ஏழு வண்ண கலவையாக
சில நொடிகள் தோன்றும்
வானவிலாய் வாழ்வில்
இன்பமும் நிலைக்க,
பரமபத வாழ்வாட்டத்தில்
பாம்பை அதிகம் சந்தித்தாலோ
விஷத்தை மட்டுமே கக்க,
சுற்றி இருந்த நண்பரும்
உறவு கூட்டம் யாவும் கல் பட்ட
கண்ணாடியாய் சிதறி செல்ல,
முன் அனுபவ தாக்கத்தால்
உணர்வுகள் உலர்ந்து
மனமிருந்தும் ஜடமாகினேன்...
யாவரும் நெருங்க அஞ்சும்
கனலினி என்னை அணைக்க
வந்த மேக தூதன் நீயோ?
எட்டி பார்த்து செல்லும்
மனிதர்கள் போல் நீயில்லாமல்
மனதில் ஆழ்துளை கிணறு
வெட்டியது ஏனோ?
பாலின் தூய்மையாய்
நீ இருக்க இந்த விஷத்திடம்
சிக்கி தவிப்பது ஏனோ?
எதற்கும் வளையாது நிற்கும்
இரும்பு மனிஷி என்னுள்
இதயத்தின் முகவரியை
அறிய வைத்தது ஏனோ?
விதியின் விளையாட்டோ?
மதனின் சதியாட்டமோ?
விலகியிரு என்கிறேன்...
அடித்தாலும் தாயிடமே
ஓடி வரும் குழந்தையாய்
நீ மாறி இருக்கிறாய்...
விலக்கவும் முடியாமல்
சேர்க்கவும் முடியாமல்
என் நிலை!
காதல் ஆடும் ஆட்டத்தில்
வசமாய் சிக்கி விட்டோம்...
காலமே பதில் கூறட்டும்,
நம் காதலிற்கு ஓர் நல்ல பதிலை!
சில நொடிகள் தோன்றும்
வானவிலாய் வாழ்வில்
இன்பமும் நிலைக்க,
பரமபத வாழ்வாட்டத்தில்
பாம்பை அதிகம் சந்தித்தாலோ
விஷத்தை மட்டுமே கக்க,
சுற்றி இருந்த நண்பரும்
உறவு கூட்டம் யாவும் கல் பட்ட
கண்ணாடியாய் சிதறி செல்ல,
முன் அனுபவ தாக்கத்தால்
உணர்வுகள் உலர்ந்து
மனமிருந்தும் ஜடமாகினேன்...
யாவரும் நெருங்க அஞ்சும்
கனலினி என்னை அணைக்க
வந்த மேக தூதன் நீயோ?
எட்டி பார்த்து செல்லும்
மனிதர்கள் போல் நீயில்லாமல்
மனதில் ஆழ்துளை கிணறு
வெட்டியது ஏனோ?
பாலின் தூய்மையாய்
நீ இருக்க இந்த விஷத்திடம்
சிக்கி தவிப்பது ஏனோ?
எதற்கும் வளையாது நிற்கும்
இரும்பு மனிஷி என்னுள்
இதயத்தின் முகவரியை
அறிய வைத்தது ஏனோ?
விதியின் விளையாட்டோ?
மதனின் சதியாட்டமோ?
விலகியிரு என்கிறேன்...
அடித்தாலும் தாயிடமே
ஓடி வரும் குழந்தையாய்
நீ மாறி இருக்கிறாய்...
விலக்கவும் முடியாமல்
சேர்க்கவும் முடியாமல்
என் நிலை!
காதல் ஆடும் ஆட்டத்தில்
வசமாய் சிக்கி விட்டோம்...
காலமே பதில் கூறட்டும்,
நம் காதலிற்கு ஓர் நல்ல பதிலை!