண்டும். மோகன் தாஸுக்கு உதவி செய்த அந்தக் குடும்ப நண்பரை வாழ்த்துவோமாக.

உடனே மோகன் தாஸ் இங்கிலாந்து வாழ்க்கைக்குரிய உடைகளைத் தயாரித்துக் கொண்டார். குறிப்பிட்ட தினத்தில் கப்பல் ஏறினார். அதே கப்பலில் ஜூனாகாத் வக்கீலான ஸ்ரீ திர யம்பக ராய் மஜும்தார் என்பவர் பிரயாணம் செய்தார். மஜம் தாரின் அறையிலேயே மோகன் தாஸம் பிரயாணம் செய்யும் படி நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். மோகன் தாஸைக் கவ னித்துக் கொள்ளும்படியும் மும்தாரைக் கேட்டுக் கொண் டார்கள். செப்டம்பர் 4-ந் தேதி பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7. லண்டன் வாழ்க்கை



கப்பலில் சென்ற போது மோகன் தாஸ் தமது அறையை விட்டு அதிகம் வெளிக் கிளம்புவதில்லை. கப்பலில் கொடுத்த உணவையும் அருந்துவதில்லை. பம்பாயிலிருந்து கொண்டு வந் திருந்த மிட்டாய்களையும் பழங்களையுமே சாப்பிட்டு வந்தார்.

கப்பலில் இருந்த மற்றப் பிரயாணிகள் எல்லாரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் கலந்து பழகும்படி மஜூம்தார் உபதேசித்தது ஒன்றும் பயன்படவில்லை. மோகன் தாஸ் இளம் பிராயத்தில் பெரிய சங்கோசி. வேற்று மனிதர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார். அதோடு ஆங்கிலேயர் பேசுகிற ஆங்கில பாஷையை மோகன் தாஸினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனினும், ஆங்கிலப் பிரயாணி ஒருவர் மோகன் தாஸிடம் எப்படியோ அபிமானம் கொண்டு அவரைப் பேச்சுக்கு இழுத் தார். செங்கடலைத் தாண்டிய பிற்பாடு அந்த ஆங்கிலேயர் மோகன் தாஸ்க்கு, "இனி மாமிச போஜனம் செய்யாமல் சரிப்பட்டு வராது!" என்று போதிக்கத் தொடங்கினார். "இங் கிலாந்து குளிர் மிகுந்த தேசம். அங்கே இந்த விரத மெல்லாம் அனுஷ்டிக்க முடியாது!" என்று எச்சரித்தார்.

எனினும் மோகன் தாஸின் உள்ளம் சிறிதும் சலிக்கவில்லை. அன்னைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வந்தார்.

ஸெளதாம்டன் துறைமுகத்தில் இறங்கி லண்டனுக்குச் சென்றதும் விக்டோரியா ஹோட்டலில் தங்கினார். அங்கே கொடுத்த உணவை அவரால் சாப்பிட முடியவில்லை. ஆனால் செலவு மட்டும் ஏராளமாயிற்று.

லண்டனில் நாலு பேருக்கு மோகன் தாஸ் கரம் சந்திர காந்தி கடிதம் கொண்டு வந்திருந்தார். அவர்கள் டாக்டர் பி. ஜே. மேத்தா, ஸ்ரீ தளபதி ராம் சுக்லா, ராஜா ரஞ்சித்சிங், ஸ்ரீ தாதாபாய் நௌரோஜி ஆகிய பிரமுகர்கள்.

இவர்களில் டாக்டர் மேத்தா என்பவர் மோகன் தாஸை விக்டோரியா ஹோட்டலில் சந்தித்து, "ஹோட்டல் வாசம் உனக்குச் சரிப்பட்டு வராது. ஏதாவது ஓர் ஆங்கிலக் குடும்பத்தில் பணம் கொடுத்துச் சாப்பிடுவதுதான் சௌகரியம். அதற்கு நான் ஏற்பாடு செய்யும் வரையில் என் நண்பர் ஒருவரோடு இரு!" என்று சொன்னார்.

அந்த நண்பரும் மோகன் தாஸுக்கு மாமிசம் சாப்பிடும்படி உபதேசிக்கத் தொடங்கினார். "எழுத்து வாசனை அறியாத தாயாரிடம் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஏன் கட்டிக் கொண்டு அழுகிறாய்? " என்று கேட்டார்.

இதனாலும் மோகன் தாஸின் மன உறுதி தளரவில்லை.

பின்னர், ஆங்கிலக் குடும்பம் ஒன்றில் அவர் வசிப்பதற்கு டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ சுக்லாவும் ஏற்பாடு செய்தார்கள்.

அந்தக் குடும்பத்தின் தலைவியான மூதாட்டி மோகன் தாஸை மிக்க அன்போடு நடத்தினார். ஆயினும், இங்கேயும் உண வு சரிப்பட்டு வரவில்லை. அவர்கள் கொடுத்த இரண்டு ரொட்டித் துண்டங்கள் மோகன் தாஸுக்குப் போதவில்லை. அதிகம் கேட்கவும் சங்கோசமா யிருந்தது.

