Lakshmi2309
புதிய முகம்
உனக்கு பிடித்ததைச் செய்வதையே
பிடிப்பாய் கொண்டவள் நான்!
பிரிவென்பதே உன் பிடித்தமென
அறிந்தபோது ஊமையாய் உள்ளமழுதாலும்
உயிர்வலி பொறுத்தேனும் உனக்காய்
மாட்டேனென்று மறுப்பேனோ நான்!!
இனி கற்பனையில்தான் என் வாழ்வு
கனவில்தான் என் மகிழ்ச்சி!
நானும் நானே! நீயும் நானே!
காயப்பட வாய்ப்பில்லை!
கலைப்பார் யாருமில்லை!
கண்மூடும் நாள்வரை!!
பிடிப்பாய் கொண்டவள் நான்!
பிரிவென்பதே உன் பிடித்தமென
அறிந்தபோது ஊமையாய் உள்ளமழுதாலும்
உயிர்வலி பொறுத்தேனும் உனக்காய்
மாட்டேனென்று மறுப்பேனோ நான்!!
இனி கற்பனையில்தான் என் வாழ்வு
கனவில்தான் என் மகிழ்ச்சி!
நானும் நானே! நீயும் நானே!
காயப்பட வாய்ப்பில்லை!
கலைப்பார் யாருமில்லை!
கண்மூடும் நாள்வரை!!