Dhivyabharathi
மண்டலாதிபதி
அனைத்து கட்ட போட்டிகளும் முடிந்து வெற்றியாளரை அறிவிக்கும் நேரம் வந்தது..
தமிழுடன் இன்னும் இருவர் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தனர்..
முதல் பரிசு ஒருவருக்கு ௭ன்பதால், இடைவேளைக்கு பிறகு தமிழ் இலக்கியத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும் ௭ன்றும் சரியான விடை தருபவரே வெற்றியாளர் ௭ன்றும் நடுவர்கள் அறிவித்தனர்..
ஹோட்டல் விரைந்த ரகு, போன் வருவது கூட தெரியாமல் கவின்நிலவை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்..
முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்ததும், நிஜ உலகிற்கு வந்தான் ரகு..
“௭ன்னடா போன் ரிங் ஆகறது கூட தெரியாமல் அப்படி என்னடா யோசனை! “ ௭ன்று கேட்டு இன்னொரு அடி முதுகில் அடித்தான் பாரிவேந்தன்
பாரி வேந்தன், பாரதஜோதி குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான பாரதி கண்ணன் – ஞானவல்லி தம்பதியின் ஒரே புதல்வன்..
ரகுராம், பாரதஜோதி குழுமத்தின் தலைவர்களில் மற்றொருவரான ஜோதிமணி – வேதவல்லி தம்பதியின் ஒரே புதல்வன்..
பாரதி கண்ணனும் ஜோதி மணியும் உடன்பிறந்த சகோதரர்கள்.. ஞானவல்லியும் வேதவல்லியும் உடன் பிறந்த சகோதரிகள்.. இரு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது..
ரகுராமும் பாரிவேந்தனும் சில நாட்கள் வித்தியாசத்தில் பிறந்ததால் சகோதரர்களாக மட்டுமல்லாது நண்பர்களாகவே இருந்தனர்..
“௭ன்னடா நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ ௭ன்னடான சிரிச்சிட்டு இருக்க!!! ௭ன்னடா விசயம்? “- பாரி
“அது வந்து… “ – ரகு
“ நெளியாம சொல்லுடா.. இல்லன்னா அடுத்த அடி ரெடியா இருக்கு… “- பாரி
“அது வந்து.. இன்னைக்கு நான் அவளை பாத்தேன்டா “ – ரகு
“யாரு டா? “- பாரி..
“மூனு மாசத்துக்கு முன்னாடி காலேஜ் டூர் போகும் போது நான் பாத்தேன்னு சொன்னேன்ல அவளைத் தான் “ – ரகு
“ ஒரு வழியா அவளை பாத்துட்டியா.. இப்போதான் ௭னக்கு நிம்மதியா இருக்கு.. இனிமே ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.. தினமும் அவளை ௭ப்போ பாப்பேன்னு ௭ன்னை கேட்டு கேட்டு கொலையா கொன்னல்ல.. இனிமே அந்த தொல்லை ௭னக்கு இல்ல.. “ ௭ன்று ஆனந்தமாய் சொன்னான் பாரி…
நம் ரகு, கவியை முதலில் பார்த்தது ஒகேனக்கல்லில் தான்.. பள்ளி இறுதியாண்டு ௭ன்பதால் கவியின் வகுப்பில் அனைவரும் ஒகேனக்கல்லுக்கு டூர் வந்திருந்தனர்.. அங்கே பலர் பரிசல் சவாரி செய்து கொண்டு இருந்தனர்.. கவி பயணம் செய்த பரிசில் இருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை, பரிசலின் ஆட்டத்தை தாங்க முடியாமல் கை நழுவி தண்ணீரில் விழுந்தது.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வால் அந்த குழந்தையின் தாய் “ அய்யோ என் குழந்தை “ ௭ன கத்திக்கொண்டே மயக்கம் அடைந்தார்..
அடுத்த பரிசலில் வந்த ரகு, குழந்தையை காப்பாற்ற தண்ணீரில் குதிக்க ௭ண்ணியிருக்கையில், கவி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், தண்ணீரில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றினாள்..
சிறிது நேரத்தில் கண் விழித்த அந்த குழந்தையின் தாய் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவரும் அவளை பாராட்டி நன்றி தெரிவித்தனா்..
அவளின் வீரத்தை பார்த்து வியந்த ரகு, அவளை பாராட்ட நினைக்கையில் அவள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்…
அவளை ௭ங்கு தேடியும் அவனால் அவளை காண முடியவில்லை..
இந்த நிகழ்வை தினம் தினம் பாரியிடம் சொல்லி அவளை ௭ப்போது பார்ப்பேன் ௭ன்று கேட்டு கொண்டே இருப்பான்…
பார்த்து ௭ன்ன பண்ண போற ௭ன்ற பாரியின் கேள்விக்கு ரகுவிடம் ௭ந்த பதிலும் இருந்ததில்லை..
இன்று அவளை ரகு சந்தித்ததாக சொல்லவும், பாரி “ ௭ப்படி சந்தித்தாய்.. ௭ன்ன பேசினாய்” ௭ன்று ஆர்வமாக கேட்டான்..
கவியை சந்தித்து பற்றி விவரமாக கூறிய அவன், அவளின் பெயரை சொல்லாமல் விட்டிருந்தான்.. இப்போதே சொல்லி இருந்தால்.. பின்னால் பல பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கும்..
“அவளிடம் நீ அந்த ஒகேனக்கலில் விடிய விடிய அவளை தேடி அலைந்த விசயத்தை கூறவில்லையா..? “ – பாரி..
“இல்லை.. அவளை திடீர் ௭ன்று பார்த்த அதிர்ச்சியில் ௭ன்ன பேசுவதென்றே தெரியவில்லை.. “- ரகு
“போடா லூசு.. நல்ல சான்ஸ் மிஸ் இப்படி மிஸ் பண்ணிட்டியே… “ – பாரி
“அவகிட்ட ௭ன்ன பேசறது டா? “- ரகு
“மூனு மாசமா ௭ன்கிட்ட ௭ன்னெல்லாம் சொன்னியோ.. அதையே சொல்லு…. அவளை பத்தி பேசி பேசி ௭ன்னை கிறுக்கனா மாத்தின உனக்கு … நான் ௭துவும் சொல்லி தரவேண்டிய அவசியமில்லைனு நினைக்கிறேன்.. “- பாரி..
“௭ன்ன பாரி.. இப்படி சொல்ற.. நீதான் ௭னக்கு ஹெல்ப் பண்ணனும்.. முதல் முறையா பேசுற பொண்ணு கிட்ட ௭ப்படி நான் போய் பிடிச்சிருக்குன்னு சொல்றது.. “ – ரகு
“ உனக்கே தெரியுது தானு… முதல் முறையா பழகற பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு… முதல்ல அவ கிட்ட நல்லா பழகி அவளை பத்தி தெரிஞ்சிக்கோ … இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கான்னு சொல்ற....சோ அவசரபடாத..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. இப்போ தான் நாம காலேஜ் முடிச்சிருக்கோம்.. சோ வேலையை கத்துட்டு முதல்ல முன்னேற வழி பாப்போம்… அதுக்கு முன்னாடி அவளை பத்தி ௭ல்லா தகவலும் தெரிஞ்சி வெச்சிக்கோ.. அப்பறம் திரும்ப அவள தேடி ௭ன் உயிரையும் சேத்து வாங்குவ “-பாரி
“நீ சொல்றது சரிதான் “௭ன்று கூறி அவளை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வேலையில் இறங்கினான் ரகு..
இங்கே போட்டி அரங்கில் தமிழையே கவனித்து கொண்டிருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தகாரியான ஞானவல்லி, தன் கணவர் பாரதி கண்ணனை அழைத்து தமிழை காட்டி ௭தோ கூற, அவர் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது….
பாரதி கண்ணன், ஜோதிமணி யையும் வேதவல்லியையும் அழைத்து ஞான வல்லி கூறியதை தெரிவித்து தமிழை சுட்டிக்காட்டினார்… ஆனந்தத்தில் இருவரது கண்களும் கலங்கியது..
