- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.
இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள், ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். "இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.
"வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் "ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’' என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது.
முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.
செளதி முனிவர், "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.
இப்புராணம், நான்கு பாகங்களை உடையது. முதல் பாகம் உலக உற்பத்தி, தெய்வங்கள் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஆண் பெண் தெய்வங்களின் இயல்புகள், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. இதே பாகம் சுவர்க்கம், நரகம் ஆகியவைகளின் பல்வேறு பகுதிகளைக் கூறுவதுடன் பல்வேறு நோய்கள், அவற்றைப் போக்கிக் கொள்ளும் வகைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. மூன்றாவது பாகம் கணேசர் என்ற தெய்வத்தின் தோற்றம், அவரைப் போற்றும் பாடல்கள், பிருகு முனிவருடன் கணேசன் நடத்திய உரையாடல் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. நான்காவது பாகம் கிருஷ்ணனுடைய பிறப்பு லீலைகள் என்பனவற்றை முக்கியமாகப் பேசுகிறது.
பிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிடமாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது.
ஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, ஸ்ரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந்துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்பிரம்மம் என்று சொல்லப்படும்.
பிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், ஸ்ரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.
கிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச
குணத்தின் வடிவாய் பிரம்மா தோன்றினார். நான்கு முகங்களும், கையில் கமண்டலமும் இருந்தன. பிரம்மனும், சிவனும் கிருஷ்ணனின் புகழ்பாடி, கிருஷ்ணனுக்கு எதிரே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தனர். கிருஷ்ணனின் மார்பிலிருந்து தர்மதேவதை தோன்றினாள். கிருஷ்ணனின் வாயிலிருந்து, வெள்ளை நிற உடையுடுத்தி ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் வீணையும் கொண்டு கல்வித் தெய்வம் சரஸ்வதி அவதரித்தாள். கிருஷ்ணனின் மனத்திலிருந்து, தங்க நிறத்துடன், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தோன்றினாள். சொர்க்கத்தில் அவளுக்குச் சுவர்க்க லட்சுமி என்றும், அரசர்களிடையே ராஜலட்சுமி என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணனின் நினைவுகளிலிருந்து, போர்த் தெய்வமான துர்க்கை தோன்றினாள். எல்லா தெய்வங்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிவிட்டுத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
கிருஷ்ணனின் நாக்கிலிருந்து தோன்றியவர் சாவித்திரி. சாவித்திரி மந்திரம் மிகப் புண்ணியமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். கிருஷ்ணனின் உணர்வு நிலையில் இருந்து மன்மதனும், மன்மதனின் இடப்பக்கமிருந்து ரதியும் தோன்றினர். பிறகு பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எங்கும் ஒரே நீர்ப்பரப்பு. அண்டம் என்ற பெயருடைய முட்டை கிருஷ்ணனிடம் இருந்து தோன்றியது. அந்த முட்டை யிலிருந்து ஒரு மாபெரும் வடிவம் தோன்றியது. இந்த வடிவமே விஷ்ணுவாகும். இவ்வடிவம் நீரில் மிதந்து கொண்டிருந்த பொழுது விஷ்ணுவின் இரண்டு காதுகளில் இருந்து மது, கைடவர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். இந்த இரண்டு அசுரர்களும் தாம் தோன்றிய உடனேயே பிரம்மனைக் கொல்ல முனைந்தனர். ஆனால் நாராயணன் அவர்களைத் தன் தொடைகளின் இடையே வைத்து நசுக்கிக் கொன்றார். அந்த இருவரின் சடலத்தின் கொழுப்பிலிருந்து உலகம் உண்டாயிற்று. மேதா என்று சொல்லப்படும் கொழுப்பிலிருந்து உலகம் உண்டானதால், அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மற்ற புராணங்களில் உலகத் தோற்றம் பற்றிக் கூறியதற்கும், இப் புராணத்தில் கூறப்பட்டதற்கும் திறை வேறுபாடுகள் உள்ளன, )
(இதற்கு அடுத்தபடியாக பிரம்ம வைவர்த்த புராணம் காலம் பற்றிப் பேசுகிறது. இதனை முன்பே பிரம்ம புராணத்தில் கூறியிருக்கிறோம்),
கோலோகாவில், ரசமண்டலத்தில் கிருஷ்ணன் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது அவரது இடப்பாகத்தில் இருந்து, முழு அலங்காரங்களுடன் கூடிய, பதினாறு வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி தோன்றினாள். ரசமண்டலத்தில் தோன்றியதால் இவள் பெயர் ராதை என்றாயிற்று. (பதினெட்டுப் புராணங்களில் இந்தப் புராணம் ராதையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அடுத்தபடியாக பத்ம புராணம் போகிற போக்கில் ராதையின் பெயரைச் சொல்விச் செல்கிறது. இவை இரண்டு புராணங்கள் தவிர, வேறு எந்தப் புராணத் திலும் ராதையின் பெயரோ, அவளைப் பற்றிய குறிப்புகளே7 எதுவுமில்லை, டாகவதத்தில் கூட- கிருஷ்ணன் வரலாறு விரிவாகக் கூறப்பட்ட இடங்களில் கூட ராதையின் பெயரே இல்லை என்பது அறியத்தக்கது,) ராதையின் ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் அழகு வாய்ந்த கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடம்பு மயிர்க்காலில் இருந்து முப்பது கோடி கோபிகைகள் தோன்றினர். இவர்களை அல்லாமல், பசுக்கள், எருதுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னப்பறவைகள் முதலியவை கிருஷ்ணனின் உடலிலிருந்து தோன்றின.
