பெண்கள் நாட்டின் கண்கள்...
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்...
இப்படியெல்லாம் பெண்களை போற்றி ஏடுகளில் பாடி இருக்கிறார்கள்...
ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல்... எவ்வளவுதான் பெண்களுக்காகவும்... பெண்களைப் போற்றியும் பாடல்கள் பாடினாலும்... இன்றைய தினம் வரை பெண்கள் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்...
மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் அது பெருகும்...
துக்கத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டால் அது குறையும்... என்று சொல்லுவர்...
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது மகிழ்ச்சியையோ அல்லது வருத்தத்தையோ காது கொடுத்துக் கேட்க நமக்குச் சிறந்த நட்பு அமைவது... சவாலாக இருக்கிறது...
மகிழ்ச்சையை பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் கூட... துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள... அல்லது சிறிது நேரமேனும் அந்தத் துன்பத்திலிருந்து தள்ளி இருக்க... ஒவ்வொருவருக்கும் ஒரு துணை தேவை...
அப்படிப் பட்ட ஒரு தலை சிறந்த துணையாக நமது தளம் நம் மகளிர் அனைவருக்கும் இருக்கிறது என்றால் மிகையில்லை...
பள்ளி... கல்லூரி காலத்துடன் முடிந்துவிடுகிறது நம் அனைவரின் கொண்டாட்டங்களும்...
அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்... நமது இந்த 'SITE DAY' கொண்டாட்டத்தில்... நம் பெண்கள் அனைவரும் இவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்று இருப்பது...
பொதுவாகவே அதிகம் படிப்பவர்கள்... அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்...
புத்தகம் படித்தல் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கும்... அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான்...
பட்டிமன்றம்...
பாட்டுப் போட்டி...
சிறுகதைப் போட்டி...
கட்டுரைப் போட்டி...
அட்டைப் படம் வடிவமைத்தல் போட்டி...
என நமது கண்மணிகளை தயக்கமின்றி பங்கேற்கச் செய்தது...
வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே... அனைவரையும் ஒருங்கிணைத்தது...
இதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தாண்டி... புதையலாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் திறமைகளெல்லாம்... வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்...
இது வெறும் ஆரம்பம் மட்டுமே...
இனி இந்த மகிழ்ச்சி தொடரும் என நம்புகிறேன்...
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்...
இப்படியெல்லாம் பெண்களை போற்றி ஏடுகளில் பாடி இருக்கிறார்கள்...
ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல்... எவ்வளவுதான் பெண்களுக்காகவும்... பெண்களைப் போற்றியும் பாடல்கள் பாடினாலும்... இன்றைய தினம் வரை பெண்கள் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்...
மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் அது பெருகும்...
துக்கத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டால் அது குறையும்... என்று சொல்லுவர்...
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது மகிழ்ச்சியையோ அல்லது வருத்தத்தையோ காது கொடுத்துக் கேட்க நமக்குச் சிறந்த நட்பு அமைவது... சவாலாக இருக்கிறது...
மகிழ்ச்சையை பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் கூட... துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள... அல்லது சிறிது நேரமேனும் அந்தத் துன்பத்திலிருந்து தள்ளி இருக்க... ஒவ்வொருவருக்கும் ஒரு துணை தேவை...
அப்படிப் பட்ட ஒரு தலை சிறந்த துணையாக நமது தளம் நம் மகளிர் அனைவருக்கும் இருக்கிறது என்றால் மிகையில்லை...
பள்ளி... கல்லூரி காலத்துடன் முடிந்துவிடுகிறது நம் அனைவரின் கொண்டாட்டங்களும்...
அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்... நமது இந்த 'SITE DAY' கொண்டாட்டத்தில்... நம் பெண்கள் அனைவரும் இவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்று இருப்பது...
பொதுவாகவே அதிகம் படிப்பவர்கள்... அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்...
புத்தகம் படித்தல் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கும்... அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான்...
பட்டிமன்றம்...
பாட்டுப் போட்டி...
சிறுகதைப் போட்டி...
கட்டுரைப் போட்டி...
அட்டைப் படம் வடிவமைத்தல் போட்டி...
என நமது கண்மணிகளை தயக்கமின்றி பங்கேற்கச் செய்தது...
வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே... அனைவரையும் ஒருங்கிணைத்தது...
இதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தாண்டி... புதையலாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் திறமைகளெல்லாம்... வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்...
இது வெறும் ஆரம்பம் மட்டுமே...
இனி இந்த மகிழ்ச்சி தொடரும் என நம்புகிறேன்...