அருமையான பதிவு டியர்.
விட்டுக் கொடுத்துப் போவதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது.
ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் சிக்கலான கேள்வி.
வரும் மருமகளை மகளாக நினைக்காத வரை மாமியாருக்கு மருமகளிடம் இருந்து பாசம் கிடைக்காது.
ஒரு முறை மனக்கசப்பு வந்தபின் எவ்வளவு முயன்றாலும் பழைய ஒட்டுதல் இருக்காது.
ரம்யா மிகவும் பாவம். எந்தத் தவறும் செய்யாமல் அவளுக்கு ஏன் தண்டனை.
கிரி அவன் தரப்பில் ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் ரம்யாவின் மூன்று வருட கஷ்டத்திற்கு ஈடு செய்ய முடியாது.
ஆனால் குற்றம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலும் சுற்றம் என்பது இல்லாமல் போய் விடும்.
பார்க்கலாம் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள் என்று.