ஏதேதோ கனவுகள்
என்னை சுற்றி
திரியும் மனிதனிடம்...
லட்சியம் என்ன
என்ற கேள்விக்கு,
சிறந்த டாக்டர்
ஆவது என்று
ஒருவன் சொல்ல,
சிறந்த கலெக்டர்
ஆவது என்று
இன்னொருவன்
சொல்கிறான்...
எனது லட்சியம்
என்ன என்று
நானே எனக்கே
கேள்வி கேட்கிறேன்...
ஏதேதோ விடயங்களுக்கு
தொணதொணக்கும் மனது
ஏனோ இப்போது
அமைதியாகி விடுகிறது...
ஓவியம் தீட்ட
என்று ஒரு நாள்...
தையல் செய்ய
என்று மற்றோரு நாள்...
கவிதை படைக்க
என்று இன்னொரு நாள்...
இசையை ரசிக்க
என்று அடுத்த நாள்...
நாட்கள் இப்படி
தான் செல்கிறது
எனக்கு மட்டும்...
கண்ட கனவை
வேட்கையோடு போராடும்
மனிதனை கண்டு
பொறாமை கொள்கிறேன் ...
நான் காணும்
கனவுகள் மட்டும்
பேய்கனவுகளாகவே
இருக்கிறதென்று...
கனவை தேடி
ஓடும் மனிதனே
சோர்வு கொள்ளாதே
ஒரு போதும்...
நீ தேடி செல்ல
உன்னிடம் கனவாவது
இருக்கிறது...
இங்கு என்னை
போல் பலபேர்
லட்சியம் தெரியாமல்,
வாழ்க்கை என்னும்
ஓடையில் இலக்கே
இல்லாமல் காற்று
வீசும் திசையில்
நீந்தி தவிக்கிறோம்!
என்னை சுற்றி
திரியும் மனிதனிடம்...
லட்சியம் என்ன
என்ற கேள்விக்கு,
சிறந்த டாக்டர்
ஆவது என்று
ஒருவன் சொல்ல,
சிறந்த கலெக்டர்
ஆவது என்று
இன்னொருவன்
சொல்கிறான்...
எனது லட்சியம்
என்ன என்று
நானே எனக்கே
கேள்வி கேட்கிறேன்...
ஏதேதோ விடயங்களுக்கு
தொணதொணக்கும் மனது
ஏனோ இப்போது
அமைதியாகி விடுகிறது...
ஓவியம் தீட்ட
என்று ஒரு நாள்...
தையல் செய்ய
என்று மற்றோரு நாள்...
கவிதை படைக்க
என்று இன்னொரு நாள்...
இசையை ரசிக்க
என்று அடுத்த நாள்...
நாட்கள் இப்படி
தான் செல்கிறது
எனக்கு மட்டும்...
கண்ட கனவை
வேட்கையோடு போராடும்
மனிதனை கண்டு
பொறாமை கொள்கிறேன் ...
நான் காணும்
கனவுகள் மட்டும்
பேய்கனவுகளாகவே
இருக்கிறதென்று...
கனவை தேடி
ஓடும் மனிதனே
சோர்வு கொள்ளாதே
ஒரு போதும்...
நீ தேடி செல்ல
உன்னிடம் கனவாவது
இருக்கிறது...
இங்கு என்னை
போல் பலபேர்
லட்சியம் தெரியாமல்,
வாழ்க்கை என்னும்
ஓடையில் இலக்கே
இல்லாமல் காற்று
வீசும் திசையில்
நீந்தி தவிக்கிறோம்!
Last edited: