அன்பை கொட்டி
ஆசையாய் வளர்த்து
இம்சையை பொறுத்து
ஈவோனாய் உருமாறி (ஈவோன் - ஆசான்)
உயிரணுக்களை தந்து
ஊசுதம் அகற்றி (ஊசுதம் - அச்சம்)
எதிர் நீச்சல் செய்ய துடுப்பாய் அமைந்து
ஏற்றம் பெற செய்து
ஐயுறவு தீர்த்து ( ஐயுறவு - சந்தேகம்)
ஒருசிறையாய் இதயத்தில் இடம் கொடுத்து (ஒருசிறை - ஒதுக்கிடம்)
ஓராட்டு பாடி ( ஓராட்டு - தாலாட்டு)
ஔவியம் கலைந்து ( ஔவியம் -பொறாமை)
இஃதே என் தாய், நீக்கமற நிறைந்த இறைவியாய் என் மனதில் இடம்பெற்றாள்!
அ முதல் ஃ வரை
அனைத்திலும் நீயே, தாயே!
உயிர் தந்தவளை
உயிர் எழுத்துக்களும் போற்றட்டும்!
ஆசையாய் வளர்த்து
இம்சையை பொறுத்து
ஈவோனாய் உருமாறி (ஈவோன் - ஆசான்)
உயிரணுக்களை தந்து
ஊசுதம் அகற்றி (ஊசுதம் - அச்சம்)
எதிர் நீச்சல் செய்ய துடுப்பாய் அமைந்து
ஏற்றம் பெற செய்து
ஐயுறவு தீர்த்து ( ஐயுறவு - சந்தேகம்)
ஒருசிறையாய் இதயத்தில் இடம் கொடுத்து (ஒருசிறை - ஒதுக்கிடம்)
ஓராட்டு பாடி ( ஓராட்டு - தாலாட்டு)
ஔவியம் கலைந்து ( ஔவியம் -பொறாமை)
இஃதே என் தாய், நீக்கமற நிறைந்த இறைவியாய் என் மனதில் இடம்பெற்றாள்!
அ முதல் ஃ வரை
அனைத்திலும் நீயே, தாயே!
உயிர் தந்தவளை
உயிர் எழுத்துக்களும் போற்றட்டும்!