Thanks ka ?super dear
Thanks ka ?super dear
ThanksNice
?????So sad.... உங்கள் கதை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை ஏமாற்றி விட்டாய் தெய்வா ....??
Thanks bro ????? ஒவ்வொரு வரியும் அருமை ????????????
வார்தைகள் இல்லை பாராட்ட இக்கவிதையை படிக்கும்போது மனத்திற்குள் எங்கோ ஓர் இடத்தினில் அழுத்தம் அதிகமாகி மனதின் பாரம் கண்வழியாக வெளிவருகிறது நல்லதொரு கவிதை வாசித்த திருப்தி நன்றிஇயற்கை தைத்துக் கொடுத்த
பிரபஞ்ச கம்பளத்தை - நாட்டுக்கொரு
கோவனமாக வெட்டிக் கொண்டு…
உரிமைக் கோருகிறோம்…
பரிதாபம் வருகிறது!!!
காடுகள் அழித்து…
கூண்டுகள் செய்திடும் - மனிதனே!
கூடுகள் தேடிடும்…
பறவைக்கு பதில் என்ன,
வைத்திருக்கிறாய்???
மூதாதையர் விட்டுச்சென்ற…
பசுமை என்னும்..
அட்சயப் பாத்திரத்தை…
வறுமை என்னும்…
காலிப் பாத்திரமாக்கி - உன்
சந்ததிக்கு கொடுக்கிறாயே!
எதற்கு???
பிச்சை எடுக்கவா!!
எண்ணச் சலவைச் செய்யப்படும்,
இன்றைய தலைமுறை….
எண்ணமே இல்லாமல்,
பிறக்க வைக்கும் முயற்சியாய்…
அடுத்த தலைமுறை!!
அரைவயிறு நிரம்பிடவே..
அரைகூவல் கூவிடும்…
அவலங்கள்…
அவனியில்….
ஒருபக்கம்!!!
ஆடம்பர பசிக்காக…
அவசிய உணவினை…
அலட்சியம் செய்யும்..
அரைகுறைகள்…
மற்றொருபக்கம்!!!
தனிமைகள் தந்திடும்…
பயத்தினை விட…
யாவரும் சூழ்ந்திருக்கும்…
தருணங்கள் தரும்..
பாதுகாப்பற்ற உணர்வு…
பயங்கொள்ளச் செய்கிறது!!!
மனிதனைப் பாதுகாக்க…
துப்பாக்கி ஏந்திய - மனிதன்!
அதைக் கண்டு அஞ்சும்,
மற்றொருவனும்..
மனிதன்தானே??? - - இல்லை
சந்தேகம் வருகிறது…
அதனால்தான்!!!
மழை பார்க்கா முற்றம்…
பிழை பொறுக்கா சுற்றம்..
களை எடுக்கா சமூகம் - என
எங்கும்,
இறங்கும் இயற்கை!!
மங்கும் மனிதம்!!