திறக்க முயலும் ஜன்னலை
திரைகளால் மறைத்தும்,
கதவை திண்டுக்கல்
பூட்டால் பூட்டியும்,
கோர பற்களால் விதி
என்னை பார்த்து சிரித்தால்,
மூலையில் முடங்காமல்,
கண்ணீரால் எதையும்
மாற்ற முடியாது என்பதை புரிந்து,
தடுக்கி விழுந்த கற்கள்
என்னை உளியாக மாறிவிட,
கற்சிலையாக என்னை
உருவாக்க நானே
சிற்பியாகவும் மாறி விட்டேன்!
பெண் என்று ஏளனம்
செய்யாதே உலகமே!
தாழ்த்தி விடலாம் என்று
கர்வம் கொள்ளாதே!
என் மனதின் உறுதியை
நீ ஒருபோதும் அறியமாட்டாய்!
அக்னி பிழம்பாய் கொழுந்து
விட்டும் எறியும் சூரியன் நான்!
நண்பா, இரவு என் ஒளியை
மறைத்து நகைத்தாலும்,
இன்னொரு பக்க பூமியில்
விடியலாகவே தான் இருப்பேன்!
மழையோ வெயிலோ
தெய்வம் படைத்த விதியோ
மனிதம் செய்யும் சதியோ
எதுவும் என்னை தடுக்காதே!
முன்னாளின் நிகழ்ந்த
மனதின் ரணங்கள்
எதிர்காலத்தின் கனவை
நினைவாக்க மாற்றவே
மனதில் ஏந்தியபடி,
ஊழ்வினைகள் எதுவும்
என்னை பாதிக்கவில்லை
என்று புதியதொரு விடியலை
நோக்கி மற்றோரு பயணம்,
உதட்டில் சிரிப்புடன்!
திரைகளால் மறைத்தும்,
கதவை திண்டுக்கல்
பூட்டால் பூட்டியும்,
கோர பற்களால் விதி
என்னை பார்த்து சிரித்தால்,
மூலையில் முடங்காமல்,
கண்ணீரால் எதையும்
மாற்ற முடியாது என்பதை புரிந்து,
தடுக்கி விழுந்த கற்கள்
என்னை உளியாக மாறிவிட,
கற்சிலையாக என்னை
உருவாக்க நானே
சிற்பியாகவும் மாறி விட்டேன்!
பெண் என்று ஏளனம்
செய்யாதே உலகமே!
தாழ்த்தி விடலாம் என்று
கர்வம் கொள்ளாதே!
என் மனதின் உறுதியை
நீ ஒருபோதும் அறியமாட்டாய்!
அக்னி பிழம்பாய் கொழுந்து
விட்டும் எறியும் சூரியன் நான்!
நண்பா, இரவு என் ஒளியை
மறைத்து நகைத்தாலும்,
இன்னொரு பக்க பூமியில்
விடியலாகவே தான் இருப்பேன்!
மழையோ வெயிலோ
தெய்வம் படைத்த விதியோ
மனிதம் செய்யும் சதியோ
எதுவும் என்னை தடுக்காதே!
முன்னாளின் நிகழ்ந்த
மனதின் ரணங்கள்
எதிர்காலத்தின் கனவை
நினைவாக்க மாற்றவே
மனதில் ஏந்தியபடி,
ஊழ்வினைகள் எதுவும்
என்னை பாதிக்கவில்லை
என்று புதியதொரு விடியலை
நோக்கி மற்றோரு பயணம்,
உதட்டில் சிரிப்புடன்!