Soundarya Krish
முதலமைச்சர்
பால்வெளிப் பாதையிலும் உன் மூச்சுக்காவலானாய் நான்..பால்வீதியின் பாதையிலே
பாவலனாய் வந்த பாவையின் காவலனே…
பேரண்டத்தின் பேரழகனே…
கொய்யும் கண்களால் மனதை கொய்தவனே(?)
காதல் அம்பை எய்தவனே...
மீயொளிர் வெடிப்பினை எனக்குள் நிகழ்த்தியவனே...
கரம் பற்ற தவமிருக்கிறேன் ...
என் வாழ்வின்
வரமாக வருவாயா (?)
வான் மண்டலத்தின் வான் மகனே ...
என் மனம் மயக்கிய மன்னவனே….
பேரழகனையும் புத்தி பேதலிக்கச்செய்த
என் பூவழகி நீ...
நான் எய்த காதலம்பை கைகளிலே நீ பிடித்து...
முத்தப்பத்திட்டு திருப்பிவிட்ட... மாறனி...
நான் பெற்ற வரம் நீ...???