இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அமங்கலமாக முடியும் காவியங்கள் இன்னொரு வகை. இருவகைக் காவியங்களும் காதல்காவியங்களே.
ஆனால் காதல் நிறைவேறி மங்கலமாகமுடியும் காவியத்தை விடக் காதல் நிறைவேறாமல் அமங்கலமாக முடியும்
காவியங்கள்தாம் படிப்போர் மனங்களை உருக்கித் தம் வயமாக்கி விடுகின்றன.
சங்க இலக்கியங்களில் காதல் நிறைவேறாமல் அவல முடிவெய்திய நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாகக்
காணக்கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு ஒரு சிறுவிதிவிலக்காக நிறைவேறாத - நிறைவேறமுடியாத காதலை வெளியிட்டுக் குமுறும்ஒரு பெண்ணின் கதையைப் புறநானூற்றில் காண்கிறோம். புறநானூற்றிலுள்ள மிகப் பல சோகநிகழ்ச்சிகளுள் நிறைவேறாத காதலின்ஏக்கமெல்லாம் இழைந்து கிடக்கும் இந்தநிகழ்ச்சியும் ஒன்று.
போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்றுஒரு சோழ மன்னன். இந்தச் சோழ மன்னன் எல்லோரையும் போலச் சாதாரணமானவீரன் மட்டுமில்லை. பார்த்தவர் கண்களைமீளவிடாத கட்டழகன். ஆண்களையேமயக்கிவிடுகிற அழகு என்றால், பெண்கள்இந்த அழகுக்குத் தப்பிவிடவா முடியும்? ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, உயர்ந்த காவியத்தைச் சுவைப்பதிலுள்ளஈடுபாடு அவன் அழகைக் காண்பதில்இருந்தது. இருப்பிடம் தெரியாமல் மணத்தைப் பரப்பும் பூவைப் போன்றஅமைதியான அழகென்று சொல்லிவிடமுடியாது இந்த அழகை கவர்ச்சியும் எழுச்சியும் உண்டாக்கிக் காணும் கண்களை மலர வைக்கும் செயல்திறன்
வாய்ந்த அழகு இது. ஆனால்பலரைக் கவர்ந்த இந்த அழகனை எதிர்த்துப் போர் செய்யவும் ஒருவன் முளைத்தான். ‘முக்காவல் நாடு’ என்றுசோழநாட்டுக்கருகில் ஒரு பகுதி இருந்தது. அதைப் பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒருவன் ஆமூரை ஆண்டு வந்தசிற்றரசன்.
ஆமூரரசன் மற்போரில் வல்லவன். அதனால் அவனை ஆமூர்மல்லன் என்றேசிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தார்கள். ஆமூர் மல்லன் தான் ஒரு சிற்றரசனாகஇருந்தும் பேரரசனான போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி அடிக்கடிஅவதூறாக இகழ்ந்து பேசி வந்தான்.
இதன் காரணமாகப் போர்வைக்கோப்பெருநற்கிள்ளிக்கும் முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனுக்கும் போர் ஏற்பட்டது. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் தந்தைக்குப் பெயர் ‘தித்தன்’ என்பது. கிள்ளியின் போர்த்திறனிலும் வீரத்திலும் அதிக அக்கறை காட்டிப்பெருமை கொள்வது தித்தனின் வழக்கம்.
முக்காவல் நாட்டு ஆமூரில் பெருங்கோழிநாய்கன் என்ற ஒரு செல்வச் சீமான்வாழ்ந்துவந்தான். பெருங்கோழிநாய்கனுக்கு ஒரேஒரு மகள். ‘நக்கண்ணை’ என்று பெயர். அவள் மணமாகாதவள். கன்னிமைசெழித்து நிற்கும் பருவம். குறுகுறுப்பானசுபாவம். புதுமைக் கட்டமைந்த அழகு. பருவமடைந்து வீட்டிற்குள்ளேயே கன்னிமாடத்தில் இருக்கச் செய்து பாதுகாத்து வந்தார்கள் அவளை.
ஆமூர் நகரத்திற்குள் நுழையும்தலைவாயிலுக்கருகே பிரதானமானவீதியில் அமைந்திருந்தது பெருங்கோழிநாய்கனின் மாளிகை.
ஒருநாள் காலை நேரம். அப்போதுதான்நீராடிவிட்டுக் கன்னிமாடத்திற்குள்நுழைந்திருந்தாள் நக்கண்ணை வெண்கலக் கூண்டிலிருந்து துவாரங்களின்வழியே சுருள் சுருளாகக் கிளம்பும் அகில்புகையில் கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்தாள். அலை அலையாகப்புரண்ட கருங்கூந்தலுக்கு நடுவே சுருள்சுருளாக இழைந்த புகைப் படலங்கள்புகுந்தன. குளித்து முடித்தவுடன் வாசனைநிறைந்த அகிற் புகையை நுகருவதில்நாசிக்கு இதமான ஒரு திருப்தி இருக்கிறது. அந்த இன்பமயமான
வாசனையின் போதையில் கட்டுண்டிருந்த அவள்திடுதிடுவென்று வீதியில் ஆரவாரத்தோடுபலர் ஓடிவருகின்ற ஒலியைக் கேட்டுச்சாளரத்தின் வழியாகத் தெருவைப்பார்த்தாள்.
யானைகளும் குதிரைகளும் தேர்களும்தொடரப் பலவகை ஆயுதங்களைத்தாங்கிய வீரர்களின் பெருங்கூட்டம்நகரத்திற்குள் நழைந்து கொண்டிருந்தது. படைகளைப் பார்த்தால் உள்ளுரைச்சேர்ந்தவையாகத் தெரியவில்லை. யாரோவெளியூரார்தான் படையெடுத்துவந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். இந்தச் சமயத்தில் அவளோடுகன்னிமாடத்தில் துணையிருக்கும் தோழிபரபரப்பாக அங்கே ஓடிவந்தாள்.
“அம்மா! அம்மா! கேட்டீர்களா செய்தியை?...”
“எந்தச் செய்தியையடி சொல்கிறாய்?”
“நம்முடைய ஆமூரைத் தாக்குவதற்காகச்சோழ மன்னர் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் படைகள் நகருக்குள்துழைந்துவிட்டன. இதோ தெருவைப்பாருங்களேன்?”
“ஒகோ! அதுதானா இந்தப் படை?”
அவள் விழிகள் மீண்டும் சாளரத்தின்வழியே தெருவைப் பார்த்தன.
அப்போது படைகளுக்கு நடுவே.? நடுவேஎன்ன? மேகங்களுக்கு நடுவே கதிரவனைப் போல ஒரு தேர் மெல்லநகர்ந்து வருவதைக் கண்டாள். அந்தத்தேரின் இடையே கரும்பு வில்லேந்திய மன்மதனைப்போல வீற்றிருந்தான் ஒர்ஆணழகன். ‘அழகு என்றால் இப்படியும் ஒர்அழகா? அதுவும் ஆண்களில் இப்படி ஒர்அழகன் இருக்க முடியுமா?’
“தோழி”
“என்ன அம்மா?”
“அதோ தெருவில் போகின்ற தேரில்பார்த்தாயா?.”
“பார்த்தேன்! பார்த்தேன்! பார்க்காமல்என்ன? அவர்தான் சோழ மன்னர்போர்வைக் கோப்பெருநற் கிள்ளி”
“என்ன, சோழ மன்னரா இவர்?”
“அதற்குச் சந்தேகம் என்ன அம்மா? நம்நகரத்தின்மேல் படையெடுத்துவந்திருக்கும் சோழ மன்னர்தான் இவர்.”
அவள் கண்கள் தேரைவிட்டு அகலவேஇல்லை.ஆனால் அவள் காணவேண்டும்என்பதற்காகத் தேர் நின்றுகொண்டிருக்குமா என்ன? சாளரத்திலிருந்து காண முடிந்த பார்வைஎல்லையைக் கடந்து சென்றுவிட்டது தேர்.
தேர் மட்டுமா போயிற்று? அந்தத் தேரில்இருந்தவனோடு அவள் உள்ளமும் ஏறிக்கொண்டுபோய் விட்டதே?
நக்கண்ணைகன்னிமாடத்தில் வசித்து வருகிறவள். இதுவரை ஆண்களையே கண்ணால்காணாமலிருந்தவள்; அவள் இதயம்.? பாவம் அது அந்தத் தேர்மேலிருந்தஅழகுக்குத் தோற்றுச் சரணாகதிஅடைந்துவிட்டது.
“தோழி! ஆண்களில் இப்படி அழகுள்ளவர்.”
“வேறெங்கும் இல்லை அம்மா” - அவள்தொடங்கிய வாக்கியத்தைத் தோழிமுடித்தாள்.
படைகள் எல்லாம் சென்றுவிட்டன. தெருபழைய அமைதியை அடைந்துவிட்டது. சூன்ரியம் திகழும் வீதியை வெறித்துப்பார்த்தாள் நக்கண்ணை.
“அம்மா! இனிமேல் இந்த நகரத்தின் நிலைமதில்மேற் பூனைபோலத்திண்டாட்டம்தான்!”
“ஏன் அப்படி?”
“நம்முடைய அரசராகிய ‘ஆமூர்மல்லர்’ வெல்வாரா? சோழன் வெல்வானா? நம்அரசனுக்கு வெற்றி கிடைத்தால் கவலைஇல்லை. சோழனுக்கு வெற்றி கிடைத்தால்நம் கதி என்ன ஆகுமோ?”
“.........”
“வெற்றியா? தோல்வியா? - தோல்வியா? வெற்றியா? இரவு பகலாக இந்த இரண்டும்கெட்ட நிலைதான் இனிமேல்....”
“ஊரை வெல்வதற்கு முன்பே அவர் ஒர்உள்ளத்தை வென்றுவிட்டாரே! அதுஉனக்குத் தெரியுமா?”
“என்னம்மா சொல்கிறீர்கள்?”
“புரியவில்லையா? இதோ என் இந்தமுன்கைகளில் துவண்டு சுழலும்வளைகளைப் பார்! இவை சொல்லும்”
“தோழீ! நீ கூறிய இரண்டுங்கெட்ட நிலைஇந்த ஊருக்கு மட்டுமில்லை. இனிமேல்எனக்குந்தான்.”
“சோழன்தான் வெல்வான் என்கிறார்கள்சிலர். ஆமூர் மல்லர்தான் வெல்வார்என்கிறார்கள் சிலர். யார் வெல்வார் களோ? யார் தோற்பார்களோ? என்ன ஆகுமோ?”
“..........”
நாலைந்து நாட்கள் கழிந்தன. அன்றுபோலவே இன்றும் காலை நேரம் தெருவில்ஏதோ வெற்றி ஆரவாரம் கேட்கிறது. “வாழ்க! வாழ்க!” என்ற பேரொலிவிண்ணை முட்டுகிறது. நக்கண்ணைஆர்வம் அலைமோதும் உள்ளத்தோடுகன்னி மாடத்துக் கட்டுப்பாட்டையும் மறந்துதெருவிற்கு ஓடி வருகின்றாள். தண்டைகளும் சிலம்புகளும் கலின் கலின்என்று ஒலிக்கின்றன.
தெருத்திண்ணையில் நின்று பார்க்கிறாள். பாலைப் பூசினாற் போன்ற நீண்ட கயல்விழிகள் மலர மலரப் பார்க்கின்றாள்.
அதே தேர்! அதே சோழ மன்னன்! அதேஅழகு வெற்றிச் சங்குகள் முழங்க ஆமூரைவென்றுவிட்டு நாடு
திரும்பிக் கொண்டிருந்தான்! நக்கண்ணைக்குஅப்படியே ஒடிப்போய்த் தெருவில்இறங்கித் தேரின்மேல்தாவி அவனைத்
தழுவிக்கொள்ள வேண்டும்போல உள்ளம் குறுகுறுத்தது. ‘வெட்கம்’ என்று ஒன்றுஇருந்து தொலைக்கிறதே! அதுநினைத்ததை நினைத்தபடி செய்யவிட்டால்தானே?
தேர் சென்றது. தெருக்கோடியில்மறைந்தது? வாழ்த் தொலிகளின் குரல்மங்கித் தேய்ந்து மெலிந்தன. நக்கண்ணையின் விழிகளின் ஒரத்தில்இரண்டு கண்ணிர் முத்துக்கள் திரண்டுநின்றன.
“அம்மா இதென்ன? இப்படித் தெருவில்நின்று கண்ணிர் சிந்திக் கொண்டு.”
நக்கண்ணை திரும்பிப் பார்த்தாள். தோழிபின்னால் நின்று கொண்டிருந்தாள்.
“தோழி! சோழனுக்குத்தான் வெற்றி! சோழன் வென்று கொண்டுபோய்விட்டான்.”
“எதை அம்மா”
“என்னை; என் மனத்தை; என்னுடையஎல்லா வற்றையுமேதான்.”
“நீங்கள் என்ன அம்மா? சுத்தப்பைத்தியமாக அல்லவா இருக்கிறீர்கள்? அவன் நாடாளும் பேரரசன். நம்மைப்போன்ற நிலையிலுள்ளவர்கள் அவனைப்போன்றவர்கள்மேல் இப்படி ஆசைகொள்வதே தவறு!”
“தவறுதான்! ஆனால், அது இந்தப் பாழாய்ப்போன மனத்துக்குப் புரியவில்லையே!” நக்கண்ணை கண்ணைத்துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.
ஆடு = வெற்றி, ஒரு சாரோர் = ஒரு சிலர், முழாவரைப்போந்தை = மத்தளம் போலப்படுத்த பனைமரத்தின் அருகிலுள்ளதிண்ணை, ஆடாகுதல் = வெற்றியடைந்திருத்தல், கண்டனன் = பார்த்தேன்.
இந்தப் பாடல் நக்கண்ணையின்நிறைவேறாத காதலின் துன்பத் தழும்பாகஇன்னும் புறநானூற்றில் இருந்து கொண்டுதான் இருக்கிறது!
ஆனால் காதல் நிறைவேறி மங்கலமாகமுடியும் காவியத்தை விடக் காதல் நிறைவேறாமல் அமங்கலமாக முடியும்
காவியங்கள்தாம் படிப்போர் மனங்களை உருக்கித் தம் வயமாக்கி விடுகின்றன.
சங்க இலக்கியங்களில் காதல் நிறைவேறாமல் அவல முடிவெய்திய நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாகக்
காணக்கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு ஒரு சிறுவிதிவிலக்காக நிறைவேறாத - நிறைவேறமுடியாத காதலை வெளியிட்டுக் குமுறும்ஒரு பெண்ணின் கதையைப் புறநானூற்றில் காண்கிறோம். புறநானூற்றிலுள்ள மிகப் பல சோகநிகழ்ச்சிகளுள் நிறைவேறாத காதலின்ஏக்கமெல்லாம் இழைந்து கிடக்கும் இந்தநிகழ்ச்சியும் ஒன்று.
போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்றுஒரு சோழ மன்னன். இந்தச் சோழ மன்னன் எல்லோரையும் போலச் சாதாரணமானவீரன் மட்டுமில்லை. பார்த்தவர் கண்களைமீளவிடாத கட்டழகன். ஆண்களையேமயக்கிவிடுகிற அழகு என்றால், பெண்கள்இந்த அழகுக்குத் தப்பிவிடவா முடியும்? ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, உயர்ந்த காவியத்தைச் சுவைப்பதிலுள்ளஈடுபாடு அவன் அழகைக் காண்பதில்இருந்தது. இருப்பிடம் தெரியாமல் மணத்தைப் பரப்பும் பூவைப் போன்றஅமைதியான அழகென்று சொல்லிவிடமுடியாது இந்த அழகை கவர்ச்சியும் எழுச்சியும் உண்டாக்கிக் காணும் கண்களை மலர வைக்கும் செயல்திறன்
வாய்ந்த அழகு இது. ஆனால்பலரைக் கவர்ந்த இந்த அழகனை எதிர்த்துப் போர் செய்யவும் ஒருவன் முளைத்தான். ‘முக்காவல் நாடு’ என்றுசோழநாட்டுக்கருகில் ஒரு பகுதி இருந்தது. அதைப் பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒருவன் ஆமூரை ஆண்டு வந்தசிற்றரசன்.
ஆமூரரசன் மற்போரில் வல்லவன். அதனால் அவனை ஆமூர்மல்லன் என்றேசிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தார்கள். ஆமூர் மல்லன் தான் ஒரு சிற்றரசனாகஇருந்தும் பேரரசனான போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி அடிக்கடிஅவதூறாக இகழ்ந்து பேசி வந்தான்.
இதன் காரணமாகப் போர்வைக்கோப்பெருநற்கிள்ளிக்கும் முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனுக்கும் போர் ஏற்பட்டது. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் தந்தைக்குப் பெயர் ‘தித்தன்’ என்பது. கிள்ளியின் போர்த்திறனிலும் வீரத்திலும் அதிக அக்கறை காட்டிப்பெருமை கொள்வது தித்தனின் வழக்கம்.
முக்காவல் நாட்டு ஆமூரில் பெருங்கோழிநாய்கன் என்ற ஒரு செல்வச் சீமான்வாழ்ந்துவந்தான். பெருங்கோழிநாய்கனுக்கு ஒரேஒரு மகள். ‘நக்கண்ணை’ என்று பெயர். அவள் மணமாகாதவள். கன்னிமைசெழித்து நிற்கும் பருவம். குறுகுறுப்பானசுபாவம். புதுமைக் கட்டமைந்த அழகு. பருவமடைந்து வீட்டிற்குள்ளேயே கன்னிமாடத்தில் இருக்கச் செய்து பாதுகாத்து வந்தார்கள் அவளை.
ஆமூர் நகரத்திற்குள் நுழையும்தலைவாயிலுக்கருகே பிரதானமானவீதியில் அமைந்திருந்தது பெருங்கோழிநாய்கனின் மாளிகை.
ஒருநாள் காலை நேரம். அப்போதுதான்நீராடிவிட்டுக் கன்னிமாடத்திற்குள்நுழைந்திருந்தாள் நக்கண்ணை வெண்கலக் கூண்டிலிருந்து துவாரங்களின்வழியே சுருள் சுருளாகக் கிளம்பும் அகில்புகையில் கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்தாள். அலை அலையாகப்புரண்ட கருங்கூந்தலுக்கு நடுவே சுருள்சுருளாக இழைந்த புகைப் படலங்கள்புகுந்தன. குளித்து முடித்தவுடன் வாசனைநிறைந்த அகிற் புகையை நுகருவதில்நாசிக்கு இதமான ஒரு திருப்தி இருக்கிறது. அந்த இன்பமயமான
வாசனையின் போதையில் கட்டுண்டிருந்த அவள்திடுதிடுவென்று வீதியில் ஆரவாரத்தோடுபலர் ஓடிவருகின்ற ஒலியைக் கேட்டுச்சாளரத்தின் வழியாகத் தெருவைப்பார்த்தாள்.
யானைகளும் குதிரைகளும் தேர்களும்தொடரப் பலவகை ஆயுதங்களைத்தாங்கிய வீரர்களின் பெருங்கூட்டம்நகரத்திற்குள் நழைந்து கொண்டிருந்தது. படைகளைப் பார்த்தால் உள்ளுரைச்சேர்ந்தவையாகத் தெரியவில்லை. யாரோவெளியூரார்தான் படையெடுத்துவந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். இந்தச் சமயத்தில் அவளோடுகன்னிமாடத்தில் துணையிருக்கும் தோழிபரபரப்பாக அங்கே ஓடிவந்தாள்.
“அம்மா! அம்மா! கேட்டீர்களா செய்தியை?...”
“எந்தச் செய்தியையடி சொல்கிறாய்?”
“நம்முடைய ஆமூரைத் தாக்குவதற்காகச்சோழ மன்னர் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் படைகள் நகருக்குள்துழைந்துவிட்டன. இதோ தெருவைப்பாருங்களேன்?”
“ஒகோ! அதுதானா இந்தப் படை?”
அவள் விழிகள் மீண்டும் சாளரத்தின்வழியே தெருவைப் பார்த்தன.
அப்போது படைகளுக்கு நடுவே.? நடுவேஎன்ன? மேகங்களுக்கு நடுவே கதிரவனைப் போல ஒரு தேர் மெல்லநகர்ந்து வருவதைக் கண்டாள். அந்தத்தேரின் இடையே கரும்பு வில்லேந்திய மன்மதனைப்போல வீற்றிருந்தான் ஒர்ஆணழகன். ‘அழகு என்றால் இப்படியும் ஒர்அழகா? அதுவும் ஆண்களில் இப்படி ஒர்அழகன் இருக்க முடியுமா?’
“தோழி”
“என்ன அம்மா?”
“அதோ தெருவில் போகின்ற தேரில்பார்த்தாயா?.”
“பார்த்தேன்! பார்த்தேன்! பார்க்காமல்என்ன? அவர்தான் சோழ மன்னர்போர்வைக் கோப்பெருநற் கிள்ளி”
“என்ன, சோழ மன்னரா இவர்?”
“அதற்குச் சந்தேகம் என்ன அம்மா? நம்நகரத்தின்மேல் படையெடுத்துவந்திருக்கும் சோழ மன்னர்தான் இவர்.”
அவள் கண்கள் தேரைவிட்டு அகலவேஇல்லை.ஆனால் அவள் காணவேண்டும்என்பதற்காகத் தேர் நின்றுகொண்டிருக்குமா என்ன? சாளரத்திலிருந்து காண முடிந்த பார்வைஎல்லையைக் கடந்து சென்றுவிட்டது தேர்.
தேர் மட்டுமா போயிற்று? அந்தத் தேரில்இருந்தவனோடு அவள் உள்ளமும் ஏறிக்கொண்டுபோய் விட்டதே?
நக்கண்ணைகன்னிமாடத்தில் வசித்து வருகிறவள். இதுவரை ஆண்களையே கண்ணால்காணாமலிருந்தவள்; அவள் இதயம்.? பாவம் அது அந்தத் தேர்மேலிருந்தஅழகுக்குத் தோற்றுச் சரணாகதிஅடைந்துவிட்டது.
“தோழி! ஆண்களில் இப்படி அழகுள்ளவர்.”
“வேறெங்கும் இல்லை அம்மா” - அவள்தொடங்கிய வாக்கியத்தைத் தோழிமுடித்தாள்.
படைகள் எல்லாம் சென்றுவிட்டன. தெருபழைய அமைதியை அடைந்துவிட்டது. சூன்ரியம் திகழும் வீதியை வெறித்துப்பார்த்தாள் நக்கண்ணை.
“அம்மா! இனிமேல் இந்த நகரத்தின் நிலைமதில்மேற் பூனைபோலத்திண்டாட்டம்தான்!”
“ஏன் அப்படி?”
“நம்முடைய அரசராகிய ‘ஆமூர்மல்லர்’ வெல்வாரா? சோழன் வெல்வானா? நம்அரசனுக்கு வெற்றி கிடைத்தால் கவலைஇல்லை. சோழனுக்கு வெற்றி கிடைத்தால்நம் கதி என்ன ஆகுமோ?”
“.........”
“வெற்றியா? தோல்வியா? - தோல்வியா? வெற்றியா? இரவு பகலாக இந்த இரண்டும்கெட்ட நிலைதான் இனிமேல்....”
“ஊரை வெல்வதற்கு முன்பே அவர் ஒர்உள்ளத்தை வென்றுவிட்டாரே! அதுஉனக்குத் தெரியுமா?”
“என்னம்மா சொல்கிறீர்கள்?”
“புரியவில்லையா? இதோ என் இந்தமுன்கைகளில் துவண்டு சுழலும்வளைகளைப் பார்! இவை சொல்லும்”
“தோழீ! நீ கூறிய இரண்டுங்கெட்ட நிலைஇந்த ஊருக்கு மட்டுமில்லை. இனிமேல்எனக்குந்தான்.”
“சோழன்தான் வெல்வான் என்கிறார்கள்சிலர். ஆமூர் மல்லர்தான் வெல்வார்என்கிறார்கள் சிலர். யார் வெல்வார் களோ? யார் தோற்பார்களோ? என்ன ஆகுமோ?”
“..........”
நாலைந்து நாட்கள் கழிந்தன. அன்றுபோலவே இன்றும் காலை நேரம் தெருவில்ஏதோ வெற்றி ஆரவாரம் கேட்கிறது. “வாழ்க! வாழ்க!” என்ற பேரொலிவிண்ணை முட்டுகிறது. நக்கண்ணைஆர்வம் அலைமோதும் உள்ளத்தோடுகன்னி மாடத்துக் கட்டுப்பாட்டையும் மறந்துதெருவிற்கு ஓடி வருகின்றாள். தண்டைகளும் சிலம்புகளும் கலின் கலின்என்று ஒலிக்கின்றன.
தெருத்திண்ணையில் நின்று பார்க்கிறாள். பாலைப் பூசினாற் போன்ற நீண்ட கயல்விழிகள் மலர மலரப் பார்க்கின்றாள்.
அதே தேர்! அதே சோழ மன்னன்! அதேஅழகு வெற்றிச் சங்குகள் முழங்க ஆமூரைவென்றுவிட்டு நாடு
திரும்பிக் கொண்டிருந்தான்! நக்கண்ணைக்குஅப்படியே ஒடிப்போய்த் தெருவில்இறங்கித் தேரின்மேல்தாவி அவனைத்
தழுவிக்கொள்ள வேண்டும்போல உள்ளம் குறுகுறுத்தது. ‘வெட்கம்’ என்று ஒன்றுஇருந்து தொலைக்கிறதே! அதுநினைத்ததை நினைத்தபடி செய்யவிட்டால்தானே?
தேர் சென்றது. தெருக்கோடியில்மறைந்தது? வாழ்த் தொலிகளின் குரல்மங்கித் தேய்ந்து மெலிந்தன. நக்கண்ணையின் விழிகளின் ஒரத்தில்இரண்டு கண்ணிர் முத்துக்கள் திரண்டுநின்றன.
“அம்மா இதென்ன? இப்படித் தெருவில்நின்று கண்ணிர் சிந்திக் கொண்டு.”
நக்கண்ணை திரும்பிப் பார்த்தாள். தோழிபின்னால் நின்று கொண்டிருந்தாள்.
“தோழி! சோழனுக்குத்தான் வெற்றி! சோழன் வென்று கொண்டுபோய்விட்டான்.”
“எதை அம்மா”
“என்னை; என் மனத்தை; என்னுடையஎல்லா வற்றையுமேதான்.”
“நீங்கள் என்ன அம்மா? சுத்தப்பைத்தியமாக அல்லவா இருக்கிறீர்கள்? அவன் நாடாளும் பேரரசன். நம்மைப்போன்ற நிலையிலுள்ளவர்கள் அவனைப்போன்றவர்கள்மேல் இப்படி ஆசைகொள்வதே தவறு!”
“தவறுதான்! ஆனால், அது இந்தப் பாழாய்ப்போன மனத்துக்குப் புரியவில்லையே!” நக்கண்ணை கண்ணைத்துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.
ஆடாடு என்ப ஒரு சாரோரே
ஆடன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடிஎம்மின்
ஆடன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடிஎம்மின்
முழாவரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே! (புறநானூறு - 85)
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே! (புறநானூறு - 85)
ஆடு = வெற்றி, ஒரு சாரோர் = ஒரு சிலர், முழாவரைப்போந்தை = மத்தளம் போலப்படுத்த பனைமரத்தின் அருகிலுள்ளதிண்ணை, ஆடாகுதல் = வெற்றியடைந்திருத்தல், கண்டனன் = பார்த்தேன்.
இந்தப் பாடல் நக்கண்ணையின்நிறைவேறாத காதலின் துன்பத் தழும்பாகஇன்னும் புறநானூற்றில் இருந்து கொண்டுதான் இருக்கிறது!