கிருஷ்ணன் தன் உடலில் இருந்து வந்த எருதை சிவனுக்கும், அன்னத்தை பிரம்மாவிற்கும், வெண்குதிரையை தர்ம தேவதைக்கும், சிங்கத்தை துர்க்கைக்கும் கொடுத்தார். ஐந்து அற்புதமான ரதங்கள் அவர் உடலினின்று தோன்றின. அவற்றில் ஒன்றை ராதைக்கும் ஒன்றை நாராயணனுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றைத் தானே இருத்திக்கொண்டார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டு, தானே மனோரமா என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் உடம்பில் இருந்து, குபேரன் பணியாளர்கள், சிவன் பணியாளர்கள், நாராயணன் பணியாளர்கள் வெளிப்பட்டனர்.
லட்சுமியும், சரஸ்வதியும் திருமாலை மணந்து கொண்டனர். (சரஸ்வதி நாராயணனை மணந்து கொண்டார் என்ற இந்த விநோதமான செய்தி இந்தப் புராணத்திற்கே உரியது), பிரம்மன் சாவித்ரியையும், ரதி மன்மதனையும், மனோரமா குபேரனையும் மணந்தனர். துர்க்கையை மணந்து கொள்ளுமாறு சிவனை வேண்ட, அவர் தாம் துறவியாக இருக்க விரும்புவதாகவும், தமக்குத் திருமணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன் ஒருகோடி கல்பங்களுக்குப் பிறகு சிவன் துறவியாக இருந்து விட்டுப் பிறகு துர்க்கையை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இப்பொழுது பிரம்மனுக்கு அழகிய மாலை ஒன்றைக் கொடுத்து, ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்ய வேண்டும்- அதன் பிறகு படைத்தல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, கோபிகைகளை அழைத்துக் கொண்டு பிருந்தாவனம் போய்விட்டார்.
கிருஷ்ணன் கூறிச் சென்றது போல், பிரம்மன், மது, கைடபர்களின் கொழுப்பினை எடுத்து உலகைப் படைத்தார். அடுத்து மலைகளையும், எட்டு முக்கியமான மலைகளையும் படைத்தார். அவை சுமேரு கைலாசம், மாலயா, இமயமலை, உதயசலா, அஷ்டசலா, சுபேலா, கந்தமாதனா என்பனவாகும். எண்ணற்ற ஆறுகளையும் கிராமங்களையும் படைத்தார். முதன்மை வாய்ந்த சமுத்திரங்களான லவண, இக்ஷி, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெரிய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும்.
பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார்.
பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து "துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய ஞானம் அற்றவனாகவும், பணிப் பெண்ணின் மகனாகவும் பிறப்பாய்” என்று சாபமிட்டார். இதைக்கேட்ட நாரதர் பிரம்மனைப் பார்த்து "இனி மூன்று கல்பங்களுக்கு பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று சாபமிட்டார். மற்ற முனிவர்கள் படைத்தல் தொழிலைச் செய்தனர். மரீச்சி யினின்று காசிப முனிவனும், அத்ரியிடமிருந்து சந்திரனும், பிரசேத்தா, புலஸ்தியர் ஆகியோரிடமிருந்து முறையே கெளதமரும், அகஸ்தியரும் தோன்றினர்.
(இதையடுத்துக் கூறப்பட்டிருக்கும் மனு ஷடரூபாவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது).
பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.
இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள், ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். "இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.
"வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் "ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’' என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது.
முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.
செளதி முனிவர், "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.
இப்புராணம், நான்கு பாகங்களை உடையது. முதல் பாகம் உலக உற்பத்தி, தெய்வங்கள் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஆண் பெண் தெய்வங்களின் இயல்புகள், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. இதே பாகம் சுவர்க்கம், நரகம் ஆகியவைகளின் பல்வேறு பகுதிகளைக் கூறுவதுடன் பல்வேறு நோய்கள், அவற்றைப் போக்கிக் கொள்ளும் வகைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. மூன்றாவது பாகம் கணேசர் என்ற தெய்வத்தின் தோற்றம், அவரைப் போற்றும் பாடல்கள், பிருகு முனிவருடன் கணேசன் நடத்திய உரையாடல் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. நான்காவது பாகம் கிருஷ்ணனுடைய பிறப்பு லீலைகள் என்பனவற்றை முக்கியமாகப் பேசுகிறது.
பிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிடமாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது.
ஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, ஸ்ரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந்துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்பிரம்மம் என்று சொல்லப்படும்.
பிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், ஸ்ரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.
கிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச
குணத்தின் வடிவாய் பிரம்மா தோன்றினார். நான்கு முகங்களும், கையில் கமண்டலமும் இருந்தன. பிரம்மனும், சிவனும் கிருஷ்ணனின் புகழ்பாடி, கிருஷ்ணனுக்கு எதிரே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தனர். கிருஷ்ணனின் மார்பிலிருந்து தர்மதேவதை தோன்றினாள். கிருஷ்ணனின் வாயிலிருந்து, வெள்ளை நிற உடையுடுத்தி ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் வீணையும் கொண்டு கல்வித் தெய்வம் சரஸ்வதி அவதரித்தாள். கிருஷ்ணனின் மனத்திலிருந்து, தங்க நிறத்துடன், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தோன்றினாள். சொர்க்கத்தில் அவளுக்குச் சுவர்க்க லட்சுமி என்றும், அரசர்களிடையே ராஜலட்சுமி என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணனின் நினைவுகளிலிருந்து, போர்த் தெய்வமான துர்க்கை தோன்றினாள். எல்லா தெய்வங்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிவிட்டுத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
கிருஷ்ணனின் நாக்கிலிருந்து தோன்றியவர் சாவித்திரி. சாவித்திரி மந்திரம் மிகப் புண்ணியமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். கிருஷ்ணனின் உணர்வு நிலையில் இருந்து மன்மதனும், மன்மதனின் இடப்பக்கமிருந்து ரதியும் தோன்றினர். பிறகு பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எங்கும் ஒரே நீர்ப்பரப்பு. அண்டம் என்ற பெயருடைய முட்டை கிருஷ்ணனிடம் இருந்து தோன்றியது. அந்த முட்டை யிலிருந்து ஒரு மாபெரும் வடிவம் தோன்றியது. இந்த வடிவமே விஷ்ணுவாகும். இவ்வடிவம் நீரில் மிதந்து கொண்டிருந்த பொழுது விஷ்ணுவின் இரண்டு காதுகளில் இருந்து மது, கைடவர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். இந்த இரண்டு அசுரர்களும் தாம் தோன்றிய உடனேயே பிரம்மனைக் கொல்ல முனைந்தனர். ஆனால் நாராயணன் அவர்களைத் தன் தொடைகளின் இடையே வைத்து நசுக்கிக் கொன்றார். அந்த இருவரின் சடலத்தின் கொழுப்பிலிருந்து உலகம் உண்டாயிற்று. மேதா என்று சொல்லப்படும் கொழுப்பிலிருந்து உலகம் உண்டானதால், அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மற்ற புராணங்களில் உலகத் தோற்றம் பற்றிக் கூறியதற்கும், இப் புராணத்தில் கூறப்பட்டதற்கும் திறை வேறுபாடுகள் உள்ளன, )
(இதற்கு அடுத்தபடியாக பிரம்ம வைவர்த்த புராணம் காலம் பற்றிப் பேசுகிறது. இதனை முன்பே பிரம்ம புராணத்தில் கூறியிருக்கிறோம்),
கோலோகாவில், ரசமண்டலத்தில் கிருஷ்ணன் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது அவரது இடப்பாகத்தில் இருந்து, முழு அலங்காரங்களுடன் கூடிய, பதினாறு வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி தோன்றினாள். ரசமண்டலத்தில் தோன்றியதால் இவள் பெயர் ராதை என்றாயிற்று. (பதினெட்டுப் புராணங்களில் இந்தப் புராணம் ராதையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அடுத்தபடியாக பத்ம புராணம் போகிற போக்கில் ராதையின் பெயரைச் சொல்விச் செல்கிறது. இவை இரண்டு புராணங்கள் தவிர, வேறு எந்தப் புராணத் திலும் ராதையின் பெயரோ, அவளைப் பற்றிய குறிப்புகளே7 எதுவுமில்லை, டாகவதத்தில் கூட- கிருஷ்ணன் வரலாறு விரிவாகக் கூறப்பட்ட இடங்களில் கூட ராதையின் பெயரே இல்லை என்பது அறியத்தக்கது,) ராதையின் ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் அழகு வாய்ந்த கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடம்பு மயிர்க்காலில் இருந்து முப்பது கோடி கோபிகைகள் தோன்றினர். இவர்களை அல்லாமல், பசுக்கள், எருதுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னப்பறவைகள் முதலியவை கிருஷ்ணனின் உடலிலிருந்து தோன்றின.
கிருஷ்ணன் தன் உடலில் இருந்து வந்த எருதை சிவனுக்கும், அன்னத்தை பிரம்மாவிற்கும், வெண்குதிரையை தர்ம தேவதைக்கும், சிங்கத்தை துர்க்கைக்கும் கொடுத்தார். ஐந்து அற்புதமான ரதங்கள் அவர் உடலினின்று தோன்றின. அவற்றில் ஒன்றை ராதைக்கும் ஒன்றை நாராயணனுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றைத் தானே இருத்திக்கொண்டார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டு, தானே மனோரமா என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் உடம்பில் இருந்து, குபேரன் பணியாளர்கள், சிவன் பணியாளர்கள், நாராயணன் பணியாளர்கள் வெளிப்பட்டனர்.
லட்சுமியும், சரஸ்வதியும் திருமாலை மணந்து கொண்டனர். (சரஸ்வதி நாராயணனை மணந்து கொண்டார் என்ற இந்த விநோதமான செய்தி இந்தப் புராணத்திற்கே உரியது), பிரம்மன் சாவித்ரியையும், ரதி மன்மதனையும், மனோரமா குபேரனையும் மணந்தனர். துர்க்கையை மணந்து கொள்ளுமாறு சிவனை வேண்ட, அவர் தாம் துறவியாக இருக்க விரும்புவதாகவும், தமக்குத் திருமணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன் ஒருகோடி கல்பங்களுக்குப் பிறகு சிவன் துறவியாக இருந்து விட்டுப் பிறகு துர்க்கையை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இப்பொழுது பிரம்மனுக்கு அழகிய மாலை ஒன்றைக் கொடுத்து, ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்ய வேண்டும்- அதன் பிறகு படைத்தல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, கோபிகைகளை அழைத்துக் கொண்டு பிருந்தாவனம் போய்விட்டார்.
கிருஷ்ணன் கூறிச் சென்றது போல், பிரம்மன், மது, கைடபர்களின் கொழுப்பினை எடுத்து உலகைப் படைத்தார். அடுத்து மலைகளையும், எட்டு முக்கியமான மலைகளையும் படைத்தார். அவை சுமேரு கைலாசம், மாலயா, இமயமலை, உதயசலா, அஷ்டசலா, சுபேலா, கந்தமாதனா என்பனவாகும். எண்ணற்ற ஆறுகளையும் கிராமங்களையும் படைத்தார். முதன்மை வாய்ந்த சமுத்திரங்களான லவண, இக்ஷி, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெரிய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும்.
பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார்.
பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து "துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய ஞானம் அற்றவனாகவும், பணிப் பெண்ணின் மகனாகவும் பிறப்பாய்” என்று சாபமிட்டார். இதைக்கேட்ட நாரதர் பிரம்மனைப் பார்த்து "இனி மூன்று கல்பங்களுக்கு பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று சாபமிட்டார். மற்ற முனிவர்கள் படைத்தல் தொழிலைச் செய்தனர். மரீச்சி யினின்று காசிப முனிவனும், அத்ரியிடமிருந்து சந்திரனும், பிரசேத்தா, புலஸ்தியர் ஆகியோரிடமிருந்து முறையே கெளதமரும், அகஸ்தியரும் தோன்றினர்.
(இதையடுத்துக் கூறப்பட்டிருக்கும் மனு ஷடரூபாவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது).