Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
பால் - 1/2 லிட்டர்
பாதாம் பருப்பு - 10
முந்திரி பருப்பு -10
சீனி - 2 (அ ) 3 டீஸ்பூன்
செய்முறை :-
முதலில் 7 பாதாம் பருப்பை கால் டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். கொஞ்சம் அகலமாக உள்ள பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் சூடு வந்தவுடன் அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைக்கவும். சிறிது நேரத்தில் பால் ஆடை படிந்து வரும். அந்த ஆடையை அப்படியே ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை அதே போல் எடுத்து போடவும். பால் பாதி அளவு குறைந்ததும் ஊற வைத்த பாதாம் பருப்பையும் 7 முந்திரி பருப்பையும் சேர்த்து அரைத்து பாலில் சேர்க்கவும். அதன் பின்னர் கொஞ்சம் அதிகமாக ஆடை விடும் அதனையும் எடுத்து கிண்ணத்தில் போட்டு கொள்ளவும். சிறிது நேரத்தில் பாலில் சீனீயை சேர்த்து கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள பாலாடையையும் பாலோடு நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். பின்னர் அதை கிண்ணத்தில் மாற்றி மீதமுள்ள பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி தூவி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.