ஹாய் டியர்ஸ்,
பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 14 பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் அனாமிகா 12. உங்களோட தேன்மொழி எப்படி இருக்கிறாள். ஒவ்வொரு பதிவிலும் டிவிஸ்ட் வைக்கிறேன் என்ற கோபத்தில் கமெண்ட் போடாமல் இருக்காதீர்கள் தோழமைகளே. உங்களோட கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.
அத்தியாயம் – 14
இருள் சூழ்ந்திருந்த வானில் மெல்ல வெளிச்சம் பரவியது. கீழ்வானம் செந்நிற கோலம் பூண்டது. அந்த விடியலைக் கண்டு குயில் இதமாக, “கூ.. கூ..” என்று கூவிடும் ஓசை அலைபாய்ந்திரும் மனதினை அமைதிப்படுத்திவிடும். பனியில் நனைந்த மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது.
அந்த காட்சியை இயல்பாக ரசிக்கும் மனநிலையின்றி கற்சிலைபோல, ஜன்னலின் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் தேன்மொழி. அவளின் முகத்தில் சோர்வு அதிகமாக இருந்தபோதும், ஏதோவொரு பளபளப்பு அவளைத் தேவதையாக காட்டியது.
அன்றைய நாளுக்குப் பிறகு அவளுடைய தாக்குதல்களுக்கு பயந்தே, கலைச்செல்வன் அவளைவிட்டு விலகி நிற்க தொடங்கினான். அந்த நாள் அவளின் மனக்கண்ணில் படமாக விரிந்தது.
அன்று ஏனோ வெகு உற்சாகத்துடன், “தேன்மொழி” என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
“இப்போ எதுக்காக என் பெயரை ஏலம் விடுற” என்று அவள் எரிந்து விழுக, அவள் குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
அவள் சமையலறையில் தோசை வார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து, “உனக்கு என்மீது எள்ளளவு அக்கறையில்லை என்று தெரிந்தபிறகும், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி போடும் கொழுப்பு! புருஷன் என்று மரியாதையும் தருவது இல்ல, அவனும் நம்மள மாதிரி ஒரு சாதாரண மனிதன்தானே என்று இரக்கத்தின் அடிப்படையில் சாப்பாடு செய்து வைப்பதில்லை” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான்.
வீட்டுக்குள் இருந்தால் இப்படி ஏதாவது எக்குதப்பாக யோசிக்க தோன்றும் என நினைத்து, அவளை வேலைக்கு போகும்படி கூறினான். அவளுக்கும் அது சரியென்று தோன்றவே அடுத்தடுத்து வந்த நாளில் பழைய நிறுவனத்திலேயே சென்று வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.
அன்றிலிருந்து அவளுக்கு தேவையான அனைத்தையும் அவளே செய்து கொண்டாள். தனக்கு கணவன் என ஒருவன் இருப்பதை முற்றிலுமாக மறந்து, பழையபடி நடமாட தொடங்கியவளை இப்படி அவன் சில சமயங்களில் வார்த்தைகளால் தாக்குவதும் உண்டு.
“வீட்டில் எலி தொல்லைத் தாங்க முடியாமல் விஷம் வாங்கி வச்சேன். அது சரியாக வேலை செய்யுதா என்று உன்னை வைத்துதான் செக் பண்ணனும்” என்று சொன்னவள் சட்டுகத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
“ஓ உனக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா? இங்கே பாரு நானே ஆகாது என்னும்போது நான் வாங்கிப்போடும் மளிகை சாமான்களைப் எதுக்காக யூஸ் பண்றே” என்று அவன் நக்கலாக கேட்க,
“நீ வாங்கித் தந்த அத்தனையும் அதோ அந்த மூலையில் சாக்கில் போட்டு கட்டி வச்சிருக்கேன். அதை எல்லாம் தூக்கிட்டு அப்படியே ஓடிப் போயிரு” என்றவள் தன்னுடைய வேலையைத் தொடர, தான் சொன்ன வந்த விஷயத்தை மறந்து அவளருகே சென்றான்.
“உன்னிடம் இந்த கோபம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னவன் அவளின் பின்னோடு சென்று இரு கரங்களால் அவளின் இடையை வளைத்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவன் சுவாசம் சூடாக அவள் கழுத்தில் மோதிட, அடுப்பில் வைத்த சட்டுகத்தை கையில் எடுத்தாள். அவளின் இடையில் ஊர்ந்த கரங்களில் ஒன்றைப் பிடித்து விரித்தவள் கொதிக்கும் கரண்டியை அவனது உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.
அந்த கரண்டியின் விளிம்பு நன்றாய் சூடேறி சிவந்திருந்ததால், “அம்மா” என்று அலறியவனின் அணைப்பு இறுகியது. அவள் கொடுத்த அழுத்தத்தில் வலி தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது.
அப்போது கூட இறுகிப்போய் நின்றிருந்தவளைக் கண்டு, “இன்னைக்கு நீ என்னை வதைக்கும்போது, ஒரு குழந்தை தன்னை அறியாமல் தவறு செய்வதை நினைத்து தாங்கிக்கிறேன். என்னைக்காவது ஒருநாள் என் அன்பை நீ உணரும்போது உன் நெஞ்சில் விழும் அடிகளைத் தாங்கும் மனவலியை உனக்கு ஆண்டவன் தரணும்” என்று நினைத்தவன் அவளைவிட்டு விலகினான்.
சட்டென்று அவன் பக்கம் திரும்பி, “இவ்வளவு அடித்தும் உனக்கெல்லாம் சூடு, சுரணை என்பதே வர மாட்டேங்குது. இது நீயாக தேடிகிட்ட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். இதுதான் தேன்மொழி. என் பெயரில் மட்டும்தான் தேன் இருக்கே தவிர, நெஞ்சமெல்லாம் வஞ்சம் மட்டும்தான் இருக்கு” என்று எந்தவிதமான சலனமும் இன்றி இறுகிய குரலில் கூறினாள்.
அவள் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளும் இன்றி இருப்பதைக் கண்டு, “தனக்கு தானே சவக்குழி வெட்டி அதில் விழுந்தவனை பார்த்து இருக்கிறாயா?” என்று கேட்டதற்கு, “நீதான் கண்முன்னாடியே இருக்கியே” என்றவள் எள்ளலாய் நகைக்க, அவன் கண்களில் வலிமட்டுமே மிஞ்சிருந்தது.
அவன் வலது உள்ளங்கையைப் பார்க்கும்போது அது தோள் உரிந்து கொப்புளித்து சிவந்து இருந்தது. அவளோ மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, மெல்ல அவளருகே சென்றான்.
கலைச்செல்வன் விழிகளில் தன் பார்வையைக் கலந்து, “ஒரு மலரில் தேனைத் திருடிய கையோடு, அடுத்த மலர்களைத் தீண்ட செல்லும் வண்டினத்தை மலரினம் தண்டிக்காது. ஆனால் உன்னைமாதிரி குணம் உடைய ஆண்களைத் தண்டிப்பது தவறு இல்லை என்று நினைப்பது இந்த தேன்மொழியின் கொள்கை” என்று கூறியவள் தன் வேலையைக் கவனிக்க திரும்பினாள்.
அதற்குள் அவளைத் திருப்பி நிறுத்தி, “எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வாங்க. ஆனால் உன்னோட ஒவ்வொரு வெற்றியும், இந்த கலைசெல்வனின் தோல்வி தான் படிகட்டுகளாக இருக்கிறது!” என்றவன் மிக மென்மையாக அவள் மலர் முகத்தைக் கையில் ஏந்தினான்.
“உன்னை பழைய தேனுவாக பார்க்க வாய்ப்பே இல்லையா?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கி, “நான் எப்பவும் போலதான் இருக்கேன். நீதான் ரொம்ப மாறிட்டே! என்னோட அழகை ஆண்டு அழிக்கவே கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கிற நீ” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“கொக்குக்கு ஒரே மதி என்று சொல்லுவதுபோல, உன்னோடு வாழவே கூடாது என்ற முடிவில் இருக்கேன். இதோ இன்றைய நிலை அப்படியே நீடித்தால் கண்டிப்பா, நீ தோண்டிய சவக்குழிக்குள் உயிரற்ற உடலால் உன்னைப் படுக்க வைக்கவும் தயங்கமாட்டேன்” என்று கர்வமாகக் கூறிய தேன்மொழியின் விழிதனில் அவனை கொல்லும் வெறி தெரிந்தது.
“அவ தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தும் கோபம், அவளை சீக்கிரமே குணமாக்கும். தேன்மொழிக்கு இருக்கும் மன அழுத்தத்தை அவள் எப்படி வெளிப்படுத்துகிறாளோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிக்கோ” என்ற கௌதம் குரல் காதில் கேட்க, அதற்குமேல் எதுவும் பேசாமல் அவளைவிட்டு விலகினான்.
அவன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிரும்போது வீட்டிற்குள் நுழைந்த தமிழரசன் – இந்துமதியைப் பார்த்து அவனது முகம் மலர்ந்தது.
“என்னன்னே அண்ணி கூட ரொமான்ஸா?” என்று சின்னவன் நடந்தது அறியாமல் குறும்பாய் கண்சிமிட்ட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி பக்கென்று சிரித்தாள்.
“உங்க அண்ணனுக்கு மத்த பெண்களிடம் தான் தமிழ் ரொமான்ஸ் வரும், என்னிடம் எல்லாம் அவரோட பாட்சா பலிக்காது!” என்று அவள் நக்கலாக கூறிவிட்டு அவள் மீண்டும் சிரிக்க, “உண்மைதான்” என்றவன் விழிகளில் நீர் கசிய, உதடுகளோ புன்னகைத்தது.
கலைச்செல்வன் கண்ணில் கண்ணீரைக் கண்ட தமிழ், “அண்ணா ஏதாவது பிரச்சனையா?” அவன் பதறியபடி விசாரிக்க, மறுப்பாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அப்போதுதான் இருவரும் இணைந்து வந்திருப்பதைக் கவனித்த இந்துமதி, “அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று தொடங்கியவளை கேள்வியாக நோக்கினாள் தேன்மொழி.
பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 14 பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் அனாமிகா 12. உங்களோட தேன்மொழி எப்படி இருக்கிறாள். ஒவ்வொரு பதிவிலும் டிவிஸ்ட் வைக்கிறேன் என்ற கோபத்தில் கமெண்ட் போடாமல் இருக்காதீர்கள் தோழமைகளே. உங்களோட கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.
அத்தியாயம் – 14
இருள் சூழ்ந்திருந்த வானில் மெல்ல வெளிச்சம் பரவியது. கீழ்வானம் செந்நிற கோலம் பூண்டது. அந்த விடியலைக் கண்டு குயில் இதமாக, “கூ.. கூ..” என்று கூவிடும் ஓசை அலைபாய்ந்திரும் மனதினை அமைதிப்படுத்திவிடும். பனியில் நனைந்த மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது.
அந்த காட்சியை இயல்பாக ரசிக்கும் மனநிலையின்றி கற்சிலைபோல, ஜன்னலின் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் தேன்மொழி. அவளின் முகத்தில் சோர்வு அதிகமாக இருந்தபோதும், ஏதோவொரு பளபளப்பு அவளைத் தேவதையாக காட்டியது.
அன்றைய நாளுக்குப் பிறகு அவளுடைய தாக்குதல்களுக்கு பயந்தே, கலைச்செல்வன் அவளைவிட்டு விலகி நிற்க தொடங்கினான். அந்த நாள் அவளின் மனக்கண்ணில் படமாக விரிந்தது.
அன்று ஏனோ வெகு உற்சாகத்துடன், “தேன்மொழி” என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
“இப்போ எதுக்காக என் பெயரை ஏலம் விடுற” என்று அவள் எரிந்து விழுக, அவள் குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
அவள் சமையலறையில் தோசை வார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து, “உனக்கு என்மீது எள்ளளவு அக்கறையில்லை என்று தெரிந்தபிறகும், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி போடும் கொழுப்பு! புருஷன் என்று மரியாதையும் தருவது இல்ல, அவனும் நம்மள மாதிரி ஒரு சாதாரண மனிதன்தானே என்று இரக்கத்தின் அடிப்படையில் சாப்பாடு செய்து வைப்பதில்லை” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான்.
வீட்டுக்குள் இருந்தால் இப்படி ஏதாவது எக்குதப்பாக யோசிக்க தோன்றும் என நினைத்து, அவளை வேலைக்கு போகும்படி கூறினான். அவளுக்கும் அது சரியென்று தோன்றவே அடுத்தடுத்து வந்த நாளில் பழைய நிறுவனத்திலேயே சென்று வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.
அன்றிலிருந்து அவளுக்கு தேவையான அனைத்தையும் அவளே செய்து கொண்டாள். தனக்கு கணவன் என ஒருவன் இருப்பதை முற்றிலுமாக மறந்து, பழையபடி நடமாட தொடங்கியவளை இப்படி அவன் சில சமயங்களில் வார்த்தைகளால் தாக்குவதும் உண்டு.
“வீட்டில் எலி தொல்லைத் தாங்க முடியாமல் விஷம் வாங்கி வச்சேன். அது சரியாக வேலை செய்யுதா என்று உன்னை வைத்துதான் செக் பண்ணனும்” என்று சொன்னவள் சட்டுகத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
“ஓ உனக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா? இங்கே பாரு நானே ஆகாது என்னும்போது நான் வாங்கிப்போடும் மளிகை சாமான்களைப் எதுக்காக யூஸ் பண்றே” என்று அவன் நக்கலாக கேட்க,
“நீ வாங்கித் தந்த அத்தனையும் அதோ அந்த மூலையில் சாக்கில் போட்டு கட்டி வச்சிருக்கேன். அதை எல்லாம் தூக்கிட்டு அப்படியே ஓடிப் போயிரு” என்றவள் தன்னுடைய வேலையைத் தொடர, தான் சொன்ன வந்த விஷயத்தை மறந்து அவளருகே சென்றான்.
“உன்னிடம் இந்த கோபம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னவன் அவளின் பின்னோடு சென்று இரு கரங்களால் அவளின் இடையை வளைத்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவன் சுவாசம் சூடாக அவள் கழுத்தில் மோதிட, அடுப்பில் வைத்த சட்டுகத்தை கையில் எடுத்தாள். அவளின் இடையில் ஊர்ந்த கரங்களில் ஒன்றைப் பிடித்து விரித்தவள் கொதிக்கும் கரண்டியை அவனது உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.
அந்த கரண்டியின் விளிம்பு நன்றாய் சூடேறி சிவந்திருந்ததால், “அம்மா” என்று அலறியவனின் அணைப்பு இறுகியது. அவள் கொடுத்த அழுத்தத்தில் வலி தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது.
அப்போது கூட இறுகிப்போய் நின்றிருந்தவளைக் கண்டு, “இன்னைக்கு நீ என்னை வதைக்கும்போது, ஒரு குழந்தை தன்னை அறியாமல் தவறு செய்வதை நினைத்து தாங்கிக்கிறேன். என்னைக்காவது ஒருநாள் என் அன்பை நீ உணரும்போது உன் நெஞ்சில் விழும் அடிகளைத் தாங்கும் மனவலியை உனக்கு ஆண்டவன் தரணும்” என்று நினைத்தவன் அவளைவிட்டு விலகினான்.
சட்டென்று அவன் பக்கம் திரும்பி, “இவ்வளவு அடித்தும் உனக்கெல்லாம் சூடு, சுரணை என்பதே வர மாட்டேங்குது. இது நீயாக தேடிகிட்ட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். இதுதான் தேன்மொழி. என் பெயரில் மட்டும்தான் தேன் இருக்கே தவிர, நெஞ்சமெல்லாம் வஞ்சம் மட்டும்தான் இருக்கு” என்று எந்தவிதமான சலனமும் இன்றி இறுகிய குரலில் கூறினாள்.
அவள் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளும் இன்றி இருப்பதைக் கண்டு, “தனக்கு தானே சவக்குழி வெட்டி அதில் விழுந்தவனை பார்த்து இருக்கிறாயா?” என்று கேட்டதற்கு, “நீதான் கண்முன்னாடியே இருக்கியே” என்றவள் எள்ளலாய் நகைக்க, அவன் கண்களில் வலிமட்டுமே மிஞ்சிருந்தது.
அவன் வலது உள்ளங்கையைப் பார்க்கும்போது அது தோள் உரிந்து கொப்புளித்து சிவந்து இருந்தது. அவளோ மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, மெல்ல அவளருகே சென்றான்.
கலைச்செல்வன் விழிகளில் தன் பார்வையைக் கலந்து, “ஒரு மலரில் தேனைத் திருடிய கையோடு, அடுத்த மலர்களைத் தீண்ட செல்லும் வண்டினத்தை மலரினம் தண்டிக்காது. ஆனால் உன்னைமாதிரி குணம் உடைய ஆண்களைத் தண்டிப்பது தவறு இல்லை என்று நினைப்பது இந்த தேன்மொழியின் கொள்கை” என்று கூறியவள் தன் வேலையைக் கவனிக்க திரும்பினாள்.
அதற்குள் அவளைத் திருப்பி நிறுத்தி, “எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வாங்க. ஆனால் உன்னோட ஒவ்வொரு வெற்றியும், இந்த கலைசெல்வனின் தோல்வி தான் படிகட்டுகளாக இருக்கிறது!” என்றவன் மிக மென்மையாக அவள் மலர் முகத்தைக் கையில் ஏந்தினான்.
“உன்னை பழைய தேனுவாக பார்க்க வாய்ப்பே இல்லையா?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கி, “நான் எப்பவும் போலதான் இருக்கேன். நீதான் ரொம்ப மாறிட்டே! என்னோட அழகை ஆண்டு அழிக்கவே கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கிற நீ” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“கொக்குக்கு ஒரே மதி என்று சொல்லுவதுபோல, உன்னோடு வாழவே கூடாது என்ற முடிவில் இருக்கேன். இதோ இன்றைய நிலை அப்படியே நீடித்தால் கண்டிப்பா, நீ தோண்டிய சவக்குழிக்குள் உயிரற்ற உடலால் உன்னைப் படுக்க வைக்கவும் தயங்கமாட்டேன்” என்று கர்வமாகக் கூறிய தேன்மொழியின் விழிதனில் அவனை கொல்லும் வெறி தெரிந்தது.
“அவ தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தும் கோபம், அவளை சீக்கிரமே குணமாக்கும். தேன்மொழிக்கு இருக்கும் மன அழுத்தத்தை அவள் எப்படி வெளிப்படுத்துகிறாளோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிக்கோ” என்ற கௌதம் குரல் காதில் கேட்க, அதற்குமேல் எதுவும் பேசாமல் அவளைவிட்டு விலகினான்.
அவன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிரும்போது வீட்டிற்குள் நுழைந்த தமிழரசன் – இந்துமதியைப் பார்த்து அவனது முகம் மலர்ந்தது.
“என்னன்னே அண்ணி கூட ரொமான்ஸா?” என்று சின்னவன் நடந்தது அறியாமல் குறும்பாய் கண்சிமிட்ட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி பக்கென்று சிரித்தாள்.
“உங்க அண்ணனுக்கு மத்த பெண்களிடம் தான் தமிழ் ரொமான்ஸ் வரும், என்னிடம் எல்லாம் அவரோட பாட்சா பலிக்காது!” என்று அவள் நக்கலாக கூறிவிட்டு அவள் மீண்டும் சிரிக்க, “உண்மைதான்” என்றவன் விழிகளில் நீர் கசிய, உதடுகளோ புன்னகைத்தது.
கலைச்செல்வன் கண்ணில் கண்ணீரைக் கண்ட தமிழ், “அண்ணா ஏதாவது பிரச்சனையா?” அவன் பதறியபடி விசாரிக்க, மறுப்பாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அப்போதுதான் இருவரும் இணைந்து வந்திருப்பதைக் கவனித்த இந்துமதி, “அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று தொடங்கியவளை கேள்வியாக நோக்கினாள் தேன்மொழி.