JeyaBharathi
மண்டலாதிபதி
பிறைவளர் சோலை
நீள்வாழ்வில் நீந்த
ஒளிகோர்க்க போதித்த
பஞ்சாயத்து பாடசாலை...
புளுக்கட்டை பென்சிலிலும்
புது சிலேட்டு குச்சியிலும்
புளங்காகிதமடை பால்யம்..
நெருக்கம் நீருபிக்க
ஆசிரிய கைப்பை சுமந்த
அறியாப்பெருமித பொழுதுகள்...
இடைவேளை நேரத்து
இம்சை விருந்தாளியாய்
நீர் விருந்தாடிய
பள்ளி அண்டைவீடுகள்...
கபடியெனும் பெயரில்
தொடுகோடு எட்ட
கட்டாந்தரையில் மல்லுக்கட்டிய
பாலினமறியா பால்யம்..
புதுசட்டையில் கரையிட்டதாய்
பொல்லாப்பு கூட்டிய
பஞ்சாயத்து நிமிடங்கள்..
பள்ளிவளாகம் பெருக்க
பகுமானமாய் விளக்கமாறு தூக்கிய
பாகுபாடில்லா பால்ய கரங்கள்...
கார்மேக கைங்கரியத்தில்
சருவத்தாள் போர்த்தி
பைக்கட்டுனுள் குடியேறிய பாடப்புத்தகங்கள்...
தூரவீடுகளுக்கு
நடைத்துணையாய் வந்த
அஞ்சாங்கிளாஸ் அண்ணன்கள்..
அக்காமார் அள்ளிவிட்ட
பேய்கதைகளில் பீதியுற்ற
பேதை நிமிடங்கள்...
நிறைவென்பதே அறியாது
நில்லாவோட்ட நீள்வாழ்வின்
நினைவடுக்குகளிடையே,
ஓரமாய் உறைந்து
சுழல் வாழ்வின்
சூழல் போதிக்கும்,
ஏழ்மை சுவைத்த
ஏதுமறியா பிள்ளைபருவ
சுக பொழுதுகள்..