• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புத்தகங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Santhana Krishna

புதிய முகம்
Joined
Apr 18, 2021
Messages
8
Reaction score
7
Location
Coimbatore
உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையும் ஏது?
காலையில் நான் காணும் முதல் காட்சியும் நீ தான் !
இரவில் நான் உயிரோடு இருந்ததற்கு கடைசி சாட்சியும் நீ தான் !
உன்னைத் தொட்டுப் பார்க்கும்போது என் மனம் குதூகலிக்கும் !
உன்னைப் படித்து முடித்ததும் என் மனம் பரிதவிக்கும் !
எங்கெங்கு சென்றாலும் என் உறவாய் நீ வருவாய் !
என் கைப்பைக்குள்ளும் கட்சிதமாய் கையடக்க வடிவில் நீ அமர்வாய் !
குடும்பமாய் வாழும் யுக்தியையும் கற்றுத்தந்தாய் !
தனித்து வாழவும் தைரியம் தந்தாய் !
என்‌ கேள்விக்கெல்லாம் பதிலளித்தாய் !
என் வாழ்வியலுக்கு வழி மொழிந்தாய் !
பிள்ளைகளை சுமக்கும் சுகம் உன்னை சுமந்ததிலே உணர்ந்தேன் !
கண்ணை விட்டு எடுக்காமல் உன்னை படித்து முடித்தேன் கனவிலும் !
உலகம் என்ன என்று என் கண் முன் காட்டினாய் !
அதில் நான் யார் என்று என் கருத்தில் நிறுத்தினாய் !
காத்திருப்பேன் காதலனாய் உன் வரவிற்க்காக !
கண்டதும் நான் மறந்திருப்பேன் என் உறவுகளையே !
எல்லாப் பொழுதும் என்னுடன் நீயிருக்க
பொல்லாத பொழுதென்று ஏதொன்றும் இல்லை !
பொருளாக நினைத்திருந்தால் போதும் என்று நினைத்திருப்பேன் !
என் உயிராக நினைத்துவிட்டேன் எளிதில் உன்னை விட மாட்டேன் !
என் அன்பின் பாத்திரமே- நீ பத்திரமாய் இருக்க
மாடியில் உனக்கொரு மாளிகை கட்டிவிடுவேன் வரும்காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியாவது.....
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையும் ஏது?
காலையில் நான் காணும் முதல் காட்சியும் நீ தான் !
இரவில் நான் உயிரோடு இருந்ததற்கு கடைசி சாட்சியும் நீ தான் !
உன்னைத் தொட்டுப் பார்க்கும்போது என் மனம் குதூகலிக்கும் !
உன்னைப் படித்து முடித்ததும் என் மனம் பரிதவிக்கும் !
எங்கெங்கு சென்றாலும் என் உறவாய் நீ வருவாய் !
என் கைப்பைக்குள்ளும் கட்சிதமாய் கையடக்க வடிவில் நீ அமர்வாய் !
குடும்பமாய் வாழும் யுக்தியையும் கற்றுத்தந்தாய் !
தனித்து வாழவும் தைரியம் தந்தாய் !
என்‌ கேள்விக்கெல்லாம் பதிலளித்தாய் !
என் வாழ்வியலுக்கு வழி மொழிந்தாய் !
பிள்ளைகளை சுமக்கும் சுகம் உன்னை சுமந்ததிலே உணர்ந்தேன் !
கண்ணை விட்டு எடுக்காமல் உன்னை படித்து முடித்தேன் கனவிலும் !
உலகம் என்ன என்று என் கண் முன் காட்டினாய் !
அதில் நான் யார் என்று என் கருத்தில் நிறுத்தினாய் !
காத்திருப்பேன் காதலனாய் உன் வரவிற்க்காக !
கண்டதும் நான் மறந்திருப்பேன் என் உறவுகளையே !
எல்லாப் பொழுதும் என்னுடன் நீயிருக்க
பொல்லாத பொழுதென்று ஏதொன்றும் இல்லை !
பொருளாக நினைத்திருந்தால் போதும் என்று நினைத்திருப்பேன் !
என் உயிராக நினைத்துவிட்டேன் எளிதில் உன்னை விட மாட்டேன் !
என் அன்பின் பாத்திரமே- நீ பத்திரமாய் இருக்க
மாடியில் உனக்கொரு மாளிகை கட்டிவிடுவேன் வரும்காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியாவது.....
அருமை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top