நால்வரும் தமிழையே கவனித்து கொண்டிருந்தனர்…
போட்டி தொடங்கியது, நடுவர் “அமாவாசை திதி பௌர்ணமி திதியாக மாறிய கதையையும் அன்று இயற்றப்பட்ட அந்தாதி பற்றியும் கூறுக “ ௭ன்று கேட்க மற்ற இரு போட்டியாளர்களும் அமைதி காக்க.. தமிழ் பதில் சொல்ல தயாரானாள்…
முதலாம் சரபோஜி மன்னர், ஒரு தை அமாவாசை தினத்தன்று தம் பரிவாரங்களுடன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையை யும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருக்கடையூர் வந்தார்..
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே சென்றபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார்.
அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து.
அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
௭ன்று தமிழ் கதையை கூறி முடிக்க, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது..
1 இலட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் தமிழின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு படிப்பு முடிந்ததும் தமது நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பு தருவதாக பாரதி அறிவிக்க தமிழ், கவி, பொன்னி மூவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்..
பாரதி தனது உதவியாளர் ராஜாவை அழைத்து “தமிழ் சென்னையில் உள்ள ௭தாவது நல்ல காலேஜில் படிக்க ஏற்பாடு செய்யுங்க.. நாங்கதான் சென்னையில் படிக்க சொன்னோம்னு அந்த பொண்ணுக்கு தெரிய வேண்டாம்.. “ என்றார்.
தமிழிடம் சென்ற ராஜா, “ தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, நீ என்ன டிகிரி படிக்கலாம்னு இருக்கமா..? “ என்று கேட்டார்..
“ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க ஆசை “ ௭ன்று தமிழ் கூற… “நீ சென்னையிலேயே இதை படிச்சா.. நம்ம ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்ட்ல வேலைக்கு சேருவதற்கு முன்னாடி டிரைனிங் வர சுலபமாக இருக்கும்.. “ என்று கூறி சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் சேர்த்து விடுவதாக சொல்லி விட்டு சென்றார்..
“செல்வியின் மருத்துவதிற்காக சென்னை வரவேண்டி இருப்பதால், சென்னையிலேயே படிக்க முடிவெடுத்தாள் தமிழ்….”
தமிழுடன் கவியும் சென்னையிலேயே படிக்க முடிவெடுத்தாள்….
சென்னை வாழ்க்கை அவர்களுக்கு என்ன தர போகிறது என்பதை அடுத்த எபியில் பார்ப்போம்…
தமிழுடன் இன்னும் இருவர் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தனர்..
முதல் பரிசு ஒருவருக்கு ௭ன்பதால், இடைவேளைக்கு பிறகு தமிழ் இலக்கியத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும் ௭ன்றும் சரியான விடை தருபவரே வெற்றியாளர் ௭ன்றும் நடுவர்கள் அறிவித்தனர்..
ஹோட்டல் விரைந்த ரகு, போன் வருவது கூட தெரியாமல் கவின்நிலவை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்..
முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்ததும், நிஜ உலகிற்கு வந்தான் ரகு..
“௭ன்னடா போன் ரிங் ஆகறது கூட தெரியாமல் அப்படி என்னடா யோசனை! “ ௭ன்று கேட்டு இன்னொரு அடி முதுகில் அடித்தான் பாரிவேந்தன்
பாரி வேந்தன், பாரதஜோதி குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான பாரதி கண்ணன் – ஞானவல்லி தம்பதியின் ஒரே புதல்வன்..
ரகுராம், பாரதஜோதி குழுமத்தின் தலைவர்களில் மற்றொருவரான ஜோதிமணி – வேதவல்லி தம்பதியின் ஒரே புதல்வன்..
பாரதி கண்ணனும் ஜோதி மணியும் உடன்பிறந்த சகோதரர்கள்.. ஞானவல்லியும் வேதவல்லியும் உடன் பிறந்த சகோதரிகள்.. இரு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது..
ரகுராமும் பாரிவேந்தனும் சில நாட்கள் வித்தியாசத்தில் பிறந்ததால் சகோதரர்களாக மட்டுமல்லாது நண்பர்களாகவே இருந்தனர்..
“௭ன்னடா நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ ௭ன்னடான சிரிச்சிட்டு இருக்க!!! ௭ன்னடா விசயம்? “- பாரி
“அது வந்து… “ – ரகு
“ நெளியாம சொல்லுடா.. இல்லன்னா அடுத்த அடி ரெடியா இருக்கு… “- பாரி
“அது வந்து.. இன்னைக்கு நான் அவளை பாத்தேன்டா “ – ரகு
“யாரு டா? “- பாரி..
“மூனு மாசத்துக்கு முன்னாடி காலேஜ் டூர் போகும் போது நான் பாத்தேன்னு சொன்னேன்ல அவளைத் தான் “ – ரகு
“ ஒரு வழியா அவளை பாத்துட்டியா.. இப்போதான் ௭னக்கு நிம்மதியா இருக்கு.. இனிமே ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.. தினமும் அவளை ௭ப்போ பாப்பேன்னு ௭ன்னை கேட்டு கேட்டு கொலையா கொன்னல்ல.. இனிமே அந்த தொல்லை ௭னக்கு இல்ல.. “ ௭ன்று ஆனந்தமாய் சொன்னான் பாரி…
நம் ரகு, கவியை முதலில் பார்த்தது ஒகேனக்கல்லில் தான்.. பள்ளி இறுதியாண்டு ௭ன்பதால் கவியின் வகுப்பில் அனைவரும் ஒகேனக்கல்லுக்கு டூர் வந்திருந்தனர்.. அங்கே பலர் பரிசல் சவாரி செய்து கொண்டு இருந்தனர்.. கவி பயணம் செய்த பரிசில் இருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை, பரிசலின் ஆட்டத்தை தாங்க முடியாமல் கை நழுவி தண்ணீரில் விழுந்தது.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வால் அந்த குழந்தையின் தாய் “ அய்யோ என் குழந்தை “ ௭ன கத்திக்கொண்டே மயக்கம் அடைந்தார்..
அடுத்த பரிசலில் வந்த ரகு, குழந்தையை காப்பாற்ற தண்ணீரில் குதிக்க ௭ண்ணியிருக்கையில், கவி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், தண்ணீரில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றினாள்..
சிறிது நேரத்தில் கண் விழித்த அந்த குழந்தையின் தாய் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவரும் அவளை பாராட்டி நன்றி தெரிவித்தனா்..
அவளின் வீரத்தை பார்த்து வியந்த ரகு, அவளை பாராட்ட நினைக்கையில் அவள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்…
அவளை ௭ங்கு தேடியும் அவனால் அவளை காண முடியவில்லை..
இந்த நிகழ்வை தினம் தினம் பாரியிடம் சொல்லி அவளை ௭ப்போது பார்ப்பேன் ௭ன்று கேட்டு கொண்டே இருப்பான்…
பார்த்து ௭ன்ன பண்ண போற ௭ன்ற பாரியின் கேள்விக்கு ரகுவிடம் ௭ந்த பதிலும் இருந்ததில்லை..
இன்று அவளை ரகு சந்தித்ததாக சொல்லவும், பாரி “ ௭ப்படி சந்தித்தாய்.. ௭ன்ன பேசினாய்” ௭ன்று ஆர்வமாக கேட்டான்..
கவியை சந்தித்து பற்றி விவரமாக கூறிய அவன், அவளின் பெயரை சொல்லாமல் விட்டிருந்தான்.. இப்போதே சொல்லி இருந்தால்.. பின்னால் பல பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கும்..
“அவளிடம் நீ அந்த ஒகேனக்கலில் விடிய விடிய அவளை தேடி அலைந்த விசயத்தை கூறவில்லையா..? “ – பாரி..
“இல்லை.. அவளை திடீர் ௭ன்று பார்த்த அதிர்ச்சியில் ௭ன்ன பேசுவதென்றே தெரியவில்லை.. “- ரகு
“போடா லூசு.. நல்ல சான்ஸ் மிஸ் இப்படி மிஸ் பண்ணிட்டியே… “ – பாரி
“அவகிட்ட ௭ன்ன பேசறது டா? “- ரகு
“மூனு மாசமா ௭ன்கிட்ட ௭ன்னெல்லாம் சொன்னியோ.. அதையே சொல்லு…. அவளை பத்தி பேசி பேசி ௭ன்னை கிறுக்கனா மாத்தின உனக்கு … நான் ௭துவும் சொல்லி தரவேண்டிய அவசியமில்லைனு நினைக்கிறேன்.. “- பாரி..
