கொல்லையில் உன் கொலுசு
சத்தமே கேட்குதம்மா...
நட்டு வச்ச ரோஜா செடி எல்லாம்
உன் வாசத்தையே பரப்புதம்மா..
மார் மேல் உதைக்கும் காட்சி யாவும்
கண் முன்னே படமாய் ஓடுதம்மா...
மனதோட கண்ட கனவெல்லாம்
கானலாய் போகுதம்மா...
தாயோட வயிற்று பாரம்
வெறும் பத்து தானம்மா...
பாதியில் நீ விட்டு சென்ற பாரம்
மண்ணில் வாழும் வரையம்மா...
ஆசைக்கு வளத்த புள்ள
பாம்புக்கு இரையாக
ஊழ்வினை பாவமெல்லாம்
சேர்ந்துடுச்சா ஆத்தா?
உசுருக்கு எப்படி எல்லாம்
போராடுனீரோ என் அம்மா?
காலன் வந்து கூட்டி போகும்
என்னை நினைச்சியோயம்மா?
வேஷமில்லாத உன் சிரிப்பால
காலனையும் கவர்ந்தாயோ?
பட்டங்கள் பல பெற முன்னே
சட்டத்தின் பின்னே நீயும் மறந்தாயோ?
சத்தமே கேட்குதம்மா...
நட்டு வச்ச ரோஜா செடி எல்லாம்
உன் வாசத்தையே பரப்புதம்மா..
மார் மேல் உதைக்கும் காட்சி யாவும்
கண் முன்னே படமாய் ஓடுதம்மா...
மனதோட கண்ட கனவெல்லாம்
கானலாய் போகுதம்மா...
தாயோட வயிற்று பாரம்
வெறும் பத்து தானம்மா...
பாதியில் நீ விட்டு சென்ற பாரம்
மண்ணில் வாழும் வரையம்மா...
ஆசைக்கு வளத்த புள்ள
பாம்புக்கு இரையாக
ஊழ்வினை பாவமெல்லாம்
சேர்ந்துடுச்சா ஆத்தா?
உசுருக்கு எப்படி எல்லாம்
போராடுனீரோ என் அம்மா?
காலன் வந்து கூட்டி போகும்
என்னை நினைச்சியோயம்மா?
வேஷமில்லாத உன் சிரிப்பால
காலனையும் கவர்ந்தாயோ?
பட்டங்கள் பல பெற முன்னே
சட்டத்தின் பின்னே நீயும் மறந்தாயோ?