Eswari kasirajan
முதலமைச்சர்
குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்
****************************************
பொதுவாக நடை பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடுவதில்லை.
இதன் ரகசியம் என்ன?
அசுரனான இரண்யஹசிபு, தன்னையே கடவுள் என உலகிற்கு அறிவித்தான். ஆனால் அவனது மகன் பிரகலாதன், சிறுவயது முதல் விஷ்ணுபக்தனாக வளர்ந்தான். தனது கட்டளையை பிரகலாதன் ஏற்க வேண்டும் என எதிர்பார்த்த இரண்யனின் முயற்சிகள் வீணாயின. கோபம் கொண்ட இரண்யன், மகன் என்றும் பார்க்காமல் மலை உச்சியிலிருந்து உருட்டி விட உத்தரவிட்டான். பணியாளர்களும் உத்தரவை நிறைவேற்றினர். எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணா' என ஜபித்தபடியே மலையில் உருண்டான். அடிபடாமல் அவனை பூமாதேவி காத்ததோடு, '' பிரகலாதா! விரும்பும் வரத்தை கேள்'' என்றும் கேட்டாள்.
''தாயே! என்னை அடிபடாமல் காத்தது போல, என் போன்ற குழந்தைகள் நடை பயிலும் போதும், கீழே தவறி விழும் போதும் தாங்கிப் பிடித்து கொள்'' என்றான்.
அவளும் சம்மதித்தாள். இந்த அரிய வரத்தைப் பெற்ற பிரகலாதனுக்கு நன்றி சொல்வோம்.
படித்ததைப் பகிர்ந்தேன்
****************************************
பொதுவாக நடை பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடுவதில்லை.
இதன் ரகசியம் என்ன?
அசுரனான இரண்யஹசிபு, தன்னையே கடவுள் என உலகிற்கு அறிவித்தான். ஆனால் அவனது மகன் பிரகலாதன், சிறுவயது முதல் விஷ்ணுபக்தனாக வளர்ந்தான். தனது கட்டளையை பிரகலாதன் ஏற்க வேண்டும் என எதிர்பார்த்த இரண்யனின் முயற்சிகள் வீணாயின. கோபம் கொண்ட இரண்யன், மகன் என்றும் பார்க்காமல் மலை உச்சியிலிருந்து உருட்டி விட உத்தரவிட்டான். பணியாளர்களும் உத்தரவை நிறைவேற்றினர். எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணா' என ஜபித்தபடியே மலையில் உருண்டான். அடிபடாமல் அவனை பூமாதேவி காத்ததோடு, '' பிரகலாதா! விரும்பும் வரத்தை கேள்'' என்றும் கேட்டாள்.
''தாயே! என்னை அடிபடாமல் காத்தது போல, என் போன்ற குழந்தைகள் நடை பயிலும் போதும், கீழே தவறி விழும் போதும் தாங்கிப் பிடித்து கொள்'' என்றான்.
அவளும் சம்மதித்தாள். இந்த அரிய வரத்தைப் பெற்ற பிரகலாதனுக்கு நன்றி சொல்வோம்.
படித்ததைப் பகிர்ந்தேன்