நல்ல வேளையாக இதற்குள் மோகன் தாஸுக்குக் கால் முளைத்திருந்தது! அதாவது லண்டன் நகரில் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்திருந்தார். சைவ போஜன சாலை ஒன்று அவரு டைய கண்ணில் பட்டது. அதற்குள் நுழைந்தார். "மரக்கறி உண வின் மகிமை" என்ற பெயருடன் ஆசிரியர் ஸால்ட் எழுதிய புத்தகம் ஒன்றும் அந்த ஹோட்டலில் விற்றார்கள். மோகன் தாஸ் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு போய்ப் படித்தார். அதன் பலனாகச் சைவ உணவில் மோகன் தாஸுக்குப் பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாயின. அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமில்லாமல் தம்முடைய சொந்த இஷ்டத்தின் பேரிலேயே சைவ உணவு விரதத்தில் உ றுதி கொண்டார். உணவு பற்றிய இன்னும் பல புத்தகங்கள் படித்து ஆராய்ச்சிகளும் நடத்தத் தொடங்கினார்.

லண்டனுக்குப் போன புதிதில் மோகன் தாஸ் ஆங்கிலேய கனவான்களைப் போல் தோரணையாக வாழ்க்கை நடத்த முயன்றார். நவநாகரிக உடுப்புகள் தைத்துக் கொண்டார். நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று தலையை ஜோராக வாரிக் கொள்வதில் தினம் பத்து நிமிஷம் சென்றது. பிறகு ஆங்கில நடனம் கற்றுக் கொள்ள முயன்றார். நடனப் பயிற்சிக்குத் தாள ஞானம் அவசியமாயிருந்தது. இதற்காக ஆங்கில சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். ஒரு வயலினும் வாங்கினார். இதெல்லாம் சொற்ப காலந்தான் நீடித்திருந்தது. ஆங்கில நாகரிக மோகம் மூன்று மாதத்திற்குள்ளே மோகன் தாஸை விட்டுச் சென்றது.

"இங்கிலாந்தில் நாம் எப்போதும் வாசிக்கப்போகிறோமா? பாரிஸ்டர் படிப்பு முடிந்ததும் தாய்நாடு திரும்ப வேண்டியது தானே? இந்த அயல் நாட்டு நாகரிகம் எல்லாம் நமக்கு என் னத்திற்கு?" என்று எண்ணினார். "நம்முடைய ஒழுக்கத்தினால் நாம் கனவானாக வேண்டுமே தவிர இத்தகைய வெளி வேஷங்களினால் கன வானாவதில் என்ன பயன்?" என்றும் சிந்தனை செய்தார். இத்தனை நாளும் தாம் கொண்டிருந்தது பொய்யான வாழ்க்கை இலட்சியம் என்று தெரிந்து ஆங்கில நாகரிக ஆசையை விட்டுத் தொலைத்தார்.

தம்பி! இதற்கு முன்னர் காந்திஜியின் சிறு பிராயத்துக் குறைபாடுகள் சிலவற்றைச் சொல்லி யிருக்கிறேன். மேலேயும் குறிப்பிட்டிருக்கிறேன்.

”இப்பேர்ப்பட்ட மகானுடைய சரித்திரத்தில் இம்மாதிரி சிறு குறைகளை யெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்?" என்று நீ கருதலாம். அல்லது, "இந்த மாதிரி குறைகள் இருந்தவர் எப்படி மகாத்மா ஆனார்? ” என் று ஆச்சரியப்படலாம்.

இதை யெல்லாம் பற்றி மகாத்மா தமது சுய சரிதத்தில் தாமே எழுதியிருக்கிறார் என்பதை நீ ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரி சுய சரிதம் எழுதும் பிரமுகர்கள் சாதாரணமாகத் தங்களுடைய குறைகளைத் தாங்கள் சொல்ல மாட்டார்கள். தங்களுடைய பெருமையை உயர்த் தக்கூடிய முறையிலேயே சுய சரிதம் எழுதுவார்கள். தங்களுடைய குறைகளைக்கூடக் குணங்களைப் போல் மாற்றி மெருகு கொடுத்து எழுதுவார்கள்.

இதிலே தான் காந்திஜிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண வேண்டும். காந்திஜி உள்ளது உள் ள படி தம்மிடமிருந்த குறைபாடுகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறார். இதுமட்டுமல்ல; இந்தியாவின் மாபெரும் தலைவராகி, ”மகாத்மா" என்று மக்கள் போற்றத் தொடங்கிய பிற்பாடு கூட, தாம் செய்த தவறுகளை வெளிப்படையாக எடுத்துச் சொல்வது அவர் வழக்கம். 1922-ம் ஆண்டில் ஒரு சமயம் - இமாலயத் தவறு செய்து விட்டேன்" என்று மகாத்மா காந்தி கூறியது பலராலும் பல தடவை பல இடங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில், இத்தகைய சத்தியப் பற்றினாலே தான் காந்திஜி உலகம் போற்றும் மகா புருஷர் ஆனார்.

காந்திஜியின் இளம்பிராயக் குறைகளைப் படித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து நீ இன்னொரு விஷயம் அறிய வேண்டும். மகாத்மா பிறக்கும்போதே மகாத்மாவாகப் பிறக்கவில்லை. சிறு பிராயத்தில் உன்னையும் என்னையும் போலவே பல குறைகள் உள்ள சாதாரணச் சிறுவராகவே இருந்தார். ஆயினும் சத்தியத்தின் உறுதியினாலும் மனத்தின் திட சங்கல்பத்தினாலும் இடை விடாத பிரயாசையினாலும் அந்தக் குறைகளை யெல்லாம் போக்கிக்கொண்டு மகாத்மா ஆனார். இது நமக்கெல்லாம் நம்பிக்கை தரவேண்டிய விஷயம். நம்மிடம் உள்ள குறைகளையும் நாம் பிரயாசைப்பட்டுப் போக்கிக் கொள்ளலாம். மகாத்மாவைப் போல் எல்லாரும் அவ்வளவு மகிமையடைய முடியாதுதான். மகாத்மாவைப் போன்ற மகா புருஷர் ஒருவர் உலகத்தை உத்தாரணம் செய்வதற்கு இரண்டாயிரம் வருஷத்துக்கொரு முறையே தோன் றக்கூடும். ஆயினும் பிரயாசைப்பட்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்ளலாம். நம்முடைய மனச்சாட்சியை நாம் திருப்தி செய்து கொள்ளலாம். "குறைகளைப் போக்கிக் கொள்ள நம்மால் முடியாது !" என்று நிராசை யடைந்து மேலும் மேலும் படுகுழியில் இறங்கி முழுகிப் போய்விட வேண்டிய தில்லை. நம்முடைய குறைகளுடன் நாம் போராடி வெற்றி கொள்ளலாம்.

இதற்காகத்தான் மகாத்மாவின் சிறு பிராயத்துக் குறைகளை விட்டுவிடாமல் நான் குறிப்பிட்டேன். முன் அத்தியாயங்களைப் படித்த உன் தாயார், "இதெல்லாம் குழந்தைக்கு எதற்காகச் சொல்கிறீர்கள்? இதனால் நன்மை என்ன?" என்று கேட்டாள். “உண்மையே வடிவான ஒருவரைப்பற்றி எழு தும்போது உண்மையைத்தானே எழுத வேண்டும்? அதனால் நிச்சயமாக நன்மையே விளையும்!" என்று நான் மறுமொழி சொன்னேன். நீ என்ன நினைக்கிறாய், தம்பி! சந்தோஷம். என்னுடன் ஒத்தே நீயும் அபிப்பிராயப் படுகிறா யல்லவா? அப்படியானால் மோகன் தாஸின் இங்கிலாந்து வாழ்க்கையில் இன்னொரு சம்பவத்தையும் கேள்.

அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள் கலியாணமானவர்களா யிருந்தாலும் பிரம்மச்சாரிகளைப் போல் நடிப்பது வழக்கமாம். இப்படி நடிப்பதினால் ஆங்கிலக் குடும்பங்களில் உள்ள கலியாணமாகாத பெண்களுடன் அவர்கள் சல்லாபம் செய்வது சாத்தியமா யிருந்தது. ஆங்கிலேயரில் பலர் விசால நோக்கம் படைத்தவர்கள். தங்கள் பெண்கள் இந்திய இளைஞர்கள் மேல் காதல் கொண்டால் அவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குப் பெற்றோர் ஆட்சேபிப்ப தில்லை. இதை அறிந்து பல இந்திய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளைப்போல் நடித்துப் பொய் வாழ்க்கை நடத்தினார்கள்.

மோகன் தாஸம் இங்கிலாந்தில் வசித்தபோது சில காலம் இத்தகைய பொய் வாழ்க்கை நடத்தினார்., ஆங்கில சமூகத்தில் சாதாரணமாக இளமை மணம் கிடையாது. ஆகையால், பத்தொன்பது வயதேயான மோகன் தாஸ்-க்கு "நான் கலியாணம் ஆனவன். எனக்கு மனைவி இருக்கிறாள்' என்று சொல்லிக் கொள்ள மிகவும் சங்கோசமாயிருந்தது.

ஓர் ஆங்கில மூதாட்டி மோகன் தாஸின் பேரில் அபிமானம் கொண்டார். தம் வீட்டுக்கு அவரை அடிக்கடி அழைத்தார். அந்த வீட்டிலிருந்த கலியாணமாகாத பெண்கள் மோகன் தாஸிடம் கூச்சமின்றிச் சிநேக முறையில் பழகினார்கள்.

ஆனால் ஒரு பெண் விஷயத்தில் மோகன் தாஸுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவளைத் தமக்குக் கலியாணம் செய்துவைக்க அந்த வீட்டு மூதாட்டி எண்ணுகிறாளோ என்று தோன்றியது. இதனால் கவலைக்குள் ஆழ்ந்தார். அவருடைய மனச்சாட்சி அவரை உறுத்தியது. கடைசியாக, மோகன்தாஸ் பின் வரும் கடிதத்தை அந்த அம்மாளுக்கு எழுதினார் :-

"பிரைட்டனில் நாம் முதன் முதலில் சந்தித்த தினத்திலிருந்து தாங்கள் என்னிடம் மிகவும் பிரியம் காட்டி வந்திருக்கிறீர்கள். என்னைத் தங்கள் புதல்வனாகவே எண்ணி என் பொருட்டுக் கவலை எடுத்து வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து வருகிறீர்கள். ஆனால் காரியம் மிஞ்சிப் போவதற்கு முன்னால், தங்களுடைய அன்புக்கு நான் அருகனல்லன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கியபோதே நான் இல்லறத்தான் என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் இந்திய மாணாக்கர்கள் பிரும்மசாரிகள் போல் நடிப்பதை அறிந்து நானும் அவ்வாறு செய்து வந்தேன். என் தவறினை இப்போது உணர்கிறேன். சிறுவனாயிருந்த-போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. இப்போது எனக்கு ஒரு புதல்வனும் உளன். இத்தனை காலம் இந்த விவரங்களைத் தங்களுக்கு அறிவியா திருந்த தன் பொருட்டு என் உள்ளம் வருந்துகிறது. இப்பொழுதேனும் உண்மை சொல்லுவதற்கு இறைவன் எனக்குத் தைரியம் அளித்தது பற்றி மகிழ்ச்சி யடைகிறேன். என்னைத் தாங்கள் மன்னித்து விடுவீர்களா? எனக்குத் தாங்கள் அறிமுகம் செய்து வைத்த இளம் பெண் விஷயத்தில் தகுதியற்ற உரிமை எதையும் நான் எடுத்துக் கொண்டதில்லை யென்று உறுதி கூறுகிறேன். நான் ஏற்கெனவே கலியாணமானவன் என்னும் விஷயம் தங்களுக்குத் தெரியாதாதலின், எங்களிருவருக்கும் விவாகமாக வேண்டுமென் று தாங்கள் விரும்பியது இயல்பே. விஷயம் இதற்கு மேல் போகக் கூடாது என்று உண்மை கூறலானேன்."

"இக்கடிதத்தைப் படித்ததும் தங்கள் அன்புக்கு அபாத்திரனாக நான் நடந்து கொண்டதாகத் தாங்கள் கருதினால் அதற்காகத் தங்கள் மீது வருத்தப்பட மாட்டேன். தாங்கள் இதுகாறும் என் மீது காட்டி வந்த பிரியத்துக்கும், செய்த உதவிக்கும் என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டவனாவேன். இதற்குப் பிறகும் தாங்கள் என்னைப் புறக்கணியாமல், தங்கள் வீட்டுக்கு வரத் தகுதியுள்ளவனாகக் கருதினால் நான் மகிழ்ச்சி யடைவேனென்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் அன்புக்கு இது மற்றோர் அறிகுறி என்று கருதுவதுடன் அந்த அன்புக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவும் முயல்வேன்."

மறு தபாலில் அந்த ஆங்கில மூதாட்டியிடமிருந்து பின் வரும் பதில் வந்தது :

"உண்மைய றிவிக்கும் உமது கடிதம் பெற்றேன். நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தோம். இடி இடி யென்று சிரித்தோம். நீர் கூறும் பொய்மைக் குற்றம் மன்னிக் கற்பாலதே. ஆனால் உண்மை நிலையை எங்களுக்கு அறிவித்தது நலமே யாகும். உமக்கு நான் அனுப்பிய அழைப்பு இதனால் மாறுபடவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக உம்மை எதிர்பார்க்கிறோம். உமது குழந்தை மணத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் கேட்டு மகிழ மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறோம்."

மேற்படி பதில் கிடைத்த பிறகு மோகன் தாஸின் மனத்தில் இருந்த பெரும் பாரம் நீங்கிற்று. இதற்குப் பிறகு சந்தர்ப்பம் நேர்ந்த போதெல்லாம் தமக்கு விவாகம் ஆகிவிட்டது என்ற விவரத்தை அவர் தெரிவித்து விடுவது வழக்கமாம் !
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8. நாஸ்திகத்தில் வெறுப்பு



இங்கிலாந்தில் இரண்டு வருஷ வாசத்துக்குப் பிறகு பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் மோகன் தாஸுக்குச் சிநேகம் ஏற்பட்டது. அவர்கள் கீதை படித்துக் கொண்டிருந்தார்கள். மோகன் தாஸையும் தங்களுடன் படிப்பதற்கு அழைத்தார்கள். அதுவரையில் மோகனர் கீதை படிப்பதில்லை. ஆங்கிலேயர் தூண்டும் வரையில் தாம் பகவத் கீதை படிக்கவில்லையே என்பதை எண்ணி அவர் வெட்கப் பட்டார். பிறகு அவர்களுடனே பகவத் கீதையின் சம்ஸ்கிருத சுலோகங்களையும் ஸர் எட்வின் அர்னால்டின் மொழி பெயர்ப்பையும் படிக்கத் தொடங்கினார். பகவத் கீதை விலை மதிக்க முடியாத ஒரு ஞானப் பொக்கிஷம் என்று அவருக்குத் தோன்றியது. ஞான நூல்களில் பகவத் கீதைக்கு ஒப்பான து வேறொன்றுமில்லை யென்பது மகாத்மா காந்தி பிற்காலத்தில் கொண்ட உறுதியான தீர்மானம்.

காந்திமகான் தினந்தோறும் நடத்தி வந்த மாலைப் பிரார்த் தனைகளில் பகவத் கீதை இரண்டாவது அத்தியாய சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்ததை நீ அறிந்திருப்பாய். அந்த இரண்டாவது அத்தியாய சுலோகங்களில் இரண்டு சுலோகங்களின் கருத்து பின் வருமாறு :

"மனிதன் இந்திரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பதனால் அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலிலிருந்து ஆசை பிறக்கிறது. ஆனச குரோதமாகக் கொழுந்து விட்டெரிகிறது. குரோதத்தினால் சிந்தை மயக்கமும், நினைவுத் தவறுதலும் உண்டாகின்றன. நினைவுத் தவறுதலால் புத்தி நாசமடைகிறது. புத்தி நாசத்தினால் மனிதன் அழிகிறான்.”

மேற்படி கருத்துடைய பகவத்கீதை சுலோகங்களை முதன் முதலில் படித்தபோதே மோகன் தாஸின் இதயத்தில் ஞான தீபத்தை ஏற்றி வைத்தன.

பிறகு அந்தச் சகோதரர்கள் கூறியதன் பேரில் ஸர் எட்வின் அர்னால்டின் "ஆசிய தீபம்" என்ற நூலையும் மோகன் தாஸ் படித்தார். "ஆசிய தீபம் " என்பது புத்த பகவானுடைய சரித்திரம். ஏற்கெனவே கருணையும் தயாளமும் குடிகொண்டிருந்த மோகன் தாஸின் உள்ளத்தை அந்த நூல் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் பெஸண்டு அம்மையார் பிரம்மஞான சங்கத்தை சேர்ந்தார். அவரையும் சங்கத் தலைவரான பிளாவட்ஸ்கி அம்மையையும் பார்ப்பதற்கு மேற்கூறிய சகோதரர்கள் மோகன் தாஸை அழைத்துச் சென்றார்கள். பிரம்மஞான சங்கத்தில் சேரும்படியாகவும் அவருக்குச் சொன்னார்கள். "என்னுடைய சொந்த மதத்தைப் பற்றி இன்னும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லையே ! அப்படித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் எந்த மதச் சங்கத்திலும் சேர நான் விரும்பவில்லை" என்று மோகன்தாஸ் சொல்லி விட்டார். ஆனாலும் பிரம்மஞான சங்கத்தாரின் நூல்களைப் படித்ததனால் பெரும் பயன் அடைந்தார். ஹிந்து மதத்தில் குருட்டு நம்பிக்கைகளே அதிகம் என்று பாதிரிமார்களின் பிரசாரத்தினால் ஏற்பட்டிருந்த தப்பபிப்பிராயம் நீங்கிற்று.

சைவ போஜன சாலையொன்றில் உத்தமரான கிறிஸ்துவர் ஒருவரை மோகன் தாஸ் சந்தித்தார். இராஜ கோட்டையில் வசித்தபோது சில பாதிரிமார்களின் அபத்தப் பிரசாரத்தினால் கிறிஸ்துவ மதத்தைப் பற்றித் தமக்கு ஏற்பட்டிருந்த தாழ் வான அபிப்பிராயத்தை அவரிடம் கூறினார். அந்தக் கிறிஸ்துவ நண்பர், "நான் புலால் உண்பதில்லை ; மதுபானமும் செய்வதில்லை; கிறிஸ்துவ வேதம் மது மாமிசம் அருந்தும்படி கட்டளை யிடவும் இல்லை. நீர் தயவு செய்து பைபிள் வாசிக்க வேண்டும்" என்று கூறி, ஒரு பைபிள் புத்தகமும் வாங்கிக் கொடுத்தார்.

பைபிள் புத்தகத்தில் பழைய ஏற்பாடு மோகன் தாஸுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் புதிய ஏற்பாடும், முக்கியமாக ஏசுநாதர் மலைமேலிருந்து செய்த உபதேசங்களும், மோகன் தாஸின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன. "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர். வல து கன்னத்தில் அடித்தவனுக்கு இடது கன்னத்தையும் காட்டுக. உங்கள் சட்டையை ஒருவன் எடுத்துச் சென்றால் அவனுக்கு உங்கள் போர்வையையும் கொடுங்கள் !" என்னும் கிறிஸ்துவ சமயத்தின் சாரமான உபதேசங்கள் மோகன் தாஸுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தன. பகவத் கீதையின் உட்பொருளும், "ஆசியதீபத்தில் அடங்கிய தத்துவமும், ஏசுநாதரின் உபதேசமும் சாராம்சத்தில் ஒன்றுதான் என் று மோகன் தாஸ் அறிந்தார். மொத்தத்தில், துறவும் தியாகமுமே மேலான சமய வாழ்க்கை என்ற நம் பிக்கை உண்டாயிற்று.

கார்லைல் எழுதிய "வீரரும் வீர பூஜையும்" என்ற நூலில் "வீர தீர்க்கதரிசி " என்னும் அத்தியாயத்தைப் படித்து முகம்மது நபி அவர்களின் கடும் விரத வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொண்டார். எனவே, இஸ்லாம் மதத்தின் பேரிலும் மோகன் தாஸ்க்கு மரியாதை ஏற்பட்டது.

இதே காலத்தில் இங்கிலாந்தில் நாஸ்திகப் பிரசாரம் ஒரு பக்கத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் மோகன தாஸின் மனம் சலிக்கவில்லை.

இங்கிலாந்தில் சார்லஸ் பிராட்லா என்பவர் இந்தியாவின் பிரசித்தி பெற்ற நண்பர். இந்தியாவுக்காக ரொம்பவும் பரிந்து பேசியவர். ஒழுக்கத்திலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்தவர். ஆனால் அவர் "கடவுள் உண்டு" என்னும் நம்பிக்கை தமக்கு இல்லை-யென்றும், சன்மார்க்கமே உண்மையான சமயம் என் றும் சொல்லி வந்தார்.

சார்லஸ் பிராட்லா காலமானபோது அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு லண்டனில் அப்போது வசித்த அவ்வளவு இந்தியர்களும் சென்றிருந்தார்கள். மோகன் தாஸும் சென்றிருந்தார். திரும்பி வரும்போது அவர் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருக்க நேர்ந்தது.

புகைவண்டி நிலையத்தில் ஏகக் கூட்டமாயிருந்தது. கூட் டத்திலிருந்த நாஸ்திகர் ஒருவர் அங்கு நின்ற ஒரு கிறிஸ் துவப் பாதிரியாரை வீண் வம்புக்கு இழுத்தார்.

“ நல்லது ஐயா, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?" என்று அவர் கேட்டார்.

"ஆம், நம்புகிறேன்" என்று அந்த உத்தமப் பாதிரியார் சாந்தமான குரலில் பதில் சொன்னார்.

"அப்படியானால், தயவு செய்து சொல்லுங்கள். தங்கள் கடவுள் எவ்வளவு பெரியவர்? அவர் எங்கே இருக்கிறார்?"

"நமக்கு அறியுந் திறன் உண்டானால், நம் இருவரின் இருதயங்களிலும் அவர் இருக்கிறார்" என்றார் பாதிரியார்.

"ஓ! இதுதானே வேண்டாம் என்கிறேன்? என்னைக் குழந்தை என் று நினைத்துக் கொண்டீர்களா?" என்று அந்த நாஸ்திக வீரர் கூறிவிட்டுப் பெரும் வெற்றி அடைந்தவரைப் போல் சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தார்.

கிறிஸ்தவப் பாதிரியாரோ அடக்கத்தை அணிகலனாகப் பூண்டு மௌனம் சாதித்தார்.

இயற்கையிலேயே பண்பாடு பெற்ற மோகன் தாஸின் இளம் உள்ளம் மேற்படி வாக்குவாதத்தினால் நாஸ்திகத்தின் பேரில் அதிகமான வெறுப்புக் கொண்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
9. பாரிஸ்டர் ஆனார்



பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.

பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு ஒரு மாணவன் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யவேண்டும். அவை என்ன வென்று சொல்லட்டுமா? தம்பி ! (1) மாணாக்கர்களும் பாரிஸ்டர் - நீதிபதிகளுமாகச் சேர்ந்து உட்கார்ந்து பலமுறை விருந்து சாப்பிட்டாக வேண்டும். (2) குறிப்பிட்ட சில முக்கிய பரீட்சைகளில் மட்டும் தேறவேண்டும்.

விருந்து சாப்பிடுவது என்னத்திற்கு என்று நீ அறிய விரும்பலாம். முற்காலத்தில் சட்ட மாணாக்கர்களின் தொகை மிகக் குறைவாயிருந்தபோது பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் சட்ட மாணாக்கர்களும் கலந்து பழகுவதற்காகவும் சட்ட விஷயங்களைப் பற்றிச் சர்ச்சைகள் செய்வதற்காகவும் இந்த விருந்துகள் ஏற்படுத்தினார்களாம். இப்போது மாணாக்கர்களின் தொகை மிக அதிகம். பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மாணவர்களுடன் அவர்கள் பேசுவதற்கே வசதி இராது. எனவே, இந்த விருந்துகள் ஏற்படுத்திய நோக்கம் இப்போது நிறைவேறுவதேயில்லையாம். ஆனாலும் சம்பிரதாயத்தை மட்டும் விடாமல் அனுஷ்டித்து வருகிறார்களாம்.

தம்பி! இந்தியா தேசத்திலே தான் நாம் பழைய சம்பிரதாயங்களை அதிகமாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்று சாதாரணமாய் நினைக்கிறோமல்லவா? ஆங்கிலேயர் நம்மை விடப் பழைய சம்பிரதாயங்களில் அதிகப் பற்று உள்ளவர்கள், நம்மை விட அதிகமாக ஆங்கிலேயர் குருட்டு நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 200 அங்கத்தினர்தான் இருந்தார்களாம். ஆகையால் 200 ஆசனங்கள் மட் டும் பார்லிமெண்டில் போடப்பட்டிருந்ததாம். இப்போது 650 அங்கத்தினர்கள் இருந்தபோதிலும் பழைய சம்பிரதாயப்படி 200 ஆசனங்கள் தான் இருக்கின்றனவாம். முன்னால் வந்தவர்கள் தான் ஆசனத்தில் உட்காரலாம். மற்றவர்கள் பின்னால் நிற்கவேண்டியதுதான் ! எப்படியிருக்கிறது கதை ! பாரிஸ்டர் ஆவதற்காக விருந்துகள் நடக்கும் விஷயமும் இப்படிப்பட்ட சம்பிரதாயந்தான்.

பாரிஸ்டர் விருந்துகள் மூன்று மாதத்துக்கு இருபத்துநாலு நடைபெறும். இவற்றில் குறைந்த பட்சம் ஆறு விருந்துகளுக்கு மாணவர்கள் கட்டாயம் போகவேண்டும். இம்மாதிரி மூன்று வருஷ காலம் விருந்துகளுக்குப் போய்த் தீரவேண்டும்.

விருந்து என்றால், இலவசச் சாப்பாடு அல்ல. இரண்டு அல்லது மூன்று ரூபாய் ஒவ்வொரு மாணாக்கனும் கொடுக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் சாப்பிடுவது கட்டாயம் அல்ல ; சும்மா உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம். பொதுவாக விருந்தில் நல்ல உணவு வகைகளும் மதுபான வகைகளும் கொடுக்கப்பட்ட படியால் மாணவர்கள் ஒரு கை பார்த்து விடுவார்களாம் ! மோகன் தாஸுக்கோ அவருடைய விரதம் இருந்தது. புலால் கலந்த உணவும் மதுபானமும் அவருக்கு உதவா. முதலிலெல்லாம் மோகன்தாஸ் சும்மா உட்கார்ந்து பார்த்திருந்து-விட்டுத் திரும்பினார். எனவே அவருடைய பங்கும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதற்காக மற்ற மாணவர் கோஷ்டிகள் தங்களுடன் சேர்ந்து உட்காரும்படி மோகன் தாஸை வற்புறுத்தி அழைக்கும்படி ஏற்பட்டது. அப்பொழுதல்லாம் விருந்துகளில் மோகன்தாஸ்க்கு ஏகக் கிராக்கி !

கொஞ்ச காலத்துக்குப் பிறகு மோகன் தாஸுக்குத் தைரியம் பிறந்து, பாரிஸ்டர் - நீதிபதிகளுக்காகத் தனியாகக் கொடுக்கப்பட்டு வந்த பழங்களையும் கறிவகைகளையும் தமக்கும் கொடுக்க வேண்டுமென்று கேட்டு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டாராம்.

'சாப்பாட்டு ராமன்' என்று நம் ஊரில் வேடிக்கையாகச் சொல்கிறோமல்லவா? இதுபோலவே இங்கிலாந்தில் சாதாரணமாய்ச் ' சாப்பாட்டு பாரிஸ்டர்' என்று சொல்லுவதுண்டாம்.

விருந்து விஷயம் இப்படியிருக்க ; பரீட்சை சமாசாரம் என்ன வென்று கேள். இரண்டே இரண்டு விஷயம் பற்றிய பரீட்சைகள் நடக்கும். ஒன்று ரோமன் சட்டம் ; இன்னொன்று ஆங்கில நாட்டின் பழமைச் சட்டம். இவற்றில் தனித் தனிப் பகுதிகளுக்குப் பரீட்சைக்குப் போகலாம். பரீட்சைகளுக்குப் பாடபுத்தகங்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் படிப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதம் இலேசாகக் குறிப்புகளைப் படித்துவிட்டுப் பரீட்சைகளில் தேறிவிடலாம். பரீட்சைக் கேள்விகள் மிகவும் சுலபமானவை. பரீட்சைப் பரிசோதகர்களோ தாராள மனம் உள்ளவர்கள். ஆகையால் பரீட்சைக்கு எழுதுகிறவர்களில் 100-க்கு 95 பேர் முதல் 99 பேர் வரையில் தேறிவிடுவார்-களாம்!

இப்படி இங்கிலாந்தில் பரீட்சைகளைச் சுலபமாய் வைத்திருந்தார்கள் ; இதனாலே தான் படிப்பு முடிந்ததும் ஆங்கில இளைஞர்கள் பல அரிய காரியங்களைச் சாதிப்பதற்கு முடிந்தது.

நம்முடைய நாட்டிலோ, பரீட்சைகளை எவ்வளவு கஷ்ட மாகச் செய்யலாமோ அவ்வளவு கஷ்டமாகச் செய்து வைத்தார்கள்! இதனால் பரீட்சைகளில் தேறி ஒரு மாணாக்கன் வெளியே வருவதற்குள் அவனுடைய அறிவின் சக்தியெல்லாம் செலவழிந்துபோய் உடலும் அறிவும் சோர்ந்து விடுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுங்கூட இன்னமும் அத்தகைய பரீட்சைகளையே நமது நாட்டில் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் உன்னிடம் சொல்வதில் பயன் என்ன? பரீட்சைகள் கஷ்டமாயிருக்கவேண்டும் என்று நீயா சொல்லுகிறாய்? போகட்டும் !

பாரிஸ்டர் பட்டத்துக்குரிய பரீட்சைகள் இவ்வளவு சுலபமாக இருந்தும் மோகன் தாஸ் அவற்றைக் கூடியவரையில் கஷ்டமாக்கிக்கொள்ள முயன்றார்! குறிப்பிட்ட பாட புத்தகங்களை யெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் படித்தார் ! ரோமன் சட் டம், ஆங்கிலச் சட்டம் எல்லாம் படித்தார்.

இவ்வளவு படித்தும் நேரம் பாக்கியிருந்தது. வீண் பொழுது போக்க மனமின்றி லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் போகத் தீர்மானித்தார். அந்தப் பரீட்சைக்குப் பழைய லத்தீன் பாஷையும், புதிய ஐரோப்பிய பாஷை யொன் றும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! லத்தீன் பாஷை பாரிஸ்டர் வேலைக்கு மிகவும் பயன்படும் என்று மோகன் தாஸ் கேள்விப்பட்டார் ; எனவே லத்தீன் படிக்கத் தொடங்கினார். ஆனால் முதல் தடவை பரீட்சைக்குப் போனதில் லத்தீன் பாஷையில் தேறவில்லை. இன்னும் அதிகப் பிடிவாதத்துடன் படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு அனுசரணையாக வாழ்க்கை முறையை மேலும் எளியதாக்கிக் கொண்டார். எண்ணெய் அடுப்பு ஒன்று வாங்கித் தினம் காலையில் அவரே உணவு தயார் செய்து கொண்டார். காலை உணவு ஓட் தானியக் கூழும் கோக்கோவுந்தான். மாலையில் மீண்டும் அறையிலேயே ரொட்டியும் கோக்கோவும் தயாரித்துச் சாப்பிட்டார். மத்தியான த் தில் மட்டும் வெளியில் சைவ போஜன சாலை ஒன்றில் சாப்பிட் டார். இவ்விதம் வாழ்வு முறையை எளியதாக்கிக் கொண்ட காரணத்தினால், பணமும் மிச்சமாயிற்று ; படிப்பதற்குச் சாவகாசமும் அதிகம் கிடைத்தது. தினமும் ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் காலட்சேபம் நடந்தது. மாதம் ஐந்து பவுன் மிச்சமாயிற்று. கடைசியில், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் (லத்தீன் பாஷை உள்படத்) தேறிவிட்டார் !

தம்பி ! லண்டனில் மேற்கண்டவாறு எளிய வாழ்க்கை நடத்தியது மோகன் தாஸுக்குக் கஷ்டமாயிருக்கவில்லையாம்; சந்தோஷமாகவே இருந்ததாம். இதைப் பற்றிக் காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருப்பதைக் கேள் :-

“எளிய வாழ்வு முறையைக் கைக்கொண்டதால் என் வாழ்க்கை சந்தோஷமற்றதாயிற்று என்று யாரும் எண்ணவேண் டாம். அதற்கு மாறாக இந்த மாறுதல் மூலம் என் அகநிலைமையும் புற நிலைமையும் ஒற்றுமைப் பட்டதைக் கண்டேன். ஆகவே புதிய வாழ்க்கை உண்மையோடு ஒட்டிய வாழ்க்கையாயிற்று. இதை நான் உணர்ந்தபோது என் ஆத்மா (எல்லையற்ற) ஆனந்த சாகரத்தில் மிதந்தது."

இவ்வாறு மோகன்தாஸ் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் பாரிஸ்டர் பரீட்சையிலும் தேறுவதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு அதே சமயத்தில் தமக்குத் தாமே ஆத்ம பரீட்சைகளும் நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் வெற்றியடைந்து வந்தார்.

மூன்று வருஷ காலம் லண்டனில் வசித்த பிறகு கடைசி யில் 1891-ம் வருஷம் ஜூன்மீ 10௳ மோகன்தாஸ் காந்தி பாரிஸ்டர் ஆனார். மறுநாள் 11௳ இந்தியாவின் ஹைக்கோர்ட்டு களில் வக்கீல் தொழில் நடத்தும் உரிமை பெற்றார். பிறகு ஒரு தினங்கூட இங்கிலாந்தில் அவர் தாமதிக்கவில்லை. ஜூன் 12௳ யன்றே இந்தியாவுக்குப் பிரயாணமானார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top