அன்புத் தோழமைகளே... என்னோட முதல் பதிவிற்கு லைக்& கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கும் silent readera படிச்சு ஆதரவு குடுத்தவங்களுக்கும் நன்றி...நன்றி... நன்றி...இன்னைக்கு கொஞ்சம் பெரிய பதிவு... கிராமத்த விட்டு நகர்ந்தா தான் கதை எதை நோக்கி போகுதுனு நமக்கு தெரியும்... அதுவுமில்லாம சென்னையில நம்ம ஹீரோயின் இருக்காங்க... அதுக்காகவே நாம போவோம்.... தங்களின் மேலான லைக் & கமெண்ட்ஸ் எதிர்நோக்கி உங்களுடன் நான்...
“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு என்கிட்ட முகங்குடுத்து ஒரு வார்த்தை கூட பேசாம போறான்... பெத்த பிள்ளைக்கு ஒரு ஆரத்தி எடுக்குற பாக்கியமும் இல்லாம போயிருச்சா எனக்கு... எத்தன ஆசையா வந்தேன்.. கொஞ்சமாச்சும் ஏறெடுத்து பார்த்தானா அவன்?”” என்று புலம்ப
“விடு மீனாட்சி... ரொம்ப தொலவுல இருந்து வந்துருக்கான் அந்த அசதியா இருக்கும்...அவனுக்கு காபித்தண்ணிய குடுத்தனுப்பிட்டு சாப்பாடு தயாராயிருச்சானு பாரு.” மனைவி வருந்துவதை தடை செய்தவாறே சுப்பையாவின் சிந்தனை மகனின் நடவடிக்கையில் நிலைத்தது...
“நான் மேல தான் போறேன் குடுங்கம்மா...” என்று தன் அண்ணனுக்கு பிரியமாய் வைத்த கருப்பட்டி காபியை கொண்டு சென்ற சின்னத்தம்பியை
தன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பெரியதம்பி வரவேற்றான்.. “என்னடா நீயே கொண்டு வந்துட்ட... யார்கிட்டயாவது குடுத்து விட்ருக்கலாமே”...”
“இதுல என்னண்ணா இருக்கு... மேல வரும்போது அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்...”” என்றவனிடம் இருந்து காபியை வாங்கி பருகியவன் ஒரு மிடறு முழுங்கிக்கொண்டே
“இந்த டேஸ்ட் எங்கே போனாலும் கிடைக்கதுடா”...” என்று சிலாகித்தவாறே மீதியை உள்ளே அனுப்பினான்....
“அதே மாதிரி தானே வீட்டுல உள்ளவங்ககிட்ட பேசுறதும்... ஏன் நீ யார்கூடயும் பேசாம வந்துட்டே?... அம்மா ரொம்ப கவலப்படுறாங்க” என்று தன் அண்ணன் செய்ததில் தனது பிடித்தமின்மையை காட்டியவனிடம்
“நான் பேசினா இன்னும் கொஞ்சம் கவலப்படுவாங்க அதான் வாய இறுக்க மூடிகிட்டு இருக்கேன்... கொஞ்ச நாள் நான் மௌனச் சாமியாரா இருக்குறதுனு முடிவு பண்ணிட்டேன்”...” பெருமூச்செரிந்தவாறே சொன்னவன்
“நீ எப்படி இருக்கே ? சொல்லு” “ என்று நலம் விசாரித்தான்..
“உன்முன்னாடி தானே நிக்கிறேன்... நீயே பார்த்துக்கோ எப்படி இருக்கேன்னு”” என்றவனை கண்களால் அளந்தான் பெரியவன்...
மாநிறத்தை எட்டி பார்க்கும் நிறத்துடன் உழைத்து உரமேறிய தேகமும், புன்னைகை முகமும், கம்பீரத்தை கூட்டிட அவன் கண்களின் மின்னிய ஒளி மகிழ்ச்சியான வாழ்க்கையின் அளவினை காட்டியது...
“எத்தன மார்க் போட்டே? தேறுவேனா நான்.. சொல்லுண்ணா”..”
“உனக்கு என்னடா? பர்ஸ்ட் கிளாஸ் தான் நீ... உன்ன இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு”...”
“ஆனா எனக்கு சந்தோசம் இல்லன்னா... நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல... என்னதான் முடிவு பண்ணிருக்கே”...” அங்கலாய்த்தவனிடம்
“எல்லாம் நல்லதா தான் யோசிச்சு வச்சுருக்கேன்... கொஞ்ச நாள் ஆகும் அத செஞ்சு முடிக்க...
இங்கிருந்து போய் ரொம்ப கஷ்டபப்ட்டு.. இப்ப அத விட பெரிய கஷ்டத்தோட தான் வந்திருக்கேன்...
இங்கே வர்றதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்”...
வெள்ளைக்காரனுக்கு எவ்ளோ வேலை செஞ்சு குடுத்தாலும் பத்தாது ... பணத்த காட்டியே நம்மள எல்லாம் அடிமையாக்கி வச்சுருக்கான்..
இப்பவும் விடுவேனான்னு நோக வச்சுட்டான்... மாசத்துக்கு அரைகோடி குடுக்குறேன் ஒரு கோடி குடுக்கறேன்னு எங்க உடம்புல கொடிபோர்த்துற வரைக்கும் ஆசைகாட்டியே சக்கையா பிளிஞ்செடுத்துடுவான்”...
இப்போதைக்கு பழைய கம்பெனில தான் வேலைக்கு போகப்போறேன்...
என்ன.. சம்பளத்தை வாரிகுடுக்குற வேலைய விட்டுட்டு வந்துட்டான் மடபயனு எல்லோரும் பின்னாடி பேசுவாங்க.. அப்ப மட்டும் காது கேட்காது மாதிரி இருந்துட்டா பழகிரும்...
உன்ன மாதிரி விவசாயத்தையே படிச்சுட்டு இங்கேயே இருந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்துருக்காது...” என்று சிரித்தபடியே சொன்னவன்
“எங்கேடா நண்டுபயல காணோம்... ஸ்கைப்ல(video call) பேசுறப்ப எல்லாம் துள்ளிக்கிட்டு வருவான் எங்கேடா போனான்”...?”
“இப்போ அவனுக்கு தூங்குற நேரம்.. நீ குளிச்சுட்டு சாப்பாட்டுக்கு கீழே வா. துரைக்கு அப்போ முழிப்பு வந்துருக்கும்..
ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும் வீட்டுக்குள்ளே பாக்கலாம்”. தன் பிள்ளையின் பெருமை பேசினான் சின்னதம்பி...
“வர்றேன் சின்னா.. போகும்போது இந்த ரெண்டு பெட்டியும் கொண்டு போ.. எல்லோருக்கும் கிப்ட்ஸ் இருக்கு.. நீயே பார்த்து பிரிச்சு குடுத்திடு.. அப்பறோம் இந்த பெரிய பெட்டியில இருக்கறதெல்லாம் நண்டு பயலுக்கு தான்.. இத யாருக்கும் குடுத்திடாதே”. என்று மற்றொரு பெட்டியை சுட்டிக்காட்டியவனின் கண்களில் பிள்ளைக்கான பாசம் அப்பட்டமாய் தெரிந்தது...
உணவு உண்ண கீழே வந்தவனை அந்த வீட்டு இரண்டு வயது நண்டுப்பயலின் அமளி துமளியான குரல் வரவேற்றது...
சோட்டா பீம் டீ-சர்ட்டும் அதற்குரிய சார்ட்சுடன் கால்களில் தண்டைச்சலங்கை சத்தமிட, கண்களில் விழும் சுருட்டை முடியும் பளபளக்கும் பளிங்குக் கண்களும் பார்ப்பவர்களை எல்லாம் வசீகரிக்க பால் பற்களை காட்டிய வண்ணம் அவன் சிரித்துகொண்டு இருந்ததை நாள் முழுவதும் பார்த்தாலும் அலுக்காது....
சாப்பாடு ஒரு வாய் வாங்காமால் தன் தாய்க்கு வீட்டை சுற்றிக் காண்பித்துகொண்டிருந்தவன் பெரியப்பனின் கைகளில் வகையாய் மாட்டிகொண்டான்...
“வாடா என் சிங்ககுட்டி உங்கப்பன் சொன்ன மாதிரியே எல்லோரையும் ஓட வைக்குற போல... சித்த நேரம் ஒழுங்கா உக்காருடா”...” என்றவனிடம்
“அவனை கீழே விட்ராதீங்க பெரியத்தான்.. ஒரு வாய் உள்ளே திணிச்சுட்டு இறங்கட்டும்”..” என்று கூறிய படியே வந்த செந்தாமரை சாதாரண காட்டன் சேலைக்கு மாறியிருந்தாள்.
ஒரு கவளம் உணவை திணிக்க “வே...ணாம்..னாம்” என்று மழலையில் மிளிற்றியவாறே தட்டி விட்டவன் கீழே இறங்க முயற்சிக்க இந்த கால சொக்குப்பொடியான கைபேசியை அவன் கைகளில் பெரியப்பன் திணிக்கவும் அமைதியாய் அவன் மடியில் அமர்ந்து ஆராயத் தொடங்கி விட்டான்...
பெரிய தந்தை பேச வைக்க இடையிடையே அவனின் உணவும் உள்ளே போனது...
“உன் பேர் சொல்லுடா குட்டி””
“ச..தி..தர்”...(சசிதரன்)”
“அப்பா பேரு சொல்லுங்க..””
“ப்பா... பே..ரு... சி..த...ம்பி”...” என்று கூற
செந்தாமரையோ “டேய்.. நான் என்ன சொல்லி குடுத்தேன்?”” என்று குரலுயர்த்த
“மு...ல..லி த..ர்..(முரளிதரன்)”” என்று சரியாய் சொன்னான்
“அம்மா பேரு என்ன தங்கம்”..?”.
“ம்மா....பே”...” என்று யோசித்தவன் தன் தந்தையை பார்க்க
“அப்பா சொல்லிருக்கேனேடா... சொல்லு... காலையிலே பிஸ்கி (பிஸ்கட்) சாப்பிடும்போதும் சொன்னியே செல்லம்”...”
“ஹான்”,,,,,” என்ற குரலில் தெரியும் என்று தலையாட்டிவிட்டு
“லோ...த..த..ஸ்” (லோட்டஸ்)” என்று முடிக்க அங்கே உள்ளவர்களின் சிரிப்பால் அந்த வீடே நிறைந்தது..
ஒரு மணிநேரத்திற்கும் முன்னால் இதே வரவேற்பறையில் ஒருவரையொருவர் முகம் திருப்பி சென்ற பெரியவர்களை தன் மழலைப் பேச்சால் ஒன்றிணைத்து விட்டான் அந்த வீட்டின் சின்ன கண்ணன்...
பூவனம்---2
ஆரத்தி எடுத்து விட்டு உள்ளே வந்த மீனாட்சி அம்மாளுக்கு மனம் ஆறவில்லை...
“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு என்கிட்ட முகங்குடுத்து ஒரு வார்த்தை கூட பேசாம போறான்... பெத்த பிள்ளைக்கு ஒரு ஆரத்தி எடுக்குற பாக்கியமும் இல்லாம போயிருச்சா எனக்கு... எத்தன ஆசையா வந்தேன்.. கொஞ்சமாச்சும் ஏறெடுத்து பார்த்தானா அவன்?”” என்று புலம்ப
“விடு மீனாட்சி... ரொம்ப தொலவுல இருந்து வந்துருக்கான் அந்த அசதியா இருக்கும்...அவனுக்கு காபித்தண்ணிய குடுத்தனுப்பிட்டு சாப்பாடு தயாராயிருச்சானு பாரு.” மனைவி வருந்துவதை தடை செய்தவாறே சுப்பையாவின் சிந்தனை மகனின் நடவடிக்கையில் நிலைத்தது...
“நான் மேல தான் போறேன் குடுங்கம்மா...” என்று தன் அண்ணனுக்கு பிரியமாய் வைத்த கருப்பட்டி காபியை கொண்டு சென்ற சின்னத்தம்பியை
தன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பெரியதம்பி வரவேற்றான்.. “என்னடா நீயே கொண்டு வந்துட்ட... யார்கிட்டயாவது குடுத்து விட்ருக்கலாமே”...”
“இதுல என்னண்ணா இருக்கு... மேல வரும்போது அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்...”” என்றவனிடம் இருந்து காபியை வாங்கி பருகியவன் ஒரு மிடறு முழுங்கிக்கொண்டே
“இந்த டேஸ்ட் எங்கே போனாலும் கிடைக்கதுடா”...” என்று சிலாகித்தவாறே மீதியை உள்ளே அனுப்பினான்....
