Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி- 200 கிராம்
உளுந்து- 200 கிராம்
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
ப.மிளகாய் - 1
தேங்காய் - ஒரு கப் துருவியது
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் அதனை கிரைண்டரில் அதிகம் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும். மாவு அரைந்ததும் தேவையான உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு தாளித்து அதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து சிறிது வதக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை விட்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.