• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மங்கும் மனிதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இயற்கை தைத்துக் கொடுத்த
பிரபஞ்ச கம்பளத்தை - நாட்டுக்கொரு
கோவனமாக வெட்டிக் கொண்டு…
உரிமைக் கோருகிறோம்…
பரிதாபம் வருகிறது!!!

காடுகள் அழித்து…
கூண்டுகள் செய்திடும் - மனிதனே!
கூடுகள் தேடிடும்…
பறவைக்கு பதில் என்ன,
வைத்திருக்கிறாய்???

மூதாதையர் விட்டுச்சென்ற…
பசுமை என்னும்..
அட்சயப் பாத்திரத்தை…
வறுமை என்னும்…
காலிப் பாத்திரமாக்கி - உன்
சந்ததிக்கு கொடுக்கிறாயே!
எதற்கு???
பிச்சை எடுக்கவா!!

எண்ணச் சலவைச் செய்யப்படும்,
இன்றைய தலைமுறை….
எண்ணமே இல்லாமல்,
பிறக்க வைக்கும் முயற்சியாய்…
அடுத்த தலைமுறை!!

அரைவயிறு நிரம்பிடவே..
அரைகூவல் கூவிடும்…
அவலங்கள்…
அவனியில்….
ஒருபக்கம்!!!

ஆடம்பர பசிக்காக…
அவசிய உணவினை…
அலட்சியம் செய்யும்..
அரைகுறைகள்…
மற்றொருபக்கம்!!!

தனிமைகள் தந்திடும்…
பயத்தினை விட…
யாவரும் சூழ்ந்திருக்கும்…
தருணங்கள் தரும்..
பாதுகாப்பற்ற உணர்வு…
பயங்கொள்ளச் செய்கிறது!!!

மனிதனைப் பாதுகாக்க…
துப்பாக்கி ஏந்திய - மனிதன்!
அதைக் கண்டு அஞ்சும்,
மற்றொருவனும்..
மனிதன்தானே??? - - இல்லை
சந்தேகம் வருகிறது…
அதனால்தான்!!!

மழை பார்க்கா முற்றம்…
பிழை பொறுக்கா சுற்றம்..
களை எடுக்கா சமூகம் - என

எங்கும்,
இறங்கும் இயற்கை!!
மங்கும் மனிதம்!!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அக்கா...யதார்த்தத்தை வெளிப்படுத்திய வரிகள்...
யாவரும் சூழ்ந்திருக்கும்
தருணங்கள் தரும்
பாதுகாப்பற்ற உணர்வு
பயங்கொள்ள செய்கிறது அந்த வரிகள் மிக அருமை
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
ஏன் இத்துணை ஆதங்கம் ஆசிரியரே.... அருமையான வரிகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை...

இறங்கும் இயற்கை
இறப்பதற்கு முன்
மங்கிய மனிதம்
புதுபொலிவு கொண்டு
பசுமையை மீட்டெடுக்க
முனைவோம் நம்பிக்கையாய்.....
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ஏன் இத்துணை ஆதங்கம் ஆசிரியரே.... அருமையான வரிகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை...

இறங்கும் இயற்கை
இறப்பதற்கு முன்
மங்கிய மனிதம்
புதுபொலிவு கொண்டு
பசுமையை மீட்டெடுக்க
முனைவோம் நம்பிக்கையாய்.....
? ? ?
கவிதை வரிகள்தான் ஆதங்கப்படுகிறது.. நான் அல்ல..
இப்பல்லாம் pari dear varave matike.. Me sad..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அக்கா...யதார்த்தத்தை வெளிப்படுத்திய வரிகள்...
யாவரும் சூழ்ந்திருக்கும்
தருணங்கள் தரும்
பாதுகாப்பற்ற உணர்வு
பயங்கொள்ள செய்கிறது அந்த வரிகள் மிக அருமை
Thanks kavi ?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
? ? ?
கவிதை வரிகள்தான் ஆதங்கப்படுகிறது.. நான் அல்ல..
இப்பல்லாம் pari dear varave matike.. Me sad..
no..no... sad பரி டியர்.... டீசெர்க்கு ஒரு சின்ன மரியாதையை செய்வோமேன்னு தான்...:p:D ஹிஹிஹி மத்தபடி ஒன்னும் கிடையாது... மொபைல் பக்கம் வர்றதில்லையா பரி டியர்... கொஞ்சம் எட்டி பாருங்க மேடம்....அந்த பக்கம்:LOL::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
Akka arumai yana varigal ????...
author ji இன்னைக்கு ud உண்டா.... ஒரு சீன் குடுக்கலாமே:unsure::D
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top