“௭ன்ன பாரி.. இப்படி சொல்ற.. நீதான் ௭னக்கு ஹெல்ப் பண்ணனும்.. முதல் முறையா பேசுற பொண்ணு கிட்ட ௭ப்படி நான் போய் பிடிச்சிருக்குன்னு சொல்றது.. “ – ரகு
“ உனக்கே தெரியுது தானு… முதல் முறையா பழகற பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு… முதல்ல அவ கிட்ட நல்லா பழகி அவளை பத்தி தெரிஞ்சிக்கோ … இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கான்னு சொல்ற....சோ அவசரபடாத..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. இப்போ தான் நாம காலேஜ் முடிச்சிருக்கோம்.. சோ வேலையை கத்துட்டு முதல்ல முன்னேற வழி பாப்போம்… அதுக்கு முன்னாடி அவளை பத்தி ௭ல்லா தகவலும் தெரிஞ்சி வெச்சிக்கோ.. அப்பறம் திரும்ப அவள தேடி ௭ன் உயிரையும் சேத்து வாங்குவ “-பாரி
“நீ சொல்றது சரிதான் “௭ன்று கூறி அவளை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வேலையில் இறங்கினான் ரகு..
இங்கே போட்டி அரங்கில் தமிழையே கவனித்து கொண்டிருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தகாரியான ஞானவல்லி, தன் கணவர் பாரதி கண்ணனை அழைத்து தமிழை காட்டி ௭தோ கூற, அவர் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது….
பாரதி கண்ணன், ஜோதிமணி யையும் வேதவல்லியையும் அழைத்து ஞான வல்லி கூறியதை தெரிவித்து தமிழை சுட்டிக்காட்டினார்… ஆனந்தத்தில் இருவரது கண்களும் கலங்கியது..
நால்வரும் தமிழையே கவனித்து கொண்டிருந்தனர்…
போட்டி தொடங்கியது, நடுவர் “அமாவாசை திதி பௌர்ணமி திதியாக மாறிய கதையையும் அன்று இயற்றப்பட்ட அந்தாதி பற்றியும் கூறுக “ ௭ன்று கேட்க மற்ற இரு போட்டியாளர்களும் அமைதி காக்க.. தமிழ் பதில் சொல்ல தயாரானாள்…
முதலாம் சரபோஜி மன்னர், ஒரு தை அமாவாசை தினத்தன்று தம் பரிவாரங்களுடன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையை யும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருக்கடையூர் வந்தார்..
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே சென்றபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார்.
அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து.
அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
௭ன்று தமிழ் கதையை கூறி முடிக்க, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது..
1 இலட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் தமிழின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு படிப்பு முடிந்ததும் தமது நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பு தருவதாக பாரதி அறிவிக்க தமிழ், கவி, பொன்னி மூவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்..
பாரதி தனது உதவியாளர் ராஜாவை அழைத்து “தமிழ் சென்னையில் உள்ள ௭தாவது நல்ல காலேஜில் படிக்க ஏற்பாடு செய்யுங்க.. நாங்கதான் சென்னையில் படிக்க சொன்னோம்னு அந்த பொண்ணுக்கு தெரிய வேண்டாம்.. “ என்றார்.
தமிழிடம் சென்ற ராஜா, “ தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, நீ என்ன டிகிரி படிக்கலாம்னு இருக்கமா..? “ என்று கேட்டார்..
“ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க ஆசை “ ௭ன்று தமிழ் கூற… “நீ சென்னையிலேயே இதை படிச்சா.. நம்ம ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்ட்ல வேலைக்கு சேருவதற்கு முன்னாடி டிரைனிங் வர சுலபமாக இருக்கும்.. “ என்று கூறி சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் சேர்த்து விடுவதாக சொல்லி விட்டு சென்றார்..
“செல்வியின் மருத்துவதிற்காக சென்னை வரவேண்டி இருப்பதால், சென்னையிலேயே படிக்க முடிவெடுத்தாள் தமிழ்….”
தமிழுடன் கவியும் சென்னையிலேயே படிக்க முடிவெடுத்தாள்….
சென்னை வாழ்க்கை அவர்களுக்கு என்ன தர போகிறது என்பதை அடுத்த எபியில் பார்ப்போம்…