அனைவரின் கருத்துக்களும்.. மிக அருமை..
இங்கே அணைத்து பங்களிப்பாளர்களும் ..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்தின கட்டுரைகள்-ல .. ஒருமித்த குரல்-ல சொன்ன விஷயங்கள்::
பெற்றோர் தோழமையுடன் இருத்தல்...
தற்காப்பு கலை அறிதல் ...
தைரியம் ..&, நம்பிக்கை வளர்த்தல்....
அடிப்படை பாலின வேறுபாடு/கல்வி புகட்டுதல்...
போராளியா / புத்திசாலி /சாமர்த்திய சாலியா இருக்கணும்...
சமூக ஒற்றுமை/பறந்து பட்ட பார்வை வேணும்..
துணையின் தேவையை புறந்தள்ளாமை... ன்னு தோழி. Zainab & வித்யா நாராயண் வலியுறுத்தி இருக்காங்க.. [ சபாஷ்]
கற்பு உடல் சார்ந்தது இல்ல.. அது பெரிய்ய விஷயமும் இல்ல - ன்னு ஆணித்தரமா சொல்லி இருக்காங்க நம்ம பிரேமலதா..
பெண்ணுக்கு அவளே பாதுகாப்பு-ன்னு அருமையா தேவா சொல்லி இருக்கார்...
தொகுப்பில் தவறிருந்தால் /பிழையிருந்தால் பொறுத்து அருள்க ...
கடைசியா ஒரு விஷயம்...
ஆணுக்கு பெண் சரிநிகர் -ல்லாம் இல்லை ... இல்லவே இல்லை...
பிறக்கும்போதே கடவுள் ஆண்களுக்கு பிள்ளைக்கு சந்ததிகளை பெருக்கும் அணுக்களை மட்டுமே கொடுக்கிறார்... பெண்களாகிய நமக்கு.... அச்சந்ததிகளை தாங்கும் சக்திவாய்ந்த கருப்பையை மட்டுமல்ல...கருமுட்டைகளையும் தந்து.. அவர்கள் பலம் பெற்று வாழ ... பசி தீர்க்கும் ஸ்தன்யங்களையும் குடுத்து .. அண்ண பூரணியாதான் படைக்க படறா.
எங்கே பெண் போற்றப்படுகிறாளோ... அங்கே சகல வளங்களும் நிறைந்து இருக்கும்....
இன்னும் எழுத விஷயமிருக்கு... நேரம்.... ???
நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்...
வணக்கம்....