- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
பதினெட்டுப் புராணங்களில் ஐந்தாவதாக உள்ள பாகவத புராணம் வைணவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியா முழுவதும் தனித் தனியாகவும், கூட்டமாகவும் இப்புராணத்தைப் படிக்கின்றனர். கிருஷ்ணன் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இப்புராணம். இப்புராணத்தின் தலையாய சிறப்பு, பக்திக்கு முதலிடம் கொடுப்பதுதான்.
வேதவியாசர் பாரதத்தையும், ஏனைய புராணங்களையும் எழுதிய பிறகுக.ட மனத்தில் அமைதி யில்லாமல் இருந்தார் என்றும், இப்புராணத்தை எழுதிய பிறகே மனநிறைவு பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. வேறு புராணங்களில் காணப்படாத அளவுக்கு பக்திக்கு பாகவத புராணம் இடம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், பரத கண்டத்திலேயே மிகப் பழங்காலத் திலேயே பக்திக்கு முதலிடம் கொடுத்து வளர்த்த பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு சொல்ல ஒரு முக்கியமான காரணம் உண்டு. பாகவத புராணத்தின் முதல் அத்தியாயத்தின் 48வது பாடல் சொல்லும் கருத்தையும், அதற்கு முன்புள்ள சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.
ஒருமுறை நாரதர் பிருந்தாவனம் செல்கிறார். அங்கே வயது முதிர்ந்த இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்த்தவுடன், இவர்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் நாரதருக்கு வருகிறது. அவர்களிடம் சென்று, நீங்கள் யார்? உங்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன் என்று கேட்கிறார் நாரதர். மிகவும் வயது முதிர்ந்து கிழடு தட்டிய அந்த இரு பெண்களுள் ஒருத்தி நாரதரைப் பார்த்து பின்வருமாறு பேசுகிறார் நீங்கள் சொல்வது சரிதான். என் பெயர் பக்தி. இவர் பெயர் வைராக்கியம். நாங்கள் இருவரும் திராவிடத்தில் (தமிழகத்தில்) பிறந்து வளர்ந்தோம். அங்கே அழகும் இளமையும் உள்ளவர்களாக இருந்தோம். நாளாவட்டத்தில் அங்கிருந்து கர்நாடகத் தில் புகுந்தோம். அங்கே எங்கள் இளமைக் கோலம் குறையத் தொடங்கியது. பிறகு மகாராஷ்டிரம் வந்தோம். அங்கே முதுமை தொடங்கியது. பிறகு கூர் நகரத்திற்கு வந்தோம். இங்கு இளமை முழுவதும் அழிந்து அழகு கெட்டு முதுமை தட்டிய நிலையில் உள்ளோம்.
பாகவதத்தில் இந்தப் பாடல் மூலம், பக்தி தோன்றி வளர்ந்ததும், மிடுக்குடன் இளமைப் பொலிவுடன் திகழ்ந்ததும் தமிழகத்தில்தான் என்பதை இப்புராணம் ஏற்றுக் கொள்வதைக் காணலாம். அதனால் ஆராய்ச்சியாளர்கள் பாகவத புராணத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் அதிகத் தொடர்பு உண்டு என்று கருதுகின்றனர். பரம்பொருளின் வடிவாக இருந்த கிருஷ்ணனிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் கொண்டு வாழ்ந்த சிறப்பை மிகுதியாகக் கூறுவதே பாகவத புராணத்தின் தனி அழகாகும். வேதங்கள் பரப்பிரம்மத்தை வடிவற்ற, உருவற்ற எதனோடும் தொடர்புபடாத தனித்துவம் உடையது என்று கூறுகின்றன. அது அனைத்தும் அறியும் பேராற்றல் என்றே அவை பேசின. வாழும் உயிர்களுக்குப் பரப்பிரம்மம் தொடர்பில்லாத தனிப் பொருளாக இருந்த நிலைமை போகத் தொடர்புடைய பொருளாகக் காணத் தொடங்கியது. பேராற்றல் வடிவமான இப் பரப்பிரம்மத்திடம் இருந்துதான் அனைத்தும் உதயமாகின்றன. உயிர்கள் இயங்குவதற் குரிய ஆற்றலும் அதனிடமிருந்தே இயங்குகிறது. இயக்கமற்ற ஜடப் பொருளிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. இந்தப் புராணத்தில், இந்தப் பேராற்றல் வாசுதேவன் என்ற பெயருடன் பேசப்படுகிறது. இந்தப் பேராற்றல் எங்கும் நிறைந்ததாய், எல்லாம் அறிந்ததாய், என்றுமுள்ளதாய்க் காட்சி அளிக்கிறது.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் தானே ஈஸ்வரன் என்றும், அண்டங்களைப் படைத்து, காத்து, அழிக்கும் தலைவன் என்றும் கூறுகிறார். தம்பால் அடைக்கலம் என்று முழு நம்பிக்கையுடன், பேரன்புடன் அணுகும் மனிதர்களின் குற்றங் குறைகளை மன்னித்து ஆட்கொள்பவன் அவனே ஆவான்.