“அதே மாதிரி தானே வீட்டுல உள்ளவங்ககிட்ட பேசுறதும்... ஏன் நீ யார்கூடயும் பேசாம வந்துட்டே?... அம்மா ரொம்ப கவலப்படுறாங்க” என்று தன் அண்ணன் செய்ததில் தனது பிடித்தமின்மையை காட்டியவனிடம்
“நான் பேசினா இன்னும் கொஞ்சம் கவலப்படுவாங்க அதான் வாய இறுக்க மூடிகிட்டு இருக்கேன்... கொஞ்ச நாள் நான் மௌனச் சாமியாரா இருக்குறதுனு முடிவு பண்ணிட்டேன்”...” பெருமூச்செரிந்தவாறே சொன்னவன்
“நீ எப்படி இருக்கே ? சொல்லு” “ என்று நலம் விசாரித்தான்..
“உன்முன்னாடி தானே நிக்கிறேன்... நீயே பார்த்துக்கோ எப்படி இருக்கேன்னு”” என்றவனை கண்களால் அளந்தான் பெரியவன்...
மாநிறத்தை எட்டி பார்க்கும் நிறத்துடன் உழைத்து உரமேறிய தேகமும், புன்னைகை முகமும், கம்பீரத்தை கூட்டிட அவன் கண்களின் மின்னிய ஒளி மகிழ்ச்சியான வாழ்க்கையின் அளவினை காட்டியது...
“எத்தன மார்க் போட்டே? தேறுவேனா நான்.. சொல்லுண்ணா”..”
“உனக்கு என்னடா? பர்ஸ்ட் கிளாஸ் தான் நீ... உன்ன இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு”...”
“ஆனா எனக்கு சந்தோசம் இல்லன்னா... நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல... என்னதான் முடிவு பண்ணிருக்கே”...” அங்கலாய்த்தவனிடம்
“எல்லாம் நல்லதா தான் யோசிச்சு வச்சுருக்கேன்... கொஞ்ச நாள் ஆகும் அத செஞ்சு முடிக்க...
இங்கிருந்து போய் ரொம்ப கஷ்டபப்ட்டு.. இப்ப அத விட பெரிய கஷ்டத்தோட தான் வந்திருக்கேன்...
இங்கே வர்றதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்”...
வெள்ளைக்காரனுக்கு எவ்ளோ வேலை செஞ்சு குடுத்தாலும் பத்தாது ... பணத்த காட்டியே நம்மள எல்லாம் அடிமையாக்கி வச்சுருக்கான்..
இப்பவும் விடுவேனான்னு நோக வச்சுட்டான்... மாசத்துக்கு அரைகோடி குடுக்குறேன் ஒரு கோடி குடுக்கறேன்னு எங்க உடம்புல கொடிபோர்த்துற வரைக்கும் ஆசைகாட்டியே சக்கையா பிளிஞ்செடுத்துடுவான்”...
இப்போதைக்கு பழைய கம்பெனில தான் வேலைக்கு போகப்போறேன்...
என்ன.. சம்பளத்தை வாரிகுடுக்குற வேலைய விட்டுட்டு வந்துட்டான் மடபயனு எல்லோரும் பின்னாடி பேசுவாங்க.. அப்ப மட்டும் காது கேட்காது மாதிரி இருந்துட்டா பழகிரும்...
உன்ன மாதிரி விவசாயத்தையே படிச்சுட்டு இங்கேயே இருந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்துருக்காது...” என்று சிரித்தபடியே சொன்னவன்
“எங்கேடா நண்டுபயல காணோம்... ஸ்கைப்ல(video call) பேசுறப்ப எல்லாம் துள்ளிக்கிட்டு வருவான் எங்கேடா போனான்”...?”
“இப்போ அவனுக்கு தூங்குற நேரம்.. நீ குளிச்சுட்டு சாப்பாட்டுக்கு கீழே வா. துரைக்கு அப்போ முழிப்பு வந்துருக்கும்..
ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும் வீட்டுக்குள்ளே பாக்கலாம்”. தன் பிள்ளையின் பெருமை பேசினான் சின்னதம்பி...
“வர்றேன் சின்னா.. போகும்போது இந்த ரெண்டு பெட்டியும் கொண்டு போ.. எல்லோருக்கும் கிப்ட்ஸ் இருக்கு.. நீயே பார்த்து பிரிச்சு குடுத்திடு.. அப்பறோம் இந்த பெரிய பெட்டியில இருக்கறதெல்லாம் நண்டு பயலுக்கு தான்.. இத யாருக்கும் குடுத்திடாதே”. என்று மற்றொரு பெட்டியை சுட்டிக்காட்டியவனின் கண்களில் பிள்ளைக்கான பாசம் அப்பட்டமாய் தெரிந்தது...
உணவு உண்ண கீழே வந்தவனை அந்த வீட்டு இரண்டு வயது நண்டுப்பயலின் அமளி துமளியான குரல் வரவேற்றது...
சோட்டா பீம் டீ-சர்ட்டும் அதற்குரிய சார்ட்சுடன் கால்களில் தண்டைச்சலங்கை சத்தமிட, கண்களில் விழும் சுருட்டை முடியும் பளபளக்கும் பளிங்குக் கண்களும் பார்ப்பவர்களை எல்லாம் வசீகரிக்க பால் பற்களை காட்டிய வண்ணம் அவன் சிரித்துகொண்டு இருந்ததை நாள் முழுவதும் பார்த்தாலும் அலுக்காது....
சாப்பாடு ஒரு வாய் வாங்காமால் தன் தாய்க்கு வீட்டை சுற்றிக் காண்பித்துகொண்டிருந்தவன் பெரியப்பனின் கைகளில் வகையாய் மாட்டிகொண்டான்...
“வாடா என் சிங்ககுட்டி உங்கப்பன் சொன்ன மாதிரியே எல்லோரையும் ஓட வைக்குற போல... சித்த நேரம் ஒழுங்கா உக்காருடா”...” என்றவனிடம்
“அவனை கீழே விட்ராதீங்க பெரியத்தான்.. ஒரு வாய் உள்ளே திணிச்சுட்டு இறங்கட்டும்”..” என்று கூறிய படியே வந்த செந்தாமரை சாதாரண காட்டன் சேலைக்கு மாறியிருந்தாள்.
ஒரு கவளம் உணவை திணிக்க “வே...ணாம்..னாம்” என்று மழலையில் மிளிற்றியவாறே தட்டி விட்டவன் கீழே இறங்க முயற்சிக்க இந்த கால சொக்குப்பொடியான கைபேசியை அவன் கைகளில் பெரியப்பன் திணிக்கவும் அமைதியாய் அவன் மடியில் அமர்ந்து ஆராயத் தொடங்கி விட்டான்...
பெரிய தந்தை பேச வைக்க இடையிடையே அவனின் உணவும் உள்ளே போனது...
“உன் பேர் சொல்லுடா குட்டி””
“ச..தி..தர்”...(சசிதரன்)”
“அப்பா பேரு சொல்லுங்க..””
“ப்பா... பே..ரு... சி..த...ம்பி”...” என்று கூற
செந்தாமரையோ “டேய்.. நான் என்ன சொல்லி குடுத்தேன்?”” என்று குரலுயர்த்த
“மு...ல..லி த..ர்..(முரளிதரன்)”” என்று சரியாய் சொன்னான்
“அம்மா பேரு என்ன தங்கம்”..?”.
“ம்மா....பே”...” என்று யோசித்தவன் தன் தந்தையை பார்க்க
“அப்பா சொல்லிருக்கேனேடா... சொல்லு... காலையிலே பிஸ்கி (பிஸ்கட்) சாப்பிடும்போதும் சொன்னியே செல்லம்”...”
“ஹான்”,,,,,” என்ற குரலில் தெரியும் என்று தலையாட்டிவிட்டு
“லோ...த..த..ஸ்” (லோட்டஸ்)” என்று முடிக்க அங்கே உள்ளவர்களின் சிரிப்பால் அந்த வீடே நிறைந்தது..
ஒரு மணிநேரத்திற்கும் முன்னால் இதே வரவேற்பறையில் ஒருவரையொருவர் முகம் திருப்பி சென்ற பெரியவர்களை தன் மழலைப் பேச்சால் ஒன்றிணைத்து விட்டான் அந்த வீட்டின் சின்ன கண்ணன்...
Last edited: