• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்------28---- பசுமை நினைவுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
பளிங்குபோலத் தெளிந்த நீரின் வெண்பட்டு மடிப்பு போன்ற சின்னஞ்சிறு அலைகள் அந்தப் பொய்கைக்கு ஒரு தனிஅழகைக் கொடுத்தன. இடையிடையே அல்லி, குவளை, தாமரை, முதலிய மலர்களும், அவற்றின் நீலங் கலந்த பசுமைநிற இலைகளுமாக அந்த எழிலைஎடுத்துக் காட்டி விளக்க முயன்றுகொண்டிருந்தன.

பொய்கையைச்சுற்றிலும் கப்பும் கவருமாகக் கிளைத்துவளர்ந்துள்ள பெரிய பெரிய மரங்கள் வேலிஎடுத்ததுபோல அடர்ந்து வளர்ந்திருந்தன.

பொய்கையின் நான்கு பக்கத்திலும்வசதியான படித் துறைகள் இருந்தன. அவற்றில் இறங்கி ஆண்களும்பெண்களுமாகப்ப்லர் நீராடிக்கொண்டிருந்தார்கள். ஆண்களில்தைரியசாலிகளாக இளைஞர்கள் சிலர் மரங்களின் கிளைகளில் ஏறி அங்கிருந்து
துணிச்சலோடு பொய்கையில் திடும்திடும் என்று குதித்து நீந்தி விளையாடினார்கள்.

பொய்கைக் கரையிலிருந்து ஈரமணற்பரப்பில் கன்னிப் பெண்கள் மணலைக் கூட்டிப் பிடித்துப் பொம்மை போலச்செய்து, அப்படிச் செய்த பொம்மைகளுக்குப் பூக்களைக் கொய்து அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சிகளை எல்லாம் மருத மரம் ஒன்றின் கீழ் சோர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த முதுபெருங் கிழவர் ஒருவர் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். இரண்டு பக்க நுனிகளிலும் இரும்புக்பூண்பிடித்த ஊன்றுகோல் ஒன்று அவர்கையில் இருந்தது.

அடிக்கடி இருமிக்கொண்டும் கோழையைக் காரித் துப்பிக்கொண்டுமிருந்தார் அவர். ‘முகபாவம்’ ஆழ்ந்த சிந்தனையில்ஈடுபட்டிருப்பதுபோலத் தோன்றியது. குழிவிழுந்து ஒளியற்று விளங்கிய அந்தக்கிழவரின் விழிகளிலிருந்து கண்ணிர்த்துளிகள் வடிந்து கொண்டிருப்பது இன்னும்சற்று அருகே நெருங்கிப் பார்த்தால் நமக்குநன்றாகத் தெரியும்.

அவருடைய இந்தத்துயரத்துக்கும் உருக்கத்துக்கும் காரணம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?.ஆம்
அவசியம்அதை நாம் தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்!

தம்மைச் சுற்றிலும் அந்தப் பொய்கைக்கரையில் நிகழும் ஒவ்வொரு காட்சியையும்பார்க்கும்போது அவருடைய உள்ளம். அவரை இன்பகரமான பசுமைநினைவுகளுக்கு இழுத்துக் கொண்டுசென்றது. நினைக்க நினைக்க இரம்மியமான அந்த இளமை எண்ணங்களை எண்ணி எண்ணிக் கழிவிரக்கம் என்னும் மனமுருக்குகிற உணர்ச்சியில் சிக்கிப் போயிருந்தார் அவர்.


கழிந்துபோன நாட்களை - அவை இன்பம்நிறைந்த அனுபவங்களைத் தந்தவையாக இருந்தாலும் சரி, துன்பம் நிறைந்த
அனுபவங்களைத் தந்தவையாகஇருந்தாலும் சரி, அவற்றை எண்ணிப்பார்ப்பதில் ஆன்ம ரீதியான சுகம் ஒன்றுஇருக்கிறது என்பது உறுதி.


அது வெறும்சுகம் மட்டுமில்லை. ஏக்கம் கலந்த சுகம். “ஆகா! இனிமேல் அந்த மனோரம்மியமானநாட்கள் வருமா? அத்தகைய அனுபவங்கள் மீண்டும் கிட்டுமா?” என்ற ஏக்கம் ஒவ்வொருபகமை நினைவினிலும் தோன்றுவதுஇயல்பு. இப்படிப்பட்ட ஏக்கந்தான் அந்தமுதுபெருங்கிழவனின் கண்களில் நீர்பெருகச் செய்திருந்தது.

பல வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்துமறைந்துபோன சம்பவங்கள் ஒன்றன் பின்ஒன்றாக அவர் மனத்தில் உருவெளித்தோற்றமாகத் தோன்றிமறைந்துகொண்டிருந்தன.

வாலிபத்தின் வனப்பும் பலமும் தேகத்தின் ஒவ்வோர் அங்கத்தினிலும் நிறைந்து பரிணமித்துக் கொண்டிருந்த யெளவனப்பருவம். அப்போது அவர் இருபத்தைந்துவயதுக் கட்டிளங் காளை ஒடுகிற பாம்பின்வாலை எட்டிப் பிடித்துச் சுழற்றி அதன்கால்களை எண்ணுகிற வயது, துறுதுறுப்புநிறைந்த உடலைப் போலவே எதையும்வேகமாகச் சிந்தித்து வேகமாக
நிறைவேற்றுகின்ற மனமும் இளமைப்பருவத்திற்கே உரியவை அல்லவா?

“இதோ! இந்தப் பொய்கை அன்றைக்கிருந்தாற் போலத்தான் இன்றும் இருக்கிறது. இதன் கரைகள், படித்துறைகள், சூழ இருக்கும் மரங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால் நான் மட்டும் அன்றைக்கு இருந்தாற்போல இன்று இல்லை. இன்றைக்கு
இருக்கிறாற் போல நாளை இருக்கப்போவதும் இல்லை. இந்த உலகம்தான் எவ்வளவு விந்தையானது!”

மனிதன் வெட்டியகுளமும் கட்டிய கோவிலும் நட்டு வைத்த மரங்களும்கூட அவனைக் காட்டிலும் அதிக நாட்கள்
வாழ்கின்றன. ஆனால் மனிதன் நெடுங்காலம் வாழமுடிவதில்லை. ஆச்சரியங்களிலெல்லாம் பெரிய ஆச்சரியம் என்னவென்றுபார்த்தால், அது இந்த உலகமும் இதிலுள்ள மனிதர்களின் வாழ்க்கையுமாகத் தான் இருக்கும் போலிருக்கிறத!

நானும் ஒரு காலத்தில் இந்தப் பொய்கைக்கரையில் இளமை மதர்ப்போடு ஒடியாடித் திரிந்திருக்கிறேன். கன்னிப்பெண்கள் இங்கே மணலில் செய்யும் மண்பாவைகளுக்கு என் கைகளால் பூக்கள்பறித்துக் கொடுத்து அவர்கள் தயவைச் சம்பாதிப்பதற்கு முயன்றிருக்கிறேன். இப்போது நினைத்தால் வெட்கமாகக்கூடஇருக்கிறது.


அப்போது சில அழகானகன்னிப் பெண்களுடன் இதே மணற்பரப்பில் கை கோத்துக்கொண்டு தட்டாமாலை விளையாட்டு கூடவிளையாடியிருக்கிறேன். அந்தப்பெண்களுக்கு என்மேல் தனி அன்புஎனக்கும் அவர்கள் மேல் அப்படித்தான். விளையாடவோ, மண் பாவைகளுக்குஅணிய மலர் பறிக்கவோ, தொடங்கிவிட்டால் அன்று எங்களுக்குநேரம் போவதே தெரியாது.

நாங்கள் பத்து, இருபது விடலைப்பிள்ளைகளாகச் சேர்ந்து கொண்டு குளிப்பதற்கு வருவோம். மருதமரக்கிளைகள் தண்ணிர்ப் பரப்பின்மேல் மிகஅருகில் படர்ந்திருக்கும். அந்தக்கிளைகளில் அஞ்சாமல் ஏறிக் கரையிலேஇருப்பவர்கள் எல்லோரும்
கண்டுவியக்கும்படி தண்ணிரில் குதித்துவிளையாடுவோம். அவ்வாறுகுதிக்கும்போது நீர்த்தரங்கங்கள் சலீர்சலீரென்று கரையிலுள்ளவர்கள் மேல்தெரித்துச் சிதறும்.

கரையிலுள்ளவர்களில் சிலர் எங்களைநோக்கி, “நீங்கள் மெய்யான திறமைஉள்ளவர்களானால் இந்தப் பொய்கைஎவ்வளவு ஆழம் இருக்கிறதோ அதுவரைமூழ்கி முக்குளித்து மணலை வெளியேஎடுத்துக்கொண்டு வாருங்கள்! எங்கே? ஆண்பிள்ளைகளானால் அப்படிச் செய்துகாட்டுங்கள் பார்க்கலாம்?” என்று எங்களோடு பந்தயம் போடுவார்கள்.

உடனே நாங்கள் அத்தனை பேரும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொய்கையில் முக்குளித்துக்
கீழே ஆழத்திற்குச் செல்லுவோம்.எங்களோடு பந்தயம் போட்டவர்கள் நாண முற்றுத்தலைகுனியும்படியாக
ஆழத்திலிருந்து எடுத்துவந்த மணலை வெற்றி மதர்ப்பில் கரையில் நின்று கொண்டிருக்கும் அவர்கள்மேலே வீசி எறிவோம்.


ஆகா! அப்படி வீசிஎறிவதில்தான் எத்தனை இன்பம்! எவ்வளவு தற்பெருமை! அறியாமைநிறைந்த அந்த இளமை இன்பத்திற்கு ஈடான இன்பத்தை இனி என் வாழ்வில்நான் எப்போது காணப் போகிறேன்? அதற்கு இன்னும் ஒரு பிறவிதான் எடுக்கவேண்டும் போலிருக்கிறது!

அன்றைக்கு இருந்த அந்தத்திடகாத்திரமான சரீரம் எங்கே? அதில்பொங்கித் ததும்பிய இளமை என்னும் அமுதம் எங்கே? துறுதுறுப்பு நிறைந்த அந்தமனம் எங்கே? காலம் அவற்றை எல்லாம்எனக்குத் தெரியாமலே
அழித்துவிட்டதா?


இதோ! இரண்டு துனிகளிலும் பூண்பிடித்த இந்தக் கனத்த தடி இல்லாமல் இப்போது என்னால் நடக்கவே முடிவதில்லையே! வாயைத் திறந்து தொடர்பாக இரண்டுவார்த்தைகள் பேசி முடிப்பதற்குள் இருமல் குத்திப் பிடுங்குகிறதே! இப்போதுஎன்னிடம் எஞ்சியிருப்பதுதான் என்ன? பார்க்கப் போனால் இந்தப் பசுமைநினைவுகளால் உண்டாகின்ற ஏக்கத்தைத்தவிர வேறொன்றும் இல்லை...”

“என்ன ஐயா பெரியவரே! ஏதோ மயக்கம்வந்தவர்போலச் சோர்ந்துஉட்கார்ந்திருக்கிறீரே...?”

கிழவரின் சிந்தனை கலைந்தது. அவருக்குமுன் நின்று மேற்கொண்டு மேற்கூறியவாறு ஆறுதலாக வினவியமனிதன் மேலும், “நான் வேண்டுமானால்கைத் தாங்கலாகத் தூக்கி விடுகிறேன்! ஐயோ, பாவம் தள்ளாத காலம்” என்றுஅவரருகில் நெருங்கினான்.

“சீ! தள்ளி நில் ஐயா! கையில் இந்தப் பூண்பிடித்த தடி இருக்கிறவரை எனக்குத் தளர்ச்சியும் இல்லை; மயக்கமும்இல்லை” என்று கூறிக்கொண்டே அந்தமனிதனைத் தன் அருகே வரவொட்டாமல் கைகளை மறித்துத் தடுத்தார் கிழவர்.

“வயதானாலும் திமிர் போகவில்லைகிழவனுக்கு!” ஆத்திரத்தோடுஇரைந்துகூறிவிட்டு வேகமாக நடந்தான். உதவிக்கு வந்த மனிதன்.

அவன் அந்தப் பக்கம் சென்றதும்பூண்பிடித்த தடியை ஊன்றிக்கொண்டுஎழுந்திருந்தார் கிழவனார். அவருடையஇதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு நீண்டபெருமூச்சு வெளிப் பட்டது. அந்தப்பெருமூச்சின் வெம்மையிலே அவரதுபசுமை நினைவுகள் எல்லாம் வாடிவதங்கிப் பொசுங்கிப்போய்விட்டது போல்ஒரு பிரமை மறுகணம் டொக் டொக் என்றுதடியை ஊன்றிக் கொண்டு நடந்தார் அவர்.

இனிநினைந் திரக்க மாகின்றுதிணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழிஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொடு

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நனிப் படிகோடேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்டகல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே! (புறநானூறு- 243)

திணிமணல் = செறிந்தமண், பாவை = பொம்மை, தண்கயம் = குளிர்ந்த பொய்கை, தூங்கி = அசைந்து, சினை = கிளை, அளிதோ = இரங்கத்தக்கதே, தண்டு = கம்பு.

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top