என்னுள் ஒரு கேள்வி. ஒருவன் நல்லவனாகவே இருக்கட்டும். அவன் அவளுக்கு தகுதியானவனாகவே இருக்கட்டும். அவன் அவள் மேல் கொண்ட காதலும் உண்மையாகவே இருக்கட்டும்.
இதற்காகவெல்லாம், அவள் அவனை விரும்பி விட வேண்டுமா? தேடி வந்து காதலை சொல்லும் பொழுது ஒரு பெண் அதை புறக்கணித்தால், அவள் திமிர் பிடித்தவளா?
வேண்டும் என்று கேட்கும் உரிமை அவனுக்கு இருக்கும்பொழுது வேண்டாம் என்று சொல்லும் உரிமை அவளுக்கு இல்லையா?
கண்டிப்பாக உண்டு
அன்பு என்றாலே எதிர்பார்ப்பில்லாமல் செலுத்தகூடிய ஒன்று, உருவங்களையோ, உள் எண்ணங்களையோ அறிந்து,ஆராய்ந்து அன்பு செலுத்தலில் எவரும் ஈடுபடுவதில்லை.
அப்படி ஆராந்து செயல்படுவது அன்பன்ல்ல அவை வணிகமாகும. ஆதலால், காதல் கொண்டவருக்கு தான் காதலிக்கும் துணையும் தன்னை காதலிக்க வேண்டும் என்பது முரணாகும்