நீயில்லா நேரத்தில்
நான் காற்றில்லா
பயிராக தான் வாட...
உன் நினைவுகள்
என்னை இதமாய்
தழுவுகையில்,
சுவாசம் கிடைத்த
மகிழ்வில் தான்
அசைந்து ஆட...
புவி எங்கும் பரந்து
விரியும் கறையில்லா
சூரிய கதிர்களாய்
என் மனதில் நீ பரவி
இருந்த போதும்...
பேச்சற்ற ஊமையாய்
நானும் மாறுகிறேன்,
கோபத்தில் நான்
கூறும் சுடு சொற்களை
தாங்கும் சக்தியில்லா
அனிச்ச மலர் நீ
என்று அறிந்த பின்!
நான் காற்றில்லா
பயிராக தான் வாட...
உன் நினைவுகள்
என்னை இதமாய்
தழுவுகையில்,
சுவாசம் கிடைத்த
மகிழ்வில் தான்
அசைந்து ஆட...
புவி எங்கும் பரந்து
விரியும் கறையில்லா
சூரிய கதிர்களாய்
என் மனதில் நீ பரவி
இருந்த போதும்...
பேச்சற்ற ஊமையாய்
நானும் மாறுகிறேன்,
கோபத்தில் நான்
கூறும் சுடு சொற்களை
தாங்கும் சக்தியில்லா
அனிச்ச மலர் நீ
என்று அறிந்த பின்!