பரப்பிரம்மம் நிர்க்குணமாய், வடிவற்றதாய் விளங்கி னாலும், ஈஸ்வரனாக இறங்கி வருகின்ற நிலையில் எல்லையற்ற ஆனந்த வடிவினனாய், அண்டத்தை இயக்கும் ஆற்றலின் இடையே தானே இயக்குகிறோம் என்ற நினைவுடன் தொழிற்படுகிறது. சாக்தர்கள் உண்மையான பாகவதம் இப்புராணம் அன்று, தேவி பாகவதமே உண்மையானது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் தேவி பகவதியின் தோற்றம், வரலாறு ஆகியவற்றைக் கூறும் காளிகா புராணமே உண்மை யான பாகவதம் என்று கருதுகின்றனர். இந்த இரு கட்சிக்காரர்கள் கூற்றுக்களை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. பாகவத புராணத்தில் தேவி பாகவதம் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆதி சங்கரர் பாடிய கோவிந்தா அஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது.
பாகவத புராணம் 12 ஸ்காந்தங்களையும், 335 அத்தியாயங்களையும், 18,000 பாடல்களையும் உடையது. பாகவத புராணத்தின் 12 ஸ்காந்தங்களில் பத்தாவது ஸ்காந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு வளர்ப்பு அவனுடைய லீலைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பதினொன்றாவது ஸ்காந்தம் யாதவ குலத்தின் அழிவு, கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் ஆகியவற்றையும் பேசுகிறது.
பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்தவை இருபத்தி ஒன்று எனவும், இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம் என்றும், மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது.
பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்துதான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன.
நாம் அறிந்த பத்து அவதாரங்களை இடை இடையே சேர்த்துக் கொண்டு 22 அவதாரங்களை பாகவத புராணம் விரிவாகப் பேசுகிறது. அவை வருமாறு: எல்லா வகையிலும் பண்பட்ட ஒரு பிராமணனாகத் தோன்றியது முதல் அவதாரம். இரண்டாவது பன்றியாக உருவெடுத்துக் கடலுக்கடியில் மறைந்து போன பூமியைத் தோண்டி எடுத்து வந்து உரிய இடத்தில் வைத்த வராக அவதாரம். மூன்றாவது நாரதராகத் தோன்றியதாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பக்தியின் அவசியத்தை உலகிற்கு விளக்கினார். நான்காவது, நர-நாராயண அவதாரம். இவர்கள் இருவரும் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டு உலகிற்கு வழிகாட்டினர். ஐந்தாவது கபில முனியாகத் தோன்றிய அவதாரம். கபில முனி மற்றொரு முனிவராகிய அசுரி என்ற முனிவருக்கு உபதேசம் செய்யும் வகையில் சாங்கிய தரிசனம் என்ற கொள்கையைப் பரப்பினார். (மூன்றாவது அவதாரம் பக்திப் பெருக்கையும், நான்காவது அவதாரம் புலன்களை அடக்கித் தவம் செய்வதையும், ஐந்தாவது அவதாரம் அறிவு வளர்ச்சி பெற்று அறிவின் துணை கொண்டு புதிய சிந்தனைகளை வளர்ப்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.)
ஆறாவதாக உள்ளது தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார். ஏழாவது அவதாரம் யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான்.
எட்டாவது அவதாரம் ரிஷபர் என்ற பெயருடன் நபிக்கும், மருதேவிக்கும் பிள்ளையாகத் தோன்றியதாகும். மிகப் பெரிய ஞானிகட்கும், கல்விக் கடலைக் கரை கண்டவர்க்கும் தியானம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கியதே ரிஷப அவதாரத்தின் நோக்கமாகும். முனிவர்களும், ரிஷிகளும் விஷ்ணு ஒர் அரசனாகப் பிறந்து பூமியைப் பயனுள்ள இடமாகச் செய்ய வேண்டும் என வேண்ட, பிருத்து என்ற மன்னனாகத் தோன்றிய அவதாரம் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் வெறுந்தரையாக இருந்த பூமி தானியங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் இடமாகப் பிருத்து மன்னன் செய்தார் என்பதும், அதனால் இந்த பூமிக்குப் பிருத்வி என்ற பெயர் வந்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளன.
பத்தாவது, மச்ச அவதாரம் ஆகும். சாக்கூச மன்வந்திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது. பதினொன்றாவது கூர்ம அவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார். பன்னிரண்டாவது தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி.
பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக (மோகினி) எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள் முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்ப திலேயே அவர்கள் காலம் சென்று விட்டது. பதினான்காவது நரசிம்ம அவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது.
பதினைந்தாவது வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும். பதினாறாவது பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது.
பதினேழாவது அவதாரம், வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார். பதினெட்டாவது இராம அவதாரம். பத்தொன்பதாவது பலராம அவதாரம். இருபதாவது கிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.
இருபத்திஒன்றாவது புத்தரது அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார். இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிடவில்லை.
வேதவியாசரின் அரும்பணி
வேதவியாசருக்குச் சுகதேவர் என்ற ஒரு மகன் இருந்தான். கற்க வேண்டிய அனைத்தையும் கற்று மாபெரும் அறிவாளி யாகிவிட்ட அவர், அதிகம் பேசாத காரணத்தால் மற்றவர்கள் அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலர் அவரைக் கல்வி ஞானம் இல்லாதவர் என்றும், ஒர் அசடு என்றுமே கருதினர்.
இந்நிலையில் வேதவியாசர் வேதங்களை நான்காகப் பிரித்துப் பைலா என்பவருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பா யனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்குச் சாம வேதத் தையும், சுமந்தாவிற்கு அதர்வண வேதத்தையும் கற்பித்தார். புராணங்கள் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுவதால், அவற்றை மற்றொரு சீடராகிய லோமஹர்ஷனருக்குக் கற்பித்தார். லோமஹர்ஷனரின் மகனாகிய சுதா என்பவர் மற்றைய முனிவர்களுக்கு பாகவத புராணத்தைச் சொன்னார். நான்கு வேதங்களையும் தொகுக்கும் பணி, மகாபாரதத்தை எழுதும் பணி ஆகிய மிகப் பெரிய சாதனை களைப் படைத்த வேதவியாசர் தாம் இன்னும் ஏதோ செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, ஒருநாள் சரஸ்வதி நதியில் நீராடிவிட்டுத் தம் பர்ணசாலையில் அமர்ந்திருந்தார். இவ்வளவு செய்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு குறை இருந்தது. அது என்ன குறை என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் நாரதர் உள்ளே நுழைந்தார். வேதவியாசரைப் பார்த்து, "மாபெரும் சாதனைகளைப் படைத்த தாங்கள் ஏன் அமைதியில்லாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். வேதவியாசர், “காரணம் தெரியாமல்தான் கவலைப்படுகிறேன். அனைத்தையும் அறிந்த தாங்களே அதை விளக்கிச் சொல்லலாமே” என்று கூறினார். அடுத்துப் பேச ஆரம்பித்த நாரதர், வேதவியாசரே! இதுவரை தர்மத்தைப் பற்றி அளவுக்கு மிஞ்சிக் கூறிவிட்டீர்கள். அது தருமத்தின் இலக்கணத்தையும், அதன் இயல்பையும் சொல்கின்றன. ஆனால் மக்கள் மனத்தில் இவை சென்று தங்குவது கடினம். தர்மத்தின் இலக்கணங்களை எழுதுவதைக் காட்டிலும், கிருஷ்ணனுடைய லீலைகளைச் சொல்லி இருந்தால் அது மக்கள் மனத்தைச் சென்று பற்றும். அந்தச் சூழ்நிலை ஏற்படும்போது தருமத்தைப் பற்றிய கருத்துக்களும் மக்கள் மனத்தில் புகுந்து தங்கும். ஆகவே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதுதான் சிறந்த வழியாகும் என்று கூறிப் போனார்.
நாரதர் கூறியவை வியாசரின் மனத்திற்கு அமைதியும், தூண்டுதலும் தந்த காரணத்தால் பாகவத புராணத்தைப் பாடி அதைத் தம் மகனாகிய சுகதேவனுக்குக் கற்பித்தார்.
அசுவத்தாமன் பெற்ற தண்டனை
குருக்ஷேத்திரப் போரில் கெளரவர் படையிலும், பாண்டவர் படையிலும் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியாக பீமனுக்கும், துரியோதனனுக்கும் தனிப் போர் நடந்தது. பீமன், துரியோதனன் தொடையில் கதையால் தாக்கி அவன் காலை ஒடித்து விட்டான். ஒடிந்த காலுடன் துரியோதனன் யுத்தகளத்தில் படுத்திருந்தான். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் துரியோதனன் பக்கம் நின்று சண்டை செய்தவன். இப்போது துரியோதனன் உயிர் போகுமுன் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தான். எனவே நட்ட நடுநிசியில் பாண்டவர்கள் பாசறைக்குள் ரகசியமாக நுழைந்து இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய கழுத்தையும் வெட்டி அவர் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனிடம் காட்டினான். திரெளபதியின் ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் ஒரே கூப்பாடு போட்ட அவள், உடனே பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அருச்சுனனை நாடினாள். அருச்சுனன் அசுவத்தாமனைத் தேடிப்பிடித்து 'ஒருவருக்கொருவர் தனித்துப் போரிடலாம் என்று அறைகூவி அழைத்தான். யுத்தம் தொடங்கியது. அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். அதனால் தனக்கு அழிவு வராமல் இருக்க அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். இரண்டு அஸ்திரங்களும் தங்கள் எதிரியைத் தாக்க முடியாமையால் பூலோகத்தை அழித்துவிடும் சூழ்நிலை உருவாகியது. முனிவர்கள் பலர் வந்து இவ்விருவரையும் பார்த்து உலகம் அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. தயவு செய்து உங்கள் அஸ்திரங்களைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்
