பார்வை - 5
அண்டமாய் அவனியாகி
அரியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவணத்தான்
தினமும் என் சிரசைக் காக்க
தெய்வீகமான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது ஷண்முகக் கவசம். பழைய காலத்து முறைப்படி கட்டப்பட்ட தொட்டிக் கட்டு வீடு. வீட்டின் நடுவில் இருந்த முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்த துளசிச் செடி சொல்லாமல் சொன்னது அந்த வீட்டின் செழுமையை.
துளசி மாடத்தில் விளக்கேற்றப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் பின்புறம் வலது கோடியிலிருந்த பூஜை அறையில் அமர்ந்து ஷண்முகக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார் கோதை.
கோதை, பெயருக்கேற்றாற் போன்ற தெய்வீகக் களை பொருந்திய முகம். பார்ப்பதற்கு அசப்பில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த நடிகை பத்மினியைப் போன்ற தோற்ற அமைப்பு. நெற்றியில் சிறு கீற்றாக விபூதி, தங்க நிற பிரேமினால் ஆன கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்தக் கண்களில் அவ்வளவு தீட்சண்யம்.
மூக்கில் இருந்த வைர பேசரி டாலடித்து அவருடைய அழகை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது. அரக்கு நிறத்தில் புடவையணிந்து, புடவைத் தலைப்பை போர்த்தினாற் போல் கொண்டு வந்து முன்புறம் சொருகியிருந்தார்.
கோதையின் கணவர் கமலநாதன் கோவை வட்டாரத்தில் மிகப் பெரிய ஜமீன் வம்சம். கமலநாதனுடைய தாத்தா அரசாங்க உத்தரவுக்கு முன்னதாகவே தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை செய்தவர்களுக்கும், ஊர் மக்களுக்குமாகப் பிரித்துக் கொடுத்த வள்ளல். காலப்போக்கில் ஜமீன் முறை அழிந்தாலும் இவர்களை விடப் பெரும் பணக்காரர்கள் வந்த பொழுதிலும் கூட இவர்களுக்குரிய மரியாதை இன்று வரை நீடித்திருக்கிறது.
கோதை - கமலநாதன் தம்பதியரின் ஒரே செல்ல மகள் லலிதா. அந்த ஊரில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான கரும்பாலை மில்லில் வேலைக்காக வந்தவர் குமரப்பன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய காரணத்தால், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார் கமலநாதன்.
குமரப்பன் குணத்திலும் கரும்பைக் கொண்டிருந்ததால் மிகவும் இனிமையாகவே நடந்தது இல்லறம். ஆசைக்கு ஒரு பெண் மீனலோசினி, ஆஸ்திக்கு ஒரு ஆண் முகிலன் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்கள் லலிதா - குமரப்பன் தம்பதிகளுக்கு.
கமலநாதான் இருக்கும் வரை வரப் போக இருந்தவர், அவர் இறந்த பிறகு கோதையைத் தனியே விட மனமில்லாமல் இங்கேயே குடும்பத்துடன் வந்துவிட்டார் குமரப்பன். தான் எதுவும் சொல்லாமலேயே குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடக்கும் மருமகன் மீது எப்பொழுதுமே தனிப்பாசம் உண்டு கோதைக்கு.
சுலோகங்கள் எல்லாம் சொல்லி முடித்தக் கோதை மணியடித்துக் கொண்டே தீபாராதனை காட்டவும் சமையலறையில் இருந்து அவரது மகள் லலிதாவும், வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது மருமகன் குமரப்பனும் வந்து தீப ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் துளசித் தீர்த்தம் வழங்கியவாறே,
"மீனா எங்கம்மணி?" என்றுத் தன் மகள் லலிதாவிடம் கேள்வி எழுப்பினார் கோதை.
"இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க் வாராங்க் இல்லீங்கம்மா, அதுதானுங்க நான் நம்ம செல்வி புள்ளைய வாசத் தொளிச்சு சாணம் போட்டு மொழுகிக் கொஞ்சம் பெரிய கோலமா போடச் சொன்னேனுங்கம்மா. உங்க பேத்தி தானே ரங்கோலி போடறதா சொல்லிப் போட்டுக் காலையிலிருந்து அங்கனயே தானுங்கம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கா" என்றார் லலிதா.
"நல்லாயிருக்கு அம்மணி நீ சொல்றது. அவளைப் பொண்ணு பார்க்க வாரதுக்கு அவளையே கோலம் போடச் சொன்னியாக்கும். போய் வெரசா முடிச்சுட்டு உள்ர வரச் சொல்லு அம்மணி" என்று கோதை சொல்லத் தான் சென்று அழைத்து வருவதாகக் கூறி லலிதா வாசலுக்குச் சென்றார்.
அங்கு பல வண்ணக் கலவையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தது பல வகைப் பூக்களும் அவற்றுக்கிடையில் ஒரு மயிலும். அந்த அவசரத்திலும் ஒரு நிமிடம் நின்றுத் தன் மகளின் கைவண்ணத்தை ரசித்துவிட்டே அவளைத் தேடிக் கொண்டு சென்றார் லலிதா.
"ராசு சின்னம்மணி எங்க?" என்று அங்கிருந்த பண்ணை ஆளிடம் கேட்க,
"நம்ம பாக்யம் கன்னுக்குட்டி ஈன்றுச்சுங்க அம்மணி. செல்விப் பொண்ணு வந்து அதைச் சொல்லவும் சின்னம்மணி கட்டுத்தரைக்குப் போயிட்டாங்கங்கோ" என்று பணிவாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.
"இந்தப் பொண்ணோட" என்று முணுமுணுத்தவாறே வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார் லலிதா.
அங்கு சென்றும் மீனலோசனியைக் காணாமல், அதற்கு மேலும் தேடுவதற்கு அந்தப் பரந்து விரிந்தத் தோட்டம் அனுமதி தர மறுத்தக் காரணத்தால் வீட்டுக்குள் சென்று கோதையிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் அவர்.
மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் எப்பொழுதும் வீட்டுப் பெண்களிடம்தான். அதனால் அவர் அதைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டார். இன்று முதன் முறையாக அவருடைய ஆசை மகளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனரே! அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டுமே என்ற பதட்டம் கொஞ்சமல்ல நிறையவே இருந்தது லலிதாவுக்கு.
மாட்டுத்தொழுவத்திலிருந்து சற்றுத் தள்ளி வாழைத் தோப்புக்கு அருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி மீனலோசனி. ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கொங்கு நாட்டுக்கே உரித்தான வாளிப்பானத் தோற்றம், செம்மஞ்சள் நிறமுடைய அழகி.
அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப்பட்டிருக்க, ஆர்கிட் நிறச் சுடிதார் அவள் இடை தழுவியிருந்தது. அவள் கன்றிலிருந்தே ஆசையாக வளர்க்கும் பாக்யம் எனும் பசுமாடு இன்று கன்று ஈனப் போவதால் நேற்றிலிருந்து அந்த மாட்டைத் தான் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மீனா. இரவில் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை அவளால்.
மாடு கொஞ்சம் சிரமப்படுவது போல் தோன்றவும் இன்று அதிகாலையிலேயே கால் நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மீனாவின் பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அழகான ஒரு பெண் கன்றினை சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ஈன்றெடுத்திருந்தது பாக்யம்.
"சின்னம்மணி வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல சகுனமுங்கோ. நான் போய் பெரியம்மணிக்கிட்ட சொல்லிப் போட்டு வாரேனுங்" என்று அவர்கள் வீட்டுப் பண்ணையாள் அந்தப் பக்கம் நகரவும், பிறந்த கன்றுக்குட்டி ஒரு முறைத் துள்ளி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழவும் சரியாக இருந்தது.
அப்பொழுதுதான் பாக்யத்திடமிருந்து கன்றுக்குட்டியிடம் வந்து சேர்ந்தாள் மீனா. ஆசைதீர ஒரு முறைத் தடவிப் பார்ப்பதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் தானும் கிணற்றுக்குள் குதித்திருந்தாள் மீனலோசினி.
பிறந்ததிலிருந்தே நீச்சலடித்துப் பழகிய கிணறென்பதால் எந்தப் பயமும் இன்றிக் கிணத்துக்குள் குதித்திருந்தாள். இவள் குதிக்கவும் அங்கிருந்த மற்ற ஆண்கள் கிணற்றுக்குள் குதிக்கத் தயங்க, செல்வி நொடியில் புடவையை உதறிவிட்டு பாவாடையை மேலேற்றிக் கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.
இரு பெண்களுமாகச் சேர்ந்து இருபத்தி ஐந்து கிலோ எடையுடைய அந்தக் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருக்கும் படி வரைக்கும் நீந்தி வந்து ஒருவழியாக அதனைத் தூக்கிக் கொண்டு மேலேறி வந்தார்கள். கொஞ்சம் மேலே ஏறவுமே அங்கிருந்த பண்ணையாட்கள் சென்றுக் கன்றுக்குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.
வெளியே வரவும் கால்நடை மருத்துவர் அந்தக் கன்றுக்குட்டியைப் பரிசோதித்து ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னதும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அதன் பிறகே சுடிதாரை உதறிக் கொண்டு மேலே வந்த மீனா பார்த்ததெல்லாம் தன்னை முறைத்துக் கொண்டு நின்றத் தன்னுடைய அம்மத்தா கோதையைத்தான்.
"அம்மத்தா நீங்க எதுக்குங் இம்புட்டுத் தூரம் வந்தீங்?" என்று அசடு வழிந்து கொண்டே கேள்வி கேட்க,
"நான் வாரது இருக்கட்டுங்கண்ணு. நீ என்ன பண்ணியிருக்குறேன்னு புரியுதா? ஒன்ன ஆரு கண்ணு கிணத்துக்குள்ளாற குதிக்க சொன்னது? நீ குதிச்சதால இவிங்க ஆரும் குதிக்க முடியாம நிக்கிறாங்க.
ஆம்பளை ஆளுக குதிச்சா சுளுவா கன்னைத் தூக்கிடுவாங்க. உன்னால முடியுமா கண்ணு. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா உன்ர அப்பன் ஆத்தாளுக்கு ஆரு பதில் சொல்றது கண்ணு" என்று கடிந்தவாறே பேத்தியின் கைப்பிடித்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார் கோதை.
"அம்மத்தா... அம்மத்தா... ஒரே நிமிசமுங். நான் இன்னும் கன்னுக்குட்டியை ஒழுங்கா கொஞ்சவே இல்லீங். நீங்க வூட்டுக்குப் போறதுக்குள்ளார நான் ஒரே ஒருக்கா கொஞ்சிப் போட்டு வந்துடறேனுங்க அம்மத்தா. ப்ளீஸ்..." என்று சிறு பிள்ளையாய் மாறிக் கெஞ்சும் பேத்தியைக் கண்டு இளகிய மனத்தை இறுக்கிப் பிடித்தவராய்,
"உறம்பிர எல்லாம் வார நேரமாச்சு கண்ணு. பேசாம வா சாமி. உன்ர பொறந்தவன் வந்தப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து கொஞ்சிக்கோங்க" என்று சொல்லியவாறே பிடித்தக் கையை விடாமல் அழைத்துச் சென்றுவிட்டார் கோதை. செல்லும் முன் அங்கிருந்த பண்ணை ஆட்களை முறைக்கவும் தவறவில்லை.
வேறு வழியில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா. தம்பியின் வரவைப் பற்றி அம்மத்தா கூறியதும் அவள் மனதும் குளிர்ந்து தான் போனது. அவ்வளவுப் பிரியம் தம்பியின் மீது. இருவருக்குமிடையில் ஆறு வருட வயது வித்தியாசம்.
தம்பி கேட்டானென்றால் அவனுக்காக எதையும் செய்வாள் மீனலோசினி. ஊருக்குள்ளிருந்த பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு அக்கா சம்பாதிப்பது அனைத்தும் தம்பிக்குத்தான். லலிதா பண விவகாரங்களில் கொஞ்சம் கெடுபிடி. அவ்வளவு எளிதில் அவரிடமிருந்து பயலால் பணம் வாங்கிவிட இயலாது. அதற்காகவே அக்காவுக்கு காக்கா பிடித்து வேண்டியவற்றை வாங்கிவிடுவான்.
இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு வானூர்திப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான் முகிலன். அக்காவுக்கு மட்டும் செல்லமாக முகில். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதால் இப்பொழுதெல்லாம் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைக் காண முடியுமென்பதில் அவ்வளவு கவலை மீனாவுக்கு.
இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அக்காவைப் பெண் பார்க்க வருவதாலும் கல்லூரியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தான். வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட இவ்வளவு ஆவலாக எதிர்பார்க்கவில்லை மீனா. தம்பியின் வரவைத் தான் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள்.
ஒருவழியாக அம்மத்தாவும் பேத்தியும் வீட்டுக்குள் வந்து சேர்ந்தார்கள். மீனாவுடைய ஈர உடையைப் பார்த்து லலிதா திட்டத் தொடங்க அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து உடை மாற்றுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா.
உள்ளே நுழைந்தவுடன் தனது அலைபேசியை எடுத்துத் தம்பிக்கு அழைப்பு விடுக்க,
அண்டமாய் அவனியாகி
அரியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவணத்தான்
தினமும் என் சிரசைக் காக்க
தெய்வீகமான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது ஷண்முகக் கவசம். பழைய காலத்து முறைப்படி கட்டப்பட்ட தொட்டிக் கட்டு வீடு. வீட்டின் நடுவில் இருந்த முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்த துளசிச் செடி சொல்லாமல் சொன்னது அந்த வீட்டின் செழுமையை.
துளசி மாடத்தில் விளக்கேற்றப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் பின்புறம் வலது கோடியிலிருந்த பூஜை அறையில் அமர்ந்து ஷண்முகக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார் கோதை.
கோதை, பெயருக்கேற்றாற் போன்ற தெய்வீகக் களை பொருந்திய முகம். பார்ப்பதற்கு அசப்பில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த நடிகை பத்மினியைப் போன்ற தோற்ற அமைப்பு. நெற்றியில் சிறு கீற்றாக விபூதி, தங்க நிற பிரேமினால் ஆன கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்தக் கண்களில் அவ்வளவு தீட்சண்யம்.
மூக்கில் இருந்த வைர பேசரி டாலடித்து அவருடைய அழகை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது. அரக்கு நிறத்தில் புடவையணிந்து, புடவைத் தலைப்பை போர்த்தினாற் போல் கொண்டு வந்து முன்புறம் சொருகியிருந்தார்.
கோதையின் கணவர் கமலநாதன் கோவை வட்டாரத்தில் மிகப் பெரிய ஜமீன் வம்சம். கமலநாதனுடைய தாத்தா அரசாங்க உத்தரவுக்கு முன்னதாகவே தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை செய்தவர்களுக்கும், ஊர் மக்களுக்குமாகப் பிரித்துக் கொடுத்த வள்ளல். காலப்போக்கில் ஜமீன் முறை அழிந்தாலும் இவர்களை விடப் பெரும் பணக்காரர்கள் வந்த பொழுதிலும் கூட இவர்களுக்குரிய மரியாதை இன்று வரை நீடித்திருக்கிறது.
கோதை - கமலநாதன் தம்பதியரின் ஒரே செல்ல மகள் லலிதா. அந்த ஊரில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான கரும்பாலை மில்லில் வேலைக்காக வந்தவர் குமரப்பன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய காரணத்தால், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார் கமலநாதன்.
குமரப்பன் குணத்திலும் கரும்பைக் கொண்டிருந்ததால் மிகவும் இனிமையாகவே நடந்தது இல்லறம். ஆசைக்கு ஒரு பெண் மீனலோசினி, ஆஸ்திக்கு ஒரு ஆண் முகிலன் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்கள் லலிதா - குமரப்பன் தம்பதிகளுக்கு.
கமலநாதான் இருக்கும் வரை வரப் போக இருந்தவர், அவர் இறந்த பிறகு கோதையைத் தனியே விட மனமில்லாமல் இங்கேயே குடும்பத்துடன் வந்துவிட்டார் குமரப்பன். தான் எதுவும் சொல்லாமலேயே குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடக்கும் மருமகன் மீது எப்பொழுதுமே தனிப்பாசம் உண்டு கோதைக்கு.
சுலோகங்கள் எல்லாம் சொல்லி முடித்தக் கோதை மணியடித்துக் கொண்டே தீபாராதனை காட்டவும் சமையலறையில் இருந்து அவரது மகள் லலிதாவும், வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது மருமகன் குமரப்பனும் வந்து தீப ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் துளசித் தீர்த்தம் வழங்கியவாறே,
"மீனா எங்கம்மணி?" என்றுத் தன் மகள் லலிதாவிடம் கேள்வி எழுப்பினார் கோதை.
"இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க் வாராங்க் இல்லீங்கம்மா, அதுதானுங்க நான் நம்ம செல்வி புள்ளைய வாசத் தொளிச்சு சாணம் போட்டு மொழுகிக் கொஞ்சம் பெரிய கோலமா போடச் சொன்னேனுங்கம்மா. உங்க பேத்தி தானே ரங்கோலி போடறதா சொல்லிப் போட்டுக் காலையிலிருந்து அங்கனயே தானுங்கம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கா" என்றார் லலிதா.
"நல்லாயிருக்கு அம்மணி நீ சொல்றது. அவளைப் பொண்ணு பார்க்க வாரதுக்கு அவளையே கோலம் போடச் சொன்னியாக்கும். போய் வெரசா முடிச்சுட்டு உள்ர வரச் சொல்லு அம்மணி" என்று கோதை சொல்லத் தான் சென்று அழைத்து வருவதாகக் கூறி லலிதா வாசலுக்குச் சென்றார்.
அங்கு பல வண்ணக் கலவையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தது பல வகைப் பூக்களும் அவற்றுக்கிடையில் ஒரு மயிலும். அந்த அவசரத்திலும் ஒரு நிமிடம் நின்றுத் தன் மகளின் கைவண்ணத்தை ரசித்துவிட்டே அவளைத் தேடிக் கொண்டு சென்றார் லலிதா.
"ராசு சின்னம்மணி எங்க?" என்று அங்கிருந்த பண்ணை ஆளிடம் கேட்க,
"நம்ம பாக்யம் கன்னுக்குட்டி ஈன்றுச்சுங்க அம்மணி. செல்விப் பொண்ணு வந்து அதைச் சொல்லவும் சின்னம்மணி கட்டுத்தரைக்குப் போயிட்டாங்கங்கோ" என்று பணிவாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.
"இந்தப் பொண்ணோட" என்று முணுமுணுத்தவாறே வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார் லலிதா.
அங்கு சென்றும் மீனலோசனியைக் காணாமல், அதற்கு மேலும் தேடுவதற்கு அந்தப் பரந்து விரிந்தத் தோட்டம் அனுமதி தர மறுத்தக் காரணத்தால் வீட்டுக்குள் சென்று கோதையிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் அவர்.
மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் எப்பொழுதும் வீட்டுப் பெண்களிடம்தான். அதனால் அவர் அதைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டார். இன்று முதன் முறையாக அவருடைய ஆசை மகளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனரே! அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டுமே என்ற பதட்டம் கொஞ்சமல்ல நிறையவே இருந்தது லலிதாவுக்கு.
மாட்டுத்தொழுவத்திலிருந்து சற்றுத் தள்ளி வாழைத் தோப்புக்கு அருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி மீனலோசனி. ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கொங்கு நாட்டுக்கே உரித்தான வாளிப்பானத் தோற்றம், செம்மஞ்சள் நிறமுடைய அழகி.
அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப்பட்டிருக்க, ஆர்கிட் நிறச் சுடிதார் அவள் இடை தழுவியிருந்தது. அவள் கன்றிலிருந்தே ஆசையாக வளர்க்கும் பாக்யம் எனும் பசுமாடு இன்று கன்று ஈனப் போவதால் நேற்றிலிருந்து அந்த மாட்டைத் தான் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மீனா. இரவில் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை அவளால்.
மாடு கொஞ்சம் சிரமப்படுவது போல் தோன்றவும் இன்று அதிகாலையிலேயே கால் நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மீனாவின் பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அழகான ஒரு பெண் கன்றினை சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ஈன்றெடுத்திருந்தது பாக்யம்.
"சின்னம்மணி வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல சகுனமுங்கோ. நான் போய் பெரியம்மணிக்கிட்ட சொல்லிப் போட்டு வாரேனுங்" என்று அவர்கள் வீட்டுப் பண்ணையாள் அந்தப் பக்கம் நகரவும், பிறந்த கன்றுக்குட்டி ஒரு முறைத் துள்ளி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழவும் சரியாக இருந்தது.
அப்பொழுதுதான் பாக்யத்திடமிருந்து கன்றுக்குட்டியிடம் வந்து சேர்ந்தாள் மீனா. ஆசைதீர ஒரு முறைத் தடவிப் பார்ப்பதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் தானும் கிணற்றுக்குள் குதித்திருந்தாள் மீனலோசினி.
பிறந்ததிலிருந்தே நீச்சலடித்துப் பழகிய கிணறென்பதால் எந்தப் பயமும் இன்றிக் கிணத்துக்குள் குதித்திருந்தாள். இவள் குதிக்கவும் அங்கிருந்த மற்ற ஆண்கள் கிணற்றுக்குள் குதிக்கத் தயங்க, செல்வி நொடியில் புடவையை உதறிவிட்டு பாவாடையை மேலேற்றிக் கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.
இரு பெண்களுமாகச் சேர்ந்து இருபத்தி ஐந்து கிலோ எடையுடைய அந்தக் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருக்கும் படி வரைக்கும் நீந்தி வந்து ஒருவழியாக அதனைத் தூக்கிக் கொண்டு மேலேறி வந்தார்கள். கொஞ்சம் மேலே ஏறவுமே அங்கிருந்த பண்ணையாட்கள் சென்றுக் கன்றுக்குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.
வெளியே வரவும் கால்நடை மருத்துவர் அந்தக் கன்றுக்குட்டியைப் பரிசோதித்து ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னதும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அதன் பிறகே சுடிதாரை உதறிக் கொண்டு மேலே வந்த மீனா பார்த்ததெல்லாம் தன்னை முறைத்துக் கொண்டு நின்றத் தன்னுடைய அம்மத்தா கோதையைத்தான்.
"அம்மத்தா நீங்க எதுக்குங் இம்புட்டுத் தூரம் வந்தீங்?" என்று அசடு வழிந்து கொண்டே கேள்வி கேட்க,
"நான் வாரது இருக்கட்டுங்கண்ணு. நீ என்ன பண்ணியிருக்குறேன்னு புரியுதா? ஒன்ன ஆரு கண்ணு கிணத்துக்குள்ளாற குதிக்க சொன்னது? நீ குதிச்சதால இவிங்க ஆரும் குதிக்க முடியாம நிக்கிறாங்க.
ஆம்பளை ஆளுக குதிச்சா சுளுவா கன்னைத் தூக்கிடுவாங்க. உன்னால முடியுமா கண்ணு. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா உன்ர அப்பன் ஆத்தாளுக்கு ஆரு பதில் சொல்றது கண்ணு" என்று கடிந்தவாறே பேத்தியின் கைப்பிடித்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார் கோதை.
"அம்மத்தா... அம்மத்தா... ஒரே நிமிசமுங். நான் இன்னும் கன்னுக்குட்டியை ஒழுங்கா கொஞ்சவே இல்லீங். நீங்க வூட்டுக்குப் போறதுக்குள்ளார நான் ஒரே ஒருக்கா கொஞ்சிப் போட்டு வந்துடறேனுங்க அம்மத்தா. ப்ளீஸ்..." என்று சிறு பிள்ளையாய் மாறிக் கெஞ்சும் பேத்தியைக் கண்டு இளகிய மனத்தை இறுக்கிப் பிடித்தவராய்,
"உறம்பிர எல்லாம் வார நேரமாச்சு கண்ணு. பேசாம வா சாமி. உன்ர பொறந்தவன் வந்தப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து கொஞ்சிக்கோங்க" என்று சொல்லியவாறே பிடித்தக் கையை விடாமல் அழைத்துச் சென்றுவிட்டார் கோதை. செல்லும் முன் அங்கிருந்த பண்ணை ஆட்களை முறைக்கவும் தவறவில்லை.
வேறு வழியில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா. தம்பியின் வரவைப் பற்றி அம்மத்தா கூறியதும் அவள் மனதும் குளிர்ந்து தான் போனது. அவ்வளவுப் பிரியம் தம்பியின் மீது. இருவருக்குமிடையில் ஆறு வருட வயது வித்தியாசம்.
தம்பி கேட்டானென்றால் அவனுக்காக எதையும் செய்வாள் மீனலோசினி. ஊருக்குள்ளிருந்த பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு அக்கா சம்பாதிப்பது அனைத்தும் தம்பிக்குத்தான். லலிதா பண விவகாரங்களில் கொஞ்சம் கெடுபிடி. அவ்வளவு எளிதில் அவரிடமிருந்து பயலால் பணம் வாங்கிவிட இயலாது. அதற்காகவே அக்காவுக்கு காக்கா பிடித்து வேண்டியவற்றை வாங்கிவிடுவான்.
இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு வானூர்திப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான் முகிலன். அக்காவுக்கு மட்டும் செல்லமாக முகில். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதால் இப்பொழுதெல்லாம் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைக் காண முடியுமென்பதில் அவ்வளவு கவலை மீனாவுக்கு.
இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அக்காவைப் பெண் பார்க்க வருவதாலும் கல்லூரியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தான். வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட இவ்வளவு ஆவலாக எதிர்பார்க்கவில்லை மீனா. தம்பியின் வரவைத் தான் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள்.
ஒருவழியாக அம்மத்தாவும் பேத்தியும் வீட்டுக்குள் வந்து சேர்ந்தார்கள். மீனாவுடைய ஈர உடையைப் பார்த்து லலிதா திட்டத் தொடங்க அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து உடை மாற்றுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா.
உள்ளே நுழைந்தவுடன் தனது அலைபேசியை எடுத்துத் தம்பிக்கு அழைப்பு விடுக்க,
Last edited: