• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்---- 27---- சிறுமைக்கு ஒரு சூடு!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
பெருஞ்சித்திரனார் என்ற புலவர் ஒருமுறைவெளிமான் என்னும் சிற்றரசனைக் கண்டுஉதவி பெற்று வருவதற்காகச் சென்றார். வெளிமானுடைய வள்ளன்மையும்வரையாது கொடுக்கும் நல்லியல்பும்நாடறிந்தவை.


ஆனால், இவற்றிற்குநேர்மாறான குணங்களோடு ‘இளவெளிமான்’ என்று அவனுக்கு ஒரு தம்பிஇருந்தான். வெளிமானிடத்தில் இருந்தஉயர்ந்த குணங்களில் சிலவேனும்கூடஇளவெளிமானிடம் கிடையாது. தன்பருவத்தைப் போலவே சிறுமையுள்ளமும்குறுகிய நோக்கமும் கொண்டவன் அவன்.


பெருஞ்சித்திரனார் வெளிமானைத் தேடிப்போன நேரத்தில் அவன் களைப்புமிகுதியால் உறங்குவதற்காகப்பள்ளியறைக்குச் சென்றிருந்தான். புலவர்ஒரு காவலனிடம் தான் உதவி கோரிவந்திருந்தலை வெளிமானுக்குக்கூறியனுப்பினார்.
புலவர் வரவைக் காவலன்பள்ளியறையிலே போய்க் கூறியபோதுஇளவெளிமானும் அருகில் இருந்தான்.


வெளி மானுக்குத் தூக்கம் கண்களைச்சொருகியது. எனவே, அவன் புலவரைவரவேற்றுப் பரிசில் கொடுக்க முடியாதசோர்வில் ஆழ்ந்திருந்தான். புலவரைப்போகச் சொல்லி விட்டு மற்றோர் சமயம்வரச்சொல்லி அனுப்பினாலோ, அவர்தவறாக எண்ணிக் கொள்வார் என்றுசிந்தித்த வெளிமான் அருகில் இருந்த தன்தம்பியாகிய இளவெளிமானை நோக்கி,


“தம்பி! எனக்காக நீ ஒரு காரியம்செய்யேன். நான் எழுந்திருந்து நடக்கமுடியாதபடி களைத்துப்போயிருக்கின்றேன். கண்களில் உறக்கம்சுமையாக அழுத்துகின்றது. புலவர்பெருஞ்சித்திரனார் என்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கின்றார். நீ அவரைநான் வரவேற்க இயலாத, நிலையில்இருப்பதற்காக வருந்துவதாகக் கூறிமன்னிப்புக் கேட்டுக்கொண்டு வேண்டியஉதவிகளை அவருக்குச் செய்து கொடுஅவர் என்னை அவசியம் சந்திக்கவேண்டும் என்று கூறினால் இன்றுமுழுவதும் இங்கே தங்குவதற்குவசதிசெய்து கொடு. நான் உறங்கிவிழித்ததும் அவரைச் சந்திக்கிறேன்” என்றுகூறினான்.


அவன் குரலில் குழைவும்கனிவும் இணைந்திருந்தன. ஆனால், அண்ணனின் இந்த வேண்டுகோளுக்குஇளவெளிமான் பதிலே பேசவில்லை. அலட்சியம்ாக மோட்டு வளையைப்பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.


“என்ன தம்பி? பேசாமல் பராக்குப்பார்த்துக்கொண்டு நிற்கிறாயே? நான்சொல்வது உன்காதில் விழுகிறதாஇல்லையா?” - வெளிமான் சற்றே இரைந்தகுரலில் கேட்டான்.


“விழுகிறது அண்ணா இந்தப் புலவர்களேஇப்படித்தான்! நேரம், காலம் தெரிந்துவரமாட்டார்கள்.இவர்கள் தொல்லையேபெரிய தொல்லையாகப் போய்விட்டது...!அது சரி, இப்போது இதற்காக நான் போகவேண்டுமா? இந்தக் காவலனேசென்று ஏதாவது பரிசிலைக் கொடுத்துஅவரை அனுப்பும்படி ஏற்பாடு செய்துவிடுகிறேனே...” அலட்சியம் தொனிக்கிறகுரலிலேயே இளவெளிமான் பதில்கூறினான்.


“தம்பீ! நீ என்ன பேசுகிறாய், யாரிடம்பேசுகிறாய் என்பதைச் சிந்தித்துநிதானமாகப் பேசு! நீ என் உடன்பிறந்தவன்என்பதற்காக உன்னை விடுகின்றேன். இதே சொற்களை வேறொருவன் பேசியிருந்தால் அவனுடைய நாக்கு இந்தவிநாடி என் கத்தி முனையிலிருந்திருக்கும்” வெளிமானின் குரலில் கேட்பவர்களைநடுங்க வைக்கும் கடுமை ஒலித்தது.


“சரி அண்ணா கோபப்படாதீர்கள். நான்போகிறேன்” என்று கூறிவிட்டுவேண்டாவெறுப்பாகப் புலவரைக் கண்டுவரவேற்பதற்காகச் சென்றான்இளவெளிமான். எப்படியும் தன் தம்பிபுலவரைச் சந்தித்து அவருக்குவேண்டியவற்றைச் செய்வான் என்றநம்பிக்கையோடு வெளிமான் தன்னைமறந்த உறக்கத்தில் இலயித்துப் போனான்.


ஆனால், நடந்தது முற்றிலும் வேறுபட்டநிகழ்ச்சி. இளவெளிமான் புலவரைஅன்போடு வரவேற்கவில்லை."என்னகாரியமாக ஐயா வந்தீர்கள்” என்றுஅன்போடு விசாரிக்கவில்லை.

பெருஞ்சித்திரனாரிடம் சென்று அவர்தகுதியை உணராமல் இரண்டு மூன்று பொற்கழஞ்சுகளைப் பிச்சைக்காரனுக்கு வீசி எறிகிறாற்போல வீசி எறிந்துவிட்டு, “ஒய் புலவரே, பேசாமல் இதைஎடுத்துக்கொண்டு போய்விடும். இப்போதுநீர் என் அண்ணனைப் பார்க்க முடியாது. அவன் தூங்குகிறான். இன்னொரு சமயம்வந்து பாரும்” என்று சொல்லிவிட்டுத்திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான்.


தன்னுடைய பண்பற்ற செயல் புலவரைஎவ்வளவு தூரம் மனம் புண்பட்டு வருந்தச்செய்திருக்கும் என்பதை அவன்நினைத்துப் பார்க்கவே இல்லை. பெருஞ்சித்திரனாரோ தமக்கு வந்தஆத்திரத்தை அடக்கிக் கொண்டுஇளவெளிமான் பொற்கழஞ்சுகளைஎடுத்துக்கொள்ளாமல் அமைதிய்ாக வந்தவழியே ஊருக்குத் திரும்பிச்சென்றுவிட்டார்.


“இவன் சிறுமைக்குச் சரியான சூடுகொடுக்கவில்லை யானால் என் பெயர்பெருஞ்சித்திரனார் இல்லை” என்றுதிரும்பிச் செல்லும்போது கடுமையானசங்கல்பம் ஒன்றைச் செய்து கொண்டதுஅவர் மனம்.


நாட்கள் கழிந்தன. பெருஞ்சித்திரனார் தன்தம்பி இளவெளிமானால்அவமானப்படுத்தப்பட்டு ஊர் திரும்பியவிவரம் வெளிமானுக்குத்தெரியாத,"புலவரை நன்றாக உபசரித்துவேண்டிய உதவிகளைச் செய்துஅனுப்பிவிட்டேன் அண்ணா!” என்று தன்தமையனிடம் பொய் கூறிவிட்டான்இளவெளிமான்.

வெளிமானும் அதையேமெய்யாக நம்பிவிட்டதனால்தான்அவனுக்கு உண்மை விவரம் தெரியக்காரணம் இல்லாமலே போய்விட்டது.


திடீரென்று ஒருநாள் காலை வெளிமானின்கோட்டை எல்லையிலே இருந்த காவல்மரத்தைக் காக்கும் வீரர்கள் பதறியடித்துக்கொண்டு அரசனைக் காண அரண்மனைக்கு ஓடி வந்தனர். அவர்கள்வந்த வேகத்தைக் கண்ட அரசன்
என்னவோ, ஏதோ என்று நினைத்துப்பரபரப்படைந்து விவரத்தை விசாரித்தான்வெளிமான்.


“அரசே! நம்முடைய காவல் மரத்திற்குஆபத்து! யாரோ ஒரு புலவர் நாங்கள்எவ்வளவு தடுத்தும் கேட்காமல் ஒரு பெரியயானையைக் கொண்டுவந்து நம்முடையகாவல் மரத்திலேகட்டிவிட்டார்.கொம்புகளை ஆட்டிமரத்தைஅசைத்து இழுத்து அட்டகாசம் புரிகிறதுஅந்த யானை. யாரும் கிட்ட நெருங்கமுடியவில்லை.

அந்த யானையினதுகம்பீரமான பயங்கரத் தோற்றத்தைக் கண்டகைகால்கள் நடுக்கமெடுக்கின்றன. அதன்முதுகிலே பல பெரிய மூட்டைகள்கட்டியிருக்கின்றன. அந்த யானையைஇப்படியே இன்னும் சிறிது நேரம்விட்டுவிட்டால் நம்முடைய காவல் மரத்தைஆணிவேரோடு பிடுங்கி எறிந்து விடும்.

இதெல்லாம் அந்தப் புலவர் செய்கிறவேலை அரசே! யானையைக் கொன்றுஅவரைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்” என்று காவலர்கள் பதறிக் கூறினார்கள்.


அரசன் வெளிமான், தம்பிஇளவெளிமானுடனும் படைகளுடனும்உடனே காவல்மரம் இருந்த இடத்தைஅடைந்தான். அவன் மனத்தில் சினமாகியநெருப்பு மூண்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கே காவலர்கள் கூறியபடி மிகப்பயங்கரமான தோற்றத்தை உடைய பெரியயானை ஒன்று மரத்தை ஆட்டி அசைத்துக்கொண்டிருந்தது.


ஆனால் அந்த யானைக்குஅருகிலே நின்றுகொண்டிருந்த புலவர்பெருஞ்சித்திரனாரைப் பார்த்த்போது அவனுடைய ஆத்திரம் ஆச்சரியமாகமாறியது. அதே சமயத்தில்அவனருகிலிருந்த இளவெளிமான்புலவரை’ அங்குக் கண்டதும்
திருடனுக்குத்தேள்கொட்டினாற்போலத் திடுக்கிட்டான்.


அரசனைக் கண்டதும் புலவர் யானையின்கொட்டத்தை அடக்கி, மந்திரத்தாற் கட்டிநிறுத்தியதுபோல அதைஅமைதியாகநிற்கச் செய்தார். எல்லோரும் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.


புலவரை நோக்கி, “இது என்னபெருஞ்சித்திரனாரே! என் காவல் மரம்உங்களுக்கு என்ன குற்றத்தைச் செய்தது?” என்று கேட்டான் வெளிமான்.

“காவல் மரம் ஒரு குற்றத்தையும்செய்யவில்லை அரசே! இப்போதெல்லாம்மரங்கள்கூடச் சில மனிதர்களைவிடநல்லவைகளாக இருக்கின்றன. சிலமனிதர்கள்தாம் மரங்களைவிடமோசமானவர்களாக இருக்கிறார்கள்” இப்படிக் கூறிக் கொண்டே அவர் தம்பார்வையை இளவெளிமான் மேல் பதியவைத்தார்.

சவுக்கடி பட்டது போலிருந்ததுஅவனுக்கு. அவன் தலை குனிந்தான். புலவர் மேலும் கூறினார் “அரசே! இந்தயானையின் முதுகிலுள்ள மூட்டைகள்நிறையப் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன. இது தகுதியறிந்து கொடுத்த பரிசில். நான்இப்போது அவற்றை உங்கள் தம்பிஇளவெளிமானுக்கு அன்பளிப்பாகக்கொடுக்கிறேன்” அவர் கூறிமுடிக்கவில்லை,

“ஐயோ புலவரே என்னைமன்னித்து விடுங்கள்!” என்று அலறிக்கொண்டே அவர் காலில் விழுந்துவிட்டான்இளவெளிமான்.


இரவலர் புரவலை நீயும்அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும்அல்லர் இரவலர் உண்மையும் காண்இனிஇரவலர்க்கு ஈவோர் உண்மையும்காண்இனி நின்னூர்க் கடிமரம் வருந்தத்தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம்பரிசில் கடுமான் தோன்றல் செவ்வல்யானே! (புறநானூறு - 162)
இரவலர் = யாசிப்பவர், புரவலர் = பாதுகாப்பவர், ஈவோர் = கொடுப்போர், கடிமரம் = காவல் மரம், பிணித்த= கட்டிவைத்துள்ள, கடுமான் = விரைந்துசெல்லும் குதிரை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top