என்று வேண்டினார்கள். அருச்சுனன் தனது பிரம்மாஸ்திரத் தைத் திருப்பி அழைத்துக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனுக்கு அப்படையை விடத் தெரியுமே தவிர திருப்பி அழைக்கத் தெரியாது. அதனால் அருச்சுனனைக் கொல்ல முடியாத அப்படை அவன் சந்ததியைத் தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அருச்சுனனின் மருமகளாகிய உத்ராவின் கருவுக்குள் நுழைந்தது. அக்கருவில் அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவின் குழந்தைக் கரு வளர்ந்து கொண்டிருந்தது. இதை அறிந்த உத்ரா, இந்த ஆபத்தைத் தடுப்பதற்காகக் கிருஷ்ணனிடம் ஒடினாள். வேறு வழியில்லாமல் கிருஷ்ணன் தானே அக்கருவினுள் நுழைந்தான். நுழைந்த கிருஷ்ணன் அக்கருவைக் காப்பாற்றியும் விட்டான். இது ஒருபுறம் நடக்கையில் அருச்சுனன் அசுவத்தாமனைக் கட்டி இழுத்து வந்து திரெளபதி முன் நிறுத்தினான். அருச்சுனன் இவனை இப்போது கொல்வது எளிது. ஆனால் நம் ஆச்சாரியரின் மகனைக் கொல்வது பாவம். இவன் சிறப்புக்கெல்லாம் காரணமாக இவன் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரத்தை எடுத்துக் கொண்டு இவனை அனுப்பி விடலாம்' என்று கூறினான். திரெளபதி இதை ஏற்றுக் கொண்டதால் முடிமணி பறிக்கப்பட்டு அவன் விரட்டப்பட்டான். உரிய காலத்தில் உத்ராவிற்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு 'விஷ்ணுரதன் என்று பெயரிட்டனர். விஷ்ணுரதன் இளமைப் பருவத்திலிருந்தே யாரைப் பார்த்தாலும், தான் கருவில் இருக்கும் பொழுது கண்ட பரம புருஷன் இவன்தானோ என்று சந்தேகப்பட்டு, காணுகின்ற ஒவ்வொருவரையும் பரிட்சித்துப் பார்த்ததால் பரிட்சித்து’ என்ற காரணப் பெயர் பெற்றான்.
கிருஷ்ணனின் துவாரகை வரவும், அவன் முடிவும்
குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பாண்டவர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்ட்ரன், அஸ்தினாபுரத்தில் முடிசூட்டிக் கொண்டான். சில காலம் அவர்களுடன் இருந்து விட்டுக் கிருஷ்ணன் துவாரகைக்குச் செல்ல முற்பட்டான். கிருஷ்ணன் யாதவ நாட்டிற்கு வருகிறான் என்ற செய்தி அறிந்த யாதவர்கள் பெரும் குதுகலமடைந்தனர். துவாரகை முழுவதும் விழாக் கோலம் பூண்டு அலங்கரிக்கப்பட்டது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் கூடக் கிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைவதைப் போலப் பூத்துக் குலுங்கின.
கிருஷ்ணன் துவாரகைக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து, அருச்சுனன் துவாரகைக்கு வந்தான். ஏழு மாதங் களாகியும் அவன் அஸ்தினாபுரம் திரும்பவில்லை. இதனிடையே அஸ்தினாபுரத்தில் பல தீய உற்பாதங்கள் தோன்றின. பருவங்கள் உரிய காலத்தில் வரவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு போரிட்டுக் கொண்டனர். மனம் நொந்து போன யுதிஷ்டிரன் அருச்சுனன் திரும்பி வராமை கண்டு கவலை கொள்ளத் துவங்கினான். பீமனை துவாரகைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்தான். பீமன் புறப்படுவதற்குள் அருச்சுனனே வந்துவிட்டான். வந்தவன் எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்த வனாய்த் தனித்திருந்து கண்ணிர் வடித்துக் கொண்டே இருந்தான். அவன் மெளனத்தைக் கலைக்க தருமன் பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை. ஒரு நாள் "அருச்சுனா நீ ஏன் பேச மறுக்கிறாய்? ஏன் கண்ணிர் வடிக்கிறாய்? துவாரகையில் நம் உறவினர்களும், கிருஷ்ணனும் நலமாக உள்ளார்களா?” என்று கேட்க, அருச்சுனன், கிருஷ்ணன் இறந்துவிட்டதையும், யாதவ குலம் முழுவதும் அழிந்து விட்டதையும் கூறிக் கதறிவிட்டான். கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி காதில் விழுந்த உடனேயே யுதிஷ்டிரனுக்கு அரசாட்சியின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. பாண்டவர்களும், திரெளபதியும் இமயம் சென்று தவம் புரிய முடிவு செய்தனர். பரிட்சித்துக்கு முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த அறுவரும் இமயம் நோக்கிப் புறப்பட்டனர்.
பதினெட்டுப் புராணங்களில் ஐந்தாவதாக உள்ள பாகவத புராணம் வைணவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியா முழுவதும் தனித் தனியாகவும், கூட்டமாகவும் இப்புராணத்தைப் படிக்கின்றனர். கிருஷ்ணன் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இப்புராணம். இப்புராணத்தின் தலையாய சிறப்பு, பக்திக்கு முதலிடம் கொடுப்பதுதான்.
வேதவியாசர் பாரதத்தையும், ஏனைய புராணங்களையும் எழுதிய பிறகுக.ட மனத்தில் அமைதி யில்லாமல் இருந்தார் என்றும், இப்புராணத்தை எழுதிய பிறகே மனநிறைவு பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. வேறு புராணங்களில் காணப்படாத அளவுக்கு பக்திக்கு பாகவத புராணம் இடம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், பரத கண்டத்திலேயே மிகப் பழங்காலத் திலேயே பக்திக்கு முதலிடம் கொடுத்து வளர்த்த பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு சொல்ல ஒரு முக்கியமான காரணம் உண்டு. பாகவத புராணத்தின் முதல் அத்தியாயத்தின் 48வது பாடல் சொல்லும் கருத்தையும், அதற்கு முன்புள்ள சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.
ஒருமுறை நாரதர் பிருந்தாவனம் செல்கிறார். அங்கே வயது முதிர்ந்த இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்த்தவுடன், இவர்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் நாரதருக்கு வருகிறது. அவர்களிடம் சென்று, நீங்கள் யார்? உங்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன் என்று கேட்கிறார் நாரதர். மிகவும் வயது முதிர்ந்து கிழடு தட்டிய அந்த இரு பெண்களுள் ஒருத்தி நாரதரைப் பார்த்து பின்வருமாறு பேசுகிறார் நீங்கள் சொல்வது சரிதான். என் பெயர் பக்தி. இவர் பெயர் வைராக்கியம். நாங்கள் இருவரும் திராவிடத்தில் (தமிழகத்தில்) பிறந்து வளர்ந்தோம். அங்கே அழகும் இளமையும் உள்ளவர்களாக இருந்தோம். நாளாவட்டத்தில் அங்கிருந்து கர்நாடகத் தில் புகுந்தோம். அங்கே எங்கள் இளமைக் கோலம் குறையத் தொடங்கியது. பிறகு மகாராஷ்டிரம் வந்தோம். அங்கே முதுமை தொடங்கியது. பிறகு கூர் நகரத்திற்கு வந்தோம். இங்கு இளமை முழுவதும் அழிந்து அழகு கெட்டு முதுமை தட்டிய நிலையில் உள்ளோம்.
பாகவதத்தில் இந்தப் பாடல் மூலம், பக்தி தோன்றி வளர்ந்ததும், மிடுக்குடன் இளமைப் பொலிவுடன் திகழ்ந்ததும் தமிழகத்தில்தான் என்பதை இப்புராணம் ஏற்றுக் கொள்வதைக் காணலாம். அதனால் ஆராய்ச்சியாளர்கள் பாகவத புராணத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் அதிகத் தொடர்பு உண்டு என்று கருதுகின்றனர். பரம்பொருளின் வடிவாக இருந்த கிருஷ்ணனிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் கொண்டு வாழ்ந்த சிறப்பை மிகுதியாகக் கூறுவதே பாகவத புராணத்தின் தனி அழகாகும். வேதங்கள் பரப்பிரம்மத்தை வடிவற்ற, உருவற்ற எதனோடும் தொடர்புபடாத தனித்துவம் உடையது என்று கூறுகின்றன. அது அனைத்தும் அறியும் பேராற்றல் என்றே அவை பேசின. வாழும் உயிர்களுக்குப் பரப்பிரம்மம் தொடர்பில்லாத தனிப் பொருளாக இருந்த நிலைமை போகத் தொடர்புடைய பொருளாகக் காணத் தொடங்கியது. பேராற்றல் வடிவமான இப் பரப்பிரம்மத்திடம் இருந்துதான் அனைத்தும் உதயமாகின்றன. உயிர்கள் இயங்குவதற் குரிய ஆற்றலும் அதனிடமிருந்தே இயங்குகிறது. இயக்கமற்ற ஜடப் பொருளிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. இந்தப் புராணத்தில், இந்தப் பேராற்றல் வாசுதேவன் என்ற பெயருடன் பேசப்படுகிறது. இந்தப் பேராற்றல் எங்கும் நிறைந்ததாய், எல்லாம் அறிந்ததாய், என்றுமுள்ளதாய்க் காட்சி அளிக்கிறது.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் தானே ஈஸ்வரன் என்றும், அண்டங்களைப் படைத்து, காத்து, அழிக்கும் தலைவன் என்றும் கூறுகிறார். தம்பால் அடைக்கலம் என்று முழு நம்பிக்கையுடன், பேரன்புடன் அணுகும் மனிதர்களின் குற்றங் குறைகளை மன்னித்து ஆட்கொள்பவன் அவனே ஆவான்.
பரப்பிரம்மம் நிர்க்குணமாய், வடிவற்றதாய் விளங்கி னாலும், ஈஸ்வரனாக இறங்கி வருகின்ற நிலையில் எல்லையற்ற ஆனந்த வடிவினனாய், அண்டத்தை இயக்கும் ஆற்றலின் இடையே தானே இயக்குகிறோம் என்ற நினைவுடன் தொழிற்படுகிறது. சாக்தர்கள் உண்மையான பாகவதம் இப்புராணம் அன்று, தேவி பாகவதமே உண்மையானது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் தேவி பகவதியின் தோற்றம், வரலாறு ஆகியவற்றைக் கூறும் காளிகா புராணமே உண்மை யான பாகவதம் என்று கருதுகின்றனர். இந்த இரு கட்சிக்காரர்கள் கூற்றுக்களை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. பாகவத புராணத்தில் தேவி பாகவதம் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆதி சங்கரர் பாடிய கோவிந்தா அஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது.
பாகவத புராணம் 12 ஸ்காந்தங்களையும், 335 அத்தியாயங்களையும், 18,000 பாடல்களையும் உடையது. பாகவத புராணத்தின் 12 ஸ்காந்தங்களில் பத்தாவது ஸ்காந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு வளர்ப்பு அவனுடைய லீலைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பதினொன்றாவது ஸ்காந்தம் யாதவ குலத்தின் அழிவு, கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் ஆகியவற்றையும் பேசுகிறது.
பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்தவை இருபத்தி ஒன்று எனவும், இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம் என்றும், மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது.
பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்துதான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன.
நாம் அறிந்த பத்து அவதாரங்களை இடை இடையே சேர்த்துக் கொண்டு 22 அவதாரங்களை பாகவத புராணம் விரிவாகப் பேசுகிறது. அவை வருமாறு: எல்லா வகையிலும் பண்பட்ட ஒரு பிராமணனாகத் தோன்றியது முதல் அவதாரம். இரண்டாவது பன்றியாக உருவெடுத்துக் கடலுக்கடியில் மறைந்து போன பூமியைத் தோண்டி எடுத்து வந்து உரிய இடத்தில் வைத்த வராக அவதாரம். மூன்றாவது நாரதராகத் தோன்றியதாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பக்தியின் அவசியத்தை உலகிற்கு விளக்கினார். நான்காவது, நர-நாராயண அவதாரம். இவர்கள் இருவரும் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டு உலகிற்கு வழிகாட்டினர். ஐந்தாவது கபில முனியாகத் தோன்றிய அவதாரம். கபில முனி மற்றொரு முனிவராகிய அசுரி என்ற முனிவருக்கு உபதேசம் செய்யும் வகையில் சாங்கிய தரிசனம் என்ற கொள்கையைப் பரப்பினார். (மூன்றாவது அவதாரம் பக்திப் பெருக்கையும், நான்காவது அவதாரம் புலன்களை அடக்கித் தவம் செய்வதையும், ஐந்தாவது அவதாரம் அறிவு வளர்ச்சி பெற்று அறிவின் துணை கொண்டு புதிய சிந்தனைகளை வளர்ப்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.)
ஆறாவதாக உள்ளது தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார். ஏழாவது அவதாரம் யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான்.
எட்டாவது அவதாரம் ரிஷபர் என்ற பெயருடன் நபிக்கும், மருதேவிக்கும் பிள்ளையாகத் தோன்றியதாகும். மிகப் பெரிய ஞானிகட்கும், கல்விக் கடலைக் கரை கண்டவர்க்கும் தியானம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கியதே ரிஷப அவதாரத்தின் நோக்கமாகும். முனிவர்களும், ரிஷிகளும் விஷ்ணு ஒர் அரசனாகப் பிறந்து பூமியைப் பயனுள்ள இடமாகச் செய்ய வேண்டும் என வேண்ட, பிருத்து என்ற மன்னனாகத் தோன்றிய அவதாரம் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் வெறுந்தரையாக இருந்த பூமி தானியங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் இடமாகப் பிருத்து மன்னன் செய்தார் என்பதும், அதனால் இந்த பூமிக்குப் பிருத்வி என்ற பெயர் வந்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளன.
பத்தாவது, மச்ச அவதாரம் ஆகும். சாக்கூச மன்வந்திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது. பதினொன்றாவது கூர்ம அவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார். பன்னிரண்டாவது தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி.
பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக (மோகினி) எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள் முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்ப திலேயே அவர்கள் காலம் சென்று விட்டது. பதினான்காவது நரசிம்ம அவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது.
பதினைந்தாவது வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும். பதினாறாவது பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது.
பதினேழாவது அவதாரம், வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார். பதினெட்டாவது இராம அவதாரம். பத்தொன்பதாவது பலராம அவதாரம். இருபதாவது கிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.
இருபத்திஒன்றாவது புத்தரது அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார். இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிடவில்லை.
வேதவியாசரின் அரும்பணி
வேதவியாசருக்குச் சுகதேவர் என்ற ஒரு மகன் இருந்தான். கற்க வேண்டிய அனைத்தையும் கற்று மாபெரும் அறிவாளி யாகிவிட்ட அவர், அதிகம் பேசாத காரணத்தால் மற்றவர்கள் அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலர் அவரைக் கல்வி ஞானம் இல்லாதவர் என்றும், ஒர் அசடு என்றுமே கருதினர்.
இந்நிலையில் வேதவியாசர் வேதங்களை நான்காகப் பிரித்துப் பைலா என்பவருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பா யனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்குச் சாம வேதத் தையும், சுமந்தாவிற்கு அதர்வண வேதத்தையும் கற்பித்தார். புராணங்கள் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுவதால், அவற்றை மற்றொரு சீடராகிய லோமஹர்ஷனருக்குக் கற்பித்தார். லோமஹர்ஷனரின் மகனாகிய சுதா என்பவர் மற்றைய முனிவர்களுக்கு பாகவத புராணத்தைச் சொன்னார். நான்கு வேதங்களையும் தொகுக்கும் பணி, மகாபாரதத்தை எழுதும் பணி ஆகிய மிகப் பெரிய சாதனை களைப் படைத்த வேதவியாசர் தாம் இன்னும் ஏதோ செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, ஒருநாள் சரஸ்வதி நதியில் நீராடிவிட்டுத் தம் பர்ணசாலையில் அமர்ந்திருந்தார். இவ்வளவு செய்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு குறை இருந்தது. அது என்ன குறை என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் நாரதர் உள்ளே நுழைந்தார். வேதவியாசரைப் பார்த்து, "மாபெரும் சாதனைகளைப் படைத்த தாங்கள் ஏன் அமைதியில்லாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். வேதவியாசர், “காரணம் தெரியாமல்தான் கவலைப்படுகிறேன். அனைத்தையும் அறிந்த தாங்களே அதை விளக்கிச் சொல்லலாமே” என்று கூறினார். அடுத்துப் பேச ஆரம்பித்த நாரதர், வேதவியாசரே! இதுவரை தர்மத்தைப் பற்றி அளவுக்கு மிஞ்சிக் கூறிவிட்டீர்கள். அது தருமத்தின் இலக்கணத்தையும், அதன் இயல்பையும் சொல்கின்றன. ஆனால் மக்கள் மனத்தில் இவை சென்று தங்குவது கடினம். தர்மத்தின் இலக்கணங்களை எழுதுவதைக் காட்டிலும், கிருஷ்ணனுடைய லீலைகளைச் சொல்லி இருந்தால் அது மக்கள் மனத்தைச் சென்று பற்றும். அந்தச் சூழ்நிலை ஏற்படும்போது தருமத்தைப் பற்றிய கருத்துக்களும் மக்கள் மனத்தில் புகுந்து தங்கும். ஆகவே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதுதான் சிறந்த வழியாகும் என்று கூறிப் போனார்.
நாரதர் கூறியவை வியாசரின் மனத்திற்கு அமைதியும், தூண்டுதலும் தந்த காரணத்தால் பாகவத புராணத்தைப் பாடி அதைத் தம் மகனாகிய சுகதேவனுக்குக் கற்பித்தார்.
அசுவத்தாமன் பெற்ற தண்டனை
குருக்ஷேத்திரப் போரில் கெளரவர் படையிலும், பாண்டவர் படையிலும் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியாக பீமனுக்கும், துரியோதனனுக்கும் தனிப் போர் நடந்தது. பீமன், துரியோதனன் தொடையில் கதையால் தாக்கி அவன் காலை ஒடித்து விட்டான். ஒடிந்த காலுடன் துரியோதனன் யுத்தகளத்தில் படுத்திருந்தான். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் துரியோதனன் பக்கம் நின்று சண்டை செய்தவன். இப்போது துரியோதனன் உயிர் போகுமுன் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தான். எனவே நட்ட நடுநிசியில் பாண்டவர்கள் பாசறைக்குள் ரகசியமாக நுழைந்து இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய கழுத்தையும் வெட்டி அவர் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனிடம் காட்டினான். திரெளபதியின் ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் ஒரே கூப்பாடு போட்ட அவள், உடனே பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அருச்சுனனை நாடினாள். அருச்சுனன் அசுவத்தாமனைத் தேடிப்பிடித்து 'ஒருவருக்கொருவர் தனித்துப் போரிடலாம் என்று அறைகூவி அழைத்தான். யுத்தம் தொடங்கியது. அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். அதனால் தனக்கு அழிவு வராமல் இருக்க அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். இரண்டு அஸ்திரங்களும் தங்கள் எதிரியைத் தாக்க முடியாமையால் பூலோகத்தை அழித்துவிடும் சூழ்நிலை உருவாகியது. முனிவர்கள் பலர் வந்து இவ்விருவரையும் பார்த்து உலகம் அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. தயவு செய்து உங்கள் அஸ்திரங்களைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்
என்று வேண்டினார்கள். அருச்சுனன் தனது பிரம்மாஸ்திரத் தைத் திருப்பி அழைத்துக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனுக்கு அப்படையை விடத் தெரியுமே தவிர திருப்பி அழைக்கத் தெரியாது. அதனால் அருச்சுனனைக் கொல்ல முடியாத அப்படை அவன் சந்ததியைத் தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அருச்சுனனின் மருமகளாகிய உத்ராவின் கருவுக்குள் நுழைந்தது. அக்கருவில் அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவின் குழந்தைக் கரு வளர்ந்து கொண்டிருந்தது. இதை அறிந்த உத்ரா, இந்த ஆபத்தைத் தடுப்பதற்காகக் கிருஷ்ணனிடம் ஒடினாள். வேறு வழியில்லாமல் கிருஷ்ணன் தானே அக்கருவினுள் நுழைந்தான். நுழைந்த கிருஷ்ணன் அக்கருவைக் காப்பாற்றியும் விட்டான். இது ஒருபுறம் நடக்கையில் அருச்சுனன் அசுவத்தாமனைக் கட்டி இழுத்து வந்து திரெளபதி முன் நிறுத்தினான். அருச்சுனன் இவனை இப்போது கொல்வது எளிது. ஆனால் நம் ஆச்சாரியரின் மகனைக் கொல்வது பாவம். இவன் சிறப்புக்கெல்லாம் காரணமாக இவன் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரத்தை எடுத்துக் கொண்டு இவனை அனுப்பி விடலாம்' என்று கூறினான். திரெளபதி இதை ஏற்றுக் கொண்டதால் முடிமணி பறிக்கப்பட்டு அவன் விரட்டப்பட்டான். உரிய காலத்தில் உத்ராவிற்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு 'விஷ்ணுரதன் என்று பெயரிட்டனர். விஷ்ணுரதன் இளமைப் பருவத்திலிருந்தே யாரைப் பார்த்தாலும், தான் கருவில் இருக்கும் பொழுது கண்ட பரம புருஷன் இவன்தானோ என்று சந்தேகப்பட்டு, காணுகின்ற ஒவ்வொருவரையும் பரிட்சித்துப் பார்த்ததால் பரிட்சித்து’ என்ற காரணப் பெயர் பெற்றான்.
கிருஷ்ணனின் துவாரகை வரவும், அவன் முடிவும்
குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பாண்டவர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்ட்ரன், அஸ்தினாபுரத்தில் முடிசூட்டிக் கொண்டான். சில காலம் அவர்களுடன் இருந்து விட்டுக் கிருஷ்ணன் துவாரகைக்குச் செல்ல முற்பட்டான். கிருஷ்ணன் யாதவ நாட்டிற்கு வருகிறான் என்ற செய்தி அறிந்த யாதவர்கள் பெரும் குதுகலமடைந்தனர். துவாரகை முழுவதும் விழாக் கோலம் பூண்டு அலங்கரிக்கப்பட்டது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் கூடக் கிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைவதைப் போலப் பூத்துக் குலுங்கின.
கிருஷ்ணன் துவாரகைக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து, அருச்சுனன் துவாரகைக்கு வந்தான். ஏழு மாதங் களாகியும் அவன் அஸ்தினாபுரம் திரும்பவில்லை. இதனிடையே அஸ்தினாபுரத்தில் பல தீய உற்பாதங்கள் தோன்றின. பருவங்கள் உரிய காலத்தில் வரவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு போரிட்டுக் கொண்டனர். மனம் நொந்து போன யுதிஷ்டிரன் அருச்சுனன் திரும்பி வராமை கண்டு கவலை கொள்ளத் துவங்கினான். பீமனை துவாரகைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்தான். பீமன் புறப்படுவதற்குள் அருச்சுனனே வந்துவிட்டான். வந்தவன் எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்த வனாய்த் தனித்திருந்து கண்ணிர் வடித்துக் கொண்டே இருந்தான். அவன் மெளனத்தைக் கலைக்க தருமன் பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை. ஒரு நாள் "அருச்சுனா நீ ஏன் பேச மறுக்கிறாய்? ஏன் கண்ணிர் வடிக்கிறாய்? துவாரகையில் நம் உறவினர்களும், கிருஷ்ணனும் நலமாக உள்ளார்களா?” என்று கேட்க, அருச்சுனன், கிருஷ்ணன் இறந்துவிட்டதையும், யாதவ குலம் முழுவதும் அழிந்து விட்டதையும் கூறிக் கதறிவிட்டான். கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி காதில் விழுந்த உடனேயே யுதிஷ்டிரனுக்கு அரசாட்சியின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. பாண்டவர்களும், திரெளபதியும் இமயம் சென்று தவம் புரிய முடிவு செய்தனர். பரிட்சித்துக்கு முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த அறுவரும் இமயம் நோக்கிப் புறப்பட்டனர்.