துயரம் என்னை
தீண்டுகையில்,
நம்பிக்கை ஊற்றாய்
இருந்தாய்...
மெழுகாய் உறுகிய
போதும்,
என் நலத்தைக்
காத்தாய்...
வேலை கிடைக்காது
திரிகையில்,
வாரியிரைக்கும் ஏடிஎம்மாய்
திகழ்ந்தாய்...
தாயாய் நீ காத்து
நிற்கையில்,
உன் நிழலில்
குளிர்காய்ந்தேன்...
பணமென்னும் புயலடித்து
நானும்,
தடம்மாறிய ரயிலாய்
விலகிசெல்ல...
இலையுதிர்ந்த மரமாய்
நீ முதுமை காட்டில்
தனியே நிற்க,
இளங்குருத்து நான்
உன்னை மறந்து
மறுத்து சென்றேன்...
நிற்காமல் ஓடும்
காலம் எனக்கும்
அதே காட்டில்,
ஓர் இடம் இன்னும்
மோசமாய் வகித்துள்ளது
என்று அறியாமல்!
தீண்டுகையில்,
நம்பிக்கை ஊற்றாய்
இருந்தாய்...
மெழுகாய் உறுகிய
போதும்,
என் நலத்தைக்
காத்தாய்...
வேலை கிடைக்காது
திரிகையில்,
வாரியிரைக்கும் ஏடிஎம்மாய்
திகழ்ந்தாய்...
தாயாய் நீ காத்து
நிற்கையில்,
உன் நிழலில்
குளிர்காய்ந்தேன்...
பணமென்னும் புயலடித்து
நானும்,
தடம்மாறிய ரயிலாய்
விலகிசெல்ல...
இலையுதிர்ந்த மரமாய்
நீ முதுமை காட்டில்
தனியே நிற்க,
இளங்குருத்து நான்
உன்னை மறந்து
மறுத்து சென்றேன்...
நிற்காமல் ஓடும்
காலம் எனக்கும்
அதே காட்டில்,
ஓர் இடம் இன்னும்
மோசமாய் வகித்துள்ளது
என்று அறியாமல்!