பெண்ணே...உன் முகவரி
......................................................
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்,
எதற்கு, ஏன் என தெரியாமல்,
இது, எப்போது, எப்படி முடியுமென புரியாமல்,
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்!
உருவம் ஏதுமின்றி
ஊற்றும் பாத்திரத்தின்
வடிவத்தை வார்த்தெடுத்து கொள்ளும்,
தண்ணீரைப் போல…
மகளாய் ,மனைவியாய், தாயாய்
என தான் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்ப..
தன்னைத்தானே உரு மாற்றிக்கொண்டு,
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்!!
இறுதியில்,
மணலில் இட்ட நீரைப்போல,
தன்னையே தொலைத்து விட்டு,
காணாமலே போகிறாள்!!..
பெண்ணே! நீ நீராக இரு,
ஆனால் பாத்திரத்திற்குள் அடைபட்டு நிற்கும் நீராய் அல்ல!
மலையின் மடியில், ஊற்றாய் உருவாகி,
உயரப் பிறந்தவளை,
கொட்டிக் கவிழ்த்தாலும்,
ஆறாய்ப் பெருக்கெடுத்து,
சென்ற வழி எல்லாம், செழிக்கச் செய்து
பாதையில் குறுக்கிடும் கல்லை
பொடித்து தூளாக்கி, அடித்துச் செல்லும்
அருவி நீரைப் போல….
நீ இரு பெண்ணே!..
உனக்கென ஒரு பாதையை
நீயே உருவாக்கு!
குறுக்கிடும் கற்களை,
முயற்சியால் அரித்து,
உழைப்பால் நகர்த்தி துகளாக்கு,
பொடி, பொடியாக்கு!!..
தன்னையே உருக்கி, கரைத்து
அறை எங்கும் வெளிச்சம் தந்தாலும்,
மெழுகுவர்த்தியின் அடியில்
இருளாக தான் இருக்கும்..
நீ உருகிக் கரைந்து, காணாமல் போகும்,
மெழுகாய் இருக்காதே!!
உலகிற்கே ஆற்றல் மூலமாய்
ஆதியும், அந்தமுமாக இருக்கும்
சூரியனாய் இரு!!
உன்னிடம் இருக்கும் நெருப்பு,
உலகிற்கே வெளிச்சம் தர வேண்டும்!!
இப்படித்தான் பெண் இருக்க வேண்டும்
என ஏட்டில் எழுதிவைத்த எவரும்,
இங்கே உத்தமரில்லை!!
ஆதலால், நீ அப்படித்தான்
இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்,
எந்த அர்த்தமுமில்லை!!
உனக்கென வகுத்த இலக்கணம்,
முற்றிலும் பிழையோடு இருக்கையில்,
நீ இலக்கணம் மீறிய கவிதையாய்
இருப்பதில் பிழையொன்றுமில்லை!!
உனக்கு பாதைகள் வகுக்க,
அவர்கள் யார்?
காற்றுக்கிங்கே, பாதை போட்டுக்கொடுக்க, யாரால் முடியும்??
விட்டுக் கொடுப்பதற்கும்,
விட்டு விடுவதற்கும்,
வித்தியாசம் உள்ளதம்மா!
இரும்பையே நெருப்பில் இட்டு,
விரும்பிய வண்ணம் வளைக்கும் உலகில்,
பெண்ணாய் பிறந்த பின்னே,
விட்டுக் கொடுக்காமல்
வாழ முடியாதுதான்!
ஆனால்,
எதற்கும் ,எப்பொழுதும்,
உன் சுயமரியாதையை, தனித்தன்மையை விட்டு விடாதே!!
உன் உரிமைகள் மறுக்கப்படும் இடத்தில்
குரல் உயர்த்து!
உன் கனவுகள் நசுக்கப்படும் இடத்தில்,
அடங்க மறு!
அடைத்து சிறைப்படுத்தி, அடக்கிட துடிக்கும் வேளையில்,
அத்துமீறு!!
உனக்கு எதுவும் சாத்தியமில்லை,
என்பது நிச்சயமாய் சத்தியமில்லை!
அதனால்,
எதையும் முயன்று பார்த்திடு!
வெல்லும் வரை வேர்த்து போராடிடு!
போராடாமல் இங்கே எதுவும் கிடைத்ததில்லை!
போராட்டம் என்பது,
பெண்ணே!
உனக்கொன்றும் புதிதுமில்லை!!
கல்லாக இருக்கும் நீ,
சிலையாக வேண்டுமெனில்,
நீயே உளியாகவும் மாற வேண்டும்!!
சொக்கத்தங்கமாய் இருக்கும் நீ,
ஆபரணமாய் மிளிர நினைத்தால்,
நெருப்பில் குளிக்கவும் ,
நீரில் உறையவும்,
நெஞ்சம் நிமிர்த்தி நிற்க வேண்டும்!!
அஞ்சல் முகவரி
உன் வீட்டின் அடையாளமே,
உன் அடையாளமில்லை!
நீ பிறக்கும்போதே, உன்னுடன் பிறந்து,
வளர,வளர ,தானும் வளர்ந்து,
வெளிவரத் துடிக்கும் போதெல்லாம்
கிள்ளி எறியப்பட்டு,
இலை விரிக்க முயலும்போது
வேர் அறுக்கப்பட்டு,
எடுத்தெறிய முடியாமல்
உன் அடி மனதில் ஆழப் புதைந்து,
இன்னும் மிச்சமிருக்கும்
உன் கனவுகளே... உன் அடையாளம்!
அந்த, உன் கனவுகளைத் துரத்து,
சுட்டெரிக்கும் வெயில் நிறைந்த
பகல் என பாராமல்,
மிரட்டும் இருட்டு நிறைந்த
இரவென எண்ணாமல்,
எந்நேரமும் உன் கனவுகளை துரத்து..!
உன் தனித்துவமே..
உன் பிறப்பின் மகத்துவம்!
உன்னை நீயே,
உலகிற்கு அடையாளம் காட்டு!
இன்னாரின் மகள்,
இவரின் மனைவி என இல்லாமல்
இதுதான் நீ என்று,
இந்த சாதனை உனது என்று,
உன் வெற்றி திருமுகம் கொண்டு
உன்னை உலகிற்கு
நீயே அடையாளம் காட்டு!! ..
......................................................
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்,
எதற்கு, ஏன் என தெரியாமல்,
இது, எப்போது, எப்படி முடியுமென புரியாமல்,
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்!
உருவம் ஏதுமின்றி
ஊற்றும் பாத்திரத்தின்
வடிவத்தை வார்த்தெடுத்து கொள்ளும்,
தண்ணீரைப் போல…
மகளாய் ,மனைவியாய், தாயாய்
என தான் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்ப..
தன்னைத்தானே உரு மாற்றிக்கொண்டு,
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்!!
இறுதியில்,
மணலில் இட்ட நீரைப்போல,
தன்னையே தொலைத்து விட்டு,
காணாமலே போகிறாள்!!..
பெண்ணே! நீ நீராக இரு,
ஆனால் பாத்திரத்திற்குள் அடைபட்டு நிற்கும் நீராய் அல்ல!
மலையின் மடியில், ஊற்றாய் உருவாகி,
உயரப் பிறந்தவளை,
கொட்டிக் கவிழ்த்தாலும்,
ஆறாய்ப் பெருக்கெடுத்து,
சென்ற வழி எல்லாம், செழிக்கச் செய்து
பாதையில் குறுக்கிடும் கல்லை
பொடித்து தூளாக்கி, அடித்துச் செல்லும்
அருவி நீரைப் போல….
நீ இரு பெண்ணே!..
உனக்கென ஒரு பாதையை
நீயே உருவாக்கு!
குறுக்கிடும் கற்களை,
முயற்சியால் அரித்து,
உழைப்பால் நகர்த்தி துகளாக்கு,
பொடி, பொடியாக்கு!!..
தன்னையே உருக்கி, கரைத்து
அறை எங்கும் வெளிச்சம் தந்தாலும்,
மெழுகுவர்த்தியின் அடியில்
இருளாக தான் இருக்கும்..
நீ உருகிக் கரைந்து, காணாமல் போகும்,
மெழுகாய் இருக்காதே!!
உலகிற்கே ஆற்றல் மூலமாய்
ஆதியும், அந்தமுமாக இருக்கும்
சூரியனாய் இரு!!
உன்னிடம் இருக்கும் நெருப்பு,
உலகிற்கே வெளிச்சம் தர வேண்டும்!!
இப்படித்தான் பெண் இருக்க வேண்டும்
என ஏட்டில் எழுதிவைத்த எவரும்,
இங்கே உத்தமரில்லை!!
ஆதலால், நீ அப்படித்தான்
இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்,
எந்த அர்த்தமுமில்லை!!
உனக்கென வகுத்த இலக்கணம்,
முற்றிலும் பிழையோடு இருக்கையில்,
நீ இலக்கணம் மீறிய கவிதையாய்
இருப்பதில் பிழையொன்றுமில்லை!!
உனக்கு பாதைகள் வகுக்க,
அவர்கள் யார்?
காற்றுக்கிங்கே, பாதை போட்டுக்கொடுக்க, யாரால் முடியும்??
விட்டுக் கொடுப்பதற்கும்,
விட்டு விடுவதற்கும்,
வித்தியாசம் உள்ளதம்மா!
இரும்பையே நெருப்பில் இட்டு,
விரும்பிய வண்ணம் வளைக்கும் உலகில்,
பெண்ணாய் பிறந்த பின்னே,
விட்டுக் கொடுக்காமல்
வாழ முடியாதுதான்!
ஆனால்,
எதற்கும் ,எப்பொழுதும்,
உன் சுயமரியாதையை, தனித்தன்மையை விட்டு விடாதே!!
உன் உரிமைகள் மறுக்கப்படும் இடத்தில்
குரல் உயர்த்து!
உன் கனவுகள் நசுக்கப்படும் இடத்தில்,
அடங்க மறு!
அடைத்து சிறைப்படுத்தி, அடக்கிட துடிக்கும் வேளையில்,
அத்துமீறு!!
உனக்கு எதுவும் சாத்தியமில்லை,
என்பது நிச்சயமாய் சத்தியமில்லை!
அதனால்,
எதையும் முயன்று பார்த்திடு!
வெல்லும் வரை வேர்த்து போராடிடு!
போராடாமல் இங்கே எதுவும் கிடைத்ததில்லை!
போராட்டம் என்பது,
பெண்ணே!
உனக்கொன்றும் புதிதுமில்லை!!
கல்லாக இருக்கும் நீ,
சிலையாக வேண்டுமெனில்,
நீயே உளியாகவும் மாற வேண்டும்!!
சொக்கத்தங்கமாய் இருக்கும் நீ,
ஆபரணமாய் மிளிர நினைத்தால்,
நெருப்பில் குளிக்கவும் ,
நீரில் உறையவும்,
நெஞ்சம் நிமிர்த்தி நிற்க வேண்டும்!!
அஞ்சல் முகவரி
உன் வீட்டின் அடையாளமே,
உன் அடையாளமில்லை!
நீ பிறக்கும்போதே, உன்னுடன் பிறந்து,
வளர,வளர ,தானும் வளர்ந்து,
வெளிவரத் துடிக்கும் போதெல்லாம்
கிள்ளி எறியப்பட்டு,
இலை விரிக்க முயலும்போது
வேர் அறுக்கப்பட்டு,
எடுத்தெறிய முடியாமல்
உன் அடி மனதில் ஆழப் புதைந்து,
இன்னும் மிச்சமிருக்கும்
உன் கனவுகளே... உன் அடையாளம்!
அந்த, உன் கனவுகளைத் துரத்து,
சுட்டெரிக்கும் வெயில் நிறைந்த
பகல் என பாராமல்,
மிரட்டும் இருட்டு நிறைந்த
இரவென எண்ணாமல்,
எந்நேரமும் உன் கனவுகளை துரத்து..!
உன் தனித்துவமே..
உன் பிறப்பின் மகத்துவம்!
உன்னை நீயே,
உலகிற்கு அடையாளம் காட்டு!
இன்னாரின் மகள்,
இவரின் மனைவி என இல்லாமல்
இதுதான் நீ என்று,
இந்த சாதனை உனது என்று,
உன் வெற்றி திருமுகம் கொண்டு
உன்னை உலகிற்கு
நீயே அடையாளம் காட்டு!! ..