முந்தைய பதிவிற்கு விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்த தோழமைகளுக்கு அநேக நன்றிகள்
ஊஞ்சலின் குறும்புத்தனமான ஆட்டத்தை காண உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் நண்பர்களே
சிலம்பாட்டம் பற்றிய இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய விளக்கம்:
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும் தசைகளும் இயங்குகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னை சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.
இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுதிறன், உடல் நெகிழ்தன்மை(ப்ளெக்க்ஸ்பிளிட்டி) ஆகியவற்றை அடைய சிலம்ப பயிற்சி உதவுகிறது.
சிலம்பத்தை நாம் விளையாடும் போது, நகக்கண்ணைத் தவிர மீதியுள்ள அனைத்து பகுதியும் வேலை செய்யும். சுவாசக் கோளாறுகள் கூட சிலம்பாட்டத்தால் குணமடையும். உடல் முழுவதும் வியர்வை வெளியேறுவதால் உடலின் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
ஒரு சிலம்ப வீரர் தன் எதிரியை எதிர்கொள்வதற்கு தன்னை ஆரோக்கியமாக வைப்பது அவசியம். எதிரியை குச்சி இல்லாமல் தாங்கக்கூடிய கலை சிலம்பம். தற்காப்பு கலையை அடிப்படையாக கொண்டுதான் காலடிமுறை பயன்படுத்தப் பட்டுள்ளது.
பெண்களுக்கு தைரியத்தை ஊட்டும் விளையாட்டு சிலம்பமே. பெண்களுக்கு சிலம்பம் தான் பாதுகாப்பான ஆயுதம். சிலம்பம் கற்றுக் கொள்வதால் ஆயுத பயத்தில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு எதிலிருந்தும் விடுபடலாம் என்கிற தைரியம் பிறக்கும்.
குறைந்தபட்சம் ஐந்து வயதிலிருந்து, எல்லா வயதினரும் சிலம்பாட்டத்தை விளையாடலாம். உடல் வெப்பம் ஏறாமல் தடுக்கவல்ல மூங்கில் அல்லது பிரம்பால் செய்யப்பட்ட சிலம்பக் குச்சியில்தான் சிலம்பம் விளையாட வேண்டும். அதுவே பித்தம், மயக்கம் வரக்கூடியவர்கள் பிரம்புக் குச்சியால் செய்யப்பட்ட சிலம்பக் குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.
சிலம்பக் குச்சியின் உயரம், விளையாடுபவரின் நெற்றியளவு உயரத்துக்கு இருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி எந்த வயதினரும் எந்த வயதினரோடும் சிலம்பம் விளையாடலாம்.
சிலம்புக் குச்சியை, முதலில் வீரரின் இடது காலுக்கு முன்பாக வைத்துக்கொண்டு, இடது காலை முன்வைத்துதான் போட்டி அல்லது பயிற்சியைத் தொடங்க வேண்டும். சிலம்பம் கற்றுக் கொள்பவர் மேற்குப் புறத்திலும், கற்றுக் கொடுக்கும் குரு கிழக்குப் புறத்திலும் இருக்க வேண்டும். தளர்வான உடைகள் அணிய வேண்டும்.
எல்லாவிதமான நிலப்பகுதிகளிலும் சிலம்பம் விளையாடலாம். காலை 6 - 8 மணிக்குட்பட்ட நேரத்தில் சிலம்பம் விளையாடுவது உடல்நலத்துக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும். உச்சி வெயிலில் சிலம்பம் விளையாடுவதைத் தவிர்க்கலாம்.
ஒற்றைக் கையிலும், இரண்டு கைகளிலும் சிலம்பம் விளையாடலாம். கைகளுக்கு எந்தளவுக்கு அசைவுகள் கொடுக்கிறோமோ அதற்குச் சமமாக கால்களுக்கும் அசைவுகள் கொடுக்க வேண்டும்.
விளையாடிக்கொண்டே ஓய்வெடுக்கும் வித்தியாசமான அனுபவத்தை சிலம்பத்தில் பெறமுடியும். வீரர் தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடம்வரை அதிக வேகத்தில் விளையாடினால் ஏற்படும் களைப்பைக் குறைக்க, அடவு முறையைப் பயன்படுத்தலாம். இந்த அடவு முறையில், வேகத்தை குறைத்துக்கொண்டு பரதத்தில் காட்டும் அடவுகளைப்போல, மெதுவாக பல்வேறு கம்பு சுற்றும் அடவு முறைகளைச் செய்துகொண்டே களைப்பைப் போக்கிக் கொள்ளலாம். பின்னர் அமர்ந்தும் ஓய்வெடுக்கலாம்.
வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவிக்கக் கற்றுக்கொடுக்கும் சிலம்பு விளையாட்டை சிறுவர்கள் இருந்தே விளையாடுவதன் மூலமாக, தன்னம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் குணத்துடன் நினைவாற்றலையும் அதிகரித்துக்கொள்ள முடியும். தொடர்ந்து சிலம்பப் பயிற்சி மேற்கொள்ளும்போது கை, கால்கள் பலம் பெறும்.
சிலம்பம் விளையாடும்போது பசியே எடுக்காது. விளையாடி முடித்ததும் பசி நன்றாகத் தூண்டப்படும். சாப்பிட அடம் செய்யும் குழந்தைகளுக்குச் சிலம்பப் பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் பசி தூண்டப்படும் என்பதுடன் உடல் வலிமையும் பெறுவார்கள்.
பெரியவர்கள் தொடர்ந்து சிலம்பாட்டப் பயிற்சியை மேற்கொள்ளும்போது இருதயக் கோளாறுகள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை தவிர்க்கப்பட்டு உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ஊஞ்சல் - 15
ஊஞ்சலின் குறும்புத்தனமான ஆட்டத்தை காண உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் நண்பர்களே
சிலம்பாட்டம் பற்றிய இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய விளக்கம்:
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும் தசைகளும் இயங்குகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னை சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.
இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுதிறன், உடல் நெகிழ்தன்மை(ப்ளெக்க்ஸ்பிளிட்டி) ஆகியவற்றை அடைய சிலம்ப பயிற்சி உதவுகிறது.
சிலம்பத்தை நாம் விளையாடும் போது, நகக்கண்ணைத் தவிர மீதியுள்ள அனைத்து பகுதியும் வேலை செய்யும். சுவாசக் கோளாறுகள் கூட சிலம்பாட்டத்தால் குணமடையும். உடல் முழுவதும் வியர்வை வெளியேறுவதால் உடலின் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
ஒரு சிலம்ப வீரர் தன் எதிரியை எதிர்கொள்வதற்கு தன்னை ஆரோக்கியமாக வைப்பது அவசியம். எதிரியை குச்சி இல்லாமல் தாங்கக்கூடிய கலை சிலம்பம். தற்காப்பு கலையை அடிப்படையாக கொண்டுதான் காலடிமுறை பயன்படுத்தப் பட்டுள்ளது.
பெண்களுக்கு தைரியத்தை ஊட்டும் விளையாட்டு சிலம்பமே. பெண்களுக்கு சிலம்பம் தான் பாதுகாப்பான ஆயுதம். சிலம்பம் கற்றுக் கொள்வதால் ஆயுத பயத்தில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு எதிலிருந்தும் விடுபடலாம் என்கிற தைரியம் பிறக்கும்.
குறைந்தபட்சம் ஐந்து வயதிலிருந்து, எல்லா வயதினரும் சிலம்பாட்டத்தை விளையாடலாம். உடல் வெப்பம் ஏறாமல் தடுக்கவல்ல மூங்கில் அல்லது பிரம்பால் செய்யப்பட்ட சிலம்பக் குச்சியில்தான் சிலம்பம் விளையாட வேண்டும். அதுவே பித்தம், மயக்கம் வரக்கூடியவர்கள் பிரம்புக் குச்சியால் செய்யப்பட்ட சிலம்பக் குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.
சிலம்பக் குச்சியின் உயரம், விளையாடுபவரின் நெற்றியளவு உயரத்துக்கு இருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி எந்த வயதினரும் எந்த வயதினரோடும் சிலம்பம் விளையாடலாம்.
சிலம்புக் குச்சியை, முதலில் வீரரின் இடது காலுக்கு முன்பாக வைத்துக்கொண்டு, இடது காலை முன்வைத்துதான் போட்டி அல்லது பயிற்சியைத் தொடங்க வேண்டும். சிலம்பம் கற்றுக் கொள்பவர் மேற்குப் புறத்திலும், கற்றுக் கொடுக்கும் குரு கிழக்குப் புறத்திலும் இருக்க வேண்டும். தளர்வான உடைகள் அணிய வேண்டும்.
எல்லாவிதமான நிலப்பகுதிகளிலும் சிலம்பம் விளையாடலாம். காலை 6 - 8 மணிக்குட்பட்ட நேரத்தில் சிலம்பம் விளையாடுவது உடல்நலத்துக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும். உச்சி வெயிலில் சிலம்பம் விளையாடுவதைத் தவிர்க்கலாம்.
ஒற்றைக் கையிலும், இரண்டு கைகளிலும் சிலம்பம் விளையாடலாம். கைகளுக்கு எந்தளவுக்கு அசைவுகள் கொடுக்கிறோமோ அதற்குச் சமமாக கால்களுக்கும் அசைவுகள் கொடுக்க வேண்டும்.
விளையாடிக்கொண்டே ஓய்வெடுக்கும் வித்தியாசமான அனுபவத்தை சிலம்பத்தில் பெறமுடியும். வீரர் தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடம்வரை அதிக வேகத்தில் விளையாடினால் ஏற்படும் களைப்பைக் குறைக்க, அடவு முறையைப் பயன்படுத்தலாம். இந்த அடவு முறையில், வேகத்தை குறைத்துக்கொண்டு பரதத்தில் காட்டும் அடவுகளைப்போல, மெதுவாக பல்வேறு கம்பு சுற்றும் அடவு முறைகளைச் செய்துகொண்டே களைப்பைப் போக்கிக் கொள்ளலாம். பின்னர் அமர்ந்தும் ஓய்வெடுக்கலாம்.
வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவிக்கக் கற்றுக்கொடுக்கும் சிலம்பு விளையாட்டை சிறுவர்கள் இருந்தே விளையாடுவதன் மூலமாக, தன்னம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் குணத்துடன் நினைவாற்றலையும் அதிகரித்துக்கொள்ள முடியும். தொடர்ந்து சிலம்பப் பயிற்சி மேற்கொள்ளும்போது கை, கால்கள் பலம் பெறும்.
சிலம்பம் விளையாடும்போது பசியே எடுக்காது. விளையாடி முடித்ததும் பசி நன்றாகத் தூண்டப்படும். சாப்பிட அடம் செய்யும் குழந்தைகளுக்குச் சிலம்பப் பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் பசி தூண்டப்படும் என்பதுடன் உடல் வலிமையும் பெறுவார்கள்.
பெரியவர்கள் தொடர்ந்து சிலம்பாட்டப் பயிற்சியை மேற்கொள்ளும்போது இருதயக் கோளாறுகள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை தவிர்க்கப்பட்டு உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ஊஞ்சல் - 15
Attachments
-
11.4 KB Views: 5
Last edited: