மூடிய கண்கள்
இருளில் ஒளிரும்
ஒளி வீச்சு போலே,
எந்தன் வாழ்வில்
நீயும் நுழைந்து
இழந்தவை எல்லாம்
மீட்டு என்னையும்
சேர்த்தே வெல்கிறாய்...
கைகள் கோர்க்கும்
போதெல்லாம் என்னை
நானே கேட்கிறேன்!
விரல்களின் இடைவெளியை
நிரப்பி விடவே
எந்தன் சரிபாதியாக
இறைவன் உன்னை
படைத்தாரோ?
இருளில் ஒளிரும்
ஒளி வீச்சு போலே,
எந்தன் வாழ்வில்
நீயும் நுழைந்து
இழந்தவை எல்லாம்
மீட்டு என்னையும்
சேர்த்தே வெல்கிறாய்...
கைகள் கோர்க்கும்
போதெல்லாம் என்னை
நானே கேட்கிறேன்!
விரல்களின் இடைவெளியை
நிரப்பி விடவே
எந்தன் சரிபாதியாக
இறைவன் உன்னை
படைத்தாரோ?