புன்னகை பூக்கும் பூ(என்) வனம்
ரம்யா, இலகுவான சூழலில் வளர்ந்த பெண். சூட்சமங்கள், சூழ்ச்சிகள் அறியா ரம்யாவின் பெற்றோர்கள். சிறகொடிந்த நிலையில் தங்கையையும், அவளுடைய குழந்தையையும் கண்ணாடிப் பாத்திரம் போல கையாளும் அருமையான தமையனாக சிவா.
வாலிபத்தின் வாசலைத் தட்டியவளை தன்னவளாக்கிக் கொள்ளும் சாதூர்யத்தை, வெளிநாட்டு பயணத்தால் தவறவிடும் கிரி. தம்பியுடையான் படைக்கஞ்சான் எனும் சொல்லுக்கு உதாரணமாக சின்னதம்பி.
மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி கருணையும், அன்பும் மிகுந்தவள். மாங்குடியின் மீனாட்சி தன்முனைப்பும், அதிகாரமும், தயவுதாட்சண்யமும் தெரியாதவர். சுப்பையா, குடும்ப அமைதிக்காக தன் இயல்பை மாற்றிக் கொண்ட தயாளன்.
குழந்தைகளின் குறும்பு குதூகலத்தைத் தருகிறது.
வஞ்சனையால் பிரிந்தவர்களை, வாழ்வு அதன் போக்கில் வாழச்செய்கிறது. வாழ்வின் நிதர்சனம் புரிந்த கிரி, தனக்கானதை தனதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் போராட்டம் மற்றும் கன்றியிருந்த உள்ளக் காயம் ஆரும் வரை ரம்யாவின் மனக்குழப்பங்கள் இவற்றை ஆசிரியர் அருமையாகக் கூறியிருக்கிறார்.
சுபமான, சுகமான வாழ்வினை வாழ மேற்கொள்ளும் நிகழ்வுகளாக ஆசிரியர் எழுதியிருப்பது, நிதர்சன வாழ்வுடன் ஒத்துப்போகிறது.
அருமையான நாவல். படித்துப் பாருங்கள்.