- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
முகவுரை
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
முகவுரை
அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகத் திருப்பங்களில், அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள் தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றனர். குறைபாடுகளைத் தீர்த்துவிட்டு அதிசய மான. வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண் முன்பே திருச்செயல்களை நிகழ்த்திய வர் காந்திமஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச் சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளத்தை உணர்ந்தவர்; கடல்போன் ற எதிர்ப்புக்களுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய் வதில் சற்றும் தளராதவர். உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர். முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந் தவர். 'நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற அப்பர து வாக்கை மெய்ப்பித்தவர்.
அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள் ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கியமென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை - 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என் றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்த திவ்ய சரிதை எ த் துணை அழகு வாய்ந்ததாய் இருக்கவேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல் வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந் தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின்மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பு பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.
பதிப்பாளர்.
---------
அமரர் கல்கி
எளிய குடும்பத்திலே பிறந்து சுயமுயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், "கல்கி"ஸ்ரீ. ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்களும் ஒருவர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டுவிட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்தபிறகு, ""நவசக்தி"யில் திரு. வி. க., வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண் டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும் அபிமானத் துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று, கதர்ப்பணியிலும் மது விலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம், ஸ்ரீ. எஸ். எஸ், வாஸ்னுடைய அழைப்புக் கிணங்க, சென்னைக்குச் சென்று, "ஆனந்த விகடன் "ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிகையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோ ரையும் பிரமிக்க வைத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றிலே, "ஆனந்த விகடன் யுகம்" என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ் டித்தார். பின்பு "கல்கி"யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும், ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை 'விகடனுக்கு இணையாக ஆக்கினார், "விகடன் "மூலமும், "கல்கி"முலமும் தமிழ் நாட்டில் மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது.
இருபதாம் வயதில் பிடித்த பேனாவை, ஐம்பத்து மூன்றாம் வயது வரை-அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை.
"சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்பு கிறேன். வாழ்க்கையை ஒரு சிறு மெழுகுவர்த்தியாக நான் கருத வில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்குக் கொடுப்பதற்குமுன், எவ்வளவு பிரகாசமாக எரியவைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்" என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட் ஷா. அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் "கல்கி".
தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப் படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் "' கல்கி '.
தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், - அதையும் ரொம்ப ரொம்ப எளிய தமிழிலே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் "கல்கி". - அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமரிசனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை ; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை.
சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். "சிவகாமியின் சபதம் ", "பொன்னியின் செல்வன் ", "பார்த்திபன் கனவு "முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகுங்கூட தமிழ் மக்களுடைய இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.
மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே மக்களின் வாழ்க்கையி லும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத் தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையா கிய காந்தி மகாத்மாவுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடுபட்டார். தூத்துக் குடியில் வ. உ. சி., கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முதுபெரும் எழுத்தாளராகிய வ. ரா., வுக்கும் வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்ன தான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து. சிறந்த பணியாற்றியிருக்கிறார்.
சொல்லாலும் செயலாலும் எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ் நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர்.
ஸ்ரீ ரா. கிருஷ்ண மூர்த்தி மறைந்து விட்டபோதிலும், "கல்கி "தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமரதாரையாக விளங